ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!

2 posters

Go down

ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Empty ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!

Post by அருண் Sun Feb 06, 2011 10:14 am

பெரம்பூர் லோக்கோ ஓர்க்ஸ் கூடுதல் மேம்பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர் பேசுகையில்,

இந்த விழா நிகழ்ச்சியில் பாலத்தின் அருமையையும், பாலங்களுடைய வரலாறுகளையும் எனக்கு முன்னால் பேசிய நம்முடைய துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதி மாறன் அவர்களும், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களும் மிக விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.


இந்த மேம்பாலங்கள் சென்னைக்குத் தேவை என்பதை நான் இன்று நேற்றல்ல சில ஆண்டுகளுக்கு முன்பல்ல 50 ஆண்டுகளுக்கு முன்பே அனுபவத்தால் உணர்ந்தவன். சென்னையிலே வாழ்வதற்காக நான் குடும்பத்தோடு இங்கே குடிவந்து கோடம்பாக்கத்திற்குப் பக்கத்திலே ஒரு காலனியிலே நான் வாழ்ந்த காலத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு வருவதும், அவரும் நானும் அவருடைய காரிலோ அல்லது வேறு பட நிறுவனங்களின் காரிலோ ஏறிக்கொண்டு அங்கிருந்து, கோடம்பாக்கத்திலிருந்து இந்தப் பகுதியில் உள்ள ஸ்டூடியோக்களுக்கு, பட நிறுவனங்களுக்கு வருவதும் வழக்கம்.


இப்படி, கோடம்பாக்கத்திற்குப் பக்கத்திலே ‘ஜக்கரியா காலனி’’ என்று ஒரு காலனி இப்போதும் இருக்கிறது. பல மாறுதலுக்கு உள்ளாகி அது வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் காலனியில் நான் இருந்தபோது, இன்றைக்கு துணை முதலமைச்சராக முன்னாள் சென்னை மேயராக இருக்கின்ற இருந்த தம்பி ஸ்டாலின் அவர்கள் குழந்தை நான் சொல்கின்ற கதை 55 ஆண்டுகள் கதை. அவர் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்.


ஒருநாள் திடீரென்று என் வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு என் மனைவியும், என் சகோதரிகளும் ‘‘ஓடிவா! ஓடிவா!’’ என்று அழைத்தபோது, நான் அப்போதுதான் கலைவாணரோடு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னவென்று கேட்டால், ‘‘குழந்தை ஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான். அதை எடுக்க முடியவில்லை’’ என்றார்கள். நான் உள்ளே ஓடிப்போய், ‘‘வாயைத் திற’’ என்றேன். வாயைத் திறந்தால், அதற்குள் அந்த ஊக்கு வயிற்றுக்குள் போய்விட்டது. அதுவும் எப்படிப்பட்ட நிலையில் என்றால், ஊக்கு திறந்த நிலையில் வயிற்றுக்குள் போய் விட்டது என்றதும் எல்லோரும் பயந்தோம், துடித்தோம். எப்படி அதனை எடுப்பது என்று புரியாமல், டாக்டர் வீட்டிற்குப் போகலாம் என்று என்.எஸ்.கே. காரில் புறப்பட்டு வந்தால், அந்தக் கோடம்பாக்கம் கேட் பூட்டப்பட்டிருந்தது. அதைத் தாண்டித்தான் வரவேண்டும். அப்போதெல்லாம் சென்னையிலே இப்படி கேட் பூட்டப்பட்டால் அரை மணிநேரம், கால்மணி நேரம் டிராபிக் நின்று, அதற்குப் பிறகுதான் புறப்பட முடியும். அந்த அரைமணி நேரத்திற்குள் என்ன ஆகுமோ என்று நாங்கள் கவலைப்பட்ட போது, குழந்தை வலி பொறுக்க முடியாமல் அழத் தொடங்கிவிடவே, பக்கத்திலே உள்ள டாக்டர்களைப் போய் பார்க்க காரில் செல்ல முடியாத நிலை.


பிறகு அங்கிருந்த டாக்டரை அழைத்து வந்து பார்க்கச் சொன்னோம். டாக்டர் வருவதற்குள்ளாக ஊக்கு உள்ளே போய்விட்டது. நல்ல வேளையாக ஊக்கு திறந்த நிலையில் உள்ளே சென்றிருந்தால் வயிற்றைக் கிழித்திருக்கும். அப்படிக் கிழிக்காமல் அப்போதே ஜாக்கிரதையாகக் குழந்தைப் பருவத்திலேயே அவ்வளவு லாவகமாக, ஊக்கை விழுங்கியபோது கூட ஒழுங்காக விழுங்கிய காரணத்தால் பெரிய ஆபத்து ஏற்படவில்லை.


அப்போதுதான் நினைத்துக் கொண்டோம். இந்த ரயில்வே கேட் ஒரு பாலம் இல்லாத காரணத்தால் எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இப்படி எத்தனை குழந்தைகளுக்கு, எத்தனை நோயாளிகளுக்கு இந்த கேட் இடையூறாக இருந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணியதுண்டு. அப்போது நான் எந்த அதிகாரத்திலும் இல்லை. நம்முடைய கழகமோ மாநகராட்சி மன்றத்திலும் கூட இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்தக் காரியத்தையும் செய்யக்கூடிய அதிகாரம் இல்லை, செல்வாக்கும் இல்லை, வாய்ப்பு வசதியும் இல்லை. ஆனால், ஆர்வம் மாத்திரம் இருந்தது.


அந்த ஆர்வம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலே இந்த ஒரு ரயில்வே கேட் கோடம்பாக்கத்தில் மாத்திரமல்ல, நியூட்டன் ஸ்டூடியோவிற்குப் பக்கத்தில் ஒரு ரயில்வே கேட் இருந்தது. இன்னும் பல இடங்களில், நான்கைந்து இடங்களில் இதுபோன்ற தடைகள் இருக்கின்ற காரணத்தால் போக்குவரத்து நெரிசல், நோயாளிகளுக்கு இடைஞ்சல், உடனடியாக அவசர வைத்திய உதவியைப் பெற முடியாத தொல்லை இவைகள் எல்லாம் நீடித்துக் கொண்டே இருந்தது.


அதன் பிறகுதான் 1971 72ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பின்னர் நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றிருந்தபோது, மேம்பாலங்களைத் தமிழகத்தில் பல இடங்களில் நிறுவ வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான யோசனை பொறியாளர்களால் வெளியிடப்பட்டு, அப்படிப்பட்ட யோசனைகளில் முதல் காரியமாக சென்னையிலே அப்போது மவுண்ட் ரோடு இன்றைக்கு அண்ணா சாலை அந்த அண்ணா சாலையிலே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட அந்தப் பாலம்தான் அண்ணா மேம்பாலம் என்றார்.

நக்கீரன்...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Empty Re: ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!

Post by முரளிராஜா Sun Feb 06, 2011 10:41 am

பல இடங்களில் பாலம் அமைப்பதர்க்கு இது மட்டும்தான் காரணமா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum