Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவீரர்கள்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மாவீரர்கள்
2ம் லெப் மாலதி
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி
“..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…”
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………
அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன.
அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள்.
விடுதலைப் போராட்டத்தின் “விழுதுகளுள் ஒன்றாக” உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………
இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள்.
எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள்.
அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1.15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன.
துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. ‘நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ.”
தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம்.
‘என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.” எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள்.
அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது.
எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது.
தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும்.
தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
நன்றி eelam.tamilpower.com
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி
“..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…”
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………
அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன.
அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள்.
விடுதலைப் போராட்டத்தின் “விழுதுகளுள் ஒன்றாக” உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………
இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள்.
எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள்.
அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1.15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன.
துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. ‘நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ.”
தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம்.
‘என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.” எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள்.
அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது.
எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது.
தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும்.
தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
நன்றி eelam.tamilpower.com
Last edited by maniajith007 on Fri Feb 04, 2011 9:14 pm; edited 1 time in total
பிரிகேடியர் தீபன்
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.
இந்த இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.Home
Eelam
Entertainment
Gallery
Education
பிரிகேடியர் தீபன்
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.
இந்த இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.
இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.
2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.
கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.
சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."
தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.
-சாணக்கியன்-
நன்றி தமிழ் ஈழம் பவர்
பிரிகேடியர் பால்ராஜ்
முதற்பயணம்
அது 1984 ஆம் ஆண்டு.
செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது.
அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர்.
விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர்.
லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும்.
செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும்.
தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடித்து விடுதலை வீரர்களாக வெளியேறுவர்.
நம்பிக்கையோடு தொடங்கிய பயணம்;; இறுதிவரை நல்லபடியாக முடிய வேண்டும். உழவுப் பொறியொன்றில் எல்லோரும் ஏறினர்; மகிழ்ச்சியோடு அந்தச் செம்மண் வீதிகளைக் கடந்து விரைந்து கொண்டிருந்தனர்; தமது விடுதலைக்கான பயணத்தில்.
செம்மலையைத் தாண்டி ஒதியமலைக்குக் கிட்டவாக் உழவுப்பொறி விரைந்து கொண்டிருக்க அந்த விடிகாலையை பயங்கரமாக்கி; நடந்தேறியது அந்தத் துயரம்.
பற்றைக்காடுகளுக்குள் மறைந்து கிடந்த சிங்களப் பேய்கள்;; தாக்கத் தொடங்கினர். எதிர்பாராத ஒரு பதுங்கித் தாக்குதல்.
சுதாகரிக்கவோ.... நிதானிக்கவோ முடியாத அளவுக்கு; கடுமையான தாக்குதல். பெரும் எதிர்பார்க்கையோடு பயணித்த் அந்தப் புதிய போராளிகளை; எதிரி ஒவ்வொருவராகச் சரித்து வீழ்த்தினான். விடுதலைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியிலேயே சந்தித்த பெரும் இடர்; அந்தத் தாக்குதலில் தப்பிப்பிழைப்பதென்பதே பெரும் கெட்டித்தனமான் அதிஸ்டவசமான செயல்.
வீழ்ந்தவர்கள் பிணங்களாகச் சரிய உயிரோடு அதிலிருந்து தப்பியவர்கள்; இரண்டே இரண்டு பேர்தான்.
அந்த இரண்டு பேரில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். பயிற்சிக்காக வண்டியேற வேண்டியவர்; மருத்துவச் சிகிச்சைக்காக வண்டியேற வேண்டியதாயிற்று.
தமிழ்நாட்டில்; காயத்தைக் குணமாக்கி அங்கேயே ஒன்பதாவது பயிற்சி முகாமில்; பயிற்சி முடித்து வெளியேறினார் தளபதி பால்ராச்.
அந்தத் தாக்குதலில் தளபதி பால்ராச்சைப் போராளியாக இணைத்த லெப்.காண்டீபன் வீரச்சாவடைந்து விட அதுவே அவரின் முதல் துயராகவும்; முதற்களமாகவும் அமைந்தது.
மரணவலயம்
மேஜர் பசீலன்.
வன்னியின் சண்டைக்காரர்களில்;; முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.
இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்த லையில் குட்டிவிடுவதில்; வல்லவன்.
வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில்; புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள்; நீந்தி விளையாடினார்கள்.
மேஜர் பசீலன் அண்ணனின் அணியில்; தளபதி பால்ராச் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு; திட்டமிடப்பட்டது.
இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்குபடுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி; அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.
எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு; போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்;; திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.
எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும்; அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில்; போராளிகள் நிலையெடுக்க வேண்டும்;. ஒரு திகிலூட்டும் திட்டத்தை; மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.
கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை. ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.
கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள்;; கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி; நிலையெடுப்பர்; அந்தப் பகுதியை; தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.
எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.
துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு. அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும்;- அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும்;; இராணுவ ஆற்றலும்; வேண்டும்.
யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்; அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி ~பால்ராச். தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி; பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை; தளபதி பால்ராச் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.
சூட்சமம்
இளம் போராளிகளுக்கான் பயிற்சிக் கல்லூரி அது. அங்கே பல்வேறு நிலைப்பட்ட போராளிகளும் இருந்தனர்.களம் என்பது சாதாரணமானதல்ல மரணத்தோடு விளையாடி மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக் வெற்றியைச் சுவீகரிக்க வேண்டிய வீரத்திடல். அந்த வீரத்திடலில்; எதிரியோடு விளையாடி அனுபவம் பெற்ற எமது பல தளபதிகள்; நிறைந்த அனுபவங்களையும், போர்ப்பட்டறிவுகளையும் கொண்டிருந்தனர்.
இவ்வாறு பலமுறை வெற்றியோடு விளையாடிய தளபதிகளுள் ஒருவர் தளபதி பால்ராச்;; தன்னுடைய போர்க்கள அனுபவங்களை இந்த இளம் வீரர்களுக்கு புகட்டினார். அவர்கள் முன்னிலையில் பல விடயங்கள் குறித்தும் பேசினார்.
எதிரிகளின் நோக்கம் - போர்க்களத்தின் எதிர்பாரா தருணங்கள் - சண்டையில் எதிரிகளை வீழ்த்தும் வியூகம் என எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்;தார். தான் களத்தில் கற்றவற்றையும் - சந்தித்தவற்றையும் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்த இளம் வீரர்களுக்கு இந்த வீரனைப் பார்க்கவும் - அவர் சொல்வதைக் கேட்கவும் வியப்பாக இருந்தது அதிக விருப்பமாகவும் இருந்தது.
தளபதி பால்ராச்; அந்த இளம் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்து முடிய அவர்கள் தமக்கிருந்த சந்தேகங்களை - விருப்பங்களை தளபதியிடமிருந்து அறிந்துகொள்ள விரும்பினர். அப்போது ஒரு இளம் வீரன்;; தளபதி பால்ராச்சிடம் கேட்டான்; உங்களுக்குச் சண்டையில் பயம் வருவதில்லையா?
போர் வீரர்களுக்கு இருக்கக்கூடாத அம்சம்; பயத்தை நீக்கி வீரத்தைப் பெற அவர்கள் கேட்டுணர வேண்டிய ஆரம்பப் பாடம்;; அதை மாவீரன் பால்ராச்சிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த இளம்வீரன் விரும்பினான்.
தளபதி பால்ராச்; அந்த இளம் வீரனை நோக்கி கூறினார். 'எனக்குப் பயம் வருவதில்லை... அது போல உங்களுக்கும் பயம் வரக்கூடாது" அப்போது பயத்தை வென்று துணிவைப் பெறும் மந்திரத்தின் சூட்சுமத்தை; அவிழ்க்கத்தொடங்கினார் தளபதி பால்ராச்.
நீங்கள் முதலில் எந்தவேளையிலும்;; எந்த ஆபத்தையும்; எதிர்கொள்ளக்கூடியவாறு முழுத் தயார்நிலையில் இருக்கப் பழக வேண்டும்.
நான் காடாக இருந்தாலும் சரி... பெரும் வெளியாக இருந்தாலும் சரி... எந்தக் களச் சூழலில் இருக்கிறேனோ அந்தக் களச்சூழலில் எதிரி திடீரென எதிர்ப்பட்டால்; அவனை எப்படி எதிர்கொள்ளலாம் எனச் சிந்திப்பேன்.
சிந்திப்பதோடு மட்டும் நின்று விடாது அத்தகையதொரு எதிர்பாராத தாக்குதலை தடுக்கக்கூடியவாறு எனது மனதிற்குள் ஒரு கற்பனையான தாக்குதல் திட்டம் ஒன்றை ஒத்திகை செய்து... பார்ப்பேன். என்னை நான் எந்த நெருக்கடி நிலைக்கும் ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருப்பேன்...
அதனால் எதிரி எப்படி வந்தாலும்;.. பயமின்றி; பதட்டமின்றி எந்த என்னால் சூழலிலும் சிறப்பாகச் செயற்பட முடியும்.
இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள் என்றார்; இளம் வீரர்களை நோக்கி; அந்தப் பயமறியாத் தளபதி.
பெருமை
சிங்களப்படைகள் தமது முழுப்பலத்தையும்... வளத்தையும் ஒன்று திரட்டி யாழ்ப்பாணம் மீது படையெடுக்க தமிழர் படையை வன்னியை நோக்கி பின்னகர்த்தினார்; தலைவர். யாழ்ப்பாணத்தைப் புலிகள் இழந்துபோனதால்;; போராடும் திறனை; அவர்கள் இழந்து போனார்களென எக்காளமிட்டது சிங்களம்.யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வன்னி மீது போர் தொடுக்க தன்னைத் தயார்ப்படுத்தியது சிங்களம்.
அமைதியாய் - ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி; உள்ளே குமுறும் எரிமலை போல் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்; தலைவர்.
வெற்றி மமதையெடுத்து புலிகள் அடியோடு அழிந்தார்கள் என்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் தலைவர்.
1996 யூலை 18
நந்திக் கடலோரம் அமைந்திருந்த முல்லைத்தளத்தை வீழ்த்த தலைவர் முடிவெடுத்தார்; தளத்தை அழிக்கும் முழுப் பொறுப்பையும்; தளபதி பால்ராச்சிடம் ஒப்படைத்தார். புலிகளின் அசுர அடி தளம் ஆட்டம் கண்டு வீழ்ந்துபோனது.
ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட சிங்களப் படைகளை அழித்து தமிழர் படை எதிரியிடமிருந்து அந்த தளத்தையும் அங்கிருந்த ஆட்லறிகளையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியது.
போராட்டச் சக்கரம் புதையுண்டு போனதாய் புலம்பியவர்களெல்லாம்;; வாயடைத்துப் போனார்கள்.
வெற்றிப் பெருமிதத்தோடு; தலைவரின் தளம் நோக்கி விரைந்தார்; தளபதி பால்ராச். தலைவர் நினைத்ததை நினைத்தபடியே களத்தில் செய்துவிட்டு; தளபதி பால்ராச் வர தலைவர் மகிழ்ச்சியுடன்; தளபதியுடன் பால்ராச்சின் ஒரு கரத்தைப் பற்றிப் பாராட்டினார்.
2000 மார்ச் 26.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் போக்குத் திசையை எதிரியின் பிடியிலிருந்து புலிகளின் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருந்தார்; தலைவர்.
இடிமுழக்கம்.... சூரியகதிர்.... சத்ஜெய.... எடிபல... ஜெயசிக்குறு என அடுத்தடுத்துப் படையெடுத்து புலிகளின் கதை முடிக்க முயன்றவர்களின்; கதை முடிக்கும்; ஓயாத அலைகள் படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார் தலைவர்.
வன்னியின் தென்முனை நோக்கிப்படை நடத்திய தலைவர்; சடாரென திரும்பிய புயல் போல் வன்னியின் வட திசையில் போர்ப்புயலை; வீசச் செய்தார். ஆனையிறவைச் சூழவிருந்த படை முகாம்கள் ஒவ்வொன்றாய் வீழகளம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஓயாது வீசிக் கொண்டிருந்தவர்கள் ஓயாத அலை படை நடவடிக்கையின் மகுடமாய்;; நீண்ட காலமாக கைகளுக்கெட்டாமல்; நழுவி நிமிர்ந்து நின்ற ஆனையிறவுப் பெருந்;தளத்தை அடியோடு சாய்க்கத் தலைவர் வியூகமிட்டார்.
திட்டம் புலிகளுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான திட்டம். அகன்று விரிந்து கிடக்கும் பகைவனின் முற்றத்தில்; புலிகள் கூடாரமடித்து எதிரிகளை வேட்டையாட வேண்டும். சிங்க வேட்டைக்குத் தலைவர் தேர்ந்தெடுத்த இடம்;; இத்தாவில். அதை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்த தளபதி; பால்ராச்;. முப்பத்து நான்கு நாட்கள்; இத்தாவில் மட்டுமல்ல தளபதி பால்ராச்சும்... போராளிகளும்; நெருப்பில் குளித்து நிமிர்ந்தனர்.
முடிவு இனிமேல் எங்களால் முடியாது என்ற பகைவன்;; ஆனையிறவிலிருந்த தமது சகாக்களையும்;; ஆனையிறவை நோக்கிப் பலாலியிலிருந்து அனுப்பிய தனது படைகளையும் பின்னிழுக்கச்;; சிங்களச் சிங்கங்கள் குந்தியிருந்த் அந்தப் பெருங்கோட்டை உக்கி உப்பு வெளிக்குள்; உதிர்ந்து போனது.
அதன் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்த அந்த முப்பத்து நான்கு நாள் இத்தாவில் சமரை பால்ராச் வென்று ஏ-9 சாலையால் தலைவரின் தளம் விரைய தலைவர் மீண்டும் கைகொடுத்தார்; அந்தத் தளபதியைப் பாராட்ட ஆனால், ஒரு கையை அல்ல இரு கைகளையும் சேர்த்து.
-------------------------
பகைவன் கூட பாராட்டும் வகையில்; படை நடாத்திய அந்தப் பெருந்தளபதி... எத்தனையோ சண்டைகளை.... சமர்களை.... வென்ற வீரன்.
எதிரிகளோடு தனித்துச் சண்டை செய்து.... குழுவாகச் சண்டை செய்து... பெரும் படையாகச் சண்டை செய்து... அந்தப் பெரும் படையையே வழிநடாத்தும் பெருந்தளபதியாய் உயர்ந்து எங்கள் புருவங்களை உயரச் செய்த அந்த உன்னத தளபதி; முடியாது என்ற களத்தில்கூட தன்னால் முடியும் எனச் சாதித்துக் காட்டிய அந்தத் தளபதி.
பெருமையோடு தான் பெற்ற இந்த இரண்டு பெரும் பாராட்டுக்களையும் மனமிளகி மகிழ்ச்சியோடு தோழர்களிடம் நினைவு கூறுவராம்.
சமயோசிதம்
தளபதி பால்ராச் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கிய புலி வீரர்களும் வீராங்கனைகளும்; எதிரியின் முற்றமான இத்தாவிலில் ~பெட்டிகட்டி சடு...குடு... ஆடினார்கள்.
திகைத்துப்போன பகைவன்; இருந்தவர்களையும் - கிடந்தவைகளையும் வாரிச்சுருட்டிக் கொண்டு; புலிகளோடு மூர்க்கமாக மோதத் தொடங்கினான். தாக்குதலின் கடுமை இத்தாவில் சமர் சரித்திரம் மறவாத் சமராக மாறியது.
பல்லாயிரக்கணக்கான எதிரிகளுக்கு எதிராக சுமார் ஆயிரத்து இருநூறு போராளிகள் மட்டுமே எதிர்ச் சமராடினர்.
பகைவனின் இரும்புக்கோட்டையைச் சரிக்க தலைவரின் எண்ணத்தில் உதிர்த்த அற்புதமான போரியல் திட்டம்; அதைத் தளத்தில் அரங்கேற்றும் நாயகன்; எங்கள் பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் நம்பிக்கையான தெரிவு எப்போதும் தலைவர் எதிரிகளை கலங்கடிக்க எய்யும்; சக்திமிக்;க அம்பு.
உள்ளே பால்ராச் நிக்குதாம்; அறிந்து கொண்ட எதிரி; எரிச்சலோடும் மூர்க்கத்தோடும்; மோதினான்.
எப்படியாவது... எங்காவது ஒரு மூலையில் சிறு உடைப்பை ஏற்படுத்த முடியாதா என எதிரி திணறினான்.
படையணிகளை மாற்றி... படையதிகாரிகளை மாற்றி... மூர்க்கத்தோடு முட்டிமோதிய போதும்; அவனால்; முன்னேற முடியாமற் போயிற்று.
உள்ளே மோதிக் கொண்டிருக்கும் போராளிகள்; குறைந்த எண்ணிக்கையாலானவர்கள்;; அவர்கள் வசமிருந்த படைக்கலங்களும்; குறைந்த எண்ணிக்கையிலானவை.
தாக்குதல் களம்; எதிரியின் முற்றம். போராளிகள் நினைத்தவுடன்; எந்தப் பற்றாக்குறைகளையும் தேவைகளையும்... நிவர்த்தி செய்துவிட முடியாது.
அதற்கு எதிரி; களத்தில் வாய்ப்பளிக்கப் போவதுமில்லை. இப்படித்தான்; களத்தில் எதிரி மோதிக்களைத்த நிலையில்; ஒருநாள் நேரடி மோதுகையைத் தவிர்த்து அகோரமான எறிகணைத் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.
அந்த முப்பத்துநான்கு நாள் சமரின் ஒருநாள்; போராளிகள் நிலைகொண்டிருந்த அந்தக் களமுனை முழுவதையும்; எறிகணைகள் துடைத்தழித்துக் கொண்டிருந்தன.
அப்போது எதிரி ஏவித்தொலைத்த அந்தப் பல்லாயிரக்கணக்கான எறிகனைகளில் ஒன்றோ சிலவோ அங்கே தாக்குதலுக்காகக் களஞ்சியப்படுத்தியிருந்த போராளிகளின் ஆயுதக்களஞ்சியம் மீது வீழ்ந்து வெடிக்கத்; தொடங்கியது திருவிழா!
உள்ளேயிருந்த் அத்தனை வெடிபொருட்களும்;; கடாம்... புடாம்... டமால்... எனப் பெரும் வெடியோசையோடு; தொடர் குண்டோசையாக் வெடித்துச் சிதறியது.
உள்ளே என்ன நடக்கிறது என்பது எவருக்குமே புரியவில்லை. எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிரியும் கூடக் குழம்பிப் போனான்.
குண்டுமழை ஓய்ந்தது போல் அந்தக் களமுனை சற்று அமைதியுற அங்;கு நிலைமையின் விபரீதம் கண்முன்னே விரிந்து கிடந்தது.
உள்ளே இருப்பவர்களின் இருப்பு இந்த வெடிபொருட்களின்; இருப்பிலும் தான் இருக்கிறது. அவை எதிரிகளை அழிக்காமலே அழிந்து போகுமானால் நிலைமையைக் கற்பனை செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் அத்தகையதொரு நிலைமைதான் அந்தக் களத்தில்; தளபதி பால்ராச்சின் முன் ஏற்பட்டுவிட்டது.
எத்தகைய படைகளையும்... எந்த உறுதி மிக்கத் தளபதிகளையும்... படையதிகாரிகளையும்; குழம்பச் செய்துவிடக்கூடிய அழிவு.
களமுனையில் நின்றவர்கள்; ஏதோ சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து பதட்டத்தோடு தொலைத் தொடர்புக் கருவியில்; தளபதி பால்ராச்சை அழைத்தனர்.
லீமா... லீமா...
என்ன மாதிரி...?
ஏதும் சிக்கலோ...?
அறிந்து கொள்ளும் அவசரம்; எல்லோருக்கும்;; நிதானமாக் எந்தக் குழப்பமுமற்று அழைத்த எல்லாக் குரல்களுக்கும் லீமாவின் பதில் வந்தது தெளிவாக. அது ஒண்டுமில்லை நாளைக்கு நாங்கள் செய்யப்போகும் 'ஒழுங்குக்கு" இண்டைக்கு ஒத்திகை நடக்குது. என தொலைத் தொடர்வுக்கருவியில் ஒலித்தது. உறுதிகுலையாத ஒரு தளபதியின்; சமயோசிதக் குரலாக.
சுனாமி..!
2004 ஆம் ஆண்டு காலப்பகுதி...... தளபதி பால்ராச் அப்போது தென்தமிழீழத்தின்; வாகரையில் நின்றார். வடதமிழீழத்தின்; அனேகமான போர்க்களங்களில் நடமாடிய அந்தத் தளபதி; இப்போது தென்தமிழீழத்தில்...
அது ஒரு அமைதிக்காலம்; போர் ஒய்ந்திருக்க அந்தத் தளபதியும்; ஓய்வாக இருந்தான். அழகான கடற்கரையோரம்... அழகூட்டும் ஊர்மனை... கல...கலவெனச் சிரிக்கும் ஏதுமறியாச் சனங்களின் வீடுகள் என எல்லா இடமும்; அந்தத் தளபதி; பயணித்தான்.
வாகரையின் கடல்மணல் தொடும்; அந்தக் கடற்கரையோரம்;; தென்னைமரக் கூடலுக்குள்;; தளபதி பால்ராச்சின் பாசறை இருந்தது. 2006 டிசம்பர் 26 விடிகாலை. சத்தம் சந்தடி ஏதுமின்றி; இயற்கை மகள் சீறிச்சினக்க கரையோர மக்கள்; தண்ணீருக்குள்;; கண்ணீரோடு தவித்தனர். தென்னாசியாவின் கரையோரம் எங்கும்;; மனித உயிர்கள்; மண்மேடாய் குவிந்தன. எல்லோரும் அழுதார்கள்;;; ஏதேனும் ஒரு அசுமாத்தம் தெரிந்திருந்தால் கூட ஓடிப் பிழைத்திருப்போமே என குமுறிக் குழறினர்.
இயற்கை ஏன் எங்களை எச்சரிக்கவில்லை; கடலைச் சபித்து மண்ணள்ளித் தூற்றினர். சின்ன எச்சரிக்கை எங்களுக்காக் எங்கள் மீது பரிவுகொண்டு; எவரேனும் எங்களை எச்சரித்திருக் கூடாதா?; ஆதங்கத்தால் ஏங்கினர்.
இயற்கையின் விபரீதத்தை; உணரமுடியாமற் போனதா அல்லது இயற்கையின் எச்சரிக்கையை உணரத் தவறினோமா?; எவருக்கும் விடை தெரியாத அந்த நாளில்; குமுறி எழுந்த அந்தச் சுனாமி அலை கடலைவிட்டுத் தரைக்குத் தாவியபோது கரையோர மக்களுக்கு விபரீதத்தின் விளைவு புரியவில்லைத்தான்.
நின்று... நிதானித்து... சுதாகரிக்க எந்த அவகாசமும்; எவருக்கும் இருக்கவில்லைத்தான். வாகரையின் கரையோரத்தை நோக்கி; மலை போல சீறிவந்த கடலலை சூழ்ந்துகொள்ள அங்கிருந்த தளபதி பால்ராச்சின் பாசறையையும்;; கடல் நீர் விழுங்கத் தொடங்கியது.
இந்தக் கடல்நீர் வெளியேற்றம்;;; வழமைக்கு மாறானது ஆபத்தானது புரிந்து கொண்ட தளபதி பால்ராச்; இயற்கை விளைவித்த அந்த ஆபத்திற்கு மத்தியிலும்; ஒரு களத்தின் நடுவே நின்று செயற்படும் வீரனைப் போல் துரிதமாகத் துணிவோடு செயற்பட்டார்.
கடல்நீர் காலளவு... கையளவு தாண்டி கழுத்தளவு வந்துவிட அந்த முகாமிலிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும்; நீரிழுத்துப் போகாமல்; இருக்க தளபதி பால்ராச்; பெரும் போராட்டத்தையே நடாத்த வேண்டியிருந்தது.
அங்கிருந்த கனரக மோட்டரொன்றைக்; கயிற்றில் இணைத்து தென்னை மரத்தோடு கட்டியதோடு, ஏனைய போராளிகளை ஏவி; இயக்கத்தின் உடமைகளையும்; தமிழ்மக்களின் பாதுகாப்புக் கேடயங்களையும் காப்பதில்; முன்னின்றான் அந்தத் தளபதி.
சீறியெழுந்து; சுழன்றடித்துக் கொண்டிருந்த அந்த அலையின்; கொடூரப் பிடியின் நடுவே நின்றுகொண்டும்; தன்னுயிரைப் பாதுகாக்க வேண்டுமெனக் கொஞ்சமேனும் நினையாத அந்தத் தளபதி; ஆபத்திற்கு மத்தியிலும் அந்த முகாமிலிருந்த ஒரு துப்பாக்கியை கையிலெடுத்து வானை நோக்கி; ரவைக்கூட்டிலிருந்த அத்தனை துப்பாக்கி ரவைகளும் தீரும் வரை சுட்டுத் தீர்த்தாராம்.
துப்பாக்கி ரவையின் சத்தத்தையும்; அலையின் பேரிரைச்சலையும் கேட்டுச்; சனங்கள் ஏதோ ஆபத்து வருகிறதென எச்சரிக்கையடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடித்தப்பட்டும். சனங்களின் மீது அன்புகொண்ட எங்கள் தளபதி...
நம்பிக்கை..!
'சிங்கமுகச்" சிலந்தி போல் ஆனையிறவுப் படைத்தளம்; தனது பாதுகாப்பு வலைப் பின்னலை இறுக்கமாகப் பின்னி; குடாநாட்டின் தொண்டைக்குழிக்குள்; விரிந்துகிடந்தது. ஆயிரக்கணக்கில் போராளிகளை விதையாக்கிய பின்னும்; அந்தப் படைத்தளம் வீழாது வீங்கிப் பெருத்திருந்தது.
ஆனையிறவுச் சிலந்தியின்; ஒவ்வொரு பாதுகாப்பு வலைப் பின்னலையும்;; அது அகல விரித்திருந்த அதன் ஒவ்வொரு கால்களையும் அறுத்தெறிந்து பிணமாக்கத் தலைவர் முடிவெடுத்தார்.
ஒரு பகற்பொழுது; பரந்தனில் தொடங்கிய சண்டை விறுவிறுவென உமையாள்புரம் வரை அகன்று நின்ற ஆனையிறவின் கால்களையும்; மறுபுறம் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, புல்லாவெளிவரை நீண்டு கிடந்த கால்களையும் அறுத்தெறிய ஆனையிறவு ஒடுங்கிப் போனது. புலிகளுக்கேயுரிய திகிலூட்டும் ஒரு அதிரடி முயற்சியின் மூலம்; ஆனையிறவை அடியோடு வீழ்த்துவதே தலைவரின்; திட்டம். குடாரப்பில் தரையிறங்கி; இத்தாவிலில் உறுதியாக நின்று கொண்டு; ஆனையிறவின் கழுத்தை நெரிக்க வேண்டும்.
திட்டத்தை நிறைவேற்றும் அதிபதியாக் பால்ராச்சைத் தேர்ந்தெடுத்தார் தலைவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்; மிகப் பெரும் தரையிறக்க நடவடிக்கை தரைப் புலிகளும்... கடற்புலிகளும் இணைந்து மேற்கொள்ளப் போகும்; கூட்டு நடவடிக்கை.
எதிரியின் பயணப் பாதையில் சூறாவளியென சுழன்றடிக்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டித்; தலைவர் அனுப்பிவிட வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரையோரம் போராளிகள் ஒன்றுசேர்ந்தனர் ஒரு பெரும் வரலாற்றுப் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்போகிறது.
வெயில் பளீரெனச்; சுட்டெரிக்கும் ஒரு பகற்பொழுது அந்தக் கடற்கரையோரம்; தரையிறக்கத் தளபதி பால்ராச்சும்; கடற்படைத் தளபதி சூசையும்; ஒன்றாக அமர்ந்திருந்தனர். வந்திருந்த உணவுப் பொதியொன்றைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்க தளபதி சூசை மெதுவாக உரையாடலை ஆரம்பித்தார்.
அக்காலம்; மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டம்;; இயக்கம் ஒரு பெரும் தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுத்து வந்ததால்; வளப் பற்றாக்குறைகளைப் பெரியளவில் எதிர்கொண்டபடியிருந்தது. போராயுதங்களுக்கும்;; போரைப் பின்னின்று இயக்கும் பல அடிப்படைப் பொருட்களுக்கும் கூட பெரும் தட்டுப்பாடு.
இந்த நிலையில் கடற்புலிகளைப் பொறுத்த வரையில் தரையிறங்கப் போகும் ஆயிரக்கணக்கான போராளிகளையும்;; அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதத் தளபாடத் தொகுதிகளையும்; உள்ளே தரையிறக்குவதென்பது இமாலய சாதனை.
அதற்காக கடற்புலிகளின் கையிருப்பிலிருந்த பெருந்தொகை எரிபொருட்களையும்; படகுத் தொகுதிகளையும்; அவர்கள் செலவளிக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில்; கடற்புலிகளின் வசம் குடாரப்பில் தரையிறக்கப்பட வேண்டிய தளபதி பால்ராச் தலைமையிலான ஆயிரத்து இருநூறு போராளிகளையும்; அவர்களின் ஆயுதத் தளபாடங்களையும்; ஏற்றிச்செல்லக்கூடிய அளவு எரிபொருள் மட்டுமே தளபதி சூசையின் கையிருப்பில் இருந்தது.
சண்டை ஏதாவது சிக்கலாகி; நிலைமை நெருக்கடிக்குள்ளாகுமிடத்து அவ்வளவு தொகை போராளிகளையும் ஆயுத தளபாடங்களையும்; மீளவும் தளம் திருப்ப வேண்டும். ஆனால் அதற்கு தேவையான எரிபொருள்; கையிருப்பில் இல்லை.
நிலைமையின் தன்மையை கடற்படைத் தளபதி; தளபதி பால்ராச்சிற்கு சங்கடத்தோடு உரைக்க ஏற்கெனவே நிலைமையை நன்கு அறிந்திருந்த அந்தத் தளபதி; தனது இதழ்களில் தவழ்ந்த மெல்லிய புன்னகையோடு கண்களில் நம்பிக்கைத் தெறிக்க தளபதி சூசையை நோக்கிக் கூறினாராம்.
'என்னை உள்ள இறக்கி விட்டாக்காணும்.... நான் தரையால வருவன்" என்று.
கைதி..!
1983 க்கும் 1984 க்கும்; இடைப்பட்ட காலம். வன்னியில் புலிகள் இயக்கம்; வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பால்ராச் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள்...
அதாவது போராட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாக.... பகுதி நேரப் போராளியாக அவர்; இயங்கிக் கொண்டிருந்தார்;. ஒருநாள்.........
இயக்க வேலையாக் தண்ணீரூற்று.... முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு; மிதிவண்டியில்; முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்; இளைஞனாக இருந்த தளபதி பால்ராச்சை இடைமறித்தனர்.
அப்பாவி இளைஞனாக் காட்டிக்கொண்ட போதும்;; அவரைச் சிங்களப் படைகள் கைது செய்தனர்.
தளபதி பால்ராச் முல்லைத்தீவு முகாமில்; மூன்று நாட்கள்; சிறை வைக்கப்பட்டார்.
அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும்;; சிறிலங்காப்; படையினரும் பொறுப்பதிகாரிகளும்... அவரை மிரட்டியும்... வெருட்டியும்; பல்வேறு உபதேசங்களைச் செய்தனர்.
தளபதி பால்ராச்;சைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளன் என்றோ... அல்லது பகுதிநேரப் போராளியென்றேர் அடையாளம் காணாத சிங்களப்படைகள்;; சின்னப் பெடியள் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது என போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை; விதைக்க விளைந்தனர்.
தளபதி பால்ராச் எல்லாம் அறிந்தும்;; அறியாதது போல மௌனம் காக்க சிங்களப் படைகள் அவரை விடுவித்தது. பின்னர், தளபதி பால்ராச்; போராளியாகி; தளபதியாகி; சிங்களப் படைகளுக்கு எதிராகத்; தொடர் போராட்டங்களையே நடாத்தினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக் தளபதி பால்ராச் எந்த இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டாரோ அந்த இராணுவ முகாம் பின்னாளில் தளபதி பால்ராச் தலைமையில்; தாக்கியழிக்கப்பட்டு வரலாற்றில் பதிவாகியது. ஒரு முன்னாள் கைதியின் எழுச்சி; ஒரு இராணுவ முகாமின்; அழிவாகிப் போனது.
போரியல் புத்தகம்..!
போராட்டம் வளர்ந்துவிட்டது. போர்க்கலையில் வல்ல புலிகளாக் போராளிகளும் வளர்ந்து விட்டார்கள்.
ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த விடுதலைப் போராட்டம்;; ஆட்லறிகளையும்... டாங்கிகளையும் கொண்ட பெரும் படையாக உயர்ந்து நிற்கிறது.
காலமும்... சூழலும் மாற... மாற... போரும் அதன் தன்மைக்கேற்ப மாறிவிட்டது.
கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர்;; மரவுவழிப்படை நடத்தலை மேற்கொள்ளும்; அளவுக்கு வளர்ந்தாயிற்று.
காலத்திற்கு ஏற்ப போராளிகளும் மாறவேண்டும்;; அவர்களை மாற்றவேண்டும்.
வெறும்; சண்டைக்காரர்களாக மட்டுமல்ல அதிகாரிகளாக... தளபதிகளாக... சண்டைத்திறன் கொண்ட நிபுணர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.
தலைவர்; இந்த விடயத்தில் எப்போதும் அதிக கரிசனை எடுப்பார்;. அவரே நேர்நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவார்.
நவீன கால போர் என்பது சாதாரணமானதல்ல ஆயுதங்களும் அதன் பயன்பாடுகளும் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம்; தந்திரங்களும்... உத்திகளும் செல்வாக்குச் செலுத்தும். ஆயுதப்பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வசதி; உத்திகளையும்... தந்திரங்களையும்; அறிந்துகொள்ளக் கிடைப்பதில்லை.
அது வெறுமனே எழுத்தில் வடிக்கப்பட்ட நூல்களிலிருந்து மட்டும்; கற்றுத்தெரிந்து கொள்ள முடியாது.
ஒவ்வொரு போர் அனுபவமும்... தந்திரமும்... உத்தியும்;; அதனதன் பௌதீகச் சூழலுக்கும் புவியல் அமைப்புக்கும் ஏற்ப மாறுபடும்; தளபதிகளின் திறமைகளுக்கும் ஏற்ப வித்தியாசப்படும்.
இதற்கேற்ப போரியல் அறிவை வளர்த்தெடுத்து இளம்புலி வீரர்களுக்கு புகட்ட வேண்டும். தலைவர்;; இளம் வீரர்களுக்கான அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியொன்றை ஆரம்பித்திருந்தார். தகுதியானவர்களைக் கொண்டு; பல்துறை சார்ந்த போரியல் பாடங்களை அவர்களுக்கு ஊட்டினார்.
அங்கு உள்நாடு தொட்டு... வெளிநாடு வரையான போர்க்களங்களையும் போரியல் அனுபவங்களையும் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. ஒருநாள்; தலைவர்; பிரிகேடியர் பால்ராச்சை அழைத்தார்;. அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியில் கற்கும்; போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால்; ஒரு நிபந்தனையோடு...
நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம்; நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் பெரிய பாடம் என்றார். அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக எங்கள் தளபதி பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் பார்வையில்; மிளிர்ந்தார்.
Re: மாவீரர்கள்
திசைகாட்டி..!
இந்திய - புலிகள் போரின் உக்கிரம்; மணலாற்றுக் காட்டுக்குள் தீவிரம் பெற்றிருந்த காலம். தலைவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டதில்;; இந்தியர்களுக்கு உற்சாகம். தமது சிறப்புப் படையணிகளை ஒன்றுதிரட்டி மணலாற்றுக் காட்டைச் சுற்றிவளைத்து தலைவரைக் கொன்றுவிடத் துடித்தனர்.
தலைவரை அழிக்கும் படை நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டிய பெயர்;; ~செக்;மேற். இந்தியர்கள் அந்தப் பெரும் நடவடிக்கையை; மணலாற்றுக் காட்டுக்குள் மேற்கொண்ட போதும்;; தலைவர் அங்கிருந்து பின்வாங்கவோ இடம்மாறவோ விரும்பவில்லை. இந்திய - புலிகள் போரின் இறுதி முடிவை இந்த மணலாற்றுக் காட்டுக்குள்; வைத்து தீர்மானிக்க அவர் விரும்பினார்.
வேட்டையாட வந்தவர்கள்; அங்கே வேட்டையாடப்பட்டார்கள். அது ஏறத்தாழ கோலியாத்துகளுக்கும்; தாவீதுகளுக்கு மிடையிலான யுத்தம். இந்த யுத்தம் அரங்கேறிய இடமோ பெரும் வனாந்தரம்.
அக்காலம்; காடு முழுவதுமாக போராளிகளின் உள்ளங்கைகளுக்குள்; அகப்பட்டுவிடவில்லை. ஒருபுறம்; இந்தியர்களோடு போராடிக்கொண்டு; காட்டின் விசித்திரங்களையும் விடுபடாத முடிச்சுகளையும் அவர்கள் அவிழ்க்க வேண்டியிருந்தது. காடு எந்தச் சலனமுமற்று இருளால் மூடிக்கிடந்தது. எங்கோ கத்தித் தொலைக்கும் விசித்திரப் பறவைகள்;; எட்டுமுட்டாகச் சந்தித்தால் துள்ளிப் பறந்தோடும் காட்டு விலங்குகள்; எவருக்கும் வளைந்து கொடுக்காது இறுமாப்போடு நிமிர்ந்து நிற்கும் காட்டு மரங்கள்;; எனக் காடு காடாகவிருந்தது.
மனிதர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கும் இந்தக் காட்டுக்குள்தான்;; தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும்;; ஒரு வல்லரசிற்கெதிரான போர்; நடந்து கொண்டிருந்தது. உள்ளே தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட இந்தியர்கள்; பேராசையோடு காட்டைச் சூழ்ந்தார்கள்;; காட்டுக்குள் குவிந்தார்கள்.
பெரும் வல்லரசு ஒன்றின்; ஒருமுகப்படுத்தப்பட்ட படை அவர்களுக்கு எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் தலைவரின் தலைமையில் நின்ற போராளிகளுக்கு...? போராளிகளைப் பொறுத்த வரையில்; காடு நண்பனாகவும் இருந்தது எதிரியாகவும் விளங்கியது. அது இயற்கையின் ஒரு விந்தையான படைப்பு.
ஆற்றல் உள்ளவர்களுக்கும்;; அனுபவம் கொண்டவர்களுக்கும் மட்டுமே வழிகாட்டும். அது எத்தனை ஆற்றல் படைத்தவர்களையும்; அனுபவம் கொண்டவர்களையும் கூட சிலவேளைகளில் சறுக்கி விழுத்தி விடும்.
காட்டு அனுபவம் இல்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும்;; காட்டுக்குள் நிறைந்து கிடக்கும் எதிரியிடமோ மாட்டிவிடும். அந்த வனத்துக்குள் அனாதையாய் அலையவிட்டு; வேடிக்கை பார்த்து நிற்கும். அனுபவத்தின் மனக்குறிப்பைக் கண்களுக்குள் விரித்து காடு முறித்து பாதையெடுத்தால் மாத்திரம் தான்; போராளிகளின் பயணங்கள் இலகுவாகும். மற்றும்படி பயணத்தை இலகுவாக்கப் போராளிகளிடம்; போதிய திசையறி கருவியும் கிடையாது வரைபடக் குறிப்பும் கிடையாது. இத்தனைக்கும்; எதிரிகளின் சுற்றிவளைப்புக்குள்ளும் முற்றுகைக்குள்ளும்; தொடரவேண்டிய பயணங்கள்.
அந்த நேரங்களில்; திசையறிகருவி இல்லாமலேயே காடுமுறித்து மனக்குறிப்பால் போராளிகளை அழைத்துச் செல்லும்; காட்டனுபவம் உள்ளவர்கள் வேண்டும். ஆம்; மணலாற்றுக் காட்டுக்குள்; காட்டனுபவமும்-ஆற்றலும்-அறிவுமுள்ள பல திறமைசாலிகளை தலைவர் தன்வசம் வைத்திருந்தார். அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். அக்காலம்; தளபதி பால்ராச் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு திசையறிகருவி.
முற்றுகை..!
இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறியிருந்தன இல்லை வெளியேற்றப்பட்டிருந்தன. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சிங்களப் படைகள் திமிர் எடுத்து மண் பசியுடன்; தமிழர்களை வேட்டையாட வெடித்தது இரண்டாம் கட்ட ஈழப்போர். விளைவு சிங்களப் படைகளிற்கு எதிரான போர்; தீவிரம் பெறத் தொடங்கியது.
அந்தநேரம் கொக்காவில்... மாங்குளம்... முல்லைத்தீவு என பல இடங்களிலும்; சிங்களப் படைகள்; குந்தியிருந்தன. இவ்வாறு வன்னியை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படை முகாம்கள்;; எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அதேநேரம். அவர்களுக்கெதிராக பதுங்கித் தாக்குதல்கள்... கண்ணிவெடித் தாக்குதல்கள்... காவலரண்கள் தகர்ப்பு... மினிமுகாம்கள் கைப்பற்றல் என போரின் பரிமாணம் மாறத்தொடங்கியிருந்தது. ஈழப்போர் இரண்டாம் கட்டத்திற்குத் தாவியிருந்த அதேநேரம்;; இயக்கம் வளப்பற்றாக் குறைகள்... ஆளணிப் பிரச்சினைகளென இல்லாமைகளோடு மோதியபடி தான் முன்னேறியது.
ஆயினும்;; நம்பிக்கையை முதலீடாக்கி; கொஞ்ச நஞ்சமாக இருந்த ஆயுத இருப்பைத் துணையாகக்; கொண்டு; பல சிங்களப் படைத் தளங்களை புலிவீரர்கள்; ஒவ்வொன்றாக வீழ்த்தத் தொடங்கினர்.
முல்லைத்தீவில்... நீண்ட நெடுநாட்களாக ஒரு இராணுவ முகாமை நிறுவி; அந்த மக்களின் அன்றாடச் சீவியத்தில்;; மண்ணள்ளிக் கொட்டினர் சிங்களப் படைகள். எப்படியும் இந்த இராணுவ முகாமை தாக்கியழிக்க வேண்டும்.
இயக்கம் முடிவெடுத்து... வேவு எடுத்து... சின்ன ஒத்திகை பார்த்து... முன்னேறித் தாக்கத் தொடங்கியபோது இல்லாத அந்த வளப் பற்றாக்குறைகள் இயக்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தது.
முகாமைச் சுற்றிவளைத்து வீழும் என்ற நம்பிக்கையோடு போராளிகள் தாக்கிய போதும்;; அது கைநழுவிப் போனது.
முகாமில் குந்தியிருந்த சிங்களப் படைகள்;; தாம் பலமாக அமைத்து வைத்திருந்த காவலரண்களுக்குள்ளும்... காப்பகழிகளுக்குள்ளுமிருந்து கடுமையாகத் தாக்கினர். தாராளமாக வெடிபொருட்களைப் பயன்படுத்தி; பலமாகத் தாக்கினர்.
போதாததற்கு முள்ளிவாய்க்கால் பக்கமாக் கடல் வழியாகப் படைகளைத் தரையிறக்கம் செய்ய நிலைமை கைமீறிப்போனது.
முகாம் மீதான தாக்குதலுக்கே பற்றாக்குறை என்கிற நிலையில்தான் வெடிபொருட்கள் இருந்தன. இந்த நிலையில்; தரையிறக்கப்பட்டிருக்கும் படைகளுக்கு எதிரான சண்டைக்குத் தேவையான வெடிபொருட்களுக்கு; எங்கே போவது?
இருந்த பலமும்; வந்த பலமும் ஒன்றுசேர திரண்ட பலத்தோடு; உக்கிரமாக மோதத் தொடங்கினான்;; எதிரி.
இந்தளவுக்கும்; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளின் பல அணிகள் தளத்தின் முற்றத்திற்குள்; கடுமையாக மோதிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில்; தரையிறக்கப்பட்ட சிங்களப் படைகள்;; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளைச் சுற்றிவளைத்துவிட்ட நிலையில்; அணிகளைப் பின்னிழுக்க வேண்டியதாயிற்று.
ஆனால்; முகாமின் மையப்பகுதியில் மேஜர் றொபேட் தலைமையிலான அணியொன்று தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அந்த அணி தாக்குதலை நிறுத்தி வெளியேற முயல்கையில்; அவர்களை தனது இறுக்கமான முற்றுகைக்குள்; வளைத்துவிட்டான் தமது முகாமைத் தாக்க வந்த புலியணியொன்றை சுற்றிவளைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன சிங்களப் படைகள்.
மீளமுடியாத நெருக்கடிக்குள்; அணி திணறியது. உள்ளே நிற்பவர்கள் வெளியில் வரவேண்டுமானால் வெளியிலுள்ளவர்களின் உதவி தேவை. உள்ளே இருப்பவர்களால்; முற்றுகையை உடைக்க முடியாத நிலை.
அப்படியாயின் முற்றுகையை உடைக்க யாரால் முடியும்...? தொலைத்தொடர்புக் கருவி; நம்பிக்கையோடு அழைத்தது. லீமா... லீமா...
லீமா...லீமா... ரொபேட்.
அழைத்த ரொபேட்டின் குரலுக்கு தளபதி பால்ராச் குரல் கொடுத்தார்.
'அப்படியே சண்டை பிடிச்சுக் கொண்டிருங்கோ இப்ப வாறன்..." சொன்னதோடு நிற்கவில்லை அந்தத் தளபதி. நெருப்பு மழையில் நீந்தி; முன்னேறி; நெருக்கடிக்குள்ளாகிய அணியோடு சேர்ந்தபோது உடைந்து நொருங்கியது எதிரியின் முற்றுகை.
ஓய்வறியாத் தளபதி..!
பூநகரிப் படைத்தளம் மீதான தாக்குதல். புலிகள் இயக்கத்தின் அனைத்துப் படையணிகளும் ஒன்றிணைக்கப்பட்டு; கடும் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
போராளிகள்-தளபதிகள்-பொறுப்பாளர்கள் என எல்லோரும் ஒரு சேர உழைத்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில்; புலிகள் இயக்கம் மேற்கொள்ளும்; பாரிய படை நடவடிக்கை. ஆகாய கடல்வெளி படை நடவடிக்கையின் பின்னர்; புலிகள் இயக்கத்தின் அனைத்து படையணிகளும்; பங்கு கொள்ளப்போகும் ஒரு நடவடிக்கை பெரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு ஈரூடகத்தாக்குதல்.
தளபதி பால்ராச் உட்பட அனைத்து தளபதிகளும், போராளிகளும் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகளிலும்; ஒழுங்குபடுத்தல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க முந்திவிட்ட எதிரி ~யாழ்தேவி படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டான்.
ஆனையிறவிலிருந்து - கிளாலி நோக்கி எதிரியின் முன்னகர்வு யாழ்தேவி வேகமெடுக்க முதல் அதன் பயணப்பாதையிலேயே தடம்புரளச் முன்பு செய்ய வேண்டும். அதுவும் பூநகரி படைத்தளம் மீதான தாக்குதல் ஏற்பாடுகளுக்கு எந்தப் பழுதும் ஏற்படாத வகையில்; யாழ்தேவியை தடம்புரளச் செய்யவேண்டும்.
தலைவர் தளபதி பால்ராச் தலைமையில் படையணிகளை; யாழ்தேவி களத்திற்கு அனுப்பி வைத்தார்.
படையணிகள் களத்திற்கு விரைய ~யாழ்தேவி படை நடவடிக்கையை வழிநடத்திக் கொண்டிருந்த சிங்களத்தின் தளபதிகளுக்கு பிடித்தது ~அட்டமத்து சனியன் தளபதி பால்ராச் அவர்களும்- தளபதி தீபன் அவர்களும் களச்சூழலுக்கு ஏற்ப ஒரு அதிரடி நடவடிக்கையை திட்டமிட்டனர்.
பரந்து கிடந்த அந்த மணற்பாங்கான பகுதியில்; மணலைக் கிளறிப் போராளிகளை உள்ளே புதைத்த வேகமாக முன்னேறி வரும் பகைவன் நெருங்கி வந்தவுடன்; மண்ணுக்குள்ளிருந்து கிளர்ந்தெழுந்து புயலெனத் தாக்க எதிரி ஆடிப்போனான்.
சண்டை வெகு கலாதியாக சூடுபிடிக்க எப்போதும் போல் கட்டளைப் பீடத்துள்ளிருந்து வழிநடத்தவேண்டிய தளபதி பால்ராச்; சண்டை தொடங்கிய வேகத்தோடு; போராளிகளோடு போராளிகளாக களத்தில் குதித்து விட டாங்கியிலிருந்து எதிரி ஏவிய ஒரு குண்டு வீழ்ந்து வெடித்ததில்; தளபதி பால்ராச் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் கிடக்க வேண்டியதாயிற்று.
எவ்வேளையிலும் களத்தில் சுழன்றாட வேண்டும் என்ற எண்ணம் தளபதி பால்ராச்சிற்கு நோய்ப்படுக்கையில் கிடப்பதென்பது மரண வேதனையாக இருந்தது. அதிலும் பூநகரி தளம் மீதான நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்; ஓய்வாகக் கிடப்பதென்பது கடினமாக இருந்தது.
களத்தின் நினைவுகளோடு; படுக்கையில் தளபதி பால்ராச் இருந்த ஒருநாள் பூநகரி தளம் மீதான தவளை நடவடிக்கையை ஆரம்பித்தார் தலைவர்;. போராளிகள் கடலாலும் - தரையாலும் உள்நுளைந்து தளத்தை வீழ்த்த மோதிக் கொண்டிருந்தனர். சண்டையின் போது பல இடங்களில் தடைகள் உடைந்தும்- உடையாமலும் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. நிலையில்; தொலைத் தொடர்புக்கருவியில் இடையிடையே தளபதி பால்ராச் அவர்களின் குரலும் வந்து... வந்து போனது.
வைத்தியசாலையில் படுக்கையில் கிடக்கும் தளபதி பால்ராச்; எங்ஙனம் தொலைத் தொடர்புக்கருவியில் உரையாட முடியும்; வைத்தியசாலையில் தொலைத்தொடர்புக் கருவி இல்லையே. கேள்விகள் குழப்பத்தைத் தந்தன. தவளை நடவடிக்கையின் மையக்கட்டளைப் பீடத்தில்; நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த தலைவர்; உசாரானார்.
தளபதி பால்ராச் வைத்தியசாலையில் இரகசியமாக ஏற்படுத்திக்கொண்ட தொலைத்தொடர்புக் கருவியினூடாகவே உரையாடுகின்றார்; என்பதைப் புரிந்துகொண்டு; உடனடியாகவே ஒரு போராளியை அங்கு அனுப்பி; தாக்குதல் தொடர்பான களநிலைமையை உடனுக்குடன் தெரியப்படுத்த தான் ஏற்பாடு செய்யலாம் என்றும்; வைத்தியசாலையிலிருந்து கொண்டு தொடர்புக்கருவியில் உரையாடுவது பாதுகாப்பு இல்லையெனவும் கூறித்தான்; அந்த ஓய்வறியாத் தளபதியை ஓய்வெடுக்கச் செய்யவேண்டியிருந்தது.
சிறீ. இந்திரகுமார்
நன்றி தமிழ் ஈழம் பவர்
இந்திய - புலிகள் போரின் உக்கிரம்; மணலாற்றுக் காட்டுக்குள் தீவிரம் பெற்றிருந்த காலம். தலைவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டதில்;; இந்தியர்களுக்கு உற்சாகம். தமது சிறப்புப் படையணிகளை ஒன்றுதிரட்டி மணலாற்றுக் காட்டைச் சுற்றிவளைத்து தலைவரைக் கொன்றுவிடத் துடித்தனர்.
தலைவரை அழிக்கும் படை நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டிய பெயர்;; ~செக்;மேற். இந்தியர்கள் அந்தப் பெரும் நடவடிக்கையை; மணலாற்றுக் காட்டுக்குள் மேற்கொண்ட போதும்;; தலைவர் அங்கிருந்து பின்வாங்கவோ இடம்மாறவோ விரும்பவில்லை. இந்திய - புலிகள் போரின் இறுதி முடிவை இந்த மணலாற்றுக் காட்டுக்குள்; வைத்து தீர்மானிக்க அவர் விரும்பினார்.
வேட்டையாட வந்தவர்கள்; அங்கே வேட்டையாடப்பட்டார்கள். அது ஏறத்தாழ கோலியாத்துகளுக்கும்; தாவீதுகளுக்கு மிடையிலான யுத்தம். இந்த யுத்தம் அரங்கேறிய இடமோ பெரும் வனாந்தரம்.
அக்காலம்; காடு முழுவதுமாக போராளிகளின் உள்ளங்கைகளுக்குள்; அகப்பட்டுவிடவில்லை. ஒருபுறம்; இந்தியர்களோடு போராடிக்கொண்டு; காட்டின் விசித்திரங்களையும் விடுபடாத முடிச்சுகளையும் அவர்கள் அவிழ்க்க வேண்டியிருந்தது. காடு எந்தச் சலனமுமற்று இருளால் மூடிக்கிடந்தது. எங்கோ கத்தித் தொலைக்கும் விசித்திரப் பறவைகள்;; எட்டுமுட்டாகச் சந்தித்தால் துள்ளிப் பறந்தோடும் காட்டு விலங்குகள்; எவருக்கும் வளைந்து கொடுக்காது இறுமாப்போடு நிமிர்ந்து நிற்கும் காட்டு மரங்கள்;; எனக் காடு காடாகவிருந்தது.
மனிதர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கும் இந்தக் காட்டுக்குள்தான்;; தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும்;; ஒரு வல்லரசிற்கெதிரான போர்; நடந்து கொண்டிருந்தது. உள்ளே தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட இந்தியர்கள்; பேராசையோடு காட்டைச் சூழ்ந்தார்கள்;; காட்டுக்குள் குவிந்தார்கள்.
பெரும் வல்லரசு ஒன்றின்; ஒருமுகப்படுத்தப்பட்ட படை அவர்களுக்கு எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் தலைவரின் தலைமையில் நின்ற போராளிகளுக்கு...? போராளிகளைப் பொறுத்த வரையில்; காடு நண்பனாகவும் இருந்தது எதிரியாகவும் விளங்கியது. அது இயற்கையின் ஒரு விந்தையான படைப்பு.
ஆற்றல் உள்ளவர்களுக்கும்;; அனுபவம் கொண்டவர்களுக்கும் மட்டுமே வழிகாட்டும். அது எத்தனை ஆற்றல் படைத்தவர்களையும்; அனுபவம் கொண்டவர்களையும் கூட சிலவேளைகளில் சறுக்கி விழுத்தி விடும்.
காட்டு அனுபவம் இல்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும்;; காட்டுக்குள் நிறைந்து கிடக்கும் எதிரியிடமோ மாட்டிவிடும். அந்த வனத்துக்குள் அனாதையாய் அலையவிட்டு; வேடிக்கை பார்த்து நிற்கும். அனுபவத்தின் மனக்குறிப்பைக் கண்களுக்குள் விரித்து காடு முறித்து பாதையெடுத்தால் மாத்திரம் தான்; போராளிகளின் பயணங்கள் இலகுவாகும். மற்றும்படி பயணத்தை இலகுவாக்கப் போராளிகளிடம்; போதிய திசையறி கருவியும் கிடையாது வரைபடக் குறிப்பும் கிடையாது. இத்தனைக்கும்; எதிரிகளின் சுற்றிவளைப்புக்குள்ளும் முற்றுகைக்குள்ளும்; தொடரவேண்டிய பயணங்கள்.
அந்த நேரங்களில்; திசையறிகருவி இல்லாமலேயே காடுமுறித்து மனக்குறிப்பால் போராளிகளை அழைத்துச் செல்லும்; காட்டனுபவம் உள்ளவர்கள் வேண்டும். ஆம்; மணலாற்றுக் காட்டுக்குள்; காட்டனுபவமும்-ஆற்றலும்-அறிவுமுள்ள பல திறமைசாலிகளை தலைவர் தன்வசம் வைத்திருந்தார். அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். அக்காலம்; தளபதி பால்ராச் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு திசையறிகருவி.
முற்றுகை..!
இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறியிருந்தன இல்லை வெளியேற்றப்பட்டிருந்தன. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சிங்களப் படைகள் திமிர் எடுத்து மண் பசியுடன்; தமிழர்களை வேட்டையாட வெடித்தது இரண்டாம் கட்ட ஈழப்போர். விளைவு சிங்களப் படைகளிற்கு எதிரான போர்; தீவிரம் பெறத் தொடங்கியது.
அந்தநேரம் கொக்காவில்... மாங்குளம்... முல்லைத்தீவு என பல இடங்களிலும்; சிங்களப் படைகள்; குந்தியிருந்தன. இவ்வாறு வன்னியை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படை முகாம்கள்;; எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அதேநேரம். அவர்களுக்கெதிராக பதுங்கித் தாக்குதல்கள்... கண்ணிவெடித் தாக்குதல்கள்... காவலரண்கள் தகர்ப்பு... மினிமுகாம்கள் கைப்பற்றல் என போரின் பரிமாணம் மாறத்தொடங்கியிருந்தது. ஈழப்போர் இரண்டாம் கட்டத்திற்குத் தாவியிருந்த அதேநேரம்;; இயக்கம் வளப்பற்றாக் குறைகள்... ஆளணிப் பிரச்சினைகளென இல்லாமைகளோடு மோதியபடி தான் முன்னேறியது.
ஆயினும்;; நம்பிக்கையை முதலீடாக்கி; கொஞ்ச நஞ்சமாக இருந்த ஆயுத இருப்பைத் துணையாகக்; கொண்டு; பல சிங்களப் படைத் தளங்களை புலிவீரர்கள்; ஒவ்வொன்றாக வீழ்த்தத் தொடங்கினர்.
முல்லைத்தீவில்... நீண்ட நெடுநாட்களாக ஒரு இராணுவ முகாமை நிறுவி; அந்த மக்களின் அன்றாடச் சீவியத்தில்;; மண்ணள்ளிக் கொட்டினர் சிங்களப் படைகள். எப்படியும் இந்த இராணுவ முகாமை தாக்கியழிக்க வேண்டும்.
இயக்கம் முடிவெடுத்து... வேவு எடுத்து... சின்ன ஒத்திகை பார்த்து... முன்னேறித் தாக்கத் தொடங்கியபோது இல்லாத அந்த வளப் பற்றாக்குறைகள் இயக்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தது.
முகாமைச் சுற்றிவளைத்து வீழும் என்ற நம்பிக்கையோடு போராளிகள் தாக்கிய போதும்;; அது கைநழுவிப் போனது.
முகாமில் குந்தியிருந்த சிங்களப் படைகள்;; தாம் பலமாக அமைத்து வைத்திருந்த காவலரண்களுக்குள்ளும்... காப்பகழிகளுக்குள்ளுமிருந்து கடுமையாகத் தாக்கினர். தாராளமாக வெடிபொருட்களைப் பயன்படுத்தி; பலமாகத் தாக்கினர்.
போதாததற்கு முள்ளிவாய்க்கால் பக்கமாக் கடல் வழியாகப் படைகளைத் தரையிறக்கம் செய்ய நிலைமை கைமீறிப்போனது.
முகாம் மீதான தாக்குதலுக்கே பற்றாக்குறை என்கிற நிலையில்தான் வெடிபொருட்கள் இருந்தன. இந்த நிலையில்; தரையிறக்கப்பட்டிருக்கும் படைகளுக்கு எதிரான சண்டைக்குத் தேவையான வெடிபொருட்களுக்கு; எங்கே போவது?
இருந்த பலமும்; வந்த பலமும் ஒன்றுசேர திரண்ட பலத்தோடு; உக்கிரமாக மோதத் தொடங்கினான்;; எதிரி.
இந்தளவுக்கும்; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளின் பல அணிகள் தளத்தின் முற்றத்திற்குள்; கடுமையாக மோதிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில்; தரையிறக்கப்பட்ட சிங்களப் படைகள்;; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளைச் சுற்றிவளைத்துவிட்ட நிலையில்; அணிகளைப் பின்னிழுக்க வேண்டியதாயிற்று.
ஆனால்; முகாமின் மையப்பகுதியில் மேஜர் றொபேட் தலைமையிலான அணியொன்று தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அந்த அணி தாக்குதலை நிறுத்தி வெளியேற முயல்கையில்; அவர்களை தனது இறுக்கமான முற்றுகைக்குள்; வளைத்துவிட்டான் தமது முகாமைத் தாக்க வந்த புலியணியொன்றை சுற்றிவளைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன சிங்களப் படைகள்.
மீளமுடியாத நெருக்கடிக்குள்; அணி திணறியது. உள்ளே நிற்பவர்கள் வெளியில் வரவேண்டுமானால் வெளியிலுள்ளவர்களின் உதவி தேவை. உள்ளே இருப்பவர்களால்; முற்றுகையை உடைக்க முடியாத நிலை.
அப்படியாயின் முற்றுகையை உடைக்க யாரால் முடியும்...? தொலைத்தொடர்புக் கருவி; நம்பிக்கையோடு அழைத்தது. லீமா... லீமா...
லீமா...லீமா... ரொபேட்.
அழைத்த ரொபேட்டின் குரலுக்கு தளபதி பால்ராச் குரல் கொடுத்தார்.
'அப்படியே சண்டை பிடிச்சுக் கொண்டிருங்கோ இப்ப வாறன்..." சொன்னதோடு நிற்கவில்லை அந்தத் தளபதி. நெருப்பு மழையில் நீந்தி; முன்னேறி; நெருக்கடிக்குள்ளாகிய அணியோடு சேர்ந்தபோது உடைந்து நொருங்கியது எதிரியின் முற்றுகை.
ஓய்வறியாத் தளபதி..!
பூநகரிப் படைத்தளம் மீதான தாக்குதல். புலிகள் இயக்கத்தின் அனைத்துப் படையணிகளும் ஒன்றிணைக்கப்பட்டு; கடும் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
போராளிகள்-தளபதிகள்-பொறுப்பாளர்கள் என எல்லோரும் ஒரு சேர உழைத்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில்; புலிகள் இயக்கம் மேற்கொள்ளும்; பாரிய படை நடவடிக்கை. ஆகாய கடல்வெளி படை நடவடிக்கையின் பின்னர்; புலிகள் இயக்கத்தின் அனைத்து படையணிகளும்; பங்கு கொள்ளப்போகும் ஒரு நடவடிக்கை பெரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு ஈரூடகத்தாக்குதல்.
தளபதி பால்ராச் உட்பட அனைத்து தளபதிகளும், போராளிகளும் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகளிலும்; ஒழுங்குபடுத்தல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க முந்திவிட்ட எதிரி ~யாழ்தேவி படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டான்.
ஆனையிறவிலிருந்து - கிளாலி நோக்கி எதிரியின் முன்னகர்வு யாழ்தேவி வேகமெடுக்க முதல் அதன் பயணப்பாதையிலேயே தடம்புரளச் முன்பு செய்ய வேண்டும். அதுவும் பூநகரி படைத்தளம் மீதான தாக்குதல் ஏற்பாடுகளுக்கு எந்தப் பழுதும் ஏற்படாத வகையில்; யாழ்தேவியை தடம்புரளச் செய்யவேண்டும்.
தலைவர் தளபதி பால்ராச் தலைமையில் படையணிகளை; யாழ்தேவி களத்திற்கு அனுப்பி வைத்தார்.
படையணிகள் களத்திற்கு விரைய ~யாழ்தேவி படை நடவடிக்கையை வழிநடத்திக் கொண்டிருந்த சிங்களத்தின் தளபதிகளுக்கு பிடித்தது ~அட்டமத்து சனியன் தளபதி பால்ராச் அவர்களும்- தளபதி தீபன் அவர்களும் களச்சூழலுக்கு ஏற்ப ஒரு அதிரடி நடவடிக்கையை திட்டமிட்டனர்.
பரந்து கிடந்த அந்த மணற்பாங்கான பகுதியில்; மணலைக் கிளறிப் போராளிகளை உள்ளே புதைத்த வேகமாக முன்னேறி வரும் பகைவன் நெருங்கி வந்தவுடன்; மண்ணுக்குள்ளிருந்து கிளர்ந்தெழுந்து புயலெனத் தாக்க எதிரி ஆடிப்போனான்.
சண்டை வெகு கலாதியாக சூடுபிடிக்க எப்போதும் போல் கட்டளைப் பீடத்துள்ளிருந்து வழிநடத்தவேண்டிய தளபதி பால்ராச்; சண்டை தொடங்கிய வேகத்தோடு; போராளிகளோடு போராளிகளாக களத்தில் குதித்து விட டாங்கியிலிருந்து எதிரி ஏவிய ஒரு குண்டு வீழ்ந்து வெடித்ததில்; தளபதி பால்ராச் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் கிடக்க வேண்டியதாயிற்று.
எவ்வேளையிலும் களத்தில் சுழன்றாட வேண்டும் என்ற எண்ணம் தளபதி பால்ராச்சிற்கு நோய்ப்படுக்கையில் கிடப்பதென்பது மரண வேதனையாக இருந்தது. அதிலும் பூநகரி தளம் மீதான நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்; ஓய்வாகக் கிடப்பதென்பது கடினமாக இருந்தது.
களத்தின் நினைவுகளோடு; படுக்கையில் தளபதி பால்ராச் இருந்த ஒருநாள் பூநகரி தளம் மீதான தவளை நடவடிக்கையை ஆரம்பித்தார் தலைவர்;. போராளிகள் கடலாலும் - தரையாலும் உள்நுளைந்து தளத்தை வீழ்த்த மோதிக் கொண்டிருந்தனர். சண்டையின் போது பல இடங்களில் தடைகள் உடைந்தும்- உடையாமலும் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. நிலையில்; தொலைத் தொடர்புக்கருவியில் இடையிடையே தளபதி பால்ராச் அவர்களின் குரலும் வந்து... வந்து போனது.
வைத்தியசாலையில் படுக்கையில் கிடக்கும் தளபதி பால்ராச்; எங்ஙனம் தொலைத் தொடர்புக்கருவியில் உரையாட முடியும்; வைத்தியசாலையில் தொலைத்தொடர்புக் கருவி இல்லையே. கேள்விகள் குழப்பத்தைத் தந்தன. தவளை நடவடிக்கையின் மையக்கட்டளைப் பீடத்தில்; நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த தலைவர்; உசாரானார்.
தளபதி பால்ராச் வைத்தியசாலையில் இரகசியமாக ஏற்படுத்திக்கொண்ட தொலைத்தொடர்புக் கருவியினூடாகவே உரையாடுகின்றார்; என்பதைப் புரிந்துகொண்டு; உடனடியாகவே ஒரு போராளியை அங்கு அனுப்பி; தாக்குதல் தொடர்பான களநிலைமையை உடனுக்குடன் தெரியப்படுத்த தான் ஏற்பாடு செய்யலாம் என்றும்; வைத்தியசாலையிலிருந்து கொண்டு தொடர்புக்கருவியில் உரையாடுவது பாதுகாப்பு இல்லையெனவும் கூறித்தான்; அந்த ஓய்வறியாத் தளபதியை ஓய்வெடுக்கச் செய்யவேண்டியிருந்தது.
சிறீ. இந்திரகுமார்
நன்றி தமிழ் ஈழம் பவர்
பிரிகேடியர் கடாபி/ ஆதவன்
சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.
வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.
‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.
கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.
இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.
ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.
அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.
பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.
கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.
நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.
இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன்.
குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.
நன்றி தமிழ் ஈழம் பவர்
வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.
‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.
கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.
இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.
ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.
அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.
பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.
கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.
நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.
இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன்.
குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.
நன்றி தமிழ் ஈழம் பவர்
லெப்டினன்ட் சீலன்
லெப்.சீலன்
(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)
வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983
ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.
சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.
தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.
1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.
அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.
1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.
1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.
1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.
1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.
இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.
திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.
லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் வீறுநடை போட்டுச் செல்கின்றது
நன்றி தமிழ் ஈழம் பவர்
லெப்டினன்ட் சங்கர்
ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.
அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.
படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..
ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.
ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.
இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..
பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.
சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.
தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.
இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.
சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.
ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.
நன்றி - எரிமலை
லெப்டினன் கேணல் திலீபன்
லெப்டினன் கேணல் திலீபன்
(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் - 27.11.1963
மண்ணின் மடியில் - 26.9.1987
தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் திலீபன் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த பன்னிரண்டு நாட்களையும் பன்னிரண்டு 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டு பகுதிகளும் -தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள
'தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்!"
தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.
இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.
அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.
தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். 'அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே" - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:
'இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!".
ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.
தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!
இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். 'ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்" - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்"- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?"
அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.
உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!
இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.
('தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்! -
நன்றி தமிழ் ஈழம் பவர்
(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் - 27.11.1963
மண்ணின் மடியில் - 26.9.1987
தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் திலீபன் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த பன்னிரண்டு நாட்களையும் பன்னிரண்டு 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டு பகுதிகளும் -தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள
'தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்!"
தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.
இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.
அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.
தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். 'அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே" - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:
'இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!".
ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.
தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!
இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். 'ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்" - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்"- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?"
அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.
உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!
இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.
('தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்! -
நன்றி தமிழ் ஈழம் பவர்
என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!
தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும் அப்பால் உள்ள லண்டன் மாநகரில் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தது! தேம்ஸ் நதியை வருடிப்பரவிய காற்றில் அவரின் உயிரும் கரைந்து போனது!
பலரின் வாழ்வு அவர்களின் சாவுடன் முற்றுப்புள்ளிக்குள் சிக்கி முடிந்து விடுவதுண்டு. மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு சாவையும் கடந்து நிலைபெற்று விடுவதுண்டு.
பாலா அண்ணனின் வாழ்வோ அவரின் சாவின் பின்னும் அவரின் ஆற்றலில், அவரின் தத்துவார்த்த அறிவில், அவரின் ராஜதந்திர அணுகுமுறைகளில் இன்றும், என்றும் ஒளிவீசி நிலை பெற்றுவிட்டது.
விடுதலைப் போர் தோல்விகளின் விளிம்புக்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் அவரின் ராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் தோள் கொடுத்து போரை வெற்றியின் பக்கம் திருப்பி விட்டன. சர்வதேச முகவர்களாலும், அந்நிய புலனாய்வுப் பிரிவுகளாலும் எமது போராட்டம் திசைதிருப்ப முற்பட்ட போதுகளிலும், படுகுழியில் வீழ்த்தப்பட முனைந்த போதுகளிலும் இரும்புச் சுவராக எழுந்து நின்று பாதுகாத்தவர் பாலா அண்ணன்.
சிறீலங்கா அரசுடனான ஆறு சுற்றுப் பேச்சுக்களையும் மெல்ல மெல்ல தனது சாதுரியத்தால் அவர் எமது இலக்கை நோக்கி நகர்த்தியமை அவரின் ஆற்றலின் மகத்துவம்.
சரியான பாதையில் பயணித்துச் செல்லும் சாரத்தியம் அவரிடம் உண்டு என்பது உண்மை தான்.
ஆனால் - காலம் அதுவரை காத்திருக்கவில்லை! காலனை அனுப்பி அவரைக் கவர்ந்து கொண்டது.
ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பல பக்கங்கள் உண்டு. ஒன்று தந்திரோயப் பிரச்சினை மற்றையது யுத்த தந்திரப் பிரச்சினை. யுத்த தந்திரம் எவ்வளவு தான் ஆற்றல் வாய்ந்ததாகவும் வலிமை கொண்டதாகவும் இருந்தாலும் தந்திரோபாயம் பலவீனமடைந்தால் முழுப் போராட்டமும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளவேண்டிவரும்.
இது உலக வரலாறு கற்றுத்தரும் பாடம்.
எமது தந்திரோபாயங்களை வகுப்பதில் பாலா அண்ணரின் பங்கு ஒப்பற்றது. நாம் பல நெருக்கடிகளை நீந்திக்கடப்பதில் எமக்குத் தலையைக் கொடுத்தார் என்றால் மிகையாகாது.
எமக்கும் எதிரிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைக் கையாள்வது. எமது பலவீனங்களையே பலமாக மாற்றுவது. சர்வதேச விவகாரங்கள் ஊடாக எமது போராட்டத்துக்கு ஊறுவிளைவிக்கப்படாமல் விடயங்களைக் கையாள்வது போன்ற விடயங்களில் அவரின் ஆற்றல் மிகுந்த வழி நடத்தல் எமது போராட்டத்தை வெற்றியை நோ்ககி முன்னகர்த்தியமையை எவரும் மறந்துவிட முடியாது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டைப் பயன்படுத்தி இந்திய இராணுவத்தை எமது மண்ணைவிட்டு வெளியேறும் ஒரு நிலையை உருவாக்கியது ஒரு பெரும் இராஜதந்திர வெற்றியாகும். இதில் பாலா அண்ணரின் பங்கும் அளப்பரியது.
எம்மைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்த மேற்குலகம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் சிங்கள இனவாத அதிகார பீடத்தின் வி்ட்டுக்கொடுக்காத ஒடுக்குமுறைப் போக்கை உணரும் வகையில் பாலா அண்ணன் மிக லாவகமாக அதைக் கையாண்டார்.
சிங்களம் பலவிமான சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும் எமது விடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் காரணமாகவும் படியிறங்கி வருவதற்கான ஒரு சூழல் தோன்றிய போது ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துரதிஷ்டவசமானதே. அத்துடன் சமாதான மேசையில் பாலா அண்ணின் பங்கும் இல்லாமல் போனது!
பேச்சுக்கள் முறிவடைந்தன! மீண்டும் போர் தொடங்கியது.
2009 மே 19இல் எமது ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டது.
ஆனால் எந்தவொரு விடுதலைப் போராட்டமும், அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை! தோற்கடிக்கப்பட்டது வழிமுறைதான்! போராட்டம் அல்ல!
பாலா அண்ணன் இப்போ எம்மிடம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் அவரின் அற்புதமான வழிகாட்டல் விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நெறிப்படுத்தும்.
“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
செண்பகப் பெருமாள்
நன்றி வன்னி ஆன்லைன்
Re: மாவீரர்கள்
சிறந்த தொகுப்புகளுக்கு நன்றி மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|