ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை தூங்கும் நேரம்...

Go down

நேர்மை தூங்கும் நேரம்... Empty நேர்மை தூங்கும் நேரம்...

Post by நிசாந்தன் Wed Feb 02, 2011 2:23 pm

நாம் 62வது குடியரசுத் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிய நேரத்தில், தேசமெங்கும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிய நேரத்தில் ஒரு குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக வருங்காலம் என்னவாகப் போகிறது என்று தெஇயாமல் தங்களது விதியை நொந்து கதறிக் கொண்டிருந்தது. அது சாதாரணக் கண்ணீர் அல்ல, ஆற்றாது அழுத கண்ணீர்…

அந்த குடும்பத்தின் தலைவராக இருந்த யசுவந்த் சோனாவானே யர் தெரியுமா? கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா? நேர்மையாளராக இருந்தது. தவறைத் தட்டிக் கேட்டது. திகைக்காதீர்கள். இந்திய அரசுப் பணியிலும் நிர்வாகத்திலும் நேர்மையாளராக இருந்தால் இப்படி ஒரு சோதனையை எதிர்கொள்ள நேரும் என்று சொன்னால், இந்திய சன்நாயகம் செத்துவிட்டது என்று அரைக்கம்பத்தில் மூவர்ணப் பதாகையைப் பறக்க விட்டுவிடலாமே…

தனது அலுவலக வாகனத்தில் பணி நிமித்தம் ஒரு உதவியாளருடனும், ஓட்டுநருடனும் பயணித்துக் கொண்டிருந்தார் கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த யசுவந்த சோனாவானெ. நெடுஞ்சாலையில் ஒரு மண்ணெண்ணெய் டேங்கர் லாரியில் நிறுத்தப்பட்டிருப்பதையும், அதிலிருந்து சிலர் மண்ணெண்ணெய்த் திருடுவதையும் பார்த்த அவர் வாகனத்தை நிறுத்தித் திருடுபவர்களைத் தனது கைப்பேசியில் படம்பிடித்தார். திருட்டுக் கும்பல் ஓடி மறைந்தது.

தனது வாகனத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சோனாவானே. ஐந்தாறு மோட்டார் சைக்கிள்களில் சிலர் திடீரென்று விரைந்து வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்து சோனாவானேவின் உதவியாளரும், ஓட்டுநரும் ஓட்டம் பிடித்தனர். வருபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? அகப்பட்டுக் கொண்ட சோனாவானே அடித்துத் துவைக்கப்பட்டார். லாரியில் இருந்த மண்ணெண்ணெய் அவர்மீது ஊற்றப்பட்டது. அந்த நேர்மையான கூடுதல் ஆட்சியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

இப்படி நேர்மைக்குத் தண்டனை வழங்கி எக்களமிட்டது யார் தெரியுமா? பொப்பட் சிண்டே என்று காவல்துறையால் அடையாளம் கண்டு இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர். இந்தக் கைது கூட இப்போது எதனால் நடந்தது தெரியுமா? மகராட்டிரா மாநிலத்தில் உள்ள 80,000-க்கும் அதிகமான கெசடட் அதிகாரிகள் சோனாவானேயின் கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதால்தான்.

பொப்பட சிண்டே மீதான முதல் குற்றச்சாட்டு அல்ல இது. பல ஆண்டுகளாகவே இதுபோன்ற பெட்ரோல், மண்ணெண்ணெய் திருட்டுகள் மன்மாட பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமூக விரோதிகளின் கைப்பாவைகளாக காவல்துறை மட்டுமல்ல, உள்ளூர் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என்று எல்லோருமே இயங்கி வரும் சூழ்நிலை. இந்தச் சமூக விரோத கும்பலுடன் ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகள் நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடிக்கப்பட்ட சம்பவங்கள் இப்போது பத்திரிக்கைகளில் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

பெட்ரோல், மண்ணெண்ணெய், கடத்தல், திருடுதல், கலப்படம் செய்தல் என்பது மகராட்டியத்தில் மட்டும் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளனவோ, எங்கெல்லாம் எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இது நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் இப்போது கோடிசுவரர்கள் என்பது மட்டுமல்ல, தொண்டு நிறுவனத் தலைவர்களாகவும், கல்வி நிறுவனங்களின் தலைவர்களாகவும் தங்களுக்கு யோக்கிய முலாம் பூசிக்கொண்டு உலா வருகிறார்கள் என்பது உண்மை.

நமது தமிழகத்திலேயே, சென்னையில் , பெட்ர்ரொலியக் கலப்படத்துக்காகக் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தும் கூட எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளில் சிலரே இந்தக் கடத்தல் களப்பட சமூக விரோதக் கும்பலுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்கும்போது, யார் இதைத் தடுப்பது? இதனால் ஏற்படும் இழப்புக்கு சாதாரண பொதுமக்கள் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அதிக விலை கொடுத்து ஈடுகட்டுவதைத் தவிர, வேறு வழ்தான் என்ன?

மன்மாட் நகரில் நேர்மைக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கும் யசுவந்த் சோனாவானேயைப் போல பலர் இரத்தம் சிந்தியும்கூட, சமூகவிரோதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லையே. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியான சத்யேந்திர துபே 2003ல் முறைகேடுகலைச் சுட்டிக்காட்டியதற்காக பிகாரில் கொல்லப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் கலப்பட பெட்ரோல் விற்றதற்காக இரண்டு பெட்ரோல் பங்குகளை சீல் வைக்கச் செய்த மஞ்சு நாத் என்கிற இந்தியன் ஆயில் கார்பிரேசன் அதிகாரி 2005-ல் கொல்லப்பட்டார்.

நமது தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், ஏ.ஆர்.வெங்கடேசன். யி.புண்ணியகோடி என்ற இரண்டு தாசில்தார்களும், ஆர்.சண்முக சுந்தரம் என்கிற வருவாய் ஆய்வாளரும் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொல்லப்படவில்லையா? நாங்குநேரியில் தாசில்தார் நடராசன், மணல் கடத்தி வந்த லாரியைத் தடுக்க முயன்றபோது, லாரியால் மோதப்பட்டு இப்போது சக்கர நாற்காலியில் தள்ளப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறவில்லையா?

நேர்மையானவர்களையும், ஊழலுக்கும் அநீதிக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்கலையும், காப்பாற்ற வேண்டிய, காவல்துறையும், அரசும், சமூகவிரோதிகளுடன் கைகோத்துக் கொண்டு செயல்படும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்திய சனநாயகத்துக்கே முற்றுப்புள்ளி விழுந்துவிடும்!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum