Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
5 posters
Page 1 of 1
எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு; முபாரக் ஆட்சி கவிழும் ஆபத்து
எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இவரது நீண்ட கால ஆட்சியில் எகிப்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது. மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது.
எனவே முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் வன்முறை போராட்டத்தில் குதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இன்று 8-வது நாளாக கலவரம் நீடித்து வருகிறது.
தலைநகர் கெய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார்.
புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின் றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.
ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது.
எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். “அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்” என்று அவர் கூறினார்.
ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர். அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இது ரூ.60 கோடி மதிப்புடையது. மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
219 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு எகிப்தில் இருந்து 2-வது விமானம் மும்பை வந்தது
எகிப்து நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் எகிப்து முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. எகிப்தில் வசிக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். அங்கு 3 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வந்தனர். அவர்களும் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தனர்.
இதனால் அவர்களை அழைத்து வர விசேஷ விமானங்கள் மத்திய அரசு எகிப்து தலைநகரம் கெய்ரோவுக்கு அனுப்பி வைத்தது. இதில் முதல் விமானம் நேற்று மும்பை வந்தது. அதில் 329 பயணிகள் வந்தனர்.
இன்று 2-வது விமானம் மும்பை வந்து சேர்ந்தது. அதில் 219 பேர் வந்தனர். ஒவ்வொரு பயணியிடமும் ரூ.45 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்னும் ஏராளமானோர் இந்தியா வருவதற்காக கெய்ரோ விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
எகிப்தில் டாடா நிறுவன தொழிற்சாலை உள்ளது. இங்கு 300 இந்தியர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களும் இந்தியா திரும்ப காத்திருக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
அங்கு அனைவரும் ஒற்றுமையாக அல்லவா உள்ளனர்.அதை பிளவு படுத்த நம்ம நாட்டு கட்சி தலைவர்களை யாரையாவது அங்கு அனுப்பலாமா?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
முரளிராஜா wrote:அங்கு அனைவரும் ஒற்றுமையாக அல்லவா உள்ளனர்.அதை பிளவு
படுத்த நம்ம நாட்டு கட்சி தலைவர்களை யாரையாவது அங்கு அனுப்பலாமா?
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
முரளிராஜா wrote:அங்கு அனைவரும் ஒற்றுமையாக அல்லவா உள்ளனர்.அதை பிளவு படுத்த நம்ம நாட்டு கட்சி தலைவர்களை யாரையாவது அங்கு அனுப்பலாமா?
இது நல்லா இருக்கே....
தகவலுக்கு நன்றி தல
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
முரளிராஜா wrote:அங்கு அனைவரும் ஒற்றுமையாக அல்லவா உள்ளனர்.அதை பிளவு படுத்த நம்ம நாட்டு கட்சி தலைவர்களை யாரையாவது அங்கு அனுப்பலாமா?
அங்குள்ள மக்கள் மண்டையை உடைத்து அனுப்புவார்கள். இவர்களின் முட்டாள்தனங்கள் எல்லாம் இந்திய மக்களிடம்தான் எடுப்படும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
சிவா wrote:முரளிராஜா wrote:அங்கு அனைவரும் ஒற்றுமையாக அல்லவா உள்ளனர்.அதை பிளவு படுத்த நம்ம நாட்டு கட்சி தலைவர்களை யாரையாவது அங்கு அனுப்பலாமா?
அங்குள்ள மக்கள் மண்டையை உடைத்து அனுப்புவார்கள். இவர்களின் முட்டாள்தனங்கள் எல்லாம் இந்திய மக்களிடம்தான் எடுப்படும்!
சரியாக சொனீர்கள் அண்ணா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு
» எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
» அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
» முபாரக், மகன்கள் கைது - எகிப்தில் இராணுவம் அதிரடி!
» சீன ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை : இந்தியா மறுப்பு
» எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
» அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
» முபாரக், மகன்கள் கைது - எகிப்தில் இராணுவம் அதிரடி!
» சீன ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை : இந்தியா மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|