ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_m10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10 
VENKUSADAS
இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_m10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_m10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10 
VENKUSADAS
இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_m10இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?

2 posters

Go down

இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Empty இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?

Post by சிவா Sun Jan 30, 2011 8:03 pm

இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?

இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Hunger-strike1

ஐந்தாம் பார மாணவர்களுக்கு இலக்கியப் பாடநூலாக கல்வி அமைச்சால் தேர்வு செய்யப்பட்டு மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இண்டர்லோக் மலாய் நாவல் குறித்து இந்திய மலேசியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் சீன மலேசியர்கள் மௌனமாக இருந்து வருகின்றனர். அவர்களைப் பற்றி இழிவாக இண்டர்லோக் நாவலில் எழுதப்பட்டிருக்கும் பத்தியை இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் கூட்டணி சுட்டிக் காட்டியது.

மகள் இருந்தால், விற்கலாம்

“Kita makan apa-apa yang dapat. Akar-akar kayu kalau ada. Kita minta sedekah. Kita curi. Kita tak punya anak perempuan. Kalau ada anak perempuan kita boleh jual”, (பக்கம் 107) என்று மாணவர்களுக்கான இண்டர்லோக் 2010 மலாய் பதிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. இது தேவான் பகசா டான் புஸ்தகாவின் வெளியீடாகும்.

இண்டர்லோக்கின் 2010 ஆங்கிலப் பதிப்பில், “We will eat what we can get. Roots, if we find them. We will beg. We will steal. We don’t have girls. If we did, we could sell them”, (பக்கம் 102) என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது Institut Terjemahan Negara Malaysia Berhadட்டின் வெளியீடாகும். மலாயில் “anak perempuan” என்றும் ஆங்கிலத்தில் “girls” என்றும் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த உரையாடல் அப்துல்லா ஹுஸெய்ன் எழுதியுள்ள இண்டர்லோக் நூலில் வரும் சிங் ஹுவாட் என்ற சீன கதாப்பாத்திரம் கூறுவதாகும். நல்வாழ்க்கையைத் தேடி இன்னொரு நகருக்குச் செல்லும் வழியில் அவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று அவரின் மனைவி எழுப்பியக் கேள்விக்கு சிங் ஹுவாட் கூறிய பதிலாகும்.

அந்த நூலையும் அதில் காணப்படும் அந்த வாசகத்தையும் இன்னும் அதுபோன்றவற்றையும் அனைத்து மசீச மற்றும் இதர சீன தலைவர்களும் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தேசிய இண்டர்லோக் நடவடிக்கை குழு (NIAT), இவ்விவகாரத்தில் அவர்கள் மௌனமாக இருப்பது ஏன் என்று வினவிற்று.

“நான் சீன சமூகத்தைப் பிரதிநிதிக்கும் மசீசவின் தலைவர் சுவா சோய் லெக்கிடம் கேட்கிறேன். நீங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?”, என்று நியட்டின் தலைவர் தஸ்லிம் முகம்மட் பின் இப்ராகிம் இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கேட்டார்.

குறிப்பிட்ட இந்த பத்தி சீன சமூகத்தை இழிவுபடுத்துவதோடு அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக எதுவும் செய்யக்கூடிய மக்கள் என்று சித்தரிக்கிறது என்று நியட்டினர் கருதுகின்றனர்.

அந்நூலில் இந்தியர்களுடன் சீனர்களையும் மலாய்க்காரர்களையும் இழிவுபடுத்தும் இன்னும் பல வாசகங்கள் இருப்பதாக கூறும் அவர்கள், அது பள்ளிப்பாட திட்டத்திலிருந்து அகற்றப்பட்ட வேண்டும் என்று வாதிட்டனர்.

“இழிவுபடுத்துவதாக உணர்கிறோம்”

தொடக்கத்தில் இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் அந்நூலில் இந்திய மலேசியர்களின் சாதியைப் பற்றிய வர்ணனைகள் மற்றும் ஓர் இனம் என்ற முறையில் வகைப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டன.

இது இழிவுபடுத்தும் செயல் என்று அவர்களில் பலர் கருதுவதோடு கடந்த 150 ஆண்டுகாலமாக அவர்கள் சாதி முறையை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு முரணாக இருக்கிறது.

“எங்களுடைய சீன சகோதரர்கள் இவ்வாறு வர்ணிக்கப்பட்டிருப்பது குறித்து நாங்களும் இந்தியர்கள் என்ற முறையில் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறோம்”, என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.

அவருடையக் கருத்துடன் ஒத்துப்போன தஸ்லிம் முகமட் மலாய்க்காரர்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கூட அந்நூலில் இருக்கலாம் என்று கூறினார்.

“அந்த நூலைப் முழுதுமாக படித்து அதில் மலாய்க்காரர்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து அவற்றைச் சுட்டிக் காட்டுமாறு எனது ஆய்வாளருக்கு ஆணை இட்டிருக்கிறேன்”, என்று தஸ்லிம் கூறினார்.

இன்று நடந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் இந்தியர்கள் பின்பற்றும் அனைத்து சமயங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தஸ்லிம் முகம்மட் இந்திய முஸ்லிம்களைப் பிரதிநிதித்தார், இந்து சங்கம் இந்துக்களையும், ரெவரெண்ட் ஹென்றி சந்தானம் கிறித்துவர்களையும் பிரதிநிதித்தார்.

நியட் குழுவினர் இண்டர்லோக் நூல் பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். இளைஞர்களின் மனதில் அந்நூல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம்தான் அவர்களின் குறிக்கோள். மற்றபடி, அந்நூல் ஓர் இலக்கிய நூலாக விற்கப்படுவது அல்லது முதிர்ச்சி அடைந்தவர்களால் வாசிக்கப்படுது குறித்து எவ்விதப் பிரச்னையும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

சுமார் 150 இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் இந்த இயக்கத்தினர் இன்று அமைதியாக ஓர் உண்ணாவிரத நிகழ்வில் பங்கேற்றனர். இது கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடைபெற்றது. இந்த நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியர்கள் அவர்களின் கோரிக்கை அடங்கிய மனுவில் கையெழுத்திடுவதற்காக வரிசைப் பிடித்து நின்றனர். இன்று பிற்பகல் மணி 2 அளவில் அம்மனு இந்திய அமைச்சர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும்.

மஇகாவை தாக்கிப் பேச வேண்டாம்

இன்று காலையிலிருந்து மழை பெய்து கொண்டிருந்தது சிரமத்தை ஏற்படுத்தியபோதிலும் பல ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் அனுசரிக்கப்பட்ட இடத்திற்கு வந்து பங்கேற்றதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் எ.முரளி கூறினார். முரளி தமிழன் உழைக்கும் கரங்கள் அமைப்பின் தலைவராவார்.

250 பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தெரிவித்து அதற்கான புத்தகத்தில் கையெழுத்திட்டனர் என்று அவர் கூறினார்.

இண்ட்ராப் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் அங்கு வந்து முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்ததாகவும் முரளி கூறினார்.

மிக அமைதியாக நடந்த இந்நிகழ்வைக் கண்காணிக்க சுமார் 30 போலீசார் அங்கு இருந்தனர்.

இண்டர்லோக் நூல் பள்ளி மாணவர்களுக்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காக அந்நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதில் இந்த உண்ணாவிரத நிகழ்வு வெற்றி பெற்றுள்ளதாக கருதுவதாக முரளி தெரிவித்தார்.

இண்டர்லோக் நூலுக்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இது போன்ற உண்ணாவிரத அனுசரிப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அழைப்புகள் வந்துள்ளன என்றும் முரளி கூறினார். இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

துணை அமைச்சர் எம்.சரவணன் இண்டர்லோக் நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டதாக கூறிய முரளி, மஇகா இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தும். ஆகவே, மஇகாவை தாக்கிப் பேச வேண்டாம் என்று துணை அமைச்சர் கேட்டுக்கொண்டதாக மேலும் கூறினார்.

மலேசியா இன்று.


இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?  Empty Re: இண்டர்லோக்: சீனர்கள் அவர்களுடைய மகள்களையே விற்கின்றனரா?

Post by கலைவேந்தன் Mon Jan 31, 2011 12:26 am

ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாக அவமதிப்பது போன்ற இத்தகைய வாசகங்கள் இடம்பெற்று இருப்பது உண்மையெலில் அந்த புத்தகம் தடை செய்யப்படவெண்டியதே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum