ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை

3 posters

Go down

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை Empty ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை

Post by Guest Mon Jan 24, 2011 12:37 pm

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை Jayakumar

வேதாரணியத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது. தனது இயலாமையை சொல்லி உயிர்ப்பிச்சை கேட்டும் அதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல், அவரது கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளது இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல்.

சமீபத்தில்தான் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற 19 வயது மீனவரை இலங்கை ரவுடிக் கும்பல் சுட்டுக் கொலை செய்தது. இந்த சோகம் கூட மறையாத நிலையில், மத்திய அரசு உறுதிமொழி அளித்தும் கூட, மீண்டும் ஒரு தமிழக மீனவரை படுகொலை செய்துள்ளது சிங்களக் கும்பல்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கினர். தாக்குதலில் ராஜேந்திரனும்,செந்திலும் கடலில் குதித்துள்ளனர். ஆனால் மீனவர் ஜெயக்குமார் உடல் ஊனமுற்றவர் என்பதால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை விட்டுவிடும்படி அவர் இலங்கை கடற்படை ரவுடிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கதறியுள்ளார்.

ஆனாலும் மோசமான காட்டுமிராண்டிக் கும்பலான இலங்கை கடற்படை ரவுடிகள், ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி படகைச் சுற்றிச் சுற்றி இழுத்ததில் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஹிட்லருக்குக் கூட இப்படிப்பட்ட கொடூர மனம் இருந்திருக்காது என்று கருதும் அளவுக்கு மிக மிக மோசமான வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர். இலங்கை காவாலிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் காவல் நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 மீனவர்களை இலங்கை கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் தமிழக மீனவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

கடந்த 12ம் தேதிதான் பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு தந்தி அடித்தார். இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத சுறுசுறுப்புடன் (தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால்) இலங்கை தூதரை அழைத்து விளக்கம் கேட்டு அனுப்பி வைத்தது.

மேலும், தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, நேற்றுதான் கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னொரு இந்தியத் தமிழரை வீழ்த்தியுள்ளது இலங்கைக் கடற்படை கும்பல்.

ஜெயக்குமார் உடலுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமாரின் உடலுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று மீனவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரி மீனவர்கள் கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஜெயக்குமார் சார்ந்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலைநிறுத்தத்தில் குதித்தனர்

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்து புஷ்பவனம் கிராம மீனவர்கள் கடலுக்குப் போகாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இலங்கை வெறிச் செயலால் மீனவர் கிராமங்களில் பரபரப்பும், கொந்தளிப்பும், கொதிப்பும் நிலவுகிறது.

நாங்கள் கொல்லவில்லை - வழக்கம் போல இலங்கை மறுப்பு

தமிழக மீனவரை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை அரசு வழக்கம் போல மறுத்துள்ளது.

இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியவசம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்.
-- வன்னி ஆன்லைன்
avatar
Guest
Guest


Back to top Go down

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை Empty Re: ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை

Post by SK Mon Jan 24, 2011 1:16 pm

இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியவசம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்.

இவனுங்களை எல்லாம் பண்ணிய சுடர மாதிரி சுட்டு தல்லனும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை Empty Re: ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jan 24, 2011 1:48 pm

மீனவர் உயிரின் விலையை சல்லிக் காசுக்கும் மதிக்காதவர்களை, இதோ வரப்போகும்
தேர்தலிலும் இதே மீனவர்களே வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்..

தங்கள் வாய்க்கரிசியை தாங்களே போட்டுக்கொண்டு, ஈனத்தலைவனின் கடுதாசி
மாயையில் அல்லலுறும் உணர்வற்றவர்கள்...இவர்களாக திருந்தி எழாதவரை இது
தொடர்கொலையாகவே இருக்கப்போவது திண்ணம்..

ஏமாளியான மீனவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை Empty Re: ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை

Post by Guest Mon Jan 24, 2011 1:53 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:மீனவர் உயிரின் விலையை சல்லிக் காசுக்கும் மதிக்காதவர்களை, இதோ வரப்போகும்
தேர்தலிலும் இதே மீனவர்களே வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்..

தங்கள் வாய்க்கரிசியை தாங்களே போட்டுக்கொண்டு, ஈனத்தலைவனின் கடுதாசி
மாயையில் அல்லலுறும் உணர்வற்றவர்கள்...இவர்களாக திருந்தி எழாதவரை இது
தொடர்கொலையாகவே இருக்கப்போவது திண்ணம்..

ஏமாளியான மீனவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

அதே தான் விஜி அண்ணே... என்ன சொன்னாலும் ,திட்டுநாலௌம் தமிழக மக்களுக்கு சுட மாட்டேங்குதே ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை 56667 ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை Empty Re: ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை

Post by அன்பு தளபதி Mon Jan 24, 2011 2:38 pm

எப்பா தலைவேருக்கு பேப்பரும் பேனாவும் கொடுங்க பிரதமருக்கு கடிதம் எழுதி உடனே நிப்பாட்டுவார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை Empty Re: ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum