Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருந்ததிராய்-சீமான் இறையாண்மை
2 posters
Page 1 of 1
அருந்ததிராய்-சீமான் இறையாண்மை
அருந்ததி ராயின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் விவாதங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் அருந்ததி ராய்? “காசுமீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை” என்று சொல்லியிருக்கிறார். “ஏன் அப்படி சொல்கிறீர்கள்” என்ற கேள்விக்கு, “இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை. ஆனால், இன்றைய காசுமீர் சிக்கலுக்கு, காசுமீர் வரலாறு காரணமில்லை என்றால், இந்திய அரசு 7 இலட்சம் இராணுவ வீரர்களை காசுமீரில் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? காசுமீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த உண்மையைக் கண்டுகொள்ளாமல் எப்போதும் நாம் ஏன் கண்களை மூடிக்கொள்கிறோம்?” என்று பதிலளித்திருக்கிறார், ராய்.
இந்தக் கருத்துக்குத்தான் பிராமணிய ஊடகமான TIMES NOW செய்தித் தொலைக்காட்சி அருந்ததிராய் தேசத் துரோகி என்று வர்ணிக்கிறது. காசுமீர் குறித்த அருந்ததி ராயின் அக்கருத்துக்கள் மிகவும் சரியானதே.
அருந்ததி ராயின் இந்தப் பேச்சை அடுத்து, B.J.P. போன்ற இந்துத்துவக் கட்சிகளும், இந்திய தேசியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சில ஆங்கில, இந்தி ஊடகங்களும் அருந்ததிராயைக் கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. அருந்ததி ராயின் பேச்சு இந்திய அரசு அறிவித்தது. பின்னர், அவரைக் கைது செய்யப்போவது இல்லை என்று பின்வாங்கியது. இப்போது அருந்ததிராய் மீது வழக்குத் தொடுக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதற்கிடையே, B.J.P. உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் அருந்ததிராயின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.
அருந்ததி ராயைக் கைது செய்வதில் இந்திய அரசுக்கு இவ்வலவு குழப்பம் என் என்பது ஆராய வேண்டிய கேள்வி. அருந்ததி ராய் இந்திய தேசியத்தை ஆதரிப்பவர். விதிவிலக்காகவே காசுமீர் விடுதலையை ஆதரிக்கிறார்.
அருந்ததிராய் உலக அளவில் அறியப்பட்ட சமூகப் போராளி. ஆங்கிலத்தில் எழுதி வருபவர். அருந்ததி ராய் ஈழத்தில் இறுதிக் கட்டப்போர் நடந்த நேரத்தில் சென்னை வயோலா கல்லூரியில் நடந்த கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. அன்ரைய தினம் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு தான் அளித்திருந்த ஈழத்தமிழர்கள் மீதான போர் குறித்த நேர்க்காணலையே அந்தக் கண்டனக் கூட்ட மேடையில் வாசிக்கும் படி செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியிலும் விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார், அருந்ததி ராய்!
சீமான் இராமேசுவரத்தில் பேசுகிறார். ஈரோட்டில் பேசுகிறார். புதுவையில் பேசுகிறார். சென்னையில் பேசுகிறார். அந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் கைது செய்யப்படுகிறார். சீமானைக் ஏன் கைது செய்யவில்லை என்று (பரம) எதிர்க்கட்சித் தலைவி செயலலிதா அறிக்கை விடுத்ததும் கருணாநிதியின் தி.மு.க. அரசு அவரைக் கைது செய்கிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசு கேட்கிறது, உடனே கருணாநிதி கைது செய்ய உத்தரவிடுகிறார்.
இத்தனைக்கும் அருந்ததிராய் பேசியது, இந்தியத் தேசியத்துக்கு எதிராக. சீமான் பேசியது இலங்கை அரசுக்கு எதிராக. அருந்ததிராயைக் கைது செய்ய மத்திய அரசு அலோசனை செய்கிறது. ஆனால், சீமானைக் கைது செய்வதற்கு முன்பு இதுபோன்ற எந்த அலோசனையும் நடக்கவில்லையே ஏன்?
நான் அருந்ததி ராய்க்கு எதிரானவனல்ல. சீமான் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததையும், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததையும் நான் ஆதரிக்கவில்லை. அதற்காக தமிழர் இன விடுதலைக்காகப் போராடும் சீமானுக்காக கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்? அருந்ததிராய்க்கு எதிராக செயல்படும் வடஇந்திய ஊடகங்களையும் அருந்ததிராயைக் கைது செய்யக் கோரும் B.J.P. உள்ளிட்ட இந்து அமைப்புகளையும் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் சென்னையில் நடந்தன. அதில் சில திராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் பங்கேற்றன. அப்படி பெங்கேற்பவர்கள் மறந்துவிட்ட ஒன்றை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
வட இந்திஅ ஊடகத்துக்கு எதிராகப் போராடும் இவர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் எல்லாம் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்குக் குரல் கொடுக்கிறதா என்பதைச் சிந்திக்க வேண்டும். தமிழின உரிமைகளைப் பேசும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனத் தூண்டிவிடும். இந்து(The Hindu) நாலிதழ் காசுமீர் பிரிவினை குறித்து அருந்ததி ராய் பேசியதை ஆதரித்து எழுதியது! ‘அருந்ததி ராய் பேசியது அவரது உரிமை. இந்திய அரசியல் சாசனம் இதை அனுமதிக்கிறது’ என்றது இந்து! என்ன ஒரு கருத்துரிமைப் போராளி இந்து ராம்!
தினமலரும், இந்து நாளிதழும் தமிழுக்கும் தமிழர்கலுக்கும் ஆற்றி வரும் சேவைகல் பற்றி எல்லோருக்கும் தெரியும். தினமலரில் சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராசா என்று இன்றுவரை எழுதுகிறார்கள். சினிமாக்காரர் பாலச்சந்தர், சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவார்களா?
அருந்ததி ராய் வீடு தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியதுதான். கடந்த 2009 மே மாதம் பாரதிராசா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று, யாராவது கேட்டுச் சொல்வார்களா?
தமிழ் மொழி சமக்கிருதத்தையும், இந்தியையும் எதிர்த்து நிற்கிறது. இதனாலேயே தமிழரை இன்னும் எதிரியாகவே பார்க்கிறது, இந்தி(ய) அரசு. அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு கேடுகெட்ட திராவிடக் கட்சிகள் துணை போய் அவர்கள் கைகாட்டும் நபர்களை எல்லாம் கைது செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ கைதும், தி.மு.க. ஆட்சியில் சீமான் கைதும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. தற்போது வைகோ அ.தி.மு.க.வை ஆதரிப்பது போல், தேர்தல் அரசியலை கலந்துவிட்ட சீமான் நாளை யாரை ஆதரிக்கப் போகிறாரோ? தெரியாது. இது தமிழரின் விதியோ!
சீமான் இந்திய தேசியத்தை கோட்பாட்டளவில் எதிர்க்கவில்லை. ‘நான் தனித்தமிழ்நாடு கேட்கவில்லை’ என்று வெளிப்படையாக நேர்க்காணலே அளித்திருக்கிறார் அவர். ஆனாலும் அவர் மீது சட்டங்கள் பாய்கின்றன. அவர் தமிழர் என்பதும் தமிழர் உரிமைகளுக்காகப் போராடுகிறார் என்பதுமே காரணங்கள்.
அருந்ததி ராய் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் தன்னுடைய கோட்பாட்டிலிருந்து மாறவில்லை. ஏற்கெனவே கூறியபடி, விதிவிலக்காக காசுமீர் விடுதலையை ஆதரிக்கிறார். மேலும் அவர் தமிழர் அல்ல. ஆகவே அவர் வெளியிலிருக்கிறார்.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சீமானை விடுதலை செய்யக் கோரும் போராட்டங்கள் பலவற்றுக்கு அனுமதி தர மறுக்கும் தமிழக அரசு, அருந்ததிராய்க்கு ஆதரவான போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பதன் பின்னணி என்ன?
’நீ யாருக்கு வேண்டுமானாலும் போராடு. அதைப்பற்ரி சிக்கல் இல்லை. ஆனால் தமிழுணர்வை தட்டியெழுப்பும் எந்தப் போராட்டத்தையும் நடத்தாதே. நடத்தவும் அனுமதிக்க மாட்டேன்’ என்று இந்திய அரசின் கங்காணியாக இருந்து தி.மு.க. வழிமொழிகிறது. இன்றுவரை அருந்ததிராய் கைது செய்யப்படவில்லை. ஆனால், சீமானின் தமிழ்த் தேசியப்பற்று அவரைச் சிறையில் வைத்திருக்கிறது. இந்திய அரசின் இந்த சூழ்ச்சியை உணராவிட்டால் எப்படி?
இந்திய அரசால் புறக்கணிப்புக்குள்ளாகும் ஆறுகோடி தமிழர்களில் ஒருவராகவே இதைக் கேட்கிறேன். மற்ரபடி, நானும் தோழர் அருந்ததி ராய் போல, காசுமீர் விடுதலையை விரும்புகிறேன். ஆதரிக்கிறேன்.
- பொன்னுசாமி
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
திருவள்ளுவர் ஆண்டு 2041 மார்கழி(திசம்பர் 2010)
இந்தக் கருத்துக்குத்தான் பிராமணிய ஊடகமான TIMES NOW செய்தித் தொலைக்காட்சி அருந்ததிராய் தேசத் துரோகி என்று வர்ணிக்கிறது. காசுமீர் குறித்த அருந்ததி ராயின் அக்கருத்துக்கள் மிகவும் சரியானதே.
அருந்ததி ராயின் இந்தப் பேச்சை அடுத்து, B.J.P. போன்ற இந்துத்துவக் கட்சிகளும், இந்திய தேசியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சில ஆங்கில, இந்தி ஊடகங்களும் அருந்ததிராயைக் கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. அருந்ததி ராயின் பேச்சு இந்திய அரசு அறிவித்தது. பின்னர், அவரைக் கைது செய்யப்போவது இல்லை என்று பின்வாங்கியது. இப்போது அருந்ததிராய் மீது வழக்குத் தொடுக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதற்கிடையே, B.J.P. உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் அருந்ததிராயின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.
அருந்ததி ராயைக் கைது செய்வதில் இந்திய அரசுக்கு இவ்வலவு குழப்பம் என் என்பது ஆராய வேண்டிய கேள்வி. அருந்ததி ராய் இந்திய தேசியத்தை ஆதரிப்பவர். விதிவிலக்காகவே காசுமீர் விடுதலையை ஆதரிக்கிறார்.
அருந்ததிராய் உலக அளவில் அறியப்பட்ட சமூகப் போராளி. ஆங்கிலத்தில் எழுதி வருபவர். அருந்ததி ராய் ஈழத்தில் இறுதிக் கட்டப்போர் நடந்த நேரத்தில் சென்னை வயோலா கல்லூரியில் நடந்த கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. அன்ரைய தினம் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு தான் அளித்திருந்த ஈழத்தமிழர்கள் மீதான போர் குறித்த நேர்க்காணலையே அந்தக் கண்டனக் கூட்ட மேடையில் வாசிக்கும் படி செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியிலும் விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார், அருந்ததி ராய்!
சீமான் இராமேசுவரத்தில் பேசுகிறார். ஈரோட்டில் பேசுகிறார். புதுவையில் பேசுகிறார். சென்னையில் பேசுகிறார். அந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் கைது செய்யப்படுகிறார். சீமானைக் ஏன் கைது செய்யவில்லை என்று (பரம) எதிர்க்கட்சித் தலைவி செயலலிதா அறிக்கை விடுத்ததும் கருணாநிதியின் தி.மு.க. அரசு அவரைக் கைது செய்கிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசு கேட்கிறது, உடனே கருணாநிதி கைது செய்ய உத்தரவிடுகிறார்.
இத்தனைக்கும் அருந்ததிராய் பேசியது, இந்தியத் தேசியத்துக்கு எதிராக. சீமான் பேசியது இலங்கை அரசுக்கு எதிராக. அருந்ததிராயைக் கைது செய்ய மத்திய அரசு அலோசனை செய்கிறது. ஆனால், சீமானைக் கைது செய்வதற்கு முன்பு இதுபோன்ற எந்த அலோசனையும் நடக்கவில்லையே ஏன்?
நான் அருந்ததி ராய்க்கு எதிரானவனல்ல. சீமான் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததையும், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததையும் நான் ஆதரிக்கவில்லை. அதற்காக தமிழர் இன விடுதலைக்காகப் போராடும் சீமானுக்காக கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்? அருந்ததிராய்க்கு எதிராக செயல்படும் வடஇந்திய ஊடகங்களையும் அருந்ததிராயைக் கைது செய்யக் கோரும் B.J.P. உள்ளிட்ட இந்து அமைப்புகளையும் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் சென்னையில் நடந்தன. அதில் சில திராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் பங்கேற்றன. அப்படி பெங்கேற்பவர்கள் மறந்துவிட்ட ஒன்றை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
வட இந்திஅ ஊடகத்துக்கு எதிராகப் போராடும் இவர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் எல்லாம் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்குக் குரல் கொடுக்கிறதா என்பதைச் சிந்திக்க வேண்டும். தமிழின உரிமைகளைப் பேசும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனத் தூண்டிவிடும். இந்து(The Hindu) நாலிதழ் காசுமீர் பிரிவினை குறித்து அருந்ததி ராய் பேசியதை ஆதரித்து எழுதியது! ‘அருந்ததி ராய் பேசியது அவரது உரிமை. இந்திய அரசியல் சாசனம் இதை அனுமதிக்கிறது’ என்றது இந்து! என்ன ஒரு கருத்துரிமைப் போராளி இந்து ராம்!
தினமலரும், இந்து நாளிதழும் தமிழுக்கும் தமிழர்கலுக்கும் ஆற்றி வரும் சேவைகல் பற்றி எல்லோருக்கும் தெரியும். தினமலரில் சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராசா என்று இன்றுவரை எழுதுகிறார்கள். சினிமாக்காரர் பாலச்சந்தர், சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவார்களா?
அருந்ததி ராய் வீடு தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியதுதான். கடந்த 2009 மே மாதம் பாரதிராசா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று, யாராவது கேட்டுச் சொல்வார்களா?
தமிழ் மொழி சமக்கிருதத்தையும், இந்தியையும் எதிர்த்து நிற்கிறது. இதனாலேயே தமிழரை இன்னும் எதிரியாகவே பார்க்கிறது, இந்தி(ய) அரசு. அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு கேடுகெட்ட திராவிடக் கட்சிகள் துணை போய் அவர்கள் கைகாட்டும் நபர்களை எல்லாம் கைது செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ கைதும், தி.மு.க. ஆட்சியில் சீமான் கைதும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. தற்போது வைகோ அ.தி.மு.க.வை ஆதரிப்பது போல், தேர்தல் அரசியலை கலந்துவிட்ட சீமான் நாளை யாரை ஆதரிக்கப் போகிறாரோ? தெரியாது. இது தமிழரின் விதியோ!
சீமான் இந்திய தேசியத்தை கோட்பாட்டளவில் எதிர்க்கவில்லை. ‘நான் தனித்தமிழ்நாடு கேட்கவில்லை’ என்று வெளிப்படையாக நேர்க்காணலே அளித்திருக்கிறார் அவர். ஆனாலும் அவர் மீது சட்டங்கள் பாய்கின்றன. அவர் தமிழர் என்பதும் தமிழர் உரிமைகளுக்காகப் போராடுகிறார் என்பதுமே காரணங்கள்.
அருந்ததி ராய் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் தன்னுடைய கோட்பாட்டிலிருந்து மாறவில்லை. ஏற்கெனவே கூறியபடி, விதிவிலக்காக காசுமீர் விடுதலையை ஆதரிக்கிறார். மேலும் அவர் தமிழர் அல்ல. ஆகவே அவர் வெளியிலிருக்கிறார்.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சீமானை விடுதலை செய்யக் கோரும் போராட்டங்கள் பலவற்றுக்கு அனுமதி தர மறுக்கும் தமிழக அரசு, அருந்ததிராய்க்கு ஆதரவான போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பதன் பின்னணி என்ன?
’நீ யாருக்கு வேண்டுமானாலும் போராடு. அதைப்பற்ரி சிக்கல் இல்லை. ஆனால் தமிழுணர்வை தட்டியெழுப்பும் எந்தப் போராட்டத்தையும் நடத்தாதே. நடத்தவும் அனுமதிக்க மாட்டேன்’ என்று இந்திய அரசின் கங்காணியாக இருந்து தி.மு.க. வழிமொழிகிறது. இன்றுவரை அருந்ததிராய் கைது செய்யப்படவில்லை. ஆனால், சீமானின் தமிழ்த் தேசியப்பற்று அவரைச் சிறையில் வைத்திருக்கிறது. இந்திய அரசின் இந்த சூழ்ச்சியை உணராவிட்டால் எப்படி?
இந்திய அரசால் புறக்கணிப்புக்குள்ளாகும் ஆறுகோடி தமிழர்களில் ஒருவராகவே இதைக் கேட்கிறேன். மற்ரபடி, நானும் தோழர் அருந்ததி ராய் போல, காசுமீர் விடுதலையை விரும்புகிறேன். ஆதரிக்கிறேன்.
- பொன்னுசாமி
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
திருவள்ளுவர் ஆண்டு 2041 மார்கழி(திசம்பர் 2010)
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: அருந்ததிராய்-சீமான் இறையாண்மை
சாவுக்கு அடி பதிவு.... வழக்கம் போல இந்தியா அரசு நல்ல அரசு.... நீங்கள் இந்தியர் அல்ல என்று உங்களுக்கு யாராவது பின்னோட்டம் அளிக்க கூடும்...
Guest- Guest
Re: அருந்ததிராய்-சீமான் இறையாண்மை
"உரத்த குரலில் உரிமையுடன் கேள்"முடிந்தவரை எல்லா அடித்தட்டு மக்களுக்கும் விளங்கப்படுத்துங்கள் .வாழ்த்துக்கள்
Similar topics
» இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்
» அருந்ததிராய்
» மக்கள்நாயகி-அருந்ததிராய்-1
» 500 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவில் அகதி தஞ்சம் கோரமுடிவு! இந்தியாவின் இறையாண்மை?
» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» அருந்ததிராய்
» மக்கள்நாயகி-அருந்ததிராய்-1
» 500 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவில் அகதி தஞ்சம் கோரமுடிவு! இந்தியாவின் இறையாண்மை?
» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|