ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

(கியாமத்) யுக முடிவு நாளின் அடையாளங்கள்.

Go down

(கியாமத்) யுக முடிவு நாளின் அடையாளங்கள். Empty (கியாமத்) யுக முடிவு நாளின் அடையாளங்கள்.

Post by Guest Mon Jan 17, 2011 9:57 pm

மகளின்
தயவில் தாய்




ஒரு பெண் தனது
எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்

அடையாளங்களில்
ஒன்றாகும் என்பது நபிமொழி.


அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி 4777, 50


பின்
தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்


'வறுமை நிலையில் (அரை)
நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை

மேய்த்துக்
கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது
, யுக
முடிவு

நாளின் அடையாளங்களில்
ஒன்று
'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத்
திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி

வாழ்வார்கள்
என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)

குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 50

குடிசைகள்
கோபுரமாகும்


இன்று நடுத்தர
வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.

இதையும் யுக முடிவு
நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 7121

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள்
நெருங்கும் போது விபச்சாரமும்
, மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டுள்ளனர்.


நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

தகுதியற்றவர்களிடம்
பொறுப்பு


'நாணயம்
பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு
'' என்று
நபிகள்

நாயகம் அவர்கள் கூறிய
போது
'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம்
ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு
'' என்று
விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 59, 6496

பாலை
வனம் சோலை வனமாகும்


செல்வம் பொங்கிப்
பிரவாகித்து
, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும்
கொண்டதாக

மாறும் நிலையும்
ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது


நூல் : முஸ்லிம் 1681

காலம்
சுருங்குதல்


காலம் சுருங்கும் வரை
அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)

ஒரு வாரம் போலாகி
விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.

(இன்றைய) ஒரு நாள்
(அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு

விநாடி போன்று ஆகும்
என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.


நூல் : திர்மிதீ 2254)

கொலைகள்
பெருகுதல்


கொலைகள்
அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்

(ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

நில
அதிர்வுகளும்
, பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள்
அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்

நாயகம் (ஸல்)
குறிப்பிட்டுள்ளனர்.


நூல்: புகாரி 1036, 7121

பள்ளிவாசல்களை
வைத்து பெருமையடிப்பது


மனிதர்கள்
பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்

அடையாளங்களில்
ஒன்றாகும் என்பது நபிமொழி.


நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

நெருக்கமான
கடை வீதிகள்


கடைகள் பெருகி
அருகருகே அமைவதும்
, நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியுள்ளனர்.


நூல்: அஹ்மத் 10306


பெண்களின்
எண்ணிக்கை அதிகரித்தல்


பெண்களின் எண்ணிக்கை
தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்

அடையாளமாகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.


நூல்: புகாரி 81, 5231, 5577, 6808


ஆடை
அணிந்தும் நிர்வாணம்


ஆடை அணிந்தும்
நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்

தோன்றுவார்கள்
என்பதும் நபிமொழியாகும்.


நூல் : முஸ்லிம் 3971, 5098


உயிரற்ற
பொருட்கள் பேசுவது


விலங்கினங்கள்
மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு

வாரும் மனிதனிடம்
பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்

நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

பேச்சைத்
தொழிலாக்கி பொருள் திரட்டுதல்


தங்கள் நாவுகளை (மூல
தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்

வரை யுக முடிவு நாள்
ஏற்படாது என்பதும் நபிமொழி.


நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு
மட்டும் ஸலாம் கூறுதல்


தெரிந்தவருக்கு
மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று

நபிகள் நாயகம் (ஸல்)
கூறியுள்ளனர்.


நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசலை
பாதைகளாகப் பயன்படுத்துதல்


பள்ளிவாசல்கள்
பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று

நபிகள் நாயகம் (ஸல்)
கூறியுள்ளனர்.


நூல்: ஹாகிம் 4/493

சாவதற்கு
ஆசைப்படுதல்


இறந்தவர்களை அடக்கம்
செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்

செத்திருக்கக் கூடாதா
என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்

நபிமொழி.

நூல்: புகாரி 7115, 7121

இறைத்தூதர்
என வாதிடும் பொய்யர்கள்


ஏறத்தாழ முப்பது
பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக

முடிவு நாள் ஏற்படாது
என்பதும் நபிமொழி.


நூல்: புகாரி 3609, 7121

முந்தைய
சமுதாயத்தைக் காப்பியடித்தல்


'உங்களுக்கு முன்
சென்றவர்களை ஜானுக்கு ஜான்
, முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள்.
அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்

நீங்களும்
நுழைவீர்கள்
'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே
முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது

யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று
நபித்தோழர்கள் கேட்டனர்.

அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

யூதர்களுடன்
மாபெரும் யுத்தம்


யூதர்களுடன் நீங்கள்
போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த

யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.

நூல்: புகாரி 2926

கஃபா
ஆலயம் சேதப்படுத்தப்படுதல்


கஃபா ஆலயம் இறைவனால்
பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும்
'கால்கள்
சிறுத்த
அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்
'' என்பது
நபிமொழி.


நூல் : புகாரி 5179

யூப்ரடீஸ்
நதியில் தங்கப் புதையல்


யூப்ரடீஸ் (ஃபுராத்)
நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்

காண்பவர்கள்
அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.


நூல் : புகாரி 7119

கஹ்தான்
இன மன்னரின் ஆட்சி


(யமன் நாட்டு) கஹ்தான்
கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்

மக்களை ஓட்டிச்
செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.


நூல் : புகாரி 3517, 7117

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற
பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது

நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5183

எண்ணிப்
பார்க்காது வாரி வழங்கும் மன்னர்


கடைசிக் காலத்தில்
ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்

பார்க்காமல் செல்வத்தை
வாரி வழங்குவார் என்பது நபிமொழி.


நூல் : முஸ்லிம் 5191

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை
யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை
எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்

கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

மாபெரும்
யுத்தம்


இரண்டு மகத்தான
சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்

ஏற்படாது.
அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே

வாதத்தையே எடுத்து
வைப்பார்கள்.

நூல் : புகாரி 3609, 7121, 6936

பைத்துல்
முகத்தஸ் வெற்றி


யுக முடிவு நாளுக்கு
முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!


1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ்
வெற்றி


3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள்
ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்

திருப்தியடையாத
அளவுக்கு செல்வச் செழிப்பு


5. அரபுகளின் வீடுகள்
முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்


6. மஞ்சள்
நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.

அவர்கள் எண்பது
அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும்
12
ஆயிரம் பேர்
இருப்பார்கள்.


நூல் : புகாரி 3176

மதீனா
தூய்மையடைதல்


துருத்தி எவ்வாறு
இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்

தன்னிடம் உள்ள
தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது

என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 2451

அன்றும்
இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை


யுக முடிவு நாள்
வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்

இம்மார்க்கத்திற்காக
போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.


நூல் : முஸ்லிம் 3546

மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக
முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து

விஷயங்களைக்
குறிப்பிட்டார்கள்.


1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்)
பிராணி


4 - சூரியன்
மேற்கிலிருந்து உதிப்பது


5 - ஈஸா (அலை) இறங்கி
வருவது


6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில்
ஒரு பூகம்பம்


10 - இறுதியாக
ஏமனி
'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை
விரட்டிச்

சென்று ஒன்று
சேர்த்தல்


ஆகிய பத்து
அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்

நாயகம் (ஸல்)
கூறியுள்ளார்கள்.


அறிவிப்பவர்: ஹுதைபா
(ரலி)
,

நூல்: முஸ்லிம் 5162.


புகை
மூட்டம்


வானம் தெளிவான புகையை
வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!

அப்புகை மனிதர்களைச்
சூழ்ந்து கொள்ளும்
, இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.

(அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன்
உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.

அவற்றில் ஒன்று புகை
மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்

பிடிக்கும்.
காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது

செவிப்பறை வழியாகப்
புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.

மூன்றாவது தஜ்ஜால்
என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்:
அபூமாலிக்(ரலி)


நூல்: தப்ரானி

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம்
போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

(அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை)
அவர்களின் வருகை


நிச்சயமாக அவர் (ஈஸா)
இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்

கொள்ளாதீர்கள்!
என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.

(அல்குர்ஆன் 43:61)

மூன்று
பூகம்பங்கள்


(மதீனாவின்) கிழக்கே
ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம்
,
அரபு
தீபகற்பத்தில் ஒரு
பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை

யுகமுடிவு நாள்
ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்:
ஹுதைபா(ரலி)

நூல்: முஸ்லிம்

பெரு
நெருப்பு


எமனிலிருந்து
நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்

செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்:
ஹுதைபா(ரலி)

நூல்: முஸ்லிம்
avatar
Guest
Guest


Back to top Go down

(கியாமத்) யுக முடிவு நாளின் அடையாளங்கள். Empty Re: (கியாமத்) யுக முடிவு நாளின் அடையாளங்கள்.

Post by Thanjaavooraan Tue Jan 18, 2011 10:21 am

அருமையான தொகுப்புகள். இதில் பாதிக்கு மேல் தற்போது வந்து விட்டது...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum