Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மனைவியைக் கட்டுப்படுத்த” தவறியதால் கணவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஜோகூர் கல்வித் துறை முயற்சி செய்தது .
Page 1 of 1
“மனைவியைக் கட்டுப்படுத்த” தவறியதால் கணவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஜோகூர் கல்வித் துறை முயற்சி செய்தது .
தெனாங் இடைத் தேர்தலில் பாஸ் சார்பில் போட்டியிடும் நோர்மலா சுடிர்மானுடைய கணவரை “அவர் மனைவியைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக” ஜோகூர் பாருவுக்கு இடமாற்றம் செய்வதற்கு ஜோகூர் கல்வித் துறை முயற்சி செய்தது.
நோர்மலாவின் கணவரான மாக்ரோப் அப்துல் முத்தாலிப் அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஜோகூர் பாருவுக்கு மாறிச் செல்ல வேண்டும் என்ற திடீர் உத்தரவு அந்தத் தம்பதியினர் ஆட்சேபம் தெரிவித்த பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.
“பாஸ் கட்சியில் என் மனைவியின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தலைமையாசிரியர் என்னிடம் கூறினார்”, என்று மாக்ரோப் கூறினார்.
அவர் தெனாங்கில் உள்ள அந்தப் பள்ளிக்கூடத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
அந்தத் தொகுதியில் ஜனவரி 30ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தமது மனைவி போட்டியிடக் கூடும் என்ற ஊகங்கள் வலுவாக இருந்த சில நாட்களுக்கு முன்பு தமக்கு அந்த இடமாற்ற அறிவிப்பு கிடைத்ததாக மாக்ரோப் சொன்னார்.
என்றாலும் அந்தக் கடிதத்தில் தாம் இடமாற்றம் செய்யப்படுவதற்கான அதிகாரத்துவ காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றார் அவர்.
“நாங்கள் மாவட்ட கல்வித் துறையிடம் ஆட்சேபம் தெரிவித்தோம். நோர்மலா தமது ஆசிரியர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டார். அவர்கள் இவ்வாறு செய்யக் கூடாது. அவர்கள் அந்த உத்தரவை மீட்டுக் கொள்ளாவிட்டால் நாங்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கொண்டு செல்வோம் அல்லது நிருபர்களைச் சந்திப்போம் என்று கூறினோம். பின்னர் அவர்கள் அதனை மீட்டுக் கொண்டனர்”, என மாக்ரோப் தெரிவித்தார்.
அருகில் உள்ள சிகாமாட்டில் ஒர் ஆசிரியையான நோர்மலா முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபடுவதற்காகத் தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் துணைவர்களை அல்லது துணைவியர்களைக் கொண்ட ஆசிரியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதையே அந்த இடமாற்ற அறிவிப்பு குறிப்பதாகவும் மாக்ரோப் சொன்னார்.
இதனிடையே ஜோகூர் கல்வித் துறையின் உத்தரவு அரசியல் நோக்கம் கொண்டது என ஜோகூர் தகவல் பிரிவுத் தலைவர் மஸ்லான் அலிமான் வருணித்துள்ளார்.
கல்வித் துறை இயக்குநர் நடவடிக்கை வீடியோவில் பதிவானது
கடந்த வாரம் ஜோகூர் கல்வித் துறை இயக்குநர் மார்க்கோம் ஜிரான், தெனாங்கில் உள்ள ஆசிரியர்களிடையே பிஎன்னுக்கு வெளிப்படையாக ஆதரவு தேடியது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
“அந்த இடைத்தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு உதவுமாறு” மார்கோம் ஆசிரியர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் வீடியோ ஒளிப்பதிவு யூ டியூப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.”
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தன்முனைப்புத் துண்டல் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதற்கு பின்னர் அவர்கள் மாணவர்களுடைய பெற்றோர்களைச் சந்தித்து அவர்கள் பிஎன் ஆதரவாளர்களா அல்லது எதிர்க்கட்சி ஆதரவாளர்களா என்பதை அடையாளம் காண வேண்டும் என்றும் மார்கோம் கூறியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தெனாங் சட்டமன்றத் தொகுதியில் 15 பள்ளிக்கூடங்கள் உள்ளன. அவற்றில் தன்முனைப்புத் தூண்டல் நிகழ்வுகளை மாணவர்களுக்கு நடத்த கல்வித் துறை திட்டமிடுகிறது. அந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களுடைய பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
“பெற்றோர்களைச் சந்திக்கும் போது நீங்கள் அவர்களை நான்கு நிறங்களில் அடையாளம் கண்டு பிரிக்க வேண்டும்- பச்சை, நீலம், பழுப்பு, வெள்ளை என்பது அந்த நிறங்களாகும். பச்சை என்பது தீவிர எதிர்க்கட்சி ஆதரவாளர்களைக் குறிக்கும். நீலம் என்பது பிஎன் ஆதரவாளர்களைக் குறிக்கும்,” என்றும் மார்கோம் அதில் தெரிவித்துள்ளார்.
‘பழுப்பு நிறத்தைச் சேர்ந்த மதில் மேல் பூனையாக இருக்கின்றவர்கள் பற்றி நீங்கள் எங்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும். நாங்கள் அவர்களை நீலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்ய அது உதவும்”, என்றார் அவர்.
மார்கோம் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பற்றி ஜோகூர் பாஸ் துணை ஆணையாளர் சுல்கெப்லி அகமட் போலீசில் புகார் செய்துள்ளார்.
தெனாங் இடைத்தேர்தலுக்கு ஜனவரி 22 வேட்பாளர் நியமன நாள் ஆகும். வாக்களிப்பு ஜனவரி 30ம் தேதி நடைபெறும். அந்தத் தொகுதிக்கான பிஎன் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் தாஹா டிசம்பர் 17ம் தேதி காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
மலேசியா இன்றுhttp://www.malaysiaindru.com/?p=63736
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
» விலை உயர்ந்த நகைகளை அணிந்து மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
» வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி
» ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா?
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» விலை உயர்ந்த நகைகளை அணிந்து மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
» வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி
» ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா?
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|