Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்!
5 posters
Page 1 of 1
தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்!
பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்;
பகலில் புணரோம்; பகலில் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்;
இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையிற்படுப்போம்;
மூலஞ்சேர் கறிநுகரோம்; மூத்த தயிர் உண்போம்;
முதல்நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்;
ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;
உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருத்தல் செய்யோம்;
நண்புபெற உண்ட பின்னர் குறுநடை பயில்வோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;
ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருகால் பேதியுரை நுகர்வோம்;
கேறுமதி ஒன்றைக்கோர் தரநசியும் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவி ருப்புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருக்கால் நெய்முழுக்கைத் தவிர்ப்போம்;
விழிகளுக் கஞ்சனம் மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகாந்தம் புட்பமிவை நடுநிசியில் நுகரோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;
பகத்தொழுக்கு மாதர் அசம்கரம் துடைப்பமிவை தூள்;
படநிற்கோம்; தீபனமாந்தர் மரநிழலில் வசியோம்;
சுகப்புணர்ச்சி அசனவச னத்தருணஞ் செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோக மழுக்காடை;
வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவை மாலை விரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர் சற்குருவை விடமாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மசைகோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;
விளக்கம்:
பாலுணவை உண்போம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.
பகலில் உடலுறவு கொள்ள மாட்டோம்.
தன் வயதை விட மூத்த பெண்ணோடும், பொது மகளிரோடும் உடலுறவு கொள்ளமாட்டோம்.
காலை இளம்வெயிலில் அலையமாட்டோம்.
மலம் சிறுநீர் ஆகியவற்றை அடக்க மாட்டோம்.
படுக்கும் பொழுது இடது கைப்புறம் ஒருக்களித்துப் படுப்போம்.
புளித்த தயிர் உணவை விரும்பி உண்போம்.
முதல் நாள் சமைத்த கறியை அடுத்த நாள் உண்ணமாட்டோம்.
பசிக்காதபோது உண்ண மாட்டோம். பசித்தபொழுது மட்டும் உண்பொம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் உண்போம்.
பகலில் தூங்க மாட்டோம், இரவில் நன்றாகத் தூங்குவோம்.
மாதம் ஒருமுறை மட்டும் உடலுறவு கொள்வோம்.
உணவு உண்ணும்பொழுது தாகம் அதிகரித்தாலும் இடையில் நீர் அருந்த மாட்டோம்.
பிஞ்சு வாழைக்காய்களையே கறி சமைத்து உண்போம். மிக முற்றிய காய்களை உண்ண மாட்டோம்.
உணவு உண்டபின் சிறிது தூரம் நடப்போம்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்வோம்.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உட்கொள்வோம். ஒன்றரை மாதத்திற்கொருமுறை மூக்கிற்கு மருந்திடுவோம். இதனால் சளி முதலிய பீனிச நோய் வராமல் தடுப்போம்.
வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மையிடுவோம்.
மணம் வீசும் மலரை இரவில் நுகர மாட்டோம்.
ஆடு, கழுதை முதலியவை வருகின்ற பாதையில் எழுகின்ற புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்க மாட்டோம்.
தரை சுத்தம் செய்யும் இடத்தில் கிளம்பும் தூசி மேலே படும்படி நடக்க மாட்டோம்.
இரவில் விளக்கு ஒளியில் நிற்போரின் நிழலும், மரநிழலும் நிற்க மாட்டோம்.
பசிக்கும்பொழுதும், உணவு உண்ட உடனும் உடலுறவு கொள்ள மாட்டோம்.
அந்திப்பொழுதில் உறங்குதல், உணவு உண்ணல், காமச்செயல் புரிதல், அழுக்கு உடை அணிதல், தலைவாருதல் ஆகியவற்றைச் செய்ய மாட்டோம்.
நம்மிடம் இரக்க உள்ள தெய்வங்கள், பித்ருக்கள், குரு ஆகியோரை எப்பொழுதும் வணங்குவோம்.
பிறர் கை உதறும் பொழுது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்பொழுது தெறிக்கும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம்.
இவற்றில் கூறியுள்ளவாறு நம் வாழ்வில் கடைபிடித்தால் எமன் நம்மிடம் வர அஞ்சுவான். நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்!
நன்றி சிவா அண்ணா .....
Re: தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்!
எவ்வளவு அழகா சொல்லி இருக்காரு. ரொம்ம நன்றி சிவா. இந்தக் குறிப்புகள் எனக்குப் பய்னுள்ளது. ரெண்டு கட்டுரைக்குக் கரு கொடுத்துட்டீங்க இப்ப.. நன்றி.. ந்ன்றி..
Re: தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்!
அவரு எல்லாம் நல்லாதான் சொல்லி இருக்கார்.
ஆனா இன்னிக்கு இருக்கற அவசர யுகத்தில யாரு இத எல்லாம் கடைபிடிக்கறது
ஆனா இன்னிக்கு இருக்கற அவசர யுகத்தில யாரு இத எல்லாம் கடைபிடிக்கறது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்!
மிகச்சிறந்த கருத்துக்களைத் தேரையர் சொல்லி இருக்கிறார்... பயனுள்ள அந்த பதிவை எமக்கு வழங்கிய வைத்திய சிகாமணி மருத்துவ ரத்தினம் டாக்டர் திலகம் சிவா அவர்களுகு மிக்க நன்றி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம்
» இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்
» போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமா?
» இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
» உடல் நலம்
» இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்
» போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமா?
» இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
» உடல் நலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|