ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!

Go down

காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக! Empty காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!

Post by Guest Tue Dec 28, 2010 11:41 am

ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் பதவியை இழந்து வந்த ஆ.ராசாவை, கட்சியிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று திமுகவின் இரண்டாம் மட்ட தலைவர்கள் கருணாநிதியை வலியுறுத்துவதாக செய்தி வெளியானபோது, அதற்கு வாய்ப்பிருப்பதாகவே கருதப்பட்டது.

ஆனால் திமுகவை நிலைகுலைய வைக்கும் விதமாக சிபிஐ மூலம் காங்கிரஸ் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிற அதிரடி நடவடிக்கைகளால், தற்போது ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்தபோது, ராசாவை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுமாறு திமுகவை காங்கிரஸ் மேலிடம் கேட்டது.அதற்கு அப்போது கருணாநிதி நிறையவே தயங்கினார்.

" உச்ச நீதிமன்றத்தை சமாளிப்பதற்காகத்தான் இது தேவையாக உள்ளது.வேறு எந்த நெருக்கடியையும் கொடுக்க மாட்டோம்!" என்று சாமர்த்தியமாக பேசி ராசாவின் ராஜினாவை வாங்கியது காங்கிரஸ்.

சரி பிரச்சனை இத்தோடு நின்றுவிடும் என்று திமுக நினைத்ததற்கு மாறாக, அடுத்து வந்த நாட்களில் சிபிஐ-யை ஏவிவிட்டு ராசா மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனை நடத்தியபோது விக்கித்துதான் போனது திமுக தலைமை!

ஆனால் அதைக்காட்டிலும் கூடுதல் அதிரடியாக, கிட்டத்தட்ட கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியை நெருங்கும் விதமாக 'தமிழ் மையம்' நிறுவனர் ஜெகத் கஸ்பார் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் புகுந்து புறப்பட்டதையும், ராசாவுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியதையும் பார்த்தபோதுதான், ஏதோ திட்டத்துடன்தான் காங்கிரஸ் உள்ளது என்பதை புரிந்துகொண்டார் கருணாநிதி!

அதற்கேற்ப கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஊழலுக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏகமாக கர்ஜித்தது (காமடிதான் என்றாலும்) திமுகவை மனதில் வைத்துதான் என்றும், மாநாட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களை தனியாக அழைத்துப் பேசிய சோனியா தமிழகத்தில் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று சூசகமாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக, தங்களை கழற்றிவிட காங்கிரஸ் தயாராகிவிட்டதை திமுக இரண்டாம் மட்டத்தலைவர்களும் புரிந்துகொண்டுவிட்டனர்.
அதன்பின்னரே ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு ஏறக்குறைய ஒட்டுமொத்த திமுக தலைகளும் வந்திருப்பதாக அறிவலாய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்ப கடந்த சில தினங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த ராசாவுடன், திமுக இரண்டாம் மட்டத் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

திமுக எம்.பிக்களுடனான சந்திப்பின்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்த ஆவணங்களை அவர்களிடம் அளித்து ராசா விளக்கியதாகவும், அதன் பின்னர் கருணாநிதியை சந்தித்த எம்.பி.க்கள் குழுவினர், ராசா தங்களிடம் அளித்த விளக்கத்தையும், ஆவணங்களையும் சோதித்து பார்த்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் திமுகவை ஏற்கனவே சீண்டிக்கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று கோபியில் நேற்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி தமிழகம் வந்து சென்ற 15 நாட்களில் நல்ல வழி பிறக்கும் என்றும் அவர் கூறியுள்ளதை திமுக இந்த முறை அலட்சியமாக ஒதுக்கித்தள்ள தயாராக இல்லை என்பது நேற்று அறிவாலயத்தில் திமுக மேடை பேச்சாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

" ஊடகங்கள் மற்றும் எதிர்க்ட்சிகள் கூறுவதுபோல் தொலைதொடர்பு துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும்விதமாக உங்களது பிரச்சாரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.

மக்களுக்கு உண்மை தெரியும்.எனவே ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த தகவல் சென்றடைய வேண்டும்" என்று பேசியுள்ளார் கருணாநிதி!

அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணம் காட்டி காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள தயாராகி விட்டதால், அந்த பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கண்ட ஆலோசனையை கட்சி பேச்சாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது.

அத்துடன் ராசாவை கட்சியிலிருந்து நீக்குவதோ அல்லது ஓரம் கட்டி வைப்பதோ, ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றை ஊர்ஜிதப்படுத்துவதாகிவிடும். அவ்வாறு செய்வது தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று கட்சியின் மூத்த மற்றும் இரண்டாம் மட்டத்தலைவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களை ராசாவுக்கு ஆதரவாக கருணாநிதி திருப்பியிருப்பதாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கூட்டணியை முறித்து காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு திமுகதான் காரணம் என்ற ரீதியில் பிரச்சாரத்தை தொடங்கினால், உங்களுக்கு தெரியாமலா நடந்தது என்ற ரீதியில், தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலமாக காங்கிரஸை கோர்த்துவிடுவதற்கான யுக்தியை அக்கட்சி எடுத்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

அநேகமாக ராசா சிபிஐ-யிடம் விசாரணைக்கு ஆஜரான பின்னர், மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்து - கைது உட்பட - கூட்டணி முறிவு வேகம் பிடிக்கும் எனத் தெரிகிறது!

ஆக மொத்தத்தில் ஈழப்போரின் உச்சத்தின்போது தமிழகத்திலிருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை சமாளிக்க திமுகவை வசமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், தற்போது காரியம் முடிந்ததும் அடுத்த தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறத்தயாராகிவிட்டது.

திமுகவுக்கும் செய்த துரோகத்திற்கு விலை கொடுக்கும் நேரம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்!

நன்றி : வெப்துனியா
avatar
Guest
Guest


Back to top Go down

காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக! Empty Re: காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!

Post by ராஜா Tue Dec 28, 2010 11:47 am

அடடா என்ன ஒரு அருமையான கட்டுரை ........ எவ்வளவு அழகா எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக! 56667 காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக! 56667

காங்கிரஸ் திமுகவிற்கு துரோகம் செய்ததாம் , அப்ப திமுக தமிழின மக்களுக்கு செய்தது என்னவாம்.

தினை விதைத்தவன் தினை அறுப்பான் , வினை விதைத்தவன் .... ?!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா-தா.பாண்டியன்
» காங்கிரசை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன்: ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் எச்சரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum