Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி முதல் கணவர் ஆகாஷுடன் வனிதா மோதல்!
2 posters
Page 1 of 1
குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி முதல் கணவர் ஆகாஷுடன் வனிதா மோதல்!
தனது முதல் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, நடிகை வனிதா தன் முன்னாள் கணவர் நடிகர் ஆகாஷ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போட்டுவந்த குடும்ப சண்டை நேற்று திசைமாறியுள்ளது.
தனது மூத்த குழந்தை யாருக்குச் சொந்தம் என்பதில் வனிதாவுக்கும் முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் மீண்டும் தகராறு மூண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வனிதாவும், ஆகாஷும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தனித்தனியாக சந்தித்து மூத்த குழந்தையை சொந்தம் கொண்டாடி முறையிட்டனர்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர்களான நடிகர் விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருடன் கடும் மோதலில் ஈடுபட்டார். சகோதரர் அருண் விஜய் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் ஆளாளுக்குப் பிரஸ் மீட் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த குடும்ப சண்டை நேற்று திடீரென்று வேறு ரூட்டில் போய்விட்டது. நேற்று காலை 11 மணியளவில் வனிதா, தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த வனிதா, "அருண் விஜய் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நடந்த சம்பவங்களை நான் வாக்குமூலமாக கொடுத்துள்ளேன். அருண் விஜய்யை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளேன். அவரும், அருண் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
எனது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க எனது தந்தை விஜயகுமார் சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு எனது முதல் கணவர் ஆகாஷும் துணை போகிறார். எனது மகனை நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். இந்த விஷயங்களையும் போலீஸ் கமிஷனரிடம் நான் எடுத்துக்கூறி உள்ளேன்..." , என்றார்.
நடிகர் ஆகாஷ் புகார்:
இந்த நிலையில், வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நேற்று மாலை 3 மணியளவில் மகன் விஜய் ஸ்ரீஹரியோடு வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். கமிஷனரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "வனிதாவை கடந்த 2000-ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமண உறவின்மூலம் விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகனும், ஜோவிகா (5) என்ற மகளும் பிறந்தனர். அதன்பிறகு எனக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 9.6.2007 அன்று குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றோம்.
நீதிமன்ற உத்தரவில், மகன் விஜய் ஸ்ரீஹரி என்னுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பராமரிப்பில் இருப்பதற்கும், மகள் ஜோவிகா வனிதாவின் பாதுகாப்பில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், நான் விரும்பினால் வனிதாவின் அனுமதியோடு எனது மகளை பார்த்துக்கொள்ளலாம். வனிதா விரும்பினால் எனது அனுமதியோடு மகனை பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இடையில் 2008-ம் ஆண்டு மகன் விஜய் ஸ்ரீஹரியை நியூசிலாந்து நாட்டில் படிக்க வைக்கிறேன் என்று வனிதா அழைத்து சென்றார். நானும் அனுப்பி வைத்தேன்.
2 ஆண்டுகள் நியூசிலாந்தில் எனது மகன் படித்தான். இந்த சூழ்நிலையில், வனிதா ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனிதா தனது 2-வது கணவரோடு சென்னை வந்தார். அதன்பிறகு எனது மகன் வனிதாவோடு இருக்க சம்மதிக்கவில்லை. என்னுடன் வந்துவிட்டான்.
அவனை சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான் படிக்க வைத்துள்ளேன். சமீபத்தில் விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்து சென்றார். அதன்பிறகு 7-ந் தேதி அன்று எனது மகன் மீது உரிமைகோரி வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அறிந்தேன். இதனால் எனது மகனை, என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவன் என்னோடுதான் இருக்கிறான்.
பிள்ளைக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை...
சமீபத்தில்கூட நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வனிதா வலுக்கட்டாயமாக மகனை அழைத்து சென்றிருக்கிறார். அவனை தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டு டி.வி.யிலும் பேட்டி கொடுத்துள்ளார். இதை எனது மகன் விரும்பவில்லை.
வனிதா 2-வது திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். ஆனால் நான், எனது பிள்ளைகளுக்காக 2-வது திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்க வேண்டியது எனது கடமையாகும். விஜயகுமாரும், வனிதாவும் தந்தை-மகள் என்ற முறையில் எப்படியோ சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை.
எனது மகன் விஷயத்தில் தேவையில்லாமல் அவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்றும், எனது மகனின் உயிருக்கு இந்த சண்டையினால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும், அவனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வனிதா மீதோ, அவரது 2-வது கணவர் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கவில்லை. எனது மகனின் பாதுகாப்பு கருதிதான் மனு கொடுத்துள்ளேன்...", என்றார்.
நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள அனுமதியையும் காட்டினார் ஆகாஷ்.
இந்தப் பேட்டியின் போது மகன் விஜய்ஸ்ரீஹரியும் உடன் இருந்தான்.
தட்ஸ்தமிழ்
நடிகை வனிதா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போட்டுவந்த குடும்ப சண்டை நேற்று திசைமாறியுள்ளது.
தனது மூத்த குழந்தை யாருக்குச் சொந்தம் என்பதில் வனிதாவுக்கும் முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் மீண்டும் தகராறு மூண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வனிதாவும், ஆகாஷும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தனித்தனியாக சந்தித்து மூத்த குழந்தையை சொந்தம் கொண்டாடி முறையிட்டனர்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர்களான நடிகர் விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருடன் கடும் மோதலில் ஈடுபட்டார். சகோதரர் அருண் விஜய் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் ஆளாளுக்குப் பிரஸ் மீட் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த குடும்ப சண்டை நேற்று திடீரென்று வேறு ரூட்டில் போய்விட்டது. நேற்று காலை 11 மணியளவில் வனிதா, தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த வனிதா, "அருண் விஜய் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நடந்த சம்பவங்களை நான் வாக்குமூலமாக கொடுத்துள்ளேன். அருண் விஜய்யை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளேன். அவரும், அருண் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
எனது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க எனது தந்தை விஜயகுமார் சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு எனது முதல் கணவர் ஆகாஷும் துணை போகிறார். எனது மகனை நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். இந்த விஷயங்களையும் போலீஸ் கமிஷனரிடம் நான் எடுத்துக்கூறி உள்ளேன்..." , என்றார்.
நடிகர் ஆகாஷ் புகார்:
இந்த நிலையில், வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நேற்று மாலை 3 மணியளவில் மகன் விஜய் ஸ்ரீஹரியோடு வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். கமிஷனரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "வனிதாவை கடந்த 2000-ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமண உறவின்மூலம் விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகனும், ஜோவிகா (5) என்ற மகளும் பிறந்தனர். அதன்பிறகு எனக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 9.6.2007 அன்று குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றோம்.
நீதிமன்ற உத்தரவில், மகன் விஜய் ஸ்ரீஹரி என்னுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பராமரிப்பில் இருப்பதற்கும், மகள் ஜோவிகா வனிதாவின் பாதுகாப்பில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், நான் விரும்பினால் வனிதாவின் அனுமதியோடு எனது மகளை பார்த்துக்கொள்ளலாம். வனிதா விரும்பினால் எனது அனுமதியோடு மகனை பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இடையில் 2008-ம் ஆண்டு மகன் விஜய் ஸ்ரீஹரியை நியூசிலாந்து நாட்டில் படிக்க வைக்கிறேன் என்று வனிதா அழைத்து சென்றார். நானும் அனுப்பி வைத்தேன்.
2 ஆண்டுகள் நியூசிலாந்தில் எனது மகன் படித்தான். இந்த சூழ்நிலையில், வனிதா ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனிதா தனது 2-வது கணவரோடு சென்னை வந்தார். அதன்பிறகு எனது மகன் வனிதாவோடு இருக்க சம்மதிக்கவில்லை. என்னுடன் வந்துவிட்டான்.
அவனை சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான் படிக்க வைத்துள்ளேன். சமீபத்தில் விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்து சென்றார். அதன்பிறகு 7-ந் தேதி அன்று எனது மகன் மீது உரிமைகோரி வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அறிந்தேன். இதனால் எனது மகனை, என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவன் என்னோடுதான் இருக்கிறான்.
பிள்ளைக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை...
சமீபத்தில்கூட நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வனிதா வலுக்கட்டாயமாக மகனை அழைத்து சென்றிருக்கிறார். அவனை தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டு டி.வி.யிலும் பேட்டி கொடுத்துள்ளார். இதை எனது மகன் விரும்பவில்லை.
வனிதா 2-வது திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். ஆனால் நான், எனது பிள்ளைகளுக்காக 2-வது திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்க வேண்டியது எனது கடமையாகும். விஜயகுமாரும், வனிதாவும் தந்தை-மகள் என்ற முறையில் எப்படியோ சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை.
எனது மகன் விஷயத்தில் தேவையில்லாமல் அவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்றும், எனது மகனின் உயிருக்கு இந்த சண்டையினால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும், அவனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வனிதா மீதோ, அவரது 2-வது கணவர் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கவில்லை. எனது மகனின் பாதுகாப்பு கருதிதான் மனு கொடுத்துள்ளேன்...", என்றார்.
நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள அனுமதியையும் காட்டினார் ஆகாஷ்.
இந்தப் பேட்டியின் போது மகன் விஜய்ஸ்ரீஹரியும் உடன் இருந்தான்.
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி முதல் கணவர் ஆகாஷுடன் வனிதா மோதல்!
உண்மையில்
நடந்தது என்ன
நடந்தது என்ன
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி முதல் கணவர் ஆகாஷுடன் வனிதா மோதல்!
POOJITHA wrote:உண்மையில்
நடந்தது என்ன
![]()
வனிதா இரண்டு முறை திருமணம் செய்துள்ளார் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
» முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடியின் கணவர் மரணம்
» முதல் திருமணத்தை மறைத்த கணவர் இளம் பெண் தற்கொலை
» முதல் டி20 போட்டி இலங்கை & ஆஸி. மோதல்
» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
» முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடியின் கணவர் மரணம்
» முதல் திருமணத்தை மறைத்த கணவர் இளம் பெண் தற்கொலை
» முதல் டி20 போட்டி இலங்கை & ஆஸி. மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|