Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்தசஷ்டி விரதம்
2 posters
Page 1 of 1
கந்தசஷ்டி விரதம்
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்டதீரவேல் செல்வேல் திருக்கைவேல்வாரிகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்துளைத்தவேல் உண்டே துணை..'என்னும் சிறப்புகளை உடையது சகலலோக அன்னை பராசக்தி திருக்குமரனுக்கு வழங்கிய திருக்கைவேல். வேலே இத்தகு சிறப்புடையதெனில் அதனைத் தாங்கிய சிங்கார வடிவேலனின் சிறப்பும் பெருமையும் அளவிடதற்கரியது.
ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையான ஆறு தினங்களும் கந்தசஷ்டி விரதம் நோற்கப்படுகின்றது. இவ்விரதம் முருகப்பெருமானது தோற்றத்துடன் நெருக்கமான தொடர்புடையது. தாரகன்,சிங்கமுகன்,சூரபன்மன் ஆகிய மூன்று அசுரர்களும் அசமுகி என்பாளும் பிரமதேவரது புதல்வரான காசிப முனிவருக்கும் மாயை என்ற அசுரகுலப் பெண்ணுக்கும் பிறந்தவர்களாவர். இச்சகோதரர்கள் பிறப்பினால் இயல்பாகவே அமையப்பெற்ற அசுரத் தன்மையினால் 108 யுகங்கள் உயிர் வாழவும் 1008 அண்டங்களையும் அரசாளுகின்ற வாதத்தைப் பெற்றனர். மேலும், போருக்குச் செல்வதற்கு இந்திரஞாலம் என்ற தேரையும் சிவபிரானை நோக்கித் தவமிருந்து பெற்றனர். இத்தால் கர்வம் கொண்டு தேவர்களை வருத்திட தேவர்கள் தமக்கு அருள் பாலித்துக் காத்தருளும்படி முழுமுதற்கடவுளான பரமேஸ்வரனைப் பணிந்தனர்.கருணையே உருவான திருநீலகண்டர் தமது ஈசானம்,அகோரம்,தத்புருஷம்,வாமதேவம்,சத்தியோஜாதம் ஆகிய ஐந்து முகங்களினதும் அவரது ஆறாவது முகமான அதோமுகத்தினதும் நெற்றிக்கண்களினின்று புறப்பட்ட தீப்பொறிகள் தண்டாமரைகள் நிறைந்த சரவணப்பொய்கையில் சூரியனையே தன் நாயகனாய் எண்ணி மணம் பரப்பி நின்ற ஆறு தாமரைப் பூக்களில் வீழ்ந்தன. பல்லாயிரம் கோடிச் சூரியப் பிரகாசத்துடன் ஆறு குழந்தைகள் தோன்றிட கார்த்திகைப் பெண்களும் அங்கு தோன்றி அந்த ஆறு குழந்தைகளையும் சீராட்டிப் பாலூட்டி வளர்த்து வந்தனர். தன் குழந்தைகளைப் பார்க்கும் ஆவலுடன் பராசக்தி அன்னையும் அங்கு எழுந்தருளினாள். தாய்மையே உருவான உமையவள் தன் ஆறு குழந்தைகளையும் அன்புடன் கட்டியணைத்திட இவ்வுலகமுய்ய ஒரு திருமுருகனாக மால்மருகன் சரவணபவன் தோன்றினான்.பன்னிரு திருக்கரங்களுடனும் பிரகாசமான ஆறு திருமுகங்களுடனும் அழகின் அழகாக தேவசேனாதிபதியாக தேவரும் முனிவரும் வாழ்த்திட அகிலலோக அன்னை மலைமகள் பார்வதி தந்த தனிப்பெரும் சக்தி வேலுடன் சூரபன்மனைச் சம்ஹாரம் செய்திடப் புறப்பட்டார். தாரகனையும் அவனுக்குத் துணையாய் நின்ற கிளெஞ்சத்தினையும் பிளந்து சிங்கமுகாசுரனையும் வதம் செய்து பின் சூரனின் படைகளையும் அழித்ததுடன்,அவனுக்கு முருகன் தன் திருப்பெருவடிவமாக எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என்றிடும் பரமேஸ்வர வடிவம் காட்டி சிவனும் அவன் மகனும் மணியும் ஒளியும் போன்று ஒருவரே என்றுணர்த்தினர். ஆயினும் தன் பிறவிக்குணம் மாறாத சூரபன்மன் நடுக்கடலில் மாமரமாகத் தோன்றிட சூரபன்மனை இருகூறாகத் தன் ஞான சக்தியான திருநெடுவேலினால் பிளந்து தன்னுடைய ஆணவ மலத்தின் வலியிழந்து ஒரு பகுதி மயிலாகி வாகனமாகிட மற்றைய கூறு சேவலாகி சேவற்கொடியாய் முருகனின் திருக்கரங்களில் அமையப்பெற்றது. இறையருளால் ஆணவம் வலியிழந்து ஆன்மா பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தஷஷ்டி விரதம்.சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதற்கேற்ப கந்தசஷ்டியை முறையாகக் கைக்கொள்ளுவதால் அகம் என்னும் பையினுள் நல்லெண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பது மறைபொருளாகும். கந்தசஷ்டி விரதம் எனும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத்திகழ்கின்றன. அவற்றுள் சில வருமாறு:அமாவாசையில் ஒருவேளை உணவுண்ணல்.ஆரம்ப நாளில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து காப்புக்கட்டலும் சங்கற்பம் செய்தலும்ஆறு தினமும் முருகன் ஆலயத்தில் இறை வழிபாடு, புராண படனம் போன்றவற்றில் ஈடுபடல்.இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பித்தல்.7 ஆம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப்பூசை முடிந்ததும் மகேசுர பூசை செய்து விரதத்தை நிறைவு செய்தல்.இவ்விரதத்தைக் கடுமையாய் கடைப்பிடிப்போர் ஆறு நாளும் உபவாசம் இருப்பர். சிலர் ஐந்து தினம் ஒரு வேளை உண்டு ஆறாம் நாள் உபவாசமிருப்பர்.முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் வேலின் மகிமை மிகப்பெரிது. முருகனுக்கே உரிய படையாகிய அதனை படை அரசு என்று பாம்பன் சுவாமிகளும் சக்தி படைத் தெய்வம் என்று தண்டபாணி சுவாமிகளும் போற்றினார்கள். வேலின் பெருமையை அருணகிருநாதர், சிதம்பர சுவாமிகள், ஆதிசங்கரரும் போற்றியுள்ளனர். ஆகவே வேலுண்டு வினையில்லை என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து வேல் வேல் வெற்றி வேல் என்றும் வேல் முருகனுக்கும் அரோகரா என்றும் போற்றுகின்றோம்."தோகை மேல் உலவும் கந்தன் கரத்திருக்கும் வெற்றி வாகையை சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை' என்று மகாகவி பாரதி பாடியுள்ளார். அத்துடன் வேலைப் போன்று மயிலுக்கும் பெருமையுண்டு. மயில்வாகனன் என்னும் பெயர் மயிலை வாகனமாக உடையவன் என்றும் வேலாயுதன் என்னும் பெயர் வேலாயுதத்தைத் திருக்கரத்தில் தாங்கிய பெருமான் என்றும் பொருள் தரும். மயில் எம்பெருமானுக்கு வாகனமாக இருந்து பக்தர்களால் பெருமையுடன் வணங்கப்படுகின்றது. மயிலுண்டு பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. யானை, ஆடு, மயில் ஆகிய மூன்று முருகனுக்கு வாகனமாக விளங்கிய போதிலும் மயிலே மிகவும் சிறப்புப் பெறுகின்றது. வேதங்கள் கூறும் மகாமந்திரமே மயிலாக இயங்குகின்றது.மேலும் கந்தசஷ்டி விரதகாலத்தில் முருகனின் சிறப்புகளை எடும்தியம்பும் பாலதேவராய சுவாமிகள் அருளிய கந்தசஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முககவசம், கந்தபுராணம் போன்ற நூல்களைப் பாராயணம் செய்தல் சிறப்பு. கவசம் எனும் போது அது போரிற்குச் செல்லும் வீரனைப் பாதுகாக்க உதவும் அங்கியாகும். அதே போன்று முருகனின் அடியார்களை பிற துன்பங்களினின்று பாதுகாக்கும் கவசமாக இச் ஷண்முக கவசமும் கந்தசஷ்டி கவசமும் அமைகின்றன. பாவங்களும் தீமைகளும் நிறைந்த இந்த கலியுகத்தில் இவற்றினின்று எம்மைப் பாதுகாக்க விரத அனுட்டானங்களும் வழிபாடுகளுமே துணை புரிகின்றன. அவ்வகையில் கலியுகவரதனாக அருளும் முருக வழிபாடு எமக்கு மிகவும் அவசியம்.கந்தசஷ்டி விரத ஆறாவது நாள் ஆலயங்களில் காலையில் பட்டாபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். முருகனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் மாறிலா வள்ளிநாயகியும் தெய்வானை அம்மையும் திகழ்கின்றனர். அவர்களது திருவருளையும் பெறுவதற்கு கந்தசஷ்டி விரதகாலமே சிறப்பானது. இவ்வாறான சிறப்புகளையுடைய கந்தசஷ்டி விரதகாலத்தில் அடியார்கள் யாவரும் ஆசாரசீலராய் ஆலயம் சென்று கஜவல்லி, மகாவள்ளி சமேதரான ஷண்முகப் பெருமானது திருவருளைப் பெற்று வாழ்வில் குறைகளின்றி வாழ்வோமாக.
ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையான ஆறு தினங்களும் கந்தசஷ்டி விரதம் நோற்கப்படுகின்றது. இவ்விரதம் முருகப்பெருமானது தோற்றத்துடன் நெருக்கமான தொடர்புடையது. தாரகன்,சிங்கமுகன்,சூரபன்மன் ஆகிய மூன்று அசுரர்களும் அசமுகி என்பாளும் பிரமதேவரது புதல்வரான காசிப முனிவருக்கும் மாயை என்ற அசுரகுலப் பெண்ணுக்கும் பிறந்தவர்களாவர். இச்சகோதரர்கள் பிறப்பினால் இயல்பாகவே அமையப்பெற்ற அசுரத் தன்மையினால் 108 யுகங்கள் உயிர் வாழவும் 1008 அண்டங்களையும் அரசாளுகின்ற வாதத்தைப் பெற்றனர். மேலும், போருக்குச் செல்வதற்கு இந்திரஞாலம் என்ற தேரையும் சிவபிரானை நோக்கித் தவமிருந்து பெற்றனர். இத்தால் கர்வம் கொண்டு தேவர்களை வருத்திட தேவர்கள் தமக்கு அருள் பாலித்துக் காத்தருளும்படி முழுமுதற்கடவுளான பரமேஸ்வரனைப் பணிந்தனர்.கருணையே உருவான திருநீலகண்டர் தமது ஈசானம்,அகோரம்,தத்புருஷம்,வாமதேவம்,சத்தியோஜாதம் ஆகிய ஐந்து முகங்களினதும் அவரது ஆறாவது முகமான அதோமுகத்தினதும் நெற்றிக்கண்களினின்று புறப்பட்ட தீப்பொறிகள் தண்டாமரைகள் நிறைந்த சரவணப்பொய்கையில் சூரியனையே தன் நாயகனாய் எண்ணி மணம் பரப்பி நின்ற ஆறு தாமரைப் பூக்களில் வீழ்ந்தன. பல்லாயிரம் கோடிச் சூரியப் பிரகாசத்துடன் ஆறு குழந்தைகள் தோன்றிட கார்த்திகைப் பெண்களும் அங்கு தோன்றி அந்த ஆறு குழந்தைகளையும் சீராட்டிப் பாலூட்டி வளர்த்து வந்தனர். தன் குழந்தைகளைப் பார்க்கும் ஆவலுடன் பராசக்தி அன்னையும் அங்கு எழுந்தருளினாள். தாய்மையே உருவான உமையவள் தன் ஆறு குழந்தைகளையும் அன்புடன் கட்டியணைத்திட இவ்வுலகமுய்ய ஒரு திருமுருகனாக மால்மருகன் சரவணபவன் தோன்றினான்.பன்னிரு திருக்கரங்களுடனும் பிரகாசமான ஆறு திருமுகங்களுடனும் அழகின் அழகாக தேவசேனாதிபதியாக தேவரும் முனிவரும் வாழ்த்திட அகிலலோக அன்னை மலைமகள் பார்வதி தந்த தனிப்பெரும் சக்தி வேலுடன் சூரபன்மனைச் சம்ஹாரம் செய்திடப் புறப்பட்டார். தாரகனையும் அவனுக்குத் துணையாய் நின்ற கிளெஞ்சத்தினையும் பிளந்து சிங்கமுகாசுரனையும் வதம் செய்து பின் சூரனின் படைகளையும் அழித்ததுடன்,அவனுக்கு முருகன் தன் திருப்பெருவடிவமாக எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என்றிடும் பரமேஸ்வர வடிவம் காட்டி சிவனும் அவன் மகனும் மணியும் ஒளியும் போன்று ஒருவரே என்றுணர்த்தினர். ஆயினும் தன் பிறவிக்குணம் மாறாத சூரபன்மன் நடுக்கடலில் மாமரமாகத் தோன்றிட சூரபன்மனை இருகூறாகத் தன் ஞான சக்தியான திருநெடுவேலினால் பிளந்து தன்னுடைய ஆணவ மலத்தின் வலியிழந்து ஒரு பகுதி மயிலாகி வாகனமாகிட மற்றைய கூறு சேவலாகி சேவற்கொடியாய் முருகனின் திருக்கரங்களில் அமையப்பெற்றது. இறையருளால் ஆணவம் வலியிழந்து ஆன்மா பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தஷஷ்டி விரதம்.சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதற்கேற்ப கந்தசஷ்டியை முறையாகக் கைக்கொள்ளுவதால் அகம் என்னும் பையினுள் நல்லெண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பது மறைபொருளாகும். கந்தசஷ்டி விரதம் எனும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத்திகழ்கின்றன. அவற்றுள் சில வருமாறு:அமாவாசையில் ஒருவேளை உணவுண்ணல்.ஆரம்ப நாளில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து காப்புக்கட்டலும் சங்கற்பம் செய்தலும்ஆறு தினமும் முருகன் ஆலயத்தில் இறை வழிபாடு, புராண படனம் போன்றவற்றில் ஈடுபடல்.இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பித்தல்.7 ஆம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப்பூசை முடிந்ததும் மகேசுர பூசை செய்து விரதத்தை நிறைவு செய்தல்.இவ்விரதத்தைக் கடுமையாய் கடைப்பிடிப்போர் ஆறு நாளும் உபவாசம் இருப்பர். சிலர் ஐந்து தினம் ஒரு வேளை உண்டு ஆறாம் நாள் உபவாசமிருப்பர்.முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் வேலின் மகிமை மிகப்பெரிது. முருகனுக்கே உரிய படையாகிய அதனை படை அரசு என்று பாம்பன் சுவாமிகளும் சக்தி படைத் தெய்வம் என்று தண்டபாணி சுவாமிகளும் போற்றினார்கள். வேலின் பெருமையை அருணகிருநாதர், சிதம்பர சுவாமிகள், ஆதிசங்கரரும் போற்றியுள்ளனர். ஆகவே வேலுண்டு வினையில்லை என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து வேல் வேல் வெற்றி வேல் என்றும் வேல் முருகனுக்கும் அரோகரா என்றும் போற்றுகின்றோம்."தோகை மேல் உலவும் கந்தன் கரத்திருக்கும் வெற்றி வாகையை சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை' என்று மகாகவி பாரதி பாடியுள்ளார். அத்துடன் வேலைப் போன்று மயிலுக்கும் பெருமையுண்டு. மயில்வாகனன் என்னும் பெயர் மயிலை வாகனமாக உடையவன் என்றும் வேலாயுதன் என்னும் பெயர் வேலாயுதத்தைத் திருக்கரத்தில் தாங்கிய பெருமான் என்றும் பொருள் தரும். மயில் எம்பெருமானுக்கு வாகனமாக இருந்து பக்தர்களால் பெருமையுடன் வணங்கப்படுகின்றது. மயிலுண்டு பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. யானை, ஆடு, மயில் ஆகிய மூன்று முருகனுக்கு வாகனமாக விளங்கிய போதிலும் மயிலே மிகவும் சிறப்புப் பெறுகின்றது. வேதங்கள் கூறும் மகாமந்திரமே மயிலாக இயங்குகின்றது.மேலும் கந்தசஷ்டி விரதகாலத்தில் முருகனின் சிறப்புகளை எடும்தியம்பும் பாலதேவராய சுவாமிகள் அருளிய கந்தசஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முககவசம், கந்தபுராணம் போன்ற நூல்களைப் பாராயணம் செய்தல் சிறப்பு. கவசம் எனும் போது அது போரிற்குச் செல்லும் வீரனைப் பாதுகாக்க உதவும் அங்கியாகும். அதே போன்று முருகனின் அடியார்களை பிற துன்பங்களினின்று பாதுகாக்கும் கவசமாக இச் ஷண்முக கவசமும் கந்தசஷ்டி கவசமும் அமைகின்றன. பாவங்களும் தீமைகளும் நிறைந்த இந்த கலியுகத்தில் இவற்றினின்று எம்மைப் பாதுகாக்க விரத அனுட்டானங்களும் வழிபாடுகளுமே துணை புரிகின்றன. அவ்வகையில் கலியுகவரதனாக அருளும் முருக வழிபாடு எமக்கு மிகவும் அவசியம்.கந்தசஷ்டி விரத ஆறாவது நாள் ஆலயங்களில் காலையில் பட்டாபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். முருகனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் மாறிலா வள்ளிநாயகியும் தெய்வானை அம்மையும் திகழ்கின்றனர். அவர்களது திருவருளையும் பெறுவதற்கு கந்தசஷ்டி விரதகாலமே சிறப்பானது. இவ்வாறான சிறப்புகளையுடைய கந்தசஷ்டி விரதகாலத்தில் அடியார்கள் யாவரும் ஆசாரசீலராய் ஆலயம் சென்று கஜவல்லி, மகாவள்ளி சமேதரான ஷண்முகப் பெருமானது திருவருளைப் பெற்று வாழ்வில் குறைகளின்றி வாழ்வோமாக.
cheliyan manohar- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 27/11/2010
Re: கந்தசஷ்டி விரதம்
மனோகர், நீங்கள் ஒரு பதிவு போடும் முன் ஒருமுறை பார்த்துவிட்டு போடுங்கள். நான் ஏற்கனவே இது போல் ஒன்று போடுள்ளேன். லிங்க் ஐ பார்க்கவும். நான் சொல்வதை தவறக நினைக்கவேண்ண்டாம் நம் தள நன்மைக்காகவே சொல்கிறேன்.சரியா?
http://www.eegarai.net/-f8/--t46330.htm
http://www.eegarai.net/-f8/--t46330.htm
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்
» கந்தசஷ்டி
» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
» கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?
» கந்தசஷ்டி
» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
» கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|