Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதனைப் பெண்மணிகள்!
Page 1 of 1
சாதனைப் பெண்மணிகள்!
தியாகத்தின் உருவம்
ராணுவம், விண்வெளி, போக்குவரத்து என்று கடினமானத் துறைகளில் கூட இன்று பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு முன்பேஅயர்லாந்து பெண்மணி ஒருவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர்தான் அன்னிபெசன்ட் அம்மையார் என்பதையும் சொல்லத் தேவையில்லை. தனது 46-வது வயதில் இந்தியா வந்த அவர், `ஹோம்ரூல்' இயக்கத்தை தொடங் கியதுடன், ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதுடன், நிï இந்தியா என்னும் பத்திரிகையையும் நடத்தினார். கல்வி, சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.
சானியாவின் சாதனைப் பயணம்
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் என்றால் அது மிகையல்ல. உலக அளவில் டென்னிஸ் விளையாட்டில் சாதித்ததுடன், ஆசியாவில் நம்பர்-ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தையும் சமீபத்தில் பெற்று சாதித்தார்.
நடிப்பில் சாதனை
திரைத் துறையில் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால் உலகிலேயே அதிகப் படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர் தமிழ் நடிகை மனோரமா.
ராணுவம், விண்வெளி, போக்குவரத்து என்று கடினமானத் துறைகளில் கூட இன்று பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு முன்பேஅயர்லாந்து பெண்மணி ஒருவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர்தான் அன்னிபெசன்ட் அம்மையார் என்பதையும் சொல்லத் தேவையில்லை. தனது 46-வது வயதில் இந்தியா வந்த அவர், `ஹோம்ரூல்' இயக்கத்தை தொடங் கியதுடன், ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதுடன், நிï இந்தியா என்னும் பத்திரிகையையும் நடத்தினார். கல்வி, சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.
சானியாவின் சாதனைப் பயணம்
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் என்றால் அது மிகையல்ல. உலக அளவில் டென்னிஸ் விளையாட்டில் சாதித்ததுடன், ஆசியாவில் நம்பர்-ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தையும் சமீபத்தில் பெற்று சாதித்தார்.
நடிப்பில் சாதனை
திரைத் துறையில் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால் உலகிலேயே அதிகப் படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர் தமிழ் நடிகை மனோரமா.
Re: சாதனைப் பெண்மணிகள்!
மாயாவதி
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஏற்கனவே மூன்று முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதல் மந்திரி பொறுப்பு வகித்த மாயாவதி, இம்முறை தனித்தே ஆட்சி அமைத்தார். இந்த வெற்றி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் ஒரு கணம் மாயாவதி மீது திருப்பியது.
மனித கம்ப்யூட்டர்
1980-ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில், எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி. இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில் கூறி அசத்தினார்.
கேரளாவுக்கு `ஜே'
படிப்பறிவு பெற்றோர் மிகுந்து காணப்படும் கேரளாவில், மக்கள் தொகை பெருக்கத்தின் அளவு சீராக குறைந்து வருகிறது. ஆனால் அங்கு ஆண்களைவிட, பெண்களின் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, ஒவ்வொரு ஆயிரம் ஆண்களுக்கும் 1058 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர். கடந்த நூறு ஆண்டுகளாகவே அங்கு மக்கள் தொகையில் ஆண்களைவிட பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அங்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய தினத்தில் எல்லோரும் கேரளாவுக்கு `ஓ' அல்லது `ஜே' போட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஏற்கனவே மூன்று முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதல் மந்திரி பொறுப்பு வகித்த மாயாவதி, இம்முறை தனித்தே ஆட்சி அமைத்தார். இந்த வெற்றி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் ஒரு கணம் மாயாவதி மீது திருப்பியது.
மனித கம்ப்யூட்டர்
1980-ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில், எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி. இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில் கூறி அசத்தினார்.
கேரளாவுக்கு `ஜே'
படிப்பறிவு பெற்றோர் மிகுந்து காணப்படும் கேரளாவில், மக்கள் தொகை பெருக்கத்தின் அளவு சீராக குறைந்து வருகிறது. ஆனால் அங்கு ஆண்களைவிட, பெண்களின் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, ஒவ்வொரு ஆயிரம் ஆண்களுக்கும் 1058 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர். கடந்த நூறு ஆண்டுகளாகவே அங்கு மக்கள் தொகையில் ஆண்களைவிட பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அங்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய தினத்தில் எல்லோரும் கேரளாவுக்கு `ஓ' அல்லது `ஜே' போட்டுக் கொள்ளலாம்.
Re: சாதனைப் பெண்மணிகள்!
பெண்மைக்கு பெருமை சேர்க்கும் ஆறுகள்
பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், பெண்களுக்கான பெயர்களைக் கொண்டு இந்தியாவில் பாய்ந்தோடி வளப்படுத்தும் முக்கிய நதிகளைப் பார்ப்போமா...
காவேரி, பவானி, கங்கை, கோதாவரி, பெண்ணாறு, சுவர்ணமுகி, வம்சதாரா, சித்ராவதி, பிரம்மபுத்திரா, சுவர்ணரேகா, மகாநதி, மஹி, சரஸ்வதி, சபர்மதி, யமுனை, சிந்து, பாகீரதி, துங்கப்பத்திரா, மலப்பிரபா, வேதவதி, ஹேமாவதி, மணிமாலா, நர்மதா, இந்திராவதி, கோமதி, சாரதா.
முதல் பெண் ஜனாதிபதி
2002-ம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற அப்துல்கலாமின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி கடந்த ஆண்டு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு பரிசீலனைக்குப் பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதீபா பட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பைரோன்சிங் செகாவத்தும் நிறுத்தப்பட்டனர். இதில் பிரதீபா பட்டீல் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றார்.
பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், பெண்களுக்கான பெயர்களைக் கொண்டு இந்தியாவில் பாய்ந்தோடி வளப்படுத்தும் முக்கிய நதிகளைப் பார்ப்போமா...
காவேரி, பவானி, கங்கை, கோதாவரி, பெண்ணாறு, சுவர்ணமுகி, வம்சதாரா, சித்ராவதி, பிரம்மபுத்திரா, சுவர்ணரேகா, மகாநதி, மஹி, சரஸ்வதி, சபர்மதி, யமுனை, சிந்து, பாகீரதி, துங்கப்பத்திரா, மலப்பிரபா, வேதவதி, ஹேமாவதி, மணிமாலா, நர்மதா, இந்திராவதி, கோமதி, சாரதா.
முதல் பெண் ஜனாதிபதி
2002-ம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற அப்துல்கலாமின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி கடந்த ஆண்டு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு பரிசீலனைக்குப் பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதீபா பட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பைரோன்சிங் செகாவத்தும் நிறுத்தப்பட்டனர். இதில் பிரதீபா பட்டீல் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றார்.
Re: சாதனைப் பெண்மணிகள்!
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார். சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் இந்திய தலைவர்களையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார். இந்திய அரசு, சுனிதாவின் சாதனையை அங்கீகரித்து இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
இந்திரா நூயி
குளிர்பான நிறுவனமான பெப்சியின் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி, அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். வெளிநாட்டுவாழ் இந்தியரான அவர் தன்னுடைய நிர்வாகத் திறமையின் மூலம் மிகப்பெரிய பதவியை எட்டிப் பிடித்துள்ளார்.
நான்சி பெலோசி
அமெரிக்க பார்லிமெண்ட் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமை பெலோசிக்கு கிடைத்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார். சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் இந்திய தலைவர்களையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார். இந்திய அரசு, சுனிதாவின் சாதனையை அங்கீகரித்து இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
இந்திரா நூயி
குளிர்பான நிறுவனமான பெப்சியின் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி, அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். வெளிநாட்டுவாழ் இந்தியரான அவர் தன்னுடைய நிர்வாகத் திறமையின் மூலம் மிகப்பெரிய பதவியை எட்டிப் பிடித்துள்ளார்.
நான்சி பெலோசி
அமெரிக்க பார்லிமெண்ட் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமை பெலோசிக்கு கிடைத்தது.
Re: சாதனைப் பெண்மணிகள்!
ஷரபோவா
டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா தனது அதிரடி ஆட்டத்தினாலும், வசீகரிக்கும் அழகினாலும் எல்லோரையும் தன்பக்கம் இழுத்தவர். விளையாட்டு, விளம்பரங்களின் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதித்தாலும், சேவைப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதை கவுரவிக்கும் விதத்தில் ஐ.நா.சபையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நல்லெண்ணத் தூதராக ஷரபோவா நியமிக்கப்பட்டார். 1986-ம் ஆண்டில் ரஷியாவில் செர்னோபில் அணுமின் நிலையத்தில், அணுக்கசிவு ஏற்பட்டது. இதனால் பெலாரஸ், ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு தற்போது வளர்ச்சித் திட்டத்தை ஐ.நா.சபை உருவாக்கியுள்ளது. அந்த திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக ஷரபோவா நியமிக்கப்பட்டார்.
சுருதி வதேரா
இங்கிலாந்தின் புதிய பிரதமரான கார்டன் பிரவுனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு சுருதி வதேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிஞரான இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சர்வதேச மேம்பாட்டுத் துறையில், நாடாளுமன்ற துணை அரசு செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாகும். நெல்சன் மண்டேலா, கார்டன் பிரவுன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் சுருதி வதேரா என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா தனது அதிரடி ஆட்டத்தினாலும், வசீகரிக்கும் அழகினாலும் எல்லோரையும் தன்பக்கம் இழுத்தவர். விளையாட்டு, விளம்பரங்களின் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதித்தாலும், சேவைப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதை கவுரவிக்கும் விதத்தில் ஐ.நா.சபையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நல்லெண்ணத் தூதராக ஷரபோவா நியமிக்கப்பட்டார். 1986-ம் ஆண்டில் ரஷியாவில் செர்னோபில் அணுமின் நிலையத்தில், அணுக்கசிவு ஏற்பட்டது. இதனால் பெலாரஸ், ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு தற்போது வளர்ச்சித் திட்டத்தை ஐ.நா.சபை உருவாக்கியுள்ளது. அந்த திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக ஷரபோவா நியமிக்கப்பட்டார்.
சுருதி வதேரா
இங்கிலாந்தின் புதிய பிரதமரான கார்டன் பிரவுனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு சுருதி வதேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிஞரான இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சர்வதேச மேம்பாட்டுத் துறையில், நாடாளுமன்ற துணை அரசு செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாகும். நெல்சன் மண்டேலா, கார்டன் பிரவுன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் சுருதி வதேரா என்பது குறிப்பிடத்தக்கது.
Re: சாதனைப் பெண்மணிகள்!
ரியோ மோரி
2007-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 77 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரியோ மோரி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோஸ்வாமி சிறந்த வீராங்கனை
2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்-வீராங்கனைக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த வீரருக்கான விருதையும், இந்திய வீராங்கனை கோஸ்வாமி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர்.
ஷபானா ஆஸ்மி
மனித நேய செயல்களில் ஈடுபாடு கொண்டவரான இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி ஏற்கனவே சர்வ தேச காந்தி விருதைப் பெற்றவர். சமீபத்தில் ஆசிய-பசிபிக் திரைப்பட விருதுகள் அமைப்பின் சர்வதேச நடுவர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2007-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 77 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரியோ மோரி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோஸ்வாமி சிறந்த வீராங்கனை
2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்-வீராங்கனைக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த வீரருக்கான விருதையும், இந்திய வீராங்கனை கோஸ்வாமி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர்.
ஷபானா ஆஸ்மி
மனித நேய செயல்களில் ஈடுபாடு கொண்டவரான இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி ஏற்கனவே சர்வ தேச காந்தி விருதைப் பெற்றவர். சமீபத்தில் ஆசிய-பசிபிக் திரைப்பட விருதுகள் அமைப்பின் சர்வதேச நடுவர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Similar topics
» 'சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
» விடுதலை பெண்மணிகள் ....!
» புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!
» புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்
» அதி வயது கூடிய அமெ. பெண்மணிகள் ஒரே நாளில் காலமானார்கள்
» விடுதலை பெண்மணிகள் ....!
» புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!
» புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்
» அதி வயது கூடிய அமெ. பெண்மணிகள் ஒரே நாளில் காலமானார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|