ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_m10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10 
VENKUSADAS
உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_m10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_m10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10 
VENKUSADAS
உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_m10உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி

Go down

உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி  Empty உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி

Post by ரபீக் Sun Nov 28, 2010 3:54 pm

தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவை துண்டிக்க நினைத்தால் துண்டிக்கிறவர்களுக்குதான் நஷ்டம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

பீகார் தேர்தல் முடிவு வரும் வரை அடக்கி வாசித்து வந்த கருணாநிதி, தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோரை மறைமுகமாகச் சாடி வந்தார். சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில், நேரிடையாகவே கூறினார். வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வந்தேன். வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் என்னை பார்த்து ஆண்டவன் செல்கிறார் என்று கூறியதாக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறினார். அப்படி கருதக்கூடாது என்றுதான் பெரியார், அண்ணா போராடினார்கள். அதனை நானும் மறுக்கிறேன்.

மனிதனை ஆண்டவனாக நம்பி ஏமாறுவதால்தான் அப்படி கருதக்கூடாது என்று பெரியார் கூறினார். அவருடைய குருகுலத்தில் பயின்றவன் நான். இங்கு என்னை ஆண்டவன் என்று கூறாமல் ஆள்பவன் போகிறான் என்று கூறியிருக்க வேண்டும். ஆண்டவனாக இருந்தால் லாபம் தான். மக்கள் கூறுவதை கேடëடுக்கொண்டு அப்படியே இருக்கலாம். தூங்கலாம். ஆனால் ஆள்பவனாகவே பணியாற்ற விரும்புகிறேன். ஆண்டவன் என்று கூறி மக்களை ஏமாற்றும் கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தை வீழ்த்துவது நமது கடமை.

ஆண்டவன் பெயராலும், மதத்தின் பெயராலும் ஏமாற்றமாட்டேன், ஏமாற்றவும் விடமாட்டேன். எழுச்சியுடன் இருக்கும் இளைஞர்கள் எதிர்கால இந்தியாவை உருவாக்க பெரியார், அண்ணா வழியில் வீறுநடை போடவேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் அவர்களாக ஒதுங்கிவிட்டார்கள். எதற்காக பிரிந்தார்கள். என்ன தவறு செய்தோம். சோனியாகாந்தியுடன் கூட்டணி வைத்ததை தவிர வேறு எதை சொல்ல முடியும். அது தவறா?. நீங்களும், நாங்களும் சேர்ந்துதான் வெற்றிபெற்றோம்.

காங்கிரஸ் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சோனியாகாந்தி, பிரணாப்முகர்ஜி, மன்மோகன்சிங் ஆகியோருடன் பேசினோம். எனது வீடு, கட்சி அலுவலகத்திற்கு வந்து கம்யூனிஸ்டு கட்சியின் பிரகாஷ்கரத் காரத், ராஜா ஆகியோர் பேசிëனர். பேச்சு நடந்து கொண்டிருந்த போதே வெளியேறி விட்டார்கள். இது தொழிலாளர்களுக்கு எதிரான அரசு என அறிக்கை வெளியிட்டார்கள். என்னை பற்றியும், எனது குடும்பம் பற்றியும், கட்சி பற்றியும் பேசும் உச்சக்கட்டத்துக்கு சென்றார்கள்.

அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் காங்கிரசுடன் கைகோர்த்ததுதான். அது நீங்களும் சேர்ந்து ஏற்படுத்திய ஒப்பந்தம்தானே. தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் ஒன்றாக இருந்த கூட்டணி முறிந்தது. லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட நிறுவனம். அதை பிளவு படுத்தியதால் கம்யூனிஸ்டு வெற்றிபெற முடியாமல் போனது. அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை. கம்ïனிஸ்டு வெற்றி பெறாதது வருத்தம்தான். கம்ïனிஸ்டுகளை கேட்கிறேன், இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்.

தி.மு.க. இன்று காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசும், தமிழக அரசுக்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. அதை சில காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவது பிடிக்கவில்லை. சில விஷமிகள் தூண்டிவிட்டு உறவை கெடுக்க நினைக்கிறார்கள். உறவை யார் துண்டித்தாலும், துண்டிப்பவர்களுக்குதான் நஷ்டம்.

மேலே இருப்பவர்களுக்கு இனியும் இப்படி பேசாமல் பார்த்து கொள்ளும் பொறுப்பு உள்ளது. நான் இதைவிட பெரிய பெரிய கூட்டங்களையும், மாநாடுகளையும் பார்த்தவன். அடக்கத்தோடு இருக்கிறேன்.

நாம் இரு சக்திகளாக இருந்து மதவாத சக்தியை தமிழ்நாட்டில், இந்தியாவில் அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் மதவாதம் புகுந்துவிடும். ஆகவே மதவாதத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தி.மு.க. அதை காங்கிரஸ் வலுப்படுத்தும் என்பதை அறிவுரையாக கூறுகிறேன். நாம் கைகோர்த்தால் மதவாதத்தை அழிக்க முடியும்.

இப்போது சட்டம் வென்றது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ராசா பற்றி பாராளுமன்றத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கூச்சல் போடுவற்கு பாராளுமன்றம் சந்தை அல்ல. அது கூடி பேசும் இடம். ராசா ராஜினாமா செய்தால் பாராளுமன்றம் அமைதியாக நடக்கும் என்றதால் ஜனநாயக முறையில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு குழு விசாரணை வேண்டும் என்றார்கள். முந்த்ரா ஊழலில் மத்திய மந்திரி கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் அறிவுரையை ஏற்று அவர் ராஜினாமா செய்தார். அதோடு கூச்சல்-குழப்பம் நின்று விட்டது. விமர்சனம் இல்லை. தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் எழுத கைஓடவில்லை.

ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்தபிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுவதற்கு ராஜா தலித். ஆச்சாரிக்கு ஒரு நியாயம்?, தலித்துக்கு ஒரு நியாயமா?, இது சமதர்மமா?.

எனது அரசில் உமாசங்கர் மீது புகார் வந்ததும் விளக்கம் கேட்டோம். கம்ïனிஸ்டும், அ.தி.மு.க.வும் சேர்ந்து உமாசங்கர் தலித் என்ற காரணத்தால் அவரை கருணாநிதி ஒழிக்க பார்க்கிறார் என்றார்கள். அவரை ஒழிக்கவில்லை. விலக்கி வைத்தோம். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கியது கருணாநிதிதான்.

இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா?. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை முடிவில் அதற்கு ஏற்ப தி.மு.க. முடிவு செய்யும். இந்த அளவுக்கு வெறியாட்டம் போடுகிறார்கள். இதில் எத்தனை லட்சம் கோடி ஊழல் என்பதை நிரூபிக்க முடியுமா.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 10 ஆண்டுகளாக நடக்கிறது. இன்னும் தீர்ப்பு கூறப்படவில்லை. இன்னும் எத்தனை வாய்தா வாங்குவார்களோ தெரியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க இருந்தும் அதை வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார்கள்.

1972ஆம் ஆண்டு பெரியார் சொன்னார், இப்போது நடப்பது ஆரிய, திராவிட யுத்தம் என்றார். இப்போது அரசியல் ரீதியாக இந்த போராட்டம் நடக்கிறது. அதை சமாளிக்கும் பொறுப்பு நமது தோளுக்கு இருக்கிறது. திராவிட ஆட்சியில், அதிகாரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க, எதிர்கால சமுதாயத்தை காக்க, நாம் வைத்திருப்பது ஒட்டு மீசை இல்லை என்பதை நிரூபிக்க, தமிழ்நாட்டில் இன்னும் ஓரணியில் திரள தி.மு.க. கை உயர்த்தி உள்ளது. அதில் நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கைகோர்த்து எழுச்சிபெற்று ஆரிய சூழ்ச்சியை ஒழிப்போம்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum