ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
Dr.S.Soundarapandian
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
heezulia
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன உளைச்சலுக்கு மருந்து

2 posters

Go down

மன உளைச்சலுக்கு மருந்து Empty மன உளைச்சலுக்கு மருந்து

Post by சிவா Sun Aug 16, 2009 1:29 pm

"எனக்கா? மன உளைச்சலா? சான்ஸே இல்லை" என்று நம்பிக்கையுடன் கூறுபவரா நீங்கள்? கொஞ்சம் இங்கே கவனியுங்கள். வயது என்னும் வரம்பைக் கடந்து இப்போது பலருடைய உயிரை பலிவாங்கும் ஒரு பெரிய வியாதியாக மன உளைச்சல் வியாபித்து விட்டது. அதிலும் குறிப்பாக 50 முதல் 60 வயது கொண்டோரை இது எளிதாகப் பற்றிக் கொண்டு வாட்டி வதைக்கிறது. மண வாழ்வில் ஏற்படும் பிணக்குகள், தனிமை, மணவிலக்கு, பொருளாதார வசதி குறித்த கவலை. வேலைவாய்ப்பின்மை, நெருங்கிவரும் பணி ஓய்வு, சமுதாய உரசல்கள், தன் லட்சியத்தை அடைவதில் ஏமாற்றம், குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஏக்கம், பேராசை, பொறாமை, இதயவடுக்கள், தீயசக்திகள் வாழ்வின் உச்சிக்குச் செல்வதைப் பார்த்து வரும் கோபம், விரக்தி என எண்ணற்ற காரணிகள் மன உளைச்சலை விளைவிக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு, நரம்பு மண்டல செயலிழப்பு, மதுவுக்கு அடிமையாதல், ஒற்றைத் தலைவலி, முதுகுவலி, செரிமானக் குறைபாடு, ஒவ்வாமை, அசதி, மனச் சோர்வு, உடல் எடை கூடுதல், தூக்கமின்மை, ஏன், சாதாரண ஜலதோஷம் கூட விளையலாம்.

மன உளைச்சல் என்றால் என்ன என்ற கேள்விக்கு சுருக்கமாக விடையளிப்பதென்றால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு உடல் ஒத்துழைப்பதில் ஏற்படும் ஒரு விளைவு எனலாம். ஏதோவொரு குறிப்பிட்ட நாளுக்குள் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடித்தாக வேண்டுமே என்ற கரிசனையாகட்டும், பேருந்தைப் பிடிப்பதாகட்டும், அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டுமே என்ற கவலையாகட்டும், வேலைக்குரிய நேர்காணலுக்கு தயாராவதிலாகட்டும், பதவி உயர்வு பற்றி சிந்திப்பதிலாகட்டும், ஒவ்வொரு செயலிலும் மனதுடன் சேர்ந்து உடலும்தான் ஈடுபடுகிறது. தனது திறமை உரிய விதத்தில மதிக்கப்படவில்லை என்ற எண்ணம் வந்தாலோ தனது கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்தாலோ மன உளைச்சலுக்கு ஒருவர் எளிதில் ஆளாகிவிடுவார். அதன் மூலம் அவரது அணுகுமுறைகூட மாறிவிடக் கூடும். அதன் தாக்கம் பலவிதங்களில் இருக்கலாம். அவரது உடல் நிலை சீர்குலையலாம். அத்துடன் வேலைத் திறன் குன்றிப்போகலாம். வேலையால் கிடைக்கும் நிறைவு மங்கலாம். இதன் மூலம் அவரது தனிப்பட்ட வாழ்வில் பாதிப்புகள் ஏற்படலாம்.

மன உளைச்சலுக்குக் கூறப்படும் முக்கிய காரணங்களில் ஒன்று ஏராளமான வேலைகளை ஒரே நேரத்தில் கையிலெடுத்துச் செய்வதும், எடுத்த வேலையை அதிவிரைவில் செய்து முடிக்க வேண்டுமென்று அவசரப்படுவதும் ஆகும். வேலை செய்யும் இடத்தில் பணி எதுவும் இல்லாமல் சோம்பி இருந்தால் கூட மன உளைச்சல் வரலாம். ஒருவரது மனதிலுள்ள லட்சியங்களுக்கும் தான் மேற்கொள்ளும் பணிக்கும் எதிர்பொருத்தம் இருந்தால் கூட அவர் மனம் வெதும்பிப் போகலாம். அது அவரை மன உளைச்சலுக்கு அழைத்துச் செல்லலாம். செய்யும் வேலையில் திருப்தி இல்லையென்றால் மன உளைச்சல் வருவது நிச்சயம்.

மன உளைச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் பல. எதையும் கண்டு கொள்ளாமல் இருத்தல் அல்லது எதிர்மறையான அணுகுமுறை கொண்டிருத்தல் முதல் அறிகுறியாகும். மனத் தளர்வுற்றுக் காணப்படுவார். அசதியாக இருக்கிறதென்று எப்போதும் கூறுவார். சுயவெறுப்பு கூட காணப்படலாம். தாம் உதவியற்றவராக அவர் தனக்குள் எண்ணிக் கொள்ளலாம். சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் வளைந்து கொடுக்காதவராகவும் மன உளைச்சலுக்கு ஆளானவர் இருக்கக் கூடும்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வேலை என்பது ஆதிக்கம் செலுத்தவே செய்கிறது. தாம் பணிபுரியும் இடங்களில் குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். இல்லையென்றால் அவர்களது வேலைக்கு உலை வைக்கப்படலாம். இதனால் அவர்களது ஆழ்மனதில் ஒரு இறுக்கம் ஏற்படுவது இயல்பு. அத்துடன் வீட்டுக்கும் பணியிடத்துக்கும் மாறிமாறிப் பயணம் செய்வது கூட அலுப்பையும் சலிப்பையும் தரலாம். அதோடு திருமணத்திற்குப் பின்பு அலுவலக ஈடுபாடுகளையும் வீட்டில் செலவிட வேண்டிய நேரத்தையும் சமன் செய்து போக வேண்டியுள்ளது.

இத்தகைய நிலையில் மன உளைச்சலை கட்டுப்படுத்த என்னதான் வழி? திட்டமிடுதல். இதுவே இதற்குரிய தடுப்பு மருந்து. தனது பணிகளை சரியாகத் திட்டமிட்டால் மன உளைச்சல் மிகவும் குறைந்து விடுகிறது. இது குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிவு பிறக்க வழி செய்கிறது. அத்துடன் உடற்பயிற்சி, நீண்ட தொலைவு நடத்தல், விருப்பமான பொழுது போக்குகளில் ஈடுபடுதல் ஆகியவை மனதுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி இறுக்கத்தை தளர்த்தும். படித்தல், புதுமையாக ஏதேனும் செய்தல், எழுத்து, சுற்றுலா, மலையேற்றம், நாடகம், பொழுது போக்கு நடவடிக்கைகள், கல்வி சார்ந்த பணிகள் ஆகியவையும் வாழ்வில் இறுக்கத்தைத் தளர்த்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளாகும். ஒருவர் மீது வெறுப்பு கொண்டிருத்தல், பாகுபாடு காட்டுதல் ஆகியவை எதிர்மறையான குணாதிசயங்கள் ஆகும். இவை மூலம் மன அமைதி என்பது எட்டாக்கனியாகிவிடும். அநீதி உண்மையில் இழைக்கப்பட்டாலும் சரி, அல்லது கற்பனையில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினாலும் சரி, அது பகைமைக்கே வழி வகுக்கும். அதனால் மன இறுக்கம் உறுதி. ஆணவம், நேர்மையின்மை ஆகியவை நாளடைவில் மன இறுக்கத்துக்கு வித்திட்டு விடும். சொல்லப் போனால், பதவி-சொத்து ஆகியவற்றால் ஏற்படும் அகங்காரம், தாழ்வு மனப்பான்மையின் ஒரு பிரதிபலிப்புதான். நேர்மையற்ற ஒருவர் எப்போதுமே குற்ற மனசாட்சி கொண்டிருப்பார். குறுகிய காலத்தில் அவர் நேர்மையின்மை மூலம் பயனடைந்திருந்தாலும் கூட, அதனால் விளையும் மன இறுக்கத்தின் பின் விளைவுகள் அவருக்கு எதிராக நாளடைவில் திரும்பும்.

மன இறுக்கத்தை ஒரேயடியாக தவிர்த்துவிட முடியாது. ஒவ்வொருவரின் அடிமனதிலும் அது குறைந்த அளவிலோ பெரிய அளவிலோ இருக்கத்தான் செய்யும். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால், அதனை குறைக்கலாம். நம்பிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறை மன இறுக்கத்திலிருந்து பெரிய அளவுக்கு விமோசனம் தருபவையாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன உளைச்சலுக்கு மருந்து Empty Re: மன உளைச்சலுக்கு மருந்து

Post by sweetgee Sun Aug 16, 2009 2:30 pm

migavum arumai
sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum