ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை

2 posters

Go down

புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை Empty புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை

Post by கிராமத்தான் Thu Nov 25, 2010 8:21 am











சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி, இனிமேல் புதிதாக யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. மத்திய, மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மாங்கு மாங்கென்று பிரசாரம் மேற்கொண்டும், புகைப்பவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


கைது செய்தாலும் குற்றம் செய்கின்றனர் என்பதற்காக, குற்றவாளிகளைக் கைது செய்யாமலே விட முடியுமா? அதுபோல, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் பிரசாரத்தை தொடர்கின்றன.


நீண்ட நாட்களாகவே, சிகரெட் அட்டைகளின் முகப்பில், "புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு' என்ற வாசகம் அச்சிடப்பட்டு வந்தது. எழுதப் படிக்கத் தவறியவர்களும் புகை பிடிக்கத் தவறுவதில்லை என்பதால், எழுத்தால் மட்டுமின்றி, படத்தாலும் அதன் அபாயங்களை விளக்க முடிவு செய்யப்பட்டது.


2003ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், "சிகரெட் அட்டைகளின் முகப்பில், புகைப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றிய படங்களை வெளியிட வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியது. இது, 2005ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதுவரை 171 நாடுகள், இத்தீர்மானத்தில் கையெழுத்திட்டு, அமல்படுத்தியுள்ளன.


உலகத்திலேயே கெட்டிக்காரர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா தான், இல்லையா? அதனால், 2008ம் ஆண்டு வரை இத்தீர்மானம் இங்கு அமல்படுத்தப்படவில்லை. ஒரு வழியாக ஒப்புக்கொண்ட பிறகும், அதில் எத்தனை ஏமாற்று வேலைகளை செய்ய முடியுமோ, அத்தனையும் செய்யப்பட்டுள்ளது.


"சிகரெட் பெட்டிகளின் முகப்பில், நோய் பிடித்த நுரையீரலின் படமும், எச்சரிக்கை வாசகமும் இடம் பெற வேண்டும். மொத்த பெட்டியின் அளவில் 40 சதவீதத்துக்கு குறையாமல் அந்த படம் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளில் படம் எப்படி போடப்பட்டுள்ளது என்பதையும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் என்ன செய்திருக்கின்றனர் என்பதையும், அருகில் அச்சாகியிருக்கும் படத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.


இந்திய சிகரெட் உற்பத்தியாளர்கள், அட்டைப் பெட்டிகளில் 40 சதவீதம் அளவுக்கு படம் போடுவதில்லை. அவ்வாறு போடும் படத்தையும், கறுப்பு - வெள்ளை அல்லது ஒற்றை நிறத்தில் ஒப்புக்கு போடுகின்றனர். அதையே, வெளிநாட்டு சிகரெட் உற்பத்தியாளர்கள், பாக்கெட்டின் 60 சதவீதம் அளவுக்கு, புகைப்பதால் ஏற்படும் கோரப் படங்களையும், வாசகங்களையும் அச்சிட்டுள்ளனர்.


பல வண்ணங்களில் உள்ள அந்தப் படங்களைப் பார்த்ததுமே, சிகரெட்டை எடுக்கும் கை ஒரு வினாடி தயங்கும். அத்தகைய படங்களை வெளியிடுவதன் நோக்கமே அது தான் என்பது, பார்ப்பவர்களுக்கு விளங்கும்.


இந்திய சிகரெட் உற்பத்தியாளர்களின் இந்த நடவடிக்கை பற்றி, இந்த திட்டத்தை அமலாக்குவதில் இறுதி வரை உறுதியாக இருந்த, அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: பாசமாக சொல்வதை விட, பயமுறுத்தும் வகையில் சொன்னால் தான் நாலு பேராவது கேட்பர். "புகை பிடித்தால் புற்றுநோய் வரும்' என்று சொன்னால் அலட்டிக் கொள்ளாத இளைஞர்கள் கூட, "ஆண்மை போய்விடும்' என்ற உண்மையைச் சொன்னால் அடக்கி வாசிப்பர். அபாய எச்சரிக்கை படங்களை அச்சிடுவதன் நோக்கமும் அது தான்.


புகையிலை பாக்கெட்களின் முகப்பில் படம் போட வேண்டும் என்றதும், அதன் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; அரசியல்வாதிகளைத் தூண்டிவிட்டனர்; பீடி தொழிலாளர்களைப் போராட்டத்தில் இறக்கினர். புகையிலை உற்பத்தியாளர்களின் வருமானம் பற்றி கவலைப்பட்ட அரசியல்வாதிகள், புகை பிடிப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவில்லை.


"இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது' என, தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட, ஆந்திரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநில முதல்வர்கள் எனக்கு கடிதம் எழுதினர். அதிகரித்த நெருக்கடி காரணமாக, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஜெய்பால் ரெட்டி, கமல்நாத், ஆனந்த் சர்மா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், நான் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.


இந்தக் குழுவிலும், எவருமே படங்களை வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை. நான் தேர்வு செய்து வைத்திருந்த 150க்கும் மேற்பட்ட கோர படங்களை நிராகரித்து, சுமாரான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். இதற்கு மேல் நெருக்கடி கொடுத்தால், இந்த படங்களையும் நிராகரித்து விடுவார்களோ என பயந்து, வேண்டா வெறுப்பாக சம்மதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இவ்வாறு விரக்தியுடன் கூறினார் அன்புமணி ராமதாஸ்.


அதுசரி, சிகரெட் பெட்டியை விட, பணப்பெட்டி கனமானது தானே!


- ஆர்.ரங்கராஜ் பாண்டே -

நன்றி-தினமலர்[img][/img]புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை C:\Documents and Settings\sri rani\Desktopஷlarge_133425
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை Empty Re: புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை

Post by Thanjaavooraan Thu Nov 25, 2010 10:02 am

நல்லதொரு முயற்சி புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை Empty Re: புகைப்பவர்களின் உயிர் குடிக்கும் சிகரெட் உற்பத்தியாளர்கள் : எச்சரிக்கை படங்களில் ஏமாற்று வேலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum