ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி

Go down

"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Empty "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி

Post by Guest Thu Nov 25, 2010 12:14 am

சென்னை : ""என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமார் புகார் அளித்தார். அப்புகாரின் மீது வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் ஆனந்தராஜனை கைது செய்தனர். வனிதா, தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், தந்தை அளித்த புகாரையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டி.ஜி.பி., லத்திகா சரணை சந்தித்து நேற்று புகார் அளித்தார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 15 ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளேன். என் தந்தை நடிகர் விஜயகுமார். "டிவி' நடிகரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து, அவருடன் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2007ல் விவாகரத்து பெற்றேன். அவர் மூலம் விஜய் ஸ்ரீஹரி(9) மற்றும் ஜோவிகா(5) என்ற குழந்தைகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் குடும்பத்தினர் எனக்கு உதவி செய்யவில்லை. என் குடும்பம் மிகப்பெரியது; என் தந்தைக்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள். பிரபலமான குடும்பம் என்பதால், ஊடகங்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தேன். முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆனந்தராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தேன். அவர் மூலம் மூன்றாவதாக ஒன்றரை வயதில் ஜெயினிதா என்ற குழந்தை உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் வசித்து வந்த நான், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். இங்கு வந்து, என் தந்தை பெயரில், "விஜயகுமார் மீடியா பிரைவேட் லிட்' என்ற நிறுவனம் ஒன்றை துவங்கி, சிறந்த முறையில் நடத்தி வருகிறேன். தீபாவளியை ஒட்டி மூன்று குழந்தைகளும் என் தந்தை வீட்டில் இருந்தனர். கடந்த 7ம் தேதி அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்காக நானும், கணவரும் சென்றோம். அப்போது, மகன் ஸ்ரீஹரியை என்னுடன் அனுப்ப மறுத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், அண்ணன் அருண் விஜய், என்னை அடித்து, வயிற்றில் உதைத்தார். என் கணவர் தடுத்ததுடன், என்னை அழைத்து வந்துவிட்டார். இது தொடர்பாக, மதுரவாயல் போலீசில் புகார் அளித்தோம். புகார் குறித்து எப்.ஐ.ஆர்., போடாமல், சி.எஸ்.ஆர்., மட்டும் தந்தனர். உதவி கமிஷனர் ஜெயராஜ் என்பவர், சமாதானம் பேசுவதாக கூறி வந்தார்.

இதற்கிடையில், கடந்த 15ம் தேதி என் தந்தை விஜயகுமாரின் கையை என் கணவர் ஆனந்தராஜன் உடைத்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் என் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, எப்.ஐ.ஆர்., போட்டு, என் கணவரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், வக்கீல் மூலம் பார்த்துக் கொள்ளுமாறும் கூறினர். மேலும், அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த மூன்று ரவுடிகள், என் மகளின் கழுத்தை நெரித்ததுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். என் கணவரை மீட்பதற்காக நான் போராடி வருகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக வனிதா, மேலும் கூறியதாவது: நான் கடந்த 7ம் தேதி குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டிற்கு சென்ற போது, அப்பா விஜயகுமார் நன்றாக குடித்திருந்தார். நான் மகனை அழைத்த போது அவர் தடுத்ததுடன், அசிங்கமாக பேசினார். அவன் பள்ளி தேர்வுக்காக செல்ல வேண்டும் என்று கூறியும் அவர் மறுத்தார். அதற்கு நான், "நீங்கள் நிதானத்தில் இல்லை; நான் உங்களிடம் அப்புறம் பேசுகிறேன்; மகனை அனுப்புங்கள்' என்றேன். அதற்கு அவர், என்னை பிடித்து தள்ளினார். அப்போது, எனது கணவர் வந்து தடுத்தார். அந்த வீட்டிற்கே சம்பந்தமில்லாத அருண் விஜய் வந்து, என்னை அடித்து உதைத்தார். என் அப்பாவிற்கு அடிக்க உரிமை உள்ளது; அருண் விஜய்க்கு என்னை தொட உரிமை கிடையாது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் என் மகன் மீது இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை.

விஜயகுமார் தன் மகனை காப்பாற்ற, என் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இதற்கு அவரது மருமகன் ஹரியும் உடந்தையாகச் செயல்படுகிறார். என் மகன் தான் அப்பாவிற்கு முதல் பேரன். அவன் மூலம் நான் சொத்தை கேட்டு விடுவேனோ என்ற பயத்திலும், நான் புதியதாக துவங்கிய நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும், அவர்கள் இப்படி செய்கின்றனர் என்று நினைக்கிறேன். என் தங்கை ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடினர். வெளியில் சொன்னால் கேவலம்... என் கணவர் ஆனந்தராஜனின் நண்பர் மூலம் தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்தோம். நடந்த விஷயங்களை வெளியில் சொன்னால் எல்லாம் நாறிடும். என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள்; இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். விஜயகுமார் பற்றி நான் நிறைய ரகசியங்களை வெளியிடுவேன். கேட்டால், தினம் ஒரு கதையாகச் சொல்வேன். புகார் விஷயம் வெளியில் வந்ததால், தற்போது நான் கொடுத்த புகார் மீது எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். டி.ஜி.பி., ஒரு பெண் என்பதால் என் கணவரை மீட்க, அவரை நாடி வந்துள்ளேன். இவ்வாறு வனிதா கூறினார்.

அப்பாவின் கையை கணவர் உடைக்கவில்லை: நடிகர் விஜயகுமார் கடந்த 15ம் தேதி மதுரவாயல் போலீசில், மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜன் தன் கையை உடைத்து விட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து, ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்க வந்த வனிதா விஜயகுமாரிடம் நிருபர்கள், தந்தையின் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, ""அப்பாவின் கையை எனது கணவர் உடைக்கவில்லை. சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கினார். அதில், அவரது கையில், "மல்டிபிள் பிராக்சர்' ஏற்பட்டது. சம்பவத்தன்று, தந்தை என்னை அடிக்க வந்தபோது, தடுக்க மட்டும் தான் செய்தார். இதில் அவர் கை முறிந்தது என்று கூறியுள்ளது பொய். இந்த புகாரின் பின்னணியில் ஏதோ பெரிய, "பிரஷர்' உள்ளது,'' என்றார்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum