Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏனிந்த வஞ்சனை? (கவிதை)
4 posters
Page 1 of 1
ஏனிந்த வஞ்சனை? (கவிதை)
(ஈழ அகதிமுகாமில் உள்ள சிறுவன் ஒருவனின் ஆதங்கமாக எழுதப்பட்டது).
கவிதை 1
சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ
சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே
வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே
எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்
கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது
இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்
மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்
அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்
கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?
விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ
தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ
கவிதை 1
சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ
சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே
வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே
எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்
கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது
இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்
மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்
அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்
கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?
விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ
தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ
Last edited by kirikasan on Fri Nov 19, 2010 7:16 pm; edited 1 time in total
படைகள் இல்லாத ஊரொன்று வேண்டும் !
(அதையே ஒரு இளைஞனின் உணர்வு வெளிப்பாடாக இது.)
கவிதை 2
இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு எனக்கூறி வேலி
தடைபோட்டு மறித்தாரும் இல்லை
கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
தடுத்தாரும் எங்கணுமில்லை
மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
சிறை போட்டு கொண்டதோ சொல்லு
ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு
விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்
குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்
ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
நிற்காத ஊரொன்று வேண்டும்
வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்
தருவார்கள் என்று தனிஈழ அரசு
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்
உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்
கவிதை 2
இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு எனக்கூறி வேலி
தடைபோட்டு மறித்தாரும் இல்லை
கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
தடுத்தாரும் எங்கணுமில்லை
மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
சிறை போட்டு கொண்டதோ சொல்லு
ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு
விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்
குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்
ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
நிற்காத ஊரொன்று வேண்டும்
வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்
தருவார்கள் என்று தனிஈழ அரசு
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்
உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்
Re: ஏனிந்த வஞ்சனை? (கவிதை)
மரபுக்கவிதைகள் இக்காலத்தில் எழுதுவது மறைந்து கொண்டு இருக்கும் நிலையில் மிக அருமையான சந்தக்கவிதைகளை மிக அனாயாசமாய் எழுதியுள்ளமைக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்..!
ஈழத்துப்பிஞ்சுகளும் காய்களும் கனிகளும் அங்கே வெதும்பிக் கலங்கும் விதத்தை அழகாக பாடலில் தந்துவிட்டீர்கள்..!
மனமார்ந்த நல் வாழ்த்துகள் கிரிகாசன்..!
ஈழத்துப்பிஞ்சுகளும் காய்களும் கனிகளும் அங்கே வெதும்பிக் கலங்கும் விதத்தை அழகாக பாடலில் தந்துவிட்டீர்கள்..!
மனமார்ந்த நல் வாழ்த்துகள் கிரிகாசன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஏனிந்த வஞ்சனை? (கவிதை)
கலை wrote:மரபுக்கவிதைகள் இக்காலத்தில் எழுதுவது மறைந்து கொண்டு இருக்கும் நிலையில் மிக அருமையான சந்தக்கவிதைகளை மிக அனாயாசமாய் எழுதியுள்ளமைக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்..!
ஈழத்துப்பிஞ்சுகளும் காய்களும் கனிகளும் அங்கே வெதும்பிக் கலங்கும் விதத்தை அழகாக பாடலில் தந்துவிட்டீர்கள்..!
மனமார்ந்த நல் வாழ்த்துகள் கிரிகாசன்..!
நன்றிகள்! தங்களிடமிருந்து பாராட்டு பெறுவதில் பெருமகிழ்ச்சி!
இன்னும் மரபுப்பா பயிலரங்க மாணவன்.நான். நிறைய கற்க உள்ளது. கற்று நல்ல வகையில் கவி இயற்ற வேண்டுமென்பது பேரவா!
Re: ஏனிந்த வஞ்சனை? (கவிதை)
அனைத்தையும் கற்றுத் தெளிந்த தாங்கள் இன்னும் மாணவன்தான் என்ற தன்னடக்கம் உங்கள் மீதுள்ள மரியாதையை மேலும் அதிகரிக்கிறது அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏனிந்த வஞ்சனை? (கவிதை)
கவிதைகள் கண்டேன், அனைத்தும் செந்தேன்
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Similar topics
» கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|