Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
4 posters
Page 1 of 1
வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே ஆகும் என்றும் இலங்கையின் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்து உள்ளார்.
அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வாராந்தம் எழுதும் பத்தி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். அவர் அப்பத்தியில் தெரிவித்து உள்ளவற்றை தொகுத்து தருகின்றோம்.
”முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சமாதி கட்டப்பட்டது. இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன், அவரின் சிரேஷ்ட சகாக்கள், கமாண்டோக்கள் ஆயிரக்கணக்கான போராளிகள் என பெரும்பாலும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் முடிவு கட்டப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.இவர்கள் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.இவர்களுள் ஒரு தொகையினர்-ஆயிரக் கணக்கானவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். எஞ்சியோர் படிப்படியாக விடுவிக்கப்படுவர்.
தீவிர போராளிகள் எனக் கருதப்படும் சுமார் ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இறுதி யுத்தத்தில் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் முக்கியப் பெறுபேறு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான்.இலங்கையில் புலிப் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது தான். இதற்குப் பின்னர் கடந்த 18 மாதங்களாக நாட்டின் எப்பாகத்திலும் புலிகளின் பயங்கரவாதங்கள் இடம்பெறவே இல்லை. புலிப் பயங்கரவாதம் இல்லை என்று ஆகி விட்டது. பயங்கரவாதத்தால் ஏற்பட்டிருக்கும் காயங்கள் குணப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் தற்போதைய சமாதானம் நிரந்தரமானதுதானா? அல்லது தற்காலிகம் ஆனாதா? போன்ற கேள்விகள் எழவே செய்கின்றது. விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறலாம்-அதனால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் செல்லலாம் என்கிற அச்சமும், முன்னெச்சரிக்கையும் இன்னமும் இருக்கவே செய்கின்றது. புலிகளின் வன்முறைகள் மீண்டும் தலைதூக்குமாக இருந்தால் நாட்டில் படிப்படியாக உணரப்பட்டு வரும் இயல்பு வாழ்க்கை குலைந்து விடும். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மக்கள் தற்போது அனுபவித்து வரும் அமைதி மீண்டும் குலைந்துவிடக்கூடும் என்பதுதான் பாரிய கவலை.
இதனால் நிரந்தர சமாதானத்தை நோக்கிய நகர்வுகளும்,உண்மையான நல்லிணக்கமும் பாரிய பின்னடைவைச் சந்தித்து விடும். புலிகள் புத்துயிர் பெறும் நிலைமை மீண்டும் உருவானால் அது தமிழ் மக்களுக்கு மீள முடியாத ஒரு பேரவலத்தை திரும்பவும் ஏற்படுத்தி விடும். வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற பல தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களுக்கு கசப்பான அனுபவங்களையே ஏற்படுத்தி இருந்தது. அவர்களைச் சின்னாபின்னமாக்கி இருந்தது. அவர்கள் இப்போதுதான் அவ்வழிவுகளிலிருந்து மீண்டு பொருளாதார ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் மறுமலர்ச்சி பெற முயன்று வருகின்றனர்.
அரசியல் ரீதியான வன்முறைகளை புலிகள் மீண்டும் ஆரம்பித்து விட்டால் அது தற்போதைய நிலைமையை மிக மோசமாக மாற்றி அமைத்துவிடும். எனவே அரசு திட்டமிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும் மீண்டும் இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்யும். அரசு இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சனத்தொகைக் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சிகளையும் எடுக்க நேரலாம். ஆனால் புலிகள் புத்துயிர் பெறுகின்றமைக்கு சாதகமான களநிலைகள் இல்லவே இல்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் உறுதியான நிலையில் உள்ளன.
அங்கு மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது. தமிழ் மக்கள் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம், பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன்முறைகளுக்கான மக்கள் ஆதரவு மிகவும் குறைவாகவே உள்ளது. சில பொறுப்பற்ற அரசியல்வாதிகள்தான் பிற்போக்குத்தனமான கருத்துக்களை மீண்டும் முன்வைத்து வருகின்றனர். புலிகள் இலங்கையில் மரண அடி வாங்கினார்கள்தான். ஆனால் அவர்களின் வெளிநாட்டுக் கட்டமைப்பு பாதிக்கப்படவே இல்லை. புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு கிளைகள் , வர்த்தக மற்றும் ஊடகக் கட்டமைப்புகள் ஆகியன முன்பு போலவே செயற்படுகின்றன.
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் சமூகத்தால் தமிழ் ஈழக் கோட்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப் படுகின்றது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் புலிக் கொடி ஏற்றப்படுகின்றது. அது தமிழ் ஈழக்கொடி என்று கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கொடி என்று வெளிநாடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் பிரசாரமும் செய்யப்படுகின்றது. ஆனால் புலிகள் இராணுவ ரீதியாக தோல்வி அடைந்த பின் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு சக்திகள்கூட வலு இழந்து விட்டன. உட்பூசல்கள் இயக்கத்தை கணிசமாகப் பாதித்துள்ளன. ஒரு காலத்தில் மேற்குலக நாடுகளின் நகரங்களில் மிகக் குறுகிய கால அறிவித்தலில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டும் ஆற்றல் புலிகளுக்கு இருந்தது.ஆனால் அக்காலம் இன்று மலையேறி விட்டது.
ஏராளமான புலி ஆதரவு ஊடகங்கள் அந்நாட்களில் செயற்பட்டன. இப்போது அவையும் இல்லை. நிதி சேகரிப்பு முற்றாக நின்று விடவில்லையாயினும் கணிசமான அளவில் குறைந்து விட்டன. புலி ஆதரவு புத்திஜீவிகள் பலர் இரவோடு இரவாக புலி ஆதரவு நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டமை மிகவும் வேடிக்கையானது. மாற்றுக் கருத்து உடையவர்களைக் கொலை செய்தல் என்கிற புலிகள் இயக்க கோட்பாட்டையும், புலிகளின் எல்லா செயல்பாடுகளையும் ஒரு காலத்தில் நியாயப்படுத்திய இப்புத்திஜீவிகள் இன்று மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.இவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றமை மிகவும் வெட்கக் கேடான விடயம் ஆகும் .
புலிகளின் தோல்விக்குப்பின் புலிகளுக்கு ஆதரவான இணையத்தள பிரசார செயலணி ஒன்று புதிதாக தோற்றம் பெற்றுள்ளது. இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மூலமாக ப இலங்கையின் நிலைமை பற்றி முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை இவ்விணையத் தளங்கள் வெளியிட்டு வருகின்றன. ராஜபக்ஸ அரசு கவிழ்கின்றது, புலிகள் இயக்கம் புத்துயிர் பெறுகின்றது என்றெல்லாம் இவை தகவல்களைப் பரப்பி வருகின்றன.இம்மடத்தனமான பிரசாரங்களால்தான் மீண்டும் இலங்கையில் வன்முறைகள் தலைதூக்கக் கூடும் என்று மேலைநாட்டு முகவராண்மைகள் சில நம்புகின்றன்.
இருந்தாலும் வன்முறைகள் மீண்டும் தலைதூக்கினால் அவற்றை முளையிலேயே இலங்கை அரசு கிள்ளி எறிந்து விடும் என்று இவை விசுவாசிக்கின்றன. சில வாரங்களுக்கு முன் இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழு ஒன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழுகளுடன் இவர்கள் பரஸ்பரம் பேசினார்கள். புலிகள் இயக்கம் புத்துயிர் பெறும் சாத்தியம் உண்டா? என்பது குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தார்கள். இந்தியத் தரப்பு புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் கே.பி யுடன் விரிவான நேர்காணல் ஒன்றை நடத்தியது. இதே நேரம் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு பற்றி விரிவாக இப்போது ஆராயப்பட்டு வருகின்றது.
புலி ஆதரவு அமைப்புக்கள் இத்தடை நீடிப்புக்கு எதிராக கடும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. மேற்குலக நாடுகள் ஐக்கியமானதும் பிளவுபடாததுமான இலங்கையை ஆதரிக்கின்றன அத்துடன் வன்முறைகளற்ற, ஜனநாயக ரீதியான ஈழ ஆதரவு செயற்பாடுகளுக்கும் மேற்குலக நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. . அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக புலிகள் இயக்கம் இருக்கின்றது. ஆனால் நியூயோர்க் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டு பகிரங்கக் கூட்டங்கள் அண்மையில் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. எந்தவொரு புலி ஆதரவுச் செயற்பாட்டுக்கும் அங்கு இடம் இல்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை மற்றும் மணிப்பூர் கொரில்லாக்களுக்குப் புலிகள் பயிற்சியளித்தமை போன்றவற்றை இந்தியாவால் ஒருபோதும் மறக்கமுடியாது. விசுவநாதன் உருத்திரகுமாரன் நியூயோர்க்கில் உள்ள ஒரு சட்டத்தரணி. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு உந்து சக்தியாக இருப்பவர். புலிகளுடைய சர்வதேச செயலகத்தின் சட்ட ஆலோசகராக முன்பு பணி ஆற்றியவர். ஒஸ்லோ ஆதரவு சமாதானப் பேச்சில் புலிகளின் பேராளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரதிப் பிரதமர்கள், ஏழு அமைச்சர்கள், பத்து பிரதி அமைச்சர்கள் ஆகியோரைக் கொண்ட அமைச்சரவையையும் நிறுவியுள்ளார். செனற் சபை அல்லது மேலவை ஒன்றையும் ஸ்தாபிக்க இவர் திட்டமிட்டுள்ளார்.
இது போன்ற செயற்பாடுகள் புலம்பெயர் தமிழ் சமூகம் வன்முறைகளைக் கைவிட உதவும் என்று மேற்கு நாடுகள் எண்ணுகின்றன. நாடு கடந்த தமிழீழ அமைச்சர்கள் இப்போது சுய கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். கொழும்பிலிருந்து சமதான பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக்கள் வரும் என்றும் இவர்களில் சிலர் காத்திருக்கின்றனர்.ஆனால் இவர்கள் எல்லோருமே இலங்கையில் கறுப்புப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மையாகும். உருத்திராவின் நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு பாதிப்பற்ற நகைச்சுவையாகக் மேற்கு நாடுகள் கருதுகின்றன. தீங்கு அற்ற முயற்சியாக கருதி இப்பிரிவுகளுடன் பேச்சுக்களையும் நடத்தி உள்ளன. ஆனால் நெடியவன் குழுவை மேற்குலக நாடுகள் பேராபத்தானது என கருதுகின்றன.
நெடியவன் பிரிவுக்குள் பல அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.இவற்றுள் உலகத் தமிழர் பேரவை முக்கியமானது. இப்பேரவை ஓரளவு சுயாதீனமாகச் செயற்படுகின்றது. சில விடயங்களில் சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட வண.பிதா எஸ்.ஜே.இமானுவல் இப்பேரவைக்குத் தலைமை தாங்குகின்றார். நெடியவனின் கருத்தியல் ஞானத் தந்தையாகவும் இவரே உள்ளார். நெடியவனின் உண்மையான பெயர் பேரின்பநாயகம் சிவபரன். புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்கு முன்னர் பொறுப்பாக இருந்த மணிவண்ணன் அல்லது கெஸ்ட்ரோவால் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார் .தற்போது 34 வயது. இவர் 18 வயதில் இயக்கத்தில் இணைந்தவர்.
அரசு- புலிகளுக்கு இடையில் தாய்லாந்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனோடு பங்கேற்றவர்.ரு உருத்திரகுமாரனைக் கவிக்க நெடியவன் குழு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகுன்றது. குறிப்பாக உருத்திரகுமாரனுக்கு சவாலாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட முன்னாள் எம்.பி ரி.ஜெயானந்தமூர்த்தியை களத்தில் இறக்கியது. இவ்விடயத்தில் நெடியவனுக்கு ஆலோசகராக இருப்பவர் தமிழ்நெற் இணையத் தள ஆசிரியரான நோர்வே வாழ். ஜெயச்சந்திரன் கோபிநாத். ஆனால் உருத்திரகுமாரனுடன் மல்லுக் கட்டக் கூடியவராக ஜெயானந்த மூர்த்தி இருக்கவில்லை.
இதனால் நெடியவனின் முயற்சி தோற்றுப் போனது.உருத்திரகுமாரன் உடைய குழுவின் கை ஓங்கி விட்டது. இருந்தாலும் உருத்திரகுமார் மீதான அடுத்த தாக்குதலுக்கு நெடியவன் பிரிவு திட்டமிட்டு வருகின்றது. யுத்தத்துக்குப் பின் தமிழ் மக்களின் நிலைமைகளில் மேற்கு நாடுகள் ஓரளவு பரிதாபம் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்று கூறிக் கொள்ளும் புலி அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் இறங்கும் என்று மேற்கு நாடுகள் எதிர்ப்பார்த்தன.
ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக இப்புலி அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நல்வாழ்வுக்கு உதவுகின்றவர்களுக்கு எதிராக கடும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுக்கு இடையி மீண்டும் பேரழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைககளும் இடம்பெற்று வருகின்றன. பல நாடுகளில் புலி ஆதரவாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.ஜெர்மனி இத்தாலி,நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பலர் கைது செய்யப்பட்டனர். இன்னும் பல நாடுகளில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
புலிகளின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் தற்போது மிகவும் குறைந்த மட்டத்திலேயே இடம்பெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிதி சேகரிப்பு 10 முதல் 15 சதவீதத்தால் குறைந்துள்ளது. பெரும்பாலும் ராஜபக்ஸ தலைமையிலான அரசை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தவும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டவும் என்று கூறியே இந்த நிதி சேகரிக்கப்படுகின்றது. வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டு நிதி சேகரிக்கப்படுகின்றது. புலம் பெயர்ந்த சமூகத்துக்கு மத்தியில் சேகரிக்கப்படும் இந்த நிதியை வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உண்மையிலேயே பேரின்னல்களை அனுபவித்து வரும் மக்களின் நன்மைகளுக்குப் பயன்படுத்த முடியும்.புலம்பெயர் சமூகத்துக்கு இத்தார்மீகப் பொறுப்பு உண்டு. ஆனால்
* பிரபாகரனும்,பொட்டு அம்மானும் உயிருடன் இருக்கின்றனர்-
* இறுதி யுத்தத்தின்போது பிரபாகரன் 2000 போராளிகளுடன் தோணி ஒன்றில் கடல் மார்க்கமாக வெளிநாடு ஒன்றுக்கு தப்பி வந்து விட்டார்-
* 10000 போராளிகளுக்கு வெளிநாடு ஒன்றில் பிரபாகரன் பயிற்சி கொடுத்து வருகின்றார்-
* உரிய நேரத்தில் அதிரடித் தாக்குதல் நடத்துவார்- என்றெல்லாம் உசுப்பேற்றி நிதி சேகரிக்கின்றனர்.இவை வெறும் கட்டுக்கதைகளே ஆகும்.
இக்கதைகளில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. .இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து புலிகள் இயக்க உறுப்பினர் சிலர் தப்பித்தான் இருந்தனர். ஆன்மால் அவர்களும் பின்னர் மிகவும் திட்டமிட்ட முறையில் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை. இலங்கை மீது தாக்குதல் தொடுக்கின்றமைக்கு 12ஆயிரம் புலிப் போராளிகளுக்கு பயிற்சியளிக்க எந்தவொரு உலக நாடும் இடம் வழங்க முன் வந்து இராது. இலங்கையின் பாதுகாப்பு மிகவும் கட்டுக்கோப்பான நிலையில் உள்ளது.
இங்கு எந்தவொரு சதி நாச வேலைக்கும் இப்போதைக்கு இடம் கிடையாது என்பதுதான் யதார்த்தம். இந்நிலையில் மீண்டும் புலிகளின் வன்முறைகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்குமா? என்ற கேள்வியை எழுப்பினால் நிச்சயம் இல்லை என்பதே உறுதியான பதிலாக இருக்கும். ஆனால் இலங்கைக்கு எதிரான பாரிய தாக்குதலோ, வன்முறையோ இப்போதைக்கு முடியாத ஒன்றாக இருந்தாலும் கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள புலி ஆதரவு சமூகம் தொடர்ந்தும் இலங்கைக்கு தொல்லை கொடுக்கும் ஒன்றாகவே நிச்சயம் இருக்கும்.”
CNN
அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வாராந்தம் எழுதும் பத்தி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். அவர் அப்பத்தியில் தெரிவித்து உள்ளவற்றை தொகுத்து தருகின்றோம்.
”முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சமாதி கட்டப்பட்டது. இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன், அவரின் சிரேஷ்ட சகாக்கள், கமாண்டோக்கள் ஆயிரக்கணக்கான போராளிகள் என பெரும்பாலும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் முடிவு கட்டப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.இவர்கள் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.இவர்களுள் ஒரு தொகையினர்-ஆயிரக் கணக்கானவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். எஞ்சியோர் படிப்படியாக விடுவிக்கப்படுவர்.
தீவிர போராளிகள் எனக் கருதப்படும் சுமார் ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இறுதி யுத்தத்தில் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் முக்கியப் பெறுபேறு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான்.இலங்கையில் புலிப் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது தான். இதற்குப் பின்னர் கடந்த 18 மாதங்களாக நாட்டின் எப்பாகத்திலும் புலிகளின் பயங்கரவாதங்கள் இடம்பெறவே இல்லை. புலிப் பயங்கரவாதம் இல்லை என்று ஆகி விட்டது. பயங்கரவாதத்தால் ஏற்பட்டிருக்கும் காயங்கள் குணப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் தற்போதைய சமாதானம் நிரந்தரமானதுதானா? அல்லது தற்காலிகம் ஆனாதா? போன்ற கேள்விகள் எழவே செய்கின்றது. விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறலாம்-அதனால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் செல்லலாம் என்கிற அச்சமும், முன்னெச்சரிக்கையும் இன்னமும் இருக்கவே செய்கின்றது. புலிகளின் வன்முறைகள் மீண்டும் தலைதூக்குமாக இருந்தால் நாட்டில் படிப்படியாக உணரப்பட்டு வரும் இயல்பு வாழ்க்கை குலைந்து விடும். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மக்கள் தற்போது அனுபவித்து வரும் அமைதி மீண்டும் குலைந்துவிடக்கூடும் என்பதுதான் பாரிய கவலை.
இதனால் நிரந்தர சமாதானத்தை நோக்கிய நகர்வுகளும்,உண்மையான நல்லிணக்கமும் பாரிய பின்னடைவைச் சந்தித்து விடும். புலிகள் புத்துயிர் பெறும் நிலைமை மீண்டும் உருவானால் அது தமிழ் மக்களுக்கு மீள முடியாத ஒரு பேரவலத்தை திரும்பவும் ஏற்படுத்தி விடும். வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற பல தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களுக்கு கசப்பான அனுபவங்களையே ஏற்படுத்தி இருந்தது. அவர்களைச் சின்னாபின்னமாக்கி இருந்தது. அவர்கள் இப்போதுதான் அவ்வழிவுகளிலிருந்து மீண்டு பொருளாதார ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் மறுமலர்ச்சி பெற முயன்று வருகின்றனர்.
அரசியல் ரீதியான வன்முறைகளை புலிகள் மீண்டும் ஆரம்பித்து விட்டால் அது தற்போதைய நிலைமையை மிக மோசமாக மாற்றி அமைத்துவிடும். எனவே அரசு திட்டமிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும் மீண்டும் இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்யும். அரசு இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சனத்தொகைக் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சிகளையும் எடுக்க நேரலாம். ஆனால் புலிகள் புத்துயிர் பெறுகின்றமைக்கு சாதகமான களநிலைகள் இல்லவே இல்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் உறுதியான நிலையில் உள்ளன.
அங்கு மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது. தமிழ் மக்கள் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம், பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன்முறைகளுக்கான மக்கள் ஆதரவு மிகவும் குறைவாகவே உள்ளது. சில பொறுப்பற்ற அரசியல்வாதிகள்தான் பிற்போக்குத்தனமான கருத்துக்களை மீண்டும் முன்வைத்து வருகின்றனர். புலிகள் இலங்கையில் மரண அடி வாங்கினார்கள்தான். ஆனால் அவர்களின் வெளிநாட்டுக் கட்டமைப்பு பாதிக்கப்படவே இல்லை. புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு கிளைகள் , வர்த்தக மற்றும் ஊடகக் கட்டமைப்புகள் ஆகியன முன்பு போலவே செயற்படுகின்றன.
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் சமூகத்தால் தமிழ் ஈழக் கோட்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப் படுகின்றது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் புலிக் கொடி ஏற்றப்படுகின்றது. அது தமிழ் ஈழக்கொடி என்று கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கொடி என்று வெளிநாடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் பிரசாரமும் செய்யப்படுகின்றது. ஆனால் புலிகள் இராணுவ ரீதியாக தோல்வி அடைந்த பின் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு சக்திகள்கூட வலு இழந்து விட்டன. உட்பூசல்கள் இயக்கத்தை கணிசமாகப் பாதித்துள்ளன. ஒரு காலத்தில் மேற்குலக நாடுகளின் நகரங்களில் மிகக் குறுகிய கால அறிவித்தலில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டும் ஆற்றல் புலிகளுக்கு இருந்தது.ஆனால் அக்காலம் இன்று மலையேறி விட்டது.
ஏராளமான புலி ஆதரவு ஊடகங்கள் அந்நாட்களில் செயற்பட்டன. இப்போது அவையும் இல்லை. நிதி சேகரிப்பு முற்றாக நின்று விடவில்லையாயினும் கணிசமான அளவில் குறைந்து விட்டன. புலி ஆதரவு புத்திஜீவிகள் பலர் இரவோடு இரவாக புலி ஆதரவு நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டமை மிகவும் வேடிக்கையானது. மாற்றுக் கருத்து உடையவர்களைக் கொலை செய்தல் என்கிற புலிகள் இயக்க கோட்பாட்டையும், புலிகளின் எல்லா செயல்பாடுகளையும் ஒரு காலத்தில் நியாயப்படுத்திய இப்புத்திஜீவிகள் இன்று மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.இவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றமை மிகவும் வெட்கக் கேடான விடயம் ஆகும் .
புலிகளின் தோல்விக்குப்பின் புலிகளுக்கு ஆதரவான இணையத்தள பிரசார செயலணி ஒன்று புதிதாக தோற்றம் பெற்றுள்ளது. இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மூலமாக ப இலங்கையின் நிலைமை பற்றி முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை இவ்விணையத் தளங்கள் வெளியிட்டு வருகின்றன. ராஜபக்ஸ அரசு கவிழ்கின்றது, புலிகள் இயக்கம் புத்துயிர் பெறுகின்றது என்றெல்லாம் இவை தகவல்களைப் பரப்பி வருகின்றன.இம்மடத்தனமான பிரசாரங்களால்தான் மீண்டும் இலங்கையில் வன்முறைகள் தலைதூக்கக் கூடும் என்று மேலைநாட்டு முகவராண்மைகள் சில நம்புகின்றன்.
இருந்தாலும் வன்முறைகள் மீண்டும் தலைதூக்கினால் அவற்றை முளையிலேயே இலங்கை அரசு கிள்ளி எறிந்து விடும் என்று இவை விசுவாசிக்கின்றன. சில வாரங்களுக்கு முன் இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழு ஒன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழுகளுடன் இவர்கள் பரஸ்பரம் பேசினார்கள். புலிகள் இயக்கம் புத்துயிர் பெறும் சாத்தியம் உண்டா? என்பது குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தார்கள். இந்தியத் தரப்பு புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் கே.பி யுடன் விரிவான நேர்காணல் ஒன்றை நடத்தியது. இதே நேரம் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு பற்றி விரிவாக இப்போது ஆராயப்பட்டு வருகின்றது.
புலி ஆதரவு அமைப்புக்கள் இத்தடை நீடிப்புக்கு எதிராக கடும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. மேற்குலக நாடுகள் ஐக்கியமானதும் பிளவுபடாததுமான இலங்கையை ஆதரிக்கின்றன அத்துடன் வன்முறைகளற்ற, ஜனநாயக ரீதியான ஈழ ஆதரவு செயற்பாடுகளுக்கும் மேற்குலக நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. . அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக புலிகள் இயக்கம் இருக்கின்றது. ஆனால் நியூயோர்க் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டு பகிரங்கக் கூட்டங்கள் அண்மையில் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. எந்தவொரு புலி ஆதரவுச் செயற்பாட்டுக்கும் அங்கு இடம் இல்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை மற்றும் மணிப்பூர் கொரில்லாக்களுக்குப் புலிகள் பயிற்சியளித்தமை போன்றவற்றை இந்தியாவால் ஒருபோதும் மறக்கமுடியாது. விசுவநாதன் உருத்திரகுமாரன் நியூயோர்க்கில் உள்ள ஒரு சட்டத்தரணி. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு உந்து சக்தியாக இருப்பவர். புலிகளுடைய சர்வதேச செயலகத்தின் சட்ட ஆலோசகராக முன்பு பணி ஆற்றியவர். ஒஸ்லோ ஆதரவு சமாதானப் பேச்சில் புலிகளின் பேராளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரதிப் பிரதமர்கள், ஏழு அமைச்சர்கள், பத்து பிரதி அமைச்சர்கள் ஆகியோரைக் கொண்ட அமைச்சரவையையும் நிறுவியுள்ளார். செனற் சபை அல்லது மேலவை ஒன்றையும் ஸ்தாபிக்க இவர் திட்டமிட்டுள்ளார்.
இது போன்ற செயற்பாடுகள் புலம்பெயர் தமிழ் சமூகம் வன்முறைகளைக் கைவிட உதவும் என்று மேற்கு நாடுகள் எண்ணுகின்றன. நாடு கடந்த தமிழீழ அமைச்சர்கள் இப்போது சுய கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். கொழும்பிலிருந்து சமதான பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக்கள் வரும் என்றும் இவர்களில் சிலர் காத்திருக்கின்றனர்.ஆனால் இவர்கள் எல்லோருமே இலங்கையில் கறுப்புப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மையாகும். உருத்திராவின் நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு பாதிப்பற்ற நகைச்சுவையாகக் மேற்கு நாடுகள் கருதுகின்றன. தீங்கு அற்ற முயற்சியாக கருதி இப்பிரிவுகளுடன் பேச்சுக்களையும் நடத்தி உள்ளன. ஆனால் நெடியவன் குழுவை மேற்குலக நாடுகள் பேராபத்தானது என கருதுகின்றன.
நெடியவன் பிரிவுக்குள் பல அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.இவற்றுள் உலகத் தமிழர் பேரவை முக்கியமானது. இப்பேரவை ஓரளவு சுயாதீனமாகச் செயற்படுகின்றது. சில விடயங்களில் சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட வண.பிதா எஸ்.ஜே.இமானுவல் இப்பேரவைக்குத் தலைமை தாங்குகின்றார். நெடியவனின் கருத்தியல் ஞானத் தந்தையாகவும் இவரே உள்ளார். நெடியவனின் உண்மையான பெயர் பேரின்பநாயகம் சிவபரன். புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்கு முன்னர் பொறுப்பாக இருந்த மணிவண்ணன் அல்லது கெஸ்ட்ரோவால் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார் .தற்போது 34 வயது. இவர் 18 வயதில் இயக்கத்தில் இணைந்தவர்.
அரசு- புலிகளுக்கு இடையில் தாய்லாந்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனோடு பங்கேற்றவர்.ரு உருத்திரகுமாரனைக் கவிக்க நெடியவன் குழு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகுன்றது. குறிப்பாக உருத்திரகுமாரனுக்கு சவாலாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட முன்னாள் எம்.பி ரி.ஜெயானந்தமூர்த்தியை களத்தில் இறக்கியது. இவ்விடயத்தில் நெடியவனுக்கு ஆலோசகராக இருப்பவர் தமிழ்நெற் இணையத் தள ஆசிரியரான நோர்வே வாழ். ஜெயச்சந்திரன் கோபிநாத். ஆனால் உருத்திரகுமாரனுடன் மல்லுக் கட்டக் கூடியவராக ஜெயானந்த மூர்த்தி இருக்கவில்லை.
இதனால் நெடியவனின் முயற்சி தோற்றுப் போனது.உருத்திரகுமாரன் உடைய குழுவின் கை ஓங்கி விட்டது. இருந்தாலும் உருத்திரகுமார் மீதான அடுத்த தாக்குதலுக்கு நெடியவன் பிரிவு திட்டமிட்டு வருகின்றது. யுத்தத்துக்குப் பின் தமிழ் மக்களின் நிலைமைகளில் மேற்கு நாடுகள் ஓரளவு பரிதாபம் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்று கூறிக் கொள்ளும் புலி அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் இறங்கும் என்று மேற்கு நாடுகள் எதிர்ப்பார்த்தன.
ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக இப்புலி அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நல்வாழ்வுக்கு உதவுகின்றவர்களுக்கு எதிராக கடும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுக்கு இடையி மீண்டும் பேரழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைககளும் இடம்பெற்று வருகின்றன. பல நாடுகளில் புலி ஆதரவாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.ஜெர்மனி இத்தாலி,நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பலர் கைது செய்யப்பட்டனர். இன்னும் பல நாடுகளில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
புலிகளின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் தற்போது மிகவும் குறைந்த மட்டத்திலேயே இடம்பெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிதி சேகரிப்பு 10 முதல் 15 சதவீதத்தால் குறைந்துள்ளது. பெரும்பாலும் ராஜபக்ஸ தலைமையிலான அரசை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தவும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டவும் என்று கூறியே இந்த நிதி சேகரிக்கப்படுகின்றது. வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டு நிதி சேகரிக்கப்படுகின்றது. புலம் பெயர்ந்த சமூகத்துக்கு மத்தியில் சேகரிக்கப்படும் இந்த நிதியை வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உண்மையிலேயே பேரின்னல்களை அனுபவித்து வரும் மக்களின் நன்மைகளுக்குப் பயன்படுத்த முடியும்.புலம்பெயர் சமூகத்துக்கு இத்தார்மீகப் பொறுப்பு உண்டு. ஆனால்
* பிரபாகரனும்,பொட்டு அம்மானும் உயிருடன் இருக்கின்றனர்-
* இறுதி யுத்தத்தின்போது பிரபாகரன் 2000 போராளிகளுடன் தோணி ஒன்றில் கடல் மார்க்கமாக வெளிநாடு ஒன்றுக்கு தப்பி வந்து விட்டார்-
* 10000 போராளிகளுக்கு வெளிநாடு ஒன்றில் பிரபாகரன் பயிற்சி கொடுத்து வருகின்றார்-
* உரிய நேரத்தில் அதிரடித் தாக்குதல் நடத்துவார்- என்றெல்லாம் உசுப்பேற்றி நிதி சேகரிக்கின்றனர்.இவை வெறும் கட்டுக்கதைகளே ஆகும்.
இக்கதைகளில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. .இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து புலிகள் இயக்க உறுப்பினர் சிலர் தப்பித்தான் இருந்தனர். ஆன்மால் அவர்களும் பின்னர் மிகவும் திட்டமிட்ட முறையில் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை. இலங்கை மீது தாக்குதல் தொடுக்கின்றமைக்கு 12ஆயிரம் புலிப் போராளிகளுக்கு பயிற்சியளிக்க எந்தவொரு உலக நாடும் இடம் வழங்க முன் வந்து இராது. இலங்கையின் பாதுகாப்பு மிகவும் கட்டுக்கோப்பான நிலையில் உள்ளது.
இங்கு எந்தவொரு சதி நாச வேலைக்கும் இப்போதைக்கு இடம் கிடையாது என்பதுதான் யதார்த்தம். இந்நிலையில் மீண்டும் புலிகளின் வன்முறைகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்குமா? என்ற கேள்வியை எழுப்பினால் நிச்சயம் இல்லை என்பதே உறுதியான பதிலாக இருக்கும். ஆனால் இலங்கைக்கு எதிரான பாரிய தாக்குதலோ, வன்முறையோ இப்போதைக்கு முடியாத ஒன்றாக இருந்தாலும் கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள புலி ஆதரவு சமூகம் தொடர்ந்தும் இலங்கைக்கு தொல்லை கொடுக்கும் ஒன்றாகவே நிச்சயம் இருக்கும்.”
CNN
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
அட்ரா சக்கை , அட்ரா சக்கை....................
இலங்கை அரசு தூக்கி போட்ட எலும்பு துண்டை தின்ற மற்றுமொரு ஜீவன் விட்ட அறிக்கை ,![வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
இலங்கை அரசு தூக்கி போட்ட எலும்பு துண்டை தின்ற மற்றுமொரு ஜீவன் விட்ட அறிக்கை ,
![வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
Re: வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
ராஜா wrote:அட்ரா சக்கை , அட்ரா சக்கை....................
இலங்கை அரசு தூக்கி போட்ட எலும்பு துண்டை தின்ற மற்றுமொரு ஜீவன் விட்ட அறிக்கை ,
![வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
சிவா wrote:ராஜா wrote:அட்ரா சக்கை , அட்ரா சக்கை....................
இலங்கை அரசு தூக்கி போட்ட எலும்பு துண்டை தின்ற மற்றுமொரு ஜீவன் விட்ட அறிக்கை ,
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிருடன் உள்ளார் இசையமைப்பாளர் சந்திரபோஸ்
» பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை
» பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! - சிவாஜிலிங்கம் எம்பி
» இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு
» பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு
» பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை
» பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! - சிவாஜிலிங்கம் எம்பி
» இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு
» பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|