Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டனம்!
Page 1 of 1
பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டனம்!
`தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் போதாது'
தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு விரைவாக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று மும்பையில் தன்னுடைய 2-வது நாள் நிகழ்ச்சியின் போது மும்பை சேவியர் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடன் ஒபாமாவின் மனைவி மிச்செல்லும் வந்திருந்தார்.
இருவரும் அரங்கில் நுழைந்ததும், கூடி இருந்த மாணவர்களுக்கு நமஸ்தே என்று கூறி வணக்கம் தெரிவித்தனர். பின்னர் ஒபாமாவின் மனைவி மிச்செல் முதலில் மேடையில் ஏறி பேசினார். அப்போது கடினமான சூழ்நிலையில் தன்னுடைய 2 பெண் குழந்தைகளை வளர்த்து வருவது பற்றி சுட்டிக்காட்டிய அவர், மாணவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்காக பெரிய கனவுகளை காண வேண்டும். தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறினார்.
மனைவி நகைச்சுவை
பின்னர் என்னுடைய கணவரிடம் கடினமான கேள்விகளை கேளுங்கள் என்று சிரித்தபடி கூறிய மிச்செல், ஒபாமாவை மேடைக்கு வருமாறு அழைத்தார். அப்போது மாணவர்களின் கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த ஒபாமா, என் மனைவி மிச்செல் புத்திசாலி. எனவே அவருக்கு பின் பேசுவதை நான் விரும்புவதில்லை. மேலும் என்னிடம் கடினமான கேள்விகளை கேட்குமாறு கேலி செய்து இருக்கிறார். நீங்கள் எளிமையான கேள்விகளையே கேளுங்கள். அதுதான் நன்றாக இருக்கும் என்று புன்னகைத்தபடி கூறினார். அப்போது மீண்டும் பலத்த கரவொலி எழுந்தது.
இதைத்தொடர்ந்து மும்பையில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தொடுத்த கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார். தீவிரவாதம் முதல் பொருளாதாரம் வரை மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார்.
மாணவி கேள்வி
ஒரு மாணவி பேசுகையில், பாகிஸ்தானை ஏன் தீவிரவாத நாடாக அமெரிக்கா அறிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இந்த கேள்வியை எதிர்பார்த்ததாக குறிப்பிட்ட ஒபாமா, பின்னர் விரிவாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே முக்கியமான நாடாகும். தீவிரவாதம் ஒரு புற்றுநோய். இந்நோயானது பாகிஸ்தானையே விழுங்கி விடும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவோம். தங்களுடைய நாட்டிற்குள்ளேயே மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை பாகிஸ்தான் அரசு உணர்ந்து கொண்டு விட்டது என்று கருதுகிறேன்.
தற்போது அங்கு தலீபான், அல் கொய்தா, லஸ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகை சக்திகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. மும்பை மற்றும் நிïயார்க்கில் நிகழ்ந்த வன்செயல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.
பாகிஸ்தான் மெத்தனம்
தீவிரவாத பிரச்சினையில் எங்களுடைய உணர்வுகள் நேர்மையானவை. பாகிஸ்தானிடம், நாங்கள் உங்களுடைய நண்பர்கள். தீவிரவாதம் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதனை ஒழிக்க நாங்கள் உதவி செய்வோம் என்று தெரிவித்து இருக்கிறோம். இதனை பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது. எனினும் ஒரே இரவில் மாற்றம் நிகழ்ந்து விடாது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் நாம் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு விரைவாக இல்லை.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றையொன்று சார்ந்தும், வளம் பெறவும் முடியும். ஆனால் இது நாளைக்கே நடக்காது. ஆனால் அதுதான் முடிவான நோக்கமாக இருக்க வேண்டும்.
நான் இப்படி சொல்வது இந்தியர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்தியாவின் நலனுக்காக பாகிஸ்தான் அமைதியாகவும், நிலையாகவும், வளமான நாடாகவும் இருக்க வேண்டும். பாகிஸ்தான் அமைதியில்லாமல் இருந்தால், அது இந்தியாவுக்கு பாதகமானது ஆகும். பாகிஸ்தான் நிலையாகவும், வளமாகவும் இருந்தால், இந்தியாவுக்கும் நல்லது. ஏனெனில் இந்தியா ஏற்கனவே வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்தியாவின் நலனுக்கு, பாகிஸ்தானில் அமைதி நிலவுவது முக்கியம் ஆகும்.
இவ்வாறு ஒபாமா பதிலளித்தார்.
ஜிகாத் பற்றி கருத்து
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயக கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது பற்றி கேட்டதற்கு, அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத போது, அவர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது என்று ஒபாமா பதில் கூறினார்.
ஜிகாத் (புனிதப்போர்) குறித்து உங்கள் கருத்து என்ன? என்று ஒரு மாணவர் கேட்டதற்கு, பெருமை மிக்க இஸ்லாமிய மதம் ஒருசில பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதும், அவர்கள் அப்பாவி மக்கள் மீது வன்முறையை நியாயப்படுத்தி திணிப்பதும் கவலை அளிக்கிறது என்று ஒபாமா தெரிவித்தார்.
விவசாயிகளுடன் பேசினார்
இதைத்தொடர்ந்து கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு கண்காட்சியை ஒபாமா பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கான்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் ஒபாமா கலந்துரையாடினார்.
விவசாயிகள் அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் மூலம் மருத்துவ ஆலோசனை, கல்வி, மின்னணு நிர்வாகம் உள்பட தங்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைத்து இருப்பதாக ஒபாமாவிடம் தெரிவித்தனர். மமதா என்ற கிராமப்பெண், டெலிமெடிசன் மூலம் என்னுடைய மகனின் நோய்க்கு சிகிச்சை கிடைத்தது என்று கூறி தகவல் தொழில்நுட்ப சேவைக்கு நன்றி தெரிவித்தார்.
மாணவர் ஒருவர் கூறுகையில், தகவல் தொழில்நுட்பம் எங்கள் கிராம மக்களின் வாழ்க்கையை வெகுவாக மாற்றி விட்டது. கேட் போன்ற பல்வேறு தேர்வுகளை ஆன்லைன் மூலம் இங்கிருந்தபடியே எழுத முடிகிறது. ஆனால் முன்பெல்லாம் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அஜ்மீர் செல்ல வேண்டி இருந்தது என்றார்.
இந்தியா முன்மாதிரி நாடாக திகழும்
அவர்களிடம் ஒபாமா பேசுகையில், இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர், இந்தியா சில பாய்ச்சலில், 20-ம் நூற்றாண்டை தவிர்த்து விட்டு நேரடியாக 21-ம் நூற்றாண்டிற்கு செல்லும் தகுதியுடன் உள்ளது. அந்த நாளில் உலக நாடுகளுக்கே இந்தியா முன்மாதிரி நாடாக திகழும் என்று குறிப்பிட்டார்.
தினதந்தி!
தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு விரைவாக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று மும்பையில் தன்னுடைய 2-வது நாள் நிகழ்ச்சியின் போது மும்பை சேவியர் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடன் ஒபாமாவின் மனைவி மிச்செல்லும் வந்திருந்தார்.
இருவரும் அரங்கில் நுழைந்ததும், கூடி இருந்த மாணவர்களுக்கு நமஸ்தே என்று கூறி வணக்கம் தெரிவித்தனர். பின்னர் ஒபாமாவின் மனைவி மிச்செல் முதலில் மேடையில் ஏறி பேசினார். அப்போது கடினமான சூழ்நிலையில் தன்னுடைய 2 பெண் குழந்தைகளை வளர்த்து வருவது பற்றி சுட்டிக்காட்டிய அவர், மாணவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்காக பெரிய கனவுகளை காண வேண்டும். தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறினார்.
மனைவி நகைச்சுவை
பின்னர் என்னுடைய கணவரிடம் கடினமான கேள்விகளை கேளுங்கள் என்று சிரித்தபடி கூறிய மிச்செல், ஒபாமாவை மேடைக்கு வருமாறு அழைத்தார். அப்போது மாணவர்களின் கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த ஒபாமா, என் மனைவி மிச்செல் புத்திசாலி. எனவே அவருக்கு பின் பேசுவதை நான் விரும்புவதில்லை. மேலும் என்னிடம் கடினமான கேள்விகளை கேட்குமாறு கேலி செய்து இருக்கிறார். நீங்கள் எளிமையான கேள்விகளையே கேளுங்கள். அதுதான் நன்றாக இருக்கும் என்று புன்னகைத்தபடி கூறினார். அப்போது மீண்டும் பலத்த கரவொலி எழுந்தது.
இதைத்தொடர்ந்து மும்பையில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தொடுத்த கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார். தீவிரவாதம் முதல் பொருளாதாரம் வரை மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார்.
மாணவி கேள்வி
ஒரு மாணவி பேசுகையில், பாகிஸ்தானை ஏன் தீவிரவாத நாடாக அமெரிக்கா அறிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இந்த கேள்வியை எதிர்பார்த்ததாக குறிப்பிட்ட ஒபாமா, பின்னர் விரிவாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே முக்கியமான நாடாகும். தீவிரவாதம் ஒரு புற்றுநோய். இந்நோயானது பாகிஸ்தானையே விழுங்கி விடும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவோம். தங்களுடைய நாட்டிற்குள்ளேயே மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை பாகிஸ்தான் அரசு உணர்ந்து கொண்டு விட்டது என்று கருதுகிறேன்.
தற்போது அங்கு தலீபான், அல் கொய்தா, லஸ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகை சக்திகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. மும்பை மற்றும் நிïயார்க்கில் நிகழ்ந்த வன்செயல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.
பாகிஸ்தான் மெத்தனம்
தீவிரவாத பிரச்சினையில் எங்களுடைய உணர்வுகள் நேர்மையானவை. பாகிஸ்தானிடம், நாங்கள் உங்களுடைய நண்பர்கள். தீவிரவாதம் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதனை ஒழிக்க நாங்கள் உதவி செய்வோம் என்று தெரிவித்து இருக்கிறோம். இதனை பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது. எனினும் ஒரே இரவில் மாற்றம் நிகழ்ந்து விடாது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் நாம் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு விரைவாக இல்லை.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றையொன்று சார்ந்தும், வளம் பெறவும் முடியும். ஆனால் இது நாளைக்கே நடக்காது. ஆனால் அதுதான் முடிவான நோக்கமாக இருக்க வேண்டும்.
நான் இப்படி சொல்வது இந்தியர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்தியாவின் நலனுக்காக பாகிஸ்தான் அமைதியாகவும், நிலையாகவும், வளமான நாடாகவும் இருக்க வேண்டும். பாகிஸ்தான் அமைதியில்லாமல் இருந்தால், அது இந்தியாவுக்கு பாதகமானது ஆகும். பாகிஸ்தான் நிலையாகவும், வளமாகவும் இருந்தால், இந்தியாவுக்கும் நல்லது. ஏனெனில் இந்தியா ஏற்கனவே வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்தியாவின் நலனுக்கு, பாகிஸ்தானில் அமைதி நிலவுவது முக்கியம் ஆகும்.
இவ்வாறு ஒபாமா பதிலளித்தார்.
ஜிகாத் பற்றி கருத்து
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயக கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது பற்றி கேட்டதற்கு, அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத போது, அவர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது என்று ஒபாமா பதில் கூறினார்.
ஜிகாத் (புனிதப்போர்) குறித்து உங்கள் கருத்து என்ன? என்று ஒரு மாணவர் கேட்டதற்கு, பெருமை மிக்க இஸ்லாமிய மதம் ஒருசில பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதும், அவர்கள் அப்பாவி மக்கள் மீது வன்முறையை நியாயப்படுத்தி திணிப்பதும் கவலை அளிக்கிறது என்று ஒபாமா தெரிவித்தார்.
விவசாயிகளுடன் பேசினார்
இதைத்தொடர்ந்து கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு கண்காட்சியை ஒபாமா பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கான்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் ஒபாமா கலந்துரையாடினார்.
விவசாயிகள் அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் மூலம் மருத்துவ ஆலோசனை, கல்வி, மின்னணு நிர்வாகம் உள்பட தங்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைத்து இருப்பதாக ஒபாமாவிடம் தெரிவித்தனர். மமதா என்ற கிராமப்பெண், டெலிமெடிசன் மூலம் என்னுடைய மகனின் நோய்க்கு சிகிச்சை கிடைத்தது என்று கூறி தகவல் தொழில்நுட்ப சேவைக்கு நன்றி தெரிவித்தார்.
மாணவர் ஒருவர் கூறுகையில், தகவல் தொழில்நுட்பம் எங்கள் கிராம மக்களின் வாழ்க்கையை வெகுவாக மாற்றி விட்டது. கேட் போன்ற பல்வேறு தேர்வுகளை ஆன்லைன் மூலம் இங்கிருந்தபடியே எழுத முடிகிறது. ஆனால் முன்பெல்லாம் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அஜ்மீர் செல்ல வேண்டி இருந்தது என்றார்.
இந்தியா முன்மாதிரி நாடாக திகழும்
அவர்களிடம் ஒபாமா பேசுகையில், இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர், இந்தியா சில பாய்ச்சலில், 20-ம் நூற்றாண்டை தவிர்த்து விட்டு நேரடியாக 21-ம் நூற்றாண்டிற்கு செல்லும் தகுதியுடன் உள்ளது. அந்த நாளில் உலக நாடுகளுக்கே இந்தியா முன்மாதிரி நாடாக திகழும் என்று குறிப்பிட்டார்.
தினதந்தி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டனம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உரிமை மீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா பின்னிற்கிறது- ஒபாமா கண்டனம்
» பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் வலியுறுத்தல்
» பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா?
» சோமாலியாவுக்கு முதலிடம்: பாகிஸ்தானுக்கு இரண்டாமிடம்
» பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2,250 கோடி உதவி
» பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் வலியுறுத்தல்
» பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா?
» சோமாலியாவுக்கு முதலிடம்: பாகிஸ்தானுக்கு இரண்டாமிடம்
» பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2,250 கோடி உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|