ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் உரைத்த ஆண்டவன்!

Go down

அறிவியல் உரைத்த ஆண்டவன்! Empty அறிவியல் உரைத்த ஆண்டவன்!

Post by சிவா Sun Nov 07, 2010 2:03 pm

தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது "பந்தணை நல்லூர்'. இப்போது "பந்தநல்லூர்' என்று மருவியுள்ளது. இங்கு "பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் பரமேஸ்வரன் கோயில் கொண்டுள்ளார். இவர் சுயம்புமூர்த்தி. அம்பாளின் திருநாமம், "வேணு புஜாம்பிகை' என்பதாகும்.


ஆலய அமைப்பு

அழகிய கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம்! சிறந்த சுதை வேலைப்பாடுகள் கொண்ட விமானம்! இதன் முன்பகுதியில் ஓர் எழிலான மண்டபம் உள்ளது. இதன் கிழக்கில் பதினாறு கால் மண்டபமும் இருக்கின்றது. சிவபெருமான் சந்நிதியைச் சுற்றி மூன்று திருச்சுற்றுகளும் உள்ளன.

கோயிலைச் சுற்றி அரணாக அகழிகளும், நெடிய மதிற்சுவர்களும் உள்ளன.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் முனீஸ்வரர் சந்நிதி உள்ளது. அடுத்து அகன்ற பிரகாரமும், மண்டபமும், வடக்கு நோக்கி வேணு புஜாம்பிகை சந்நிதியும், அருகே காளியம்மன் சந்நிதியும், எதிரே கொடி மரமும், அதன் கீழ் பிள்ளையார் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்துக்கு முன்பு ஈசனை நோக்கி நந்திகேஸ்வரர் உள்ளார்.

இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் "பசுபதீஸ்வரர்' சந்நிதி உள்ளது. இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் சுப்ரமணியர் மற்றும் உற்சவ கல்யாண சுந்தரர் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டாவது சுற்றில் நால்வர், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சட்ட நாதர், சுப்ரமணியர், சரஸ்வதி, இலக்குமி, அன்னபூரணி, நடராசர், சண்டிகேசுவரர் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.

பைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் இங்கு ஒரே வரிசையில் அமர்ந்துள்ளது அற்புதக் காட்சியாகும்.

கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபம், கர்ப்பகிரகத்தின் அளவைப்போல் மூன்று பங்கு உடையதாய் இருக்கின்றது; அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடைய கருங்கல் தூண்களுடனும் மேற்புறத்தில் வண்ண ஓவியங்களுடனும் அமைந்துள்ளது.

மகாமண்டபம் 70 அடி நீளமும் 36 அடி அகலமும் உடையது. இதில் செப்புத் தகடுகளால் வேயப்பட்ட தல வரலாற்றினை காண்கிறோம். அருகே சிற்பங்களுடன் கூடிய கொடிமரமும் இருக்கின்றது. இத்தலத்தின் கிழக்கே சூரிய புஷ்கரணியும், மேற்கே வாலி பிரகாரம் தீர்த்தமும், வடகிழக்கே தேவதீர்த்தமும் உள்ளன.


நீண்டது பகல் பொழுது!

ஒரு சந்தர்பத்தில் அன்னை பார்வதிக்கு பந்து விளையாட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அதை சிவனிடம் கூறினாள். சிவனோ, நான்கு வேதங்களையே பந்துகளாக்கி, அம்மையிடம் தந்தார். அம்மையோ தன் தோழியர்களுடன் ஒரு நாள் மாலை வேளையில் பந்தாடத் தொடங்கினாள். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்ததும், விளையாட்டிற்கு இடையூறு வந்துவிடுமோ என்றெண்ணிய சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க, பகல்பொழுது நீண்டு கொண்டே போயிற்று.

உலகங்கள் சோர்ந்தன. உலக இயக்கத்திற்கு நேர்ந்த தடையை விலக்கச் சென்ற நாரதரையும், பின்பு நேரில் சென்ற சிவபெருமானையும் அன்னையார் கவனிக்கவில்லை. தன்னைக் கவனியாது இருந்த பார்வதி மேல் சினம் கொண்டார் சிவன். பந்தை அவர் உதைக்க, அது மண்ணுலகிலிருந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வந்து விழுந்தது. தன் தவறை உணர்ந்து பார்வதி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இறைவனோ தேவியை, "பசுவாகக் கடவது' எனச் சபித்தார்.

இறைவனின் ஆணைப்படி உமை பசு உருவம் கொண்டாள். அவளது சகோதரன் கேசவன், மாட்டிடையனாகப் பின் தொடர்ந்தார். இருவரும் பூவுலகம் வந்தனர். பந்து வந்து வீழ்ந்த கொன்றைக் காட்டில் சரக்கொன்றை மர நிழலில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள் பார்வதி.

கேசவனும், பசு உருவில் இருந்த உமையும் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். முனிவரின் பூஜைக்கு பால் குறைந்து போக, சுயம்பு மூர்த்தியின் மீது பசு பாலைச் சொரிவதைக் கண்ட கேசவன், பசுவைக் கோலால் அடித்தார். அப்போது பசு தள்ளியதில் ஒரு காலின் குளம்பு, சுயம்பு லிங்கத்தின் மீது பட்டது. உடனே தேவி, தன் சுய உருவம் அடைந்தாள். கேசவன் மானிட வடிவம் நீங்கி, ஆதிகேசவப் பெருமாள் ஆகி தென்புறம் திருக்கோயில் கொண்டார்.


தொடங்கியது தவம்

அன்னை இறைவனை அடைய வடக்கு நோக்கித் தவமிருந்தாள். இறைவனும் தவத்தினை ஏற்றார். இங்கு இறைவன் இறைவியை மணந்து அழகுமிகு கல்யாண சுந்தரராக காட்சி அளிக்கிறார். பந்தணைந்த சுவடும், பசு மிதித்ததால் உண்டான குளம்புச் சுவடும் சுயம்பு லிங்க மூர்த்தியான பசுபதீஸ்வரரின் மேல் இருப்பதை இன்றும் இங்கு காணலாம்.


இயற்கையைப் போற்றுவோம்!

சூரியனையே தன் இரு கண்களில் ஒன்றாக உடையவள் தேவி. அவளுடைய அருள் விளையாட்டுக்கு சூரிய அஸ்தமனமோ, உதயமோ ஒரு தடையில்லை. பின் ஏன் இப்படி ஓர் வரலாறு? "இயற்கைக்கு மாறாக எதைச் செய்தாலும், அது மனித குலத்தைப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்' என்ற அறிவியல் உண்மையை, பந்தநல்லூர் தல புராணம் வாயிலாக அன்றே அறிவித்துவிட்டான் ஆண்டவன். நாம்தான் இன்று வரை அந்த அறிவுரையைப் பின்பற்றாது அல்லல்படுகின்றோம். நாம் இயற்கையைப் போற்றும் ஞானம் பெற, பந்தநல்லூர் பரமசிவமே வழி காட்டட்டும்.

இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும், நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்திற்கு செல்ல கும்பகோணம், குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரருக்கும், அன்னைக்கும் அர்ச்சனையும்}சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபட்டால் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பனந்தாள் மணல்மேடு பேருந்து வழித் தடத்தில், திருப்பனந்தாளிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பந்த நல்லூர் என்ற இத்தலம்.

- ஜெயவண்ணன்


அறிவியல் உரைத்த ஆண்டவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» வரு முன் உரைத்த இஸ்லாம் (திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!)
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum