ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய் காசும்! துன்பியலும்!!

4 posters

Go down

 துபாய் காசும்! துன்பியலும்!! Empty துபாய் காசும்! துன்பியலும்!!

Post by ரபீக் Wed Nov 03, 2010 11:48 am

என்னப்போ! சொவமா இருக்கியா! எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா! பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா!" என்றார் ஊர்ப் பெரியவர் சுடலை.


"எல்லாம் சவுரியம்தான் அய்யா! நீங்க எப்படி இருக்கீக... விவசாயமெல்லாம் எப்படி போகுது?" என்றேன்.



"அதுக்கென்னப்பா குறைச்சல், மழை பொய்க்காம இருக்கிற வரைக்கும் நம்ம வண்டி ஓடும்... சரி சரி, எத்தனை நாளு லீவுல வந்திருக்கே ?"


"ரெண்டு மாசம் அய்யா! பாக்கலாம் என்ன நடக்குன்னு! அப்புறமா வீட்டுப் பக்கம் வாரேன்"


அவர்ட்ட சொல்லிட்டு கூட வந்த அண்ணன்கிட்ட "என்னண்ணே! வீட்டு வேலை எப்படி நடக்குது...பிரச்சினை ஒன்னும் இல்லையே!"என்றேன்.


"அதில என்னப்பா பிரச்சினை! ஒன்னும் இல்லை, இன்னொரு தடவ நீ வெளிநாட்டுக்கு போயிட்டு வந்திட்டா முடிச்சிரலாம்... அதோட பக்கத்தில கெடக்கிற இடத்திலும் ஒரு சின்ன குச்சில் மாதிரி கெட்டிரலாம்"


"தெரியலைண்ணே! எனக்கு திரும்பி போவ மனசே இல்லை . இந்த தடவை இப்படியே கையில இருக்க காசை வெச்சிக்கிட்டு ஏதாவது கடை கண்ணி வெச்சு இப்படியே குடும்பத்தோட இருந்திரலாம்னு பாக்கேன்"


"என்னலே இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே! இந்தா தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாச்சு, ஒரு மூணு வருஷம் பல்லை கடிச்சிக்கிட்டு இருந்துகிட்டேன்னு வையேன், அப்புறம் ஒரு கவலையும் இல்லை... கொஞ்சம் யோசிப்போ!"


"சரி பாக்கலாம்'என்றேன்.


வீட்டுக்குள்ளே நுழைஞ்ச உடனே ஓடி வந்து சித்தப்பான்னு காலை கட்டிக கொண்டார்கள் அண்ணனின் குழந்தைகள். அம்மாவும், அண்ணியும் "நல்ல இருக்கியாப்பா" என ஒரு சேர கேட்டார்கள்.காதலும் மகிழ்ச்சியும் பொங்கி வழிகின்ற பார்வை ஒன்றை பரிசாகத் தந்து என் கைகளை பிடித்தாள் என் இல்லாள். அவளின் புடவை தலைப்புக்கு பின்னே என் மகன் ஒளிந்து கொண்டு என்னை எட்டி பார்த்தான்...


"என்னடா அப்படி பார்க்கிறே! அப்பாடா..." என்றாள். அப்பாகிட்ட வாடா என்ற என்னை சின்ன சிரிப்பும், கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து விழித்தது குழந்தை. என்னா காசு பணம் சம்பாதிச்சு என்னடா புண்ணியம்! பெத்த புள்ளைக்கு நம்மளை அடையாளம் காட்ட வேண்டியதை நினைத்து மனசு வலித்தது. போன விடுமுறைக்கு வந்த போது உதித்தவன இவன்!!! திரும்ப ஒரு தடவ கூப்பிட்ட உடனே வந்தவனிடம் ஒரு சாக்கலேட் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். பெட்டியினுள்ளே இருந்து சாக்கலேட் டப்பா ஒன்றை எடுத்து "பிள்ளைங்களா! எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க" என்றேன். "ஹே" என்ற ஆரவாரத்துடன் கை நிறைய அள்ளிக் கொண்டார்கள் குழந்தைகள்.


தையல் வகுப்பு முடிந்து உள்ளே வந்த தங்கை "ஐ! அண்ணா ! எப்ப வந்தே.... எப்படி இருக்கே" என்றாள்... நான் நல்லா இருக்கேம்மா... சரி சரி எல்லாரும் வந்து உங்களுக்கு என்னலாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க... எடுத்துக்குங்க!


ஒரு வழியாய் இந்த அமலிகளெல்லாம் ஓய்ந்து களைப்பு தீர குளித்து விட்டு நல்ல மணக்க மணக்க சாம்பார், அவியல், பொரியல், கீரை கூட்டு வைத்து சாப்பாடு ஒரு பிடி பிடித்தேன்." என்னங்க! நீங்க கறி ஆக்கலாம்னு பாத்தா வேணாம்னு சொல்லீட்டியளே" சலித்துக் கொண்டாள் என் மனைவி... "லூசு! அங்கே எப்போ பாத்தாலும் கறியா தின்னு தின்னு வெறுத்து போச்சு.. அதான் இப்படி சைவ சாப்பாடு கேட்டேன்"


சாயந்திரமா வெளியே கெளம்பும் போது "எப்போப்பா திருப்பி போகனும்... நீ இருக்கம் போதே தங்கச்சிக்கு நல்ல எடமா பாத்து உறுதி பண்ணிடனும்! அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சி கல்யாணம் வெச்சா நீயும் போயி காசு அனுப்பலாம்ல" என்றாள் அம்மா.


"ஆமா! அதோட சேத்து அந்த பக்கத்துல குச்சிலையும் கெட்டிரலாம்" என்றாள் அண்ணி.


"சித்தப்பா! அடுத்த தடவ வரும் போது இன்னும் நெறைய சாக்கலேட் வாங்கிட்டு வாங்க" என்றார்கள் அண்ணனின் பிள்ளைகள்.


"அண்ணே! எனக்கு கூட இன்னும் ஒரு நாலைஞ்சு நல்ல சேலை எடுத்து அனுப்புன்னே! கல்யாணத்துக்கு அப்புறம் வெளியே போகையில கெட்டுரதுக்கு" என்றாள் தங்கை.


என்னடா இது! எல்லாரும் நம்ம திரும்ப போறதை பத்தி தான் பேசுறாங்க... நம்மளை யாருமே இருக்க சொல்லலியேன்னு மனசு மறுதலித்தது. குடும்ப சூழ்நிலையால் தான் வெளிநாட்டுக்கே போனேன். இன்னும் ஒரு தடவ போயிட்டு வந்தா குடும்பம் நல்லா நிமிர்ந்திடும்.... அதான் சொல்றாங்கன்னு தெரியுது..ஆனா இந்த பாழா போன மனசு போக மறுக்குதே....


ராத்திரி என் நெஞ்சில் படுத்துக் கொண்டு " என்னங்க! உங்க புள்ளைய பாத்தீங்களா!அப்படியே உங்க ஜாடை! உங்க நெனப்பு அதிகமா வரும் போதெல்லாம் இவன்தான் எனக்கு ஆறுதல்ங்க! " என்றவளை இறுக்கி அணைத்தேன்.


ச்சே! இங்கே ஒருத்தி இப்படி தவிக்கிறா நமக்காகனு ரொம்ப பெருமையா இருந்தது....


"முதல் தடவ நீங்க ஊருக்கு போகும் போது எனக்கு அப்படியே உயிரை யாரோ உருவி எடுத்த மாதிரி இருந்ததுங்க! ஏன்டா இப்படி ஒரு பொழப்பு,... பேசாம செத்துப் போயிடலாம்னு கூட யோசிச்சேன்... எதுவுமே பிடிக்கலை.... இப்போ நெனச்சா கூட வலிக்குதுங்க" என்றாள்.


"ஆனா இப்போ பழகி போச்சுங்க! ஆமா நான் கேக்கவே மறந்துட்டேன், எப்போ நீங்க போகணும்?"





--

நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்



நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 துபாய் காசும்! துன்பியலும்!! Empty Re: துபாய் காசும்! துன்பியலும்!!

Post by கோவை ராம் Wed Nov 03, 2010 12:02 pm

மொத்தத்திற்கும் முத்தாய்பு அந்த பாலகுமாரன் வரிகள்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

 துபாய் காசும்! துன்பியலும்!! Empty Re: துபாய் காசும்! துன்பியலும்!!

Post by ராஜா Wed Nov 03, 2010 2:39 pm

 துபாய் காசும்! துன்பியலும்!! 677196  துபாய் காசும்! துன்பியலும்!! 677196 அருமை ரபீக் .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 துபாய் காசும்! துன்பியலும்!! Empty Re: துபாய் காசும்! துன்பியலும்!!

Post by சிவா Wed Nov 03, 2010 3:51 pm

///நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்///


முற்றிலும் உண்மை!  துபாய் காசும்! துன்பியலும்!! 154550


 துபாய் காசும்! துன்பியலும்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 துபாய் காசும்! துன்பியலும்!! Empty Re: துபாய் காசும்! துன்பியலும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum