ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்.........

4 posters

Go down

முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... Empty முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்.........

Post by vasanthpsp Tue Nov 02, 2010 2:14 pm

இன்றைய கால கட்டங்களில் முகநூல் என்பது எல்லாதரப்பு மக்களையும் எல்லா வயது ஆண் பெண் இரு பாலாரையும் கட்டி தன்னுள்ளே வைத்திருக்கும் ஒரு மகத்தான தளமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை...இனைய தளம் என்றாலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு

கெட்டதை விட்டு நல்லதை மட்டும் பிரித்தெடுப்பதில் தான் அவனுடைய வெற்றியின் சூட்சசமம் அடங்கியிருக்கிறது, இந்த வகையில் நமது தமிழ் சகோதரர்கள் தற்போது முகநூலை வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் உபயோகிக்காமல் ஒரு சிறந்த அறிவுசார்ந்த தளமாகவும், ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொள்ள ஒரு பாலமாகவும் உருவாக்கி வருவது கண்டு தமிழர்களாகிய நாம் பெருமைபட்டே ஆக வேண்டும்.

குறிப்பாக கடந்த வாரம் தமிழ் முகநூல் வட்டம் சற்று பரபரப்புடன் காணப்பட்டது இது குறித்து நாம் ஆழ்ந்து நோக்குகையில் பல தகவல்கள் கிடைக்க பெற்றன.

குறிப்பாக வசந்தகுமார் கிராபிக்ஸ் டிசைனர் என்ற பெயருடைய முகப்பக்கம் நோக்குகையில் அனைத்து பரபரப்புக்கான மையம் அதுவே என காண முடிந்தது அவருடைய கடந்தகால முகநூல் நடவடிக்கையை சற்று உற்று நோக்குகையில் அவருடைய நண்பர்கள் வட்டம் சற்று பெரிதென தெரிந்தது அத்தோடு மட்டுமில்லாது அனைத்து நண்பர்களிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடியவர் என்பதனையும் அறிந்து வியந்தோம், வியப்பிற்கு காரணம் அவரது முகபக்கத்தில் உள்ள புகைப்பட தொகுப்பே!

தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாடும் தன பட்டியலில் உள்ள நண்பர்களுக்கு அவர்களுடைய புகைப்படத்தோடு கூடிய அழகிய வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய வாழ்த்து அட்டையை தயாரித்து அவர்களுடைய பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துவதோடு நில்லாமல் மற்ற அனைத்து நண்பர்களின் முகப்பக்கங்களிலும் சென்று அந்த படத்தை வெளியிட்டு அவர்களின் வாழ்த்துக்களையும் பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு சேர்க்கும் அறிய பணியை கடந்த ஆறு மாத காலமாக விடாமல் செய்து வருகிறார் இதன் மூலம் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை..மற்றவர்களை மகிழச்செய்யும் இவ்வரிய பணியை அவர் செய்து வருவதால் அவருடைய மதிப்பு முகநூல் தமிழ் வட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது எனலாம், பிறந்த நாள் மட்டும் அல்லாது திருமண நாள் மற்றும் முக்கிய விசேஷங்களுக்கும் இவர் வாழ்த்து சொல்ல தவறுவது இல்லை; இதனால் இவருக்கு கிடைப்பது ஆத்மதிருப்த்தியை தவிர வேறொன்றும் இல்லை. இதன் அடுத்த கட்டமாக இவர் எடுத்த முயற்ச்சிதான் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

சென்னை கிரியேட்டர்ஸ் என்கின்ற நிறுவனத்தின் துணையுடன் உலக இணையதள வரலாற்றிலேயே இதுவரை யாருமே செய்து பார்த்திராத முயற்சியாக இதுவரை நாம் வானொலி, தொலைக்காட்சசி மற்றும் மேடைகளில் கண்டு ரசித்த பட்டிமன்றம் நிகழ்ச்சியினை உலக இணைய தல வரலாற்றில் முதன் முறையாக இணையத்தின் மூலம் ""குடும்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணாம் ஆண்களா?? பெண்களா?? என்ற ஒரு கருத்து மன்றத்தை உருவாக்கி அதன் மூலம் பல போட்டியாளர்களை கலந்திட செய்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு பெரும் கருத்து போரையே நடத்தி காட்டியுள்ளார்.

இதன் மூலமாக முகநூல் வரலாற்றிலேயே முதன்முறையாக..ஒரு தனிப்பட்ட முகநூல் கணக்கு வைத்திருப்போரின் முகபக்கத்தில் ஒரே ஒரு பதிவிற்கு மூன்றே நாட்களில் இரண்டாயிரத்து முன்னூறு கருத்துக்களை பதிவு செய்ய வைத்ததன் மூலம் ஒரு புதிய சாதனையையும் நிகழ்த்தி காட்டியுள்ளார். இந்த கருத்து போட்டியில் உலகின் பல முனைகளிலும் இருந்து 52 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சவுதியில் ஆன்லைனில் இருந்தபடியே நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பும், உதவியும் செய்தவர் திரு. சாதிக் அலி என்பது குறிப்பிடத்தக்கது. நடுவர்களாக ஷன்முகமூர்த்தி, சரவணன் மற்றும் திருமதி வசந்தகுமார் ஆகியோர் குழுவாக செயல்பட்டு இறுதியில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர். போட்டி நடந்த மூன்று நாட்களுமே இந்த களம் படு சுவாரஸ்யமாக இருந்திருக்கிறது. ஒருவர் கருத்துக்கு ஒருவர் எதிர் கருத்து சொல்வதில் அனல் தெறிக்க கருத்து பரிமாற்றங்கள் நடந்தேறியுள்ளது.

குறிப்பாக முதல் பரிசு வென்ற முனுஸ்வாமி முத்துராமன் அவர்களும் வெங்கட் அவர்களும் ஆண்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தை கலக்க பெண்களுக்காக வாதாடிய கௌதம், புவனேஷ் மற்றும் குறிப்பாக மதுரையை சேர்ந்த செல்வி ஆகியோர் களத்தை சுவாரசயமாக்கினர், இந்த போட்டியின் முடிவை அறிவித்த நடுவர்கள் குழு இந்த போட்டியின் முடிவு இங்கு எடுத்து வைக்கப்பட்ட வாத பிரதிவாதங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாக கூறி ஆண்கள் பக்கத்திற்கு வெற்றிக்கனியை தந்தனர்.

போட்டியில் முதல் பரிசை வென்ற முனுஸ்வாமி முத்துராமன் அவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய்.2000 மதிப்புள்ள பரிசுப்பொருளும் இரண்டாவது பரிசினை வென்ற கௌதம் மற்றும் புவனேஷ்குமார் அவர்களுக்கு தலா ரூபாய். 1250 மதிப்புள்ள பரிசுப்பொருளும் மூன்றாவது பரிசு வென்ற செல்வி மற்றும் வெங்கட் அவர்களுக்கு ரூபாய் 750 மதிப்புள்ள பரிசுப்பொருள்களும் மட்டும் 12 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது மட்டும் இன்றி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்குமே சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன் பரிசளிப்பு விழாவையும் சென்னை கிரியேட்டர்ஸ் நிறுவனத்தினர் சற்று வித்தியாசமாகவே வடிவமைத்து அதில் மாபெரும் வெற்றியினையும் பெற்றுள்ளனர்.

பரிசளிப்பு விழா, மூத்த நண்பர் திரு.ஷண்முகமூர்த்தி அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் முக நூல் நண்பர்கள் கூடுகை இவை மூன்றையும் சேர்த்து சென்னையில் 31 .10 .2010 ஞாயிற்றுக்கிழமை முப்பெரும் விழாவாக ஒழுங்கு செய்து தமிழ்நாட்டின் பலமுனைகளில் இருந்தும் நண்பர்களை வர செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் முதற்கட்டமாக திரு ஷண்முக மூர்த்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி புரடச்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளியின் குழந்தைகளுக்கு முகநூல் நண்பர்கள் முன்னிலையில் திரு ஷண்முகமூர்த்தி அவர்கள் தன் சொந்த செலவில் மதிய உணவு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து எங்கள் தமிழ்முகநூல் தோழி. சரண்யா அவர்கள் அடுத்த நாள் மதிய உணவிற்காக நிதியுதவி செய்தது. அனைவரையும் இன்ப அதிர்ச்சியடையச் செய்தது.

பின்பு மொத்த நண்பர்கள் குழுவும் வாகனத்தில் புறப்பட்டு போரூரில் அமைந்துள்ள திரு ஷன்முகமூர்த்தி அவர்களின் இல்லத்திற்கு சென்றனர் முதலில் அனைவருக்கும் சிறப்பான மதி உணவு பரிமாறப்பட்டது எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கணினி மூலம் அன்பை பரிமாறிக்கொண்ட சொந்தங்கள் ஒன்றாக உட்க்கார்ந்து உணவு அருந்திய காட்ச்சியை காண கண் கோடி வேண்டும் எனலாம். பின்பு பரிசளிப்பு விழா கேப்டன் டிவியில் தினமும் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கும் திரு திலக் ராம்மோகன் அவர்களின் தலைமையில் இனிதே நடந்து அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கும், பெண்களும் சிறு விளையாட்டுப்போட்டி நடத்தி அதற்கும் பரிசுகள் வழங்கப்பட்டு இறுதியில் விழா இனிதே நிறைவேறியது. குறிப்பாக விழா நடந்து கொண்டிருக்கையில் விழாவில் கலந்து கொள்ள முடியாத கடல் கடந்து உள்ள நண்பர்கள் பலரும் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரிடமும் அன்பை பகிர்ந்து கொண்டது கண்களை கலங்க வைத்தாது. இத்தனை பெரிய காரியத்தை முதன் முதலாக செய்திருக்கும் சென்னை கிரியேட்டர்ஸ் நிறுவனத்தையும் திரு வசந்தகுமார் அவர்களையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.
vasanthpsp
vasanthpsp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... Empty Re: முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்.........

Post by சிவா Tue Nov 02, 2010 2:24 pm

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி வசந்த்!


முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... Empty Re: முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்.........

Post by ராஜா Tue Nov 02, 2010 3:55 pm

பகிர்வுக்கு நன்றி வசந்த் , முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... 678642 முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... Empty Re: முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்.........

Post by Thanjaavooraan Tue Nov 02, 2010 4:15 pm

மிகவும் நல்ல முயற்சி...அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்......... Empty Re: முகநூலை பிரயோஜனமான தளமாக மாற்றி வரும் தமிழர்கள்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா?
» சுற்றுலாத் தளமாக மாறியுள்ள பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீடு
» தமிழ்நாடு-கேரளாவைத் தளமாக பயன்படுத்த ‘லத்கர்-இ-தொய்பா’ முயற்சி
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum