ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகை எதற்கு ?

4 posters

Go down

அழுகை எதற்கு ? Empty அழுகை எதற்கு ?

Post by சிவா Tue Nov 02, 2010 8:31 am

அழுகை எதற்கு ?



* அழுகை...

* அது...
சொந்தக் காலில்லாத
சோம்பேறி மனிதர்கள்
கண்களால் ஆடும்
கோலி விளையாட்டு!

* அழகான முகத்தை
அலங்கோலப்படுத்த
அவர்களாகவே
அவர்கள் மேல் எறியும்
ஆசிட் வீச்சு!

* சோகம் காட்டி
சுகம் பெறலாமென்ற
சூட்சுமக்காரர் எண்ணங்களின்
சுய விளம்பரம்!

* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்
ஒப்பாரி வைக்கும்
உதவாக்கரை மனிதனே...
உன் நிலைக்காக
ஒருமுறையாவது
ஓலமிடுவாயா?

* ஏனென்றால்...
நீயே கூட ஒரு
நடை பிணம் தானே!

* பிணத்தின் மீது
விழுகிற துளிகளே...
ஒருவன் வாழ்ந்ததற்காக
கிடைக்கிற விருதுகள்!

* ஆகையால் தான்
மனிதனே...
அடுத்தவர் கண்கள்
அழுகிற நீரை
வாழ்கிற வரையில்
வழித்துத் துடைத்தெறி!

* கண்களிலிருந்து
கழன்று விழுகின்றனவே
அவைகள்
கண்ணீர்த் துளிகளா?
இல்லை —

* முறிந்து விழும்
முயற்சிகள்...

* கருகிச்சாயும்
கனவுகள்...

* வியர்வைத் துளிகளின்
விரோதிகள்!

* உழைத்து உழைத்து
வாழ்வில் உயர
இரு கை இருப்பதை
உணர்ந்துவிட்டால்
அழுகை ஏன்
அவசியப்படுகிறது நண்பனே?

— எல்.பிரைட், தேவகோட்டை.


அழுகை எதற்கு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழுகை எதற்கு ? Empty Re: அழுகை எதற்கு ?

Post by kirikasan Tue Nov 02, 2010 10:41 am

அருமையான பகிர்வு. கடைப்பிடிக்கிறேன்.
இங்கே கவிஞர் சொல்லும் அழுகை வேறு. தோல்வியில் துவண்டு கோழையாக அழுவது.

அதைவிட வாழ்வின் சோகங்களை எண்ணும்போது சிலவேளைகளில் சொட்டுக் கண்ணீர் விட்டால் நெஞ்சு ஆறுகிறது. நானும் கட்டுப்படுத்திதான் வைத்திருக்கிறேன். ஆனால் மனம் கட்டுப்பாட்டை உடைத்துகொள்ள ஆசைப்படுகிறது. (தொலைக்காட்சி பார்க்காதே என்று கட்டுப்பாடு போட்ட குழந்தையின் ஆசை மனம்போல) அழுதால் என்ன என்று திருப்பிக் கேட்கிறது. கெஞ்சுகிறது
அதனால் எழுதத் தோன்றியது

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அழுகை எதற்கு ? Empty Re: அழுகை எதற்கு ?

Post by புவனா Wed Nov 03, 2010 3:54 am

அருமையான பகிர்வு.... ஆனால் மனிதன் மனம் விட்டு அழுகா விடில் என்றோ மனநிலை பாதித்திருப்பன்...

மனதில் சில சொல்ல இயலா துன்பங்களுக்கு இருக்கும் ஒரே அறுதல் அழுகை மட்டுமே...
மனதின் பரங்கள் அனைத்தும் ஒரு நொடி அழுகையில் இறங்கி விடுக்கிறது...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அழுகை எதற்கு ? Empty Re: அழுகை எதற்கு ?

Post by Thanjaavooraan Sun Nov 21, 2010 4:21 pm

* முறிந்து விழும்
முயற்சிகள்...


அழகிய வரிகள் அழுகை எதற்கு ? 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

அழுகை எதற்கு ? Empty Re: அழுகை எதற்கு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum