Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர் மருத்துவம்
3 posters
Page 1 of 1
தமிழர் மருத்துவம்
நோய், நோய்க்கான காரணங்கள், நோய் அறியும் முறைகள், நோய் அறிபவர் (மருத்துவர்), மருத்துவ முறைகள், மருந்து, சராசரி இறப்பு வயது, மருத்துவ முறை வெளிப்படுத்தப்படாத நிலை போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. மனித உடல் அமைப்புக் குறித்த செய்திகளும் இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை, கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த் தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில் விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித் தமிழர் மருத்துவம் குறித்து அறிய முற்படுகின்றது.
நோய்
புண் (புறம் 281), புண் வழலை, மிடற்றுப் பசும்புண் (புறம். ப. 86) போன்ற புண் தொடர்பான நோய்கள் குறிப்பிடப்படுகின்றன. கருவுற்ற காலத்தில் பெண்ணிற்கு ஏற்படும் நோயாக 'வயா நோய்' குறிப்பிடப்படுகிறது. இந்நோயுற்ற மகளிர் மண் உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பதாக நோயின் அறிகுறி புலப்படுத்தப்படுகிறது (புறம், ப. 89). பெரும்பசி (திரிகடுகம், பாடல் 60), வயிற்றுத் தீ (புறம், 74), யானைத் தீ (மணிமேக€லை) என்ற நோய்கள் 'தீராத பசி' தொடர்பான நோய்களாகக் காணப்படுகின்றன. இவை தவிர மருந்தால் தீராத பெரும்பிணி பற்றிய செய்தியும் இலக்கியத்தில் இடம்பெறுகிறது (திரிகடுகம், பாடல் 18). மேலும் சில நோய் அறிகுறிகள் இலக்கியத்தில் சுட்டப்படுகின்றன (நாலடியார் பாடல் 29, திருமந்திரம் பாடல் 148, கம்பராமாயணம் பாடல் 592) இவற்றைக் கொண்டு இந்நோய் இன்று குறிப்பிடப்படும் 'மாரடைப்பு' என்ற நோயாக இருக்கலாம் என்று யூகிக்க இயலுமா என்பது சிந்தித்தற்குரியது. குழந்தையின்மை, தொழு நோய், பால்வினை நோய் ஆகிய நோய்கள் மிகப் பழங்காலந்தொண்டு இருந்துள்ளன என்பதையும் அறிய முடிகின்றது (புறம், பாடல் 9, ப, 26; நளாயினி கதை : திருப்புகழ், பாடல் 682).
தலைவலி, சுரம், கண் ஒளி குன்றுதல் போன்ற நோய்களைத் திருப்புகழும் (பக். 10-11), குளிர் சுரம், சூலை நோய், வெப்பு நோய், முயலகன் போன்ற நோய்களைப் பெரிய புராணமும் (ப.273, 157, 316, 270) சுட்டுகின்றன. இவற்றுள் வெப்பு நோயின் அறிகுறிகளாக உடல் நடுங்குதல், உடல் வெம்மையடைதல், கனல் போன்று வருத்துதல், வெம்மை வயிற்றினுள் புகுதல், குடலினுள் புகுதல், அருகில் உள்ளோரும் வாடித் தீய்ந்து போகும்படி உடல் உலர்ந்து சுருங்குதல், வாழையின் இளங் குருத்திலும் தளிர்களிலும் நோயுற்றாரைக் கிடத்துதல், அவ்வாறு கிடத்துமிடத்து அவை வெப்பத்தால் காய்ந்து பொடியாதல், பேச்சின்றி நினைவிழந்து மயங்கி வீழ்தல் போன்றன குறிப்பிடப்படுகின்றன.
மருத்துவ நூல் வல்லுநர்கள் தமது பல கலைகளிலும் வகுத்து ஓதப்பட்ட மருத்துவத் தொழில்கள் எல்லாவற்றையும் செய்தும் நோய் குணமடையவில்லை என்ற முறையில் கொடுமை வாய்ந்த நோயாக இந்நோய் காட்டப்படுகிறது. இந்நோயினை இன்று குறிப்பிடும் அம்மை, அல்சர், அக்கி போன்ற நோய்களுடன் தொடர்புபடுத்திக் காண இடம் உள்ளது.
'முயலகன்' என்பது இன்று எந்தப் பெயரால் உணர்த்தப்படுகிறது என்று அறிய இயலாவிடினும் அந்நோய் பெருங் கொடிய நோய்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுதல் கொண்டு இந்நோயின் கொடுமையை உணரலாம். இந்நோய் கொண்டவர் உணர்வற்றுக் கிடப்பர் என்றும், வலிப்புடன் கிடப்பர் என்றும் நலிவுற்றுக் கிடப்பர் என்றும் சுட்டப்படுகின்றது. இத்தகைய நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்நோயினைக் 'காக்காய் வலிப்பு' என்று சொல்லப்படும் வலிப்பு நோயுடன் தொடர்புபடுத்திக் காண இயலுமா என்பது ஆராய்தற்குரியது.
நோய்க்கான காரணங்கள்
பெண்ணுடன் உறவு கொள்வதால், குறிப்பாக விலை மகளிருடன் உறவு கொள்வதால் உடம்பு முழுவதும் அழுகி தொழுநோய் ஏற்படுகிறது (திருப்புகழ், பாடல் 682, நளாயினி கதை) என்றும், நண்டின் கால்களைச் சாப்பிடுவதால் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது (நாலடியார் பாடல் 123) என்றும், சுடுகாட்டுள்ளும் மரத்தடியிலும் துயிலுவதால் இந்நோய் ஏற்படும் (ஆசாரக் கோவை, பாடல் 57) என்றும் நோய்க்கான காரணங்கள் பேசப்படுகின்றன. இவை எந்த அளவு இன்றைய மருத்துவ முறைகளோடு அறிவியல் பூர்வமாகத் தொடர்புபட்டுள்ளன என ஆய்ந்து காண்பது அவசியமாகும்.
நோய் அறியும் முறைகள்
நோயுற்றவனிடத்து உள்ள நோயினை அந்நோயின் அறிகுறிகள் இன்னதென்று மருத்துவர் துணிந்து, பின்னர் அந்நோய் வருவதற்கான காரணத்தை ஆராய்ந்து தெளிந்து அதன் பின்னர் அதை தீர்க்கும் உபாயம் அறிந்து அதில் பிழையாமல் செய்தல் வேண்டும் என்றும் அவ்வாறு நோயுற்றவனின் தன்மையையும் அவனிடத்து உள்ளதாகிய நோயின் அளவினையும் மருத்துவநூலில் குறிப்பிட்டுள்ளவாறு அறிந்து செய்தல் வேண்டும் என்றும் நோய் அறியும் முறைகள் குறித்துத் திருக்குறள் சுட்டுகின்றது (திருக்குறள் 948, 949, 950).
நோய் அறிபவர் - (மருத்துவர்) :
மேற்குறிப்பிட்ட செய்தியின் வாயிலாக நோய் அறியும் அறிவு படைத்த மருத்துவர்களும், அவர்கள் மருத்துவ அறிவு பெறுதற்கான மருத்துவ நூல்களும் இருந்துள்ளன எனவும், ஆண்-பெண் இருபாலாரிலும் மருத்துவம் கற்றறிந்த மருத்துவர்கள் இருந்தனர் (தொல், பொருள், நூற்பா. 503) எனவும் அறியலாம். மேலும் சித்த மருத்துவம் கற்ற சித்தர்களும், ஆயுர்வேதம் பயின்ற மருத்துவர்களும், அவர்களது மருத்துவ முறைகளும் விளக்கப்படுகின்றன (சித்தர் பாடல்கள், தன்வந்திரி குழந்தை வாகடம் - க. லலிதாம்பிகா).
மருத்துவ முறைகள்
மருந்து செய்தல், உதிரம் களைதல், அறுத்தல், சுடுதல் போன்ற அறுவை மருத்துவம் தொடர்பான மருத்துவ முறைகளும் (திருக்குறள், அதிகாரம் 95) உடலின் சக்தியைப் புருவ மத்திக்குக் கொணர்தல், வல-இட மூச்சுக்காற்று தொடர்பாகச் சில அறிவியல் உண்மைகளை விளக்குதல் என்பன போன்ற 'யோகா' தொடர்பான மருத்துவ முறைகளும் (திருமந்திரம் பாடல் 440, 462), மந்திரம், தியானம் போன்ற முறைகளால் நோய் நீக்க வல்ல மருத்துவ முறைகளும் (பெரிய புராணம், ப. 360). நாடி பார்த்து நோய் அறியும் மருத்துவ முறையும் (திருமந்திரம், பாடல் 151) தமிழ் இலக்கியங்களில் இடம்பெறுகின்றன.
மருந்து :
வீட்டின் முன்புறம் வேம்பினைச் செருகியும், வெண்சிறு கடுகினைத் தூவியும், நறுமணப் புகைகளை உண்டாக்கியும் வில், வேல், வாள் போன்ற ஆயுதங்களால் ஏற்பட்ட புண்ணைப் பாதுகாத்தனர் (புறம், 231) என்றும், பிள்ளைப் பேற்றின் பின் 'நெய்யணி மயக்கம்' என்று குறிப்பிடக்கூடிய எண்ணெய் நீராடும் செயலைப் பெண்கள் மேற்கொண்டனர் (தொல். பொருள், பேரா. நூற். 46) என்றும், உயிர் பிரிந்தபின் அந்த உடம்பு சில காலத்திற்குக் கெட்டுவிடாமல் பாதுகாத்து வைப்பதற்காக ஒருவகை எண்ணெயில் அதனை இட்டு வைத்தனர் (கம்பராமாயணம் - தைலமாட்டு படலம், பாடல் 608) என்றும், தலைமுடி நன்கு வளர்வதன் பொருட்டுக் 'கடுக்கலந்த கைபிழி' எண்ணெயைப் பயன்படுத்தினர் (தொல். சொல். சேனா. ப.19) என்றும் சில மருந்துகளின் பயன்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன.
சராசரி இறப்பு வயது :
மனிதனின் சராசரி இறப்பு வயது 70 ஆக இருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன (திருமந்திரம் : பாடல் : 163). அதிக அளவு வாழ்நாள் பெறுவதற்கு நெல்லிக்கனி மருந்தாகப் பயன்பட்டுள்ளது (அதியமான் - ஒளவை - நெல்லிக்கனி - புறம்) திருமந்திரம் எழுதிய திருமூலரது காலத்தில் இவ்வாறு மனிதனின் சராசரி இறப்பு வயது 70ஆக இருந்ததா என்பதும் நெல்லிக்கனி நீண்ட வாழ்நாளுக்கு மருந்தாகப் பயன்படுமா என்பதும் ஆய்விற்குரியன.
தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் தொடர்பான செய்திகள் விரிவாக அன்றி, மேற்கண்டவாறு ஆங்காங்கே குறிப்புகளாக மட்டுமே பெரும்பான்மையும் கிடைக்கின்றன. தமிழர் தமது மருத்துவ முறையினைப் பிறர் அறியா வகையில் மறைத்து வைத்திருந்தமையும், மருத்துவ நூல்கள் பலவும் செய்யுள் வடிவாக இடம் பெற்றிருந்தமையும், மருந்துகளின் பெயர்கள் பிறர் அறியா வகையில் குழுஉக் குறிகளாகப் பயன்படுத்தப்பட்டமையும் இந்நிலைக்குரிய காரணங்களாகக் கருதலாம் (தன்வந்திரி குழந்தை வாகடம். பக். 3,4
கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை, கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த் தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில் விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித் தமிழர் மருத்துவம் குறித்து அறிய முற்படுகின்றது.
நோய்
புண் (புறம் 281), புண் வழலை, மிடற்றுப் பசும்புண் (புறம். ப. 86) போன்ற புண் தொடர்பான நோய்கள் குறிப்பிடப்படுகின்றன. கருவுற்ற காலத்தில் பெண்ணிற்கு ஏற்படும் நோயாக 'வயா நோய்' குறிப்பிடப்படுகிறது. இந்நோயுற்ற மகளிர் மண் உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பதாக நோயின் அறிகுறி புலப்படுத்தப்படுகிறது (புறம், ப. 89). பெரும்பசி (திரிகடுகம், பாடல் 60), வயிற்றுத் தீ (புறம், 74), யானைத் தீ (மணிமேக€லை) என்ற நோய்கள் 'தீராத பசி' தொடர்பான நோய்களாகக் காணப்படுகின்றன. இவை தவிர மருந்தால் தீராத பெரும்பிணி பற்றிய செய்தியும் இலக்கியத்தில் இடம்பெறுகிறது (திரிகடுகம், பாடல் 18). மேலும் சில நோய் அறிகுறிகள் இலக்கியத்தில் சுட்டப்படுகின்றன (நாலடியார் பாடல் 29, திருமந்திரம் பாடல் 148, கம்பராமாயணம் பாடல் 592) இவற்றைக் கொண்டு இந்நோய் இன்று குறிப்பிடப்படும் 'மாரடைப்பு' என்ற நோயாக இருக்கலாம் என்று யூகிக்க இயலுமா என்பது சிந்தித்தற்குரியது. குழந்தையின்மை, தொழு நோய், பால்வினை நோய் ஆகிய நோய்கள் மிகப் பழங்காலந்தொண்டு இருந்துள்ளன என்பதையும் அறிய முடிகின்றது (புறம், பாடல் 9, ப, 26; நளாயினி கதை : திருப்புகழ், பாடல் 682).
தலைவலி, சுரம், கண் ஒளி குன்றுதல் போன்ற நோய்களைத் திருப்புகழும் (பக். 10-11), குளிர் சுரம், சூலை நோய், வெப்பு நோய், முயலகன் போன்ற நோய்களைப் பெரிய புராணமும் (ப.273, 157, 316, 270) சுட்டுகின்றன. இவற்றுள் வெப்பு நோயின் அறிகுறிகளாக உடல் நடுங்குதல், உடல் வெம்மையடைதல், கனல் போன்று வருத்துதல், வெம்மை வயிற்றினுள் புகுதல், குடலினுள் புகுதல், அருகில் உள்ளோரும் வாடித் தீய்ந்து போகும்படி உடல் உலர்ந்து சுருங்குதல், வாழையின் இளங் குருத்திலும் தளிர்களிலும் நோயுற்றாரைக் கிடத்துதல், அவ்வாறு கிடத்துமிடத்து அவை வெப்பத்தால் காய்ந்து பொடியாதல், பேச்சின்றி நினைவிழந்து மயங்கி வீழ்தல் போன்றன குறிப்பிடப்படுகின்றன.
மருத்துவ நூல் வல்லுநர்கள் தமது பல கலைகளிலும் வகுத்து ஓதப்பட்ட மருத்துவத் தொழில்கள் எல்லாவற்றையும் செய்தும் நோய் குணமடையவில்லை என்ற முறையில் கொடுமை வாய்ந்த நோயாக இந்நோய் காட்டப்படுகிறது. இந்நோயினை இன்று குறிப்பிடும் அம்மை, அல்சர், அக்கி போன்ற நோய்களுடன் தொடர்புபடுத்திக் காண இடம் உள்ளது.
'முயலகன்' என்பது இன்று எந்தப் பெயரால் உணர்த்தப்படுகிறது என்று அறிய இயலாவிடினும் அந்நோய் பெருங் கொடிய நோய்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுதல் கொண்டு இந்நோயின் கொடுமையை உணரலாம். இந்நோய் கொண்டவர் உணர்வற்றுக் கிடப்பர் என்றும், வலிப்புடன் கிடப்பர் என்றும் நலிவுற்றுக் கிடப்பர் என்றும் சுட்டப்படுகின்றது. இத்தகைய நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்நோயினைக் 'காக்காய் வலிப்பு' என்று சொல்லப்படும் வலிப்பு நோயுடன் தொடர்புபடுத்திக் காண இயலுமா என்பது ஆராய்தற்குரியது.
நோய்க்கான காரணங்கள்
பெண்ணுடன் உறவு கொள்வதால், குறிப்பாக விலை மகளிருடன் உறவு கொள்வதால் உடம்பு முழுவதும் அழுகி தொழுநோய் ஏற்படுகிறது (திருப்புகழ், பாடல் 682, நளாயினி கதை) என்றும், நண்டின் கால்களைச் சாப்பிடுவதால் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது (நாலடியார் பாடல் 123) என்றும், சுடுகாட்டுள்ளும் மரத்தடியிலும் துயிலுவதால் இந்நோய் ஏற்படும் (ஆசாரக் கோவை, பாடல் 57) என்றும் நோய்க்கான காரணங்கள் பேசப்படுகின்றன. இவை எந்த அளவு இன்றைய மருத்துவ முறைகளோடு அறிவியல் பூர்வமாகத் தொடர்புபட்டுள்ளன என ஆய்ந்து காண்பது அவசியமாகும்.
நோய் அறியும் முறைகள்
நோயுற்றவனிடத்து உள்ள நோயினை அந்நோயின் அறிகுறிகள் இன்னதென்று மருத்துவர் துணிந்து, பின்னர் அந்நோய் வருவதற்கான காரணத்தை ஆராய்ந்து தெளிந்து அதன் பின்னர் அதை தீர்க்கும் உபாயம் அறிந்து அதில் பிழையாமல் செய்தல் வேண்டும் என்றும் அவ்வாறு நோயுற்றவனின் தன்மையையும் அவனிடத்து உள்ளதாகிய நோயின் அளவினையும் மருத்துவநூலில் குறிப்பிட்டுள்ளவாறு அறிந்து செய்தல் வேண்டும் என்றும் நோய் அறியும் முறைகள் குறித்துத் திருக்குறள் சுட்டுகின்றது (திருக்குறள் 948, 949, 950).
நோய் அறிபவர் - (மருத்துவர்) :
மேற்குறிப்பிட்ட செய்தியின் வாயிலாக நோய் அறியும் அறிவு படைத்த மருத்துவர்களும், அவர்கள் மருத்துவ அறிவு பெறுதற்கான மருத்துவ நூல்களும் இருந்துள்ளன எனவும், ஆண்-பெண் இருபாலாரிலும் மருத்துவம் கற்றறிந்த மருத்துவர்கள் இருந்தனர் (தொல், பொருள், நூற்பா. 503) எனவும் அறியலாம். மேலும் சித்த மருத்துவம் கற்ற சித்தர்களும், ஆயுர்வேதம் பயின்ற மருத்துவர்களும், அவர்களது மருத்துவ முறைகளும் விளக்கப்படுகின்றன (சித்தர் பாடல்கள், தன்வந்திரி குழந்தை வாகடம் - க. லலிதாம்பிகா).
மருத்துவ முறைகள்
மருந்து செய்தல், உதிரம் களைதல், அறுத்தல், சுடுதல் போன்ற அறுவை மருத்துவம் தொடர்பான மருத்துவ முறைகளும் (திருக்குறள், அதிகாரம் 95) உடலின் சக்தியைப் புருவ மத்திக்குக் கொணர்தல், வல-இட மூச்சுக்காற்று தொடர்பாகச் சில அறிவியல் உண்மைகளை விளக்குதல் என்பன போன்ற 'யோகா' தொடர்பான மருத்துவ முறைகளும் (திருமந்திரம் பாடல் 440, 462), மந்திரம், தியானம் போன்ற முறைகளால் நோய் நீக்க வல்ல மருத்துவ முறைகளும் (பெரிய புராணம், ப. 360). நாடி பார்த்து நோய் அறியும் மருத்துவ முறையும் (திருமந்திரம், பாடல் 151) தமிழ் இலக்கியங்களில் இடம்பெறுகின்றன.
மருந்து :
வீட்டின் முன்புறம் வேம்பினைச் செருகியும், வெண்சிறு கடுகினைத் தூவியும், நறுமணப் புகைகளை உண்டாக்கியும் வில், வேல், வாள் போன்ற ஆயுதங்களால் ஏற்பட்ட புண்ணைப் பாதுகாத்தனர் (புறம், 231) என்றும், பிள்ளைப் பேற்றின் பின் 'நெய்யணி மயக்கம்' என்று குறிப்பிடக்கூடிய எண்ணெய் நீராடும் செயலைப் பெண்கள் மேற்கொண்டனர் (தொல். பொருள், பேரா. நூற். 46) என்றும், உயிர் பிரிந்தபின் அந்த உடம்பு சில காலத்திற்குக் கெட்டுவிடாமல் பாதுகாத்து வைப்பதற்காக ஒருவகை எண்ணெயில் அதனை இட்டு வைத்தனர் (கம்பராமாயணம் - தைலமாட்டு படலம், பாடல் 608) என்றும், தலைமுடி நன்கு வளர்வதன் பொருட்டுக் 'கடுக்கலந்த கைபிழி' எண்ணெயைப் பயன்படுத்தினர் (தொல். சொல். சேனா. ப.19) என்றும் சில மருந்துகளின் பயன்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன.
சராசரி இறப்பு வயது :
மனிதனின் சராசரி இறப்பு வயது 70 ஆக இருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன (திருமந்திரம் : பாடல் : 163). அதிக அளவு வாழ்நாள் பெறுவதற்கு நெல்லிக்கனி மருந்தாகப் பயன்பட்டுள்ளது (அதியமான் - ஒளவை - நெல்லிக்கனி - புறம்) திருமந்திரம் எழுதிய திருமூலரது காலத்தில் இவ்வாறு மனிதனின் சராசரி இறப்பு வயது 70ஆக இருந்ததா என்பதும் நெல்லிக்கனி நீண்ட வாழ்நாளுக்கு மருந்தாகப் பயன்படுமா என்பதும் ஆய்விற்குரியன.
தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் தொடர்பான செய்திகள் விரிவாக அன்றி, மேற்கண்டவாறு ஆங்காங்கே குறிப்புகளாக மட்டுமே பெரும்பான்மையும் கிடைக்கின்றன. தமிழர் தமது மருத்துவ முறையினைப் பிறர் அறியா வகையில் மறைத்து வைத்திருந்தமையும், மருத்துவ நூல்கள் பலவும் செய்யுள் வடிவாக இடம் பெற்றிருந்தமையும், மருந்துகளின் பெயர்கள் பிறர் அறியா வகையில் குழுஉக் குறிகளாகப் பயன்படுத்தப்பட்டமையும் இந்நிலைக்குரிய காரணங்களாகக் கருதலாம் (தன்வந்திரி குழந்தை வாகடம். பக். 3,4
Re: தமிழர் மருத்துவம்
பயனுள்ள அறிய செய்திகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
» மருத்துவம்
» ஒரு வரி மருத்துவம்....
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
» மருத்துவம்
» ஒரு வரி மருத்துவம்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|