ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு

Go down

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு  Empty சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு

Post by நிசாந்தன் Mon 25 Oct 2010 - 16:40

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று (ஒக்ரோபர் 23, சனிக்கிழமை) வட மேற்கு லண்டன் ஹரோவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்ரர் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
‘உலகமயமாதலில் ஊடகங்களும், தமிழ் மக்களின் பிரச்சினையும்’ என்ற கருப்பொருளுடன் காலை 10:00 மணி முதல் மாலைவரை நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் இலங்கை, இந்தியா, கனடா, யேர்மனி, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

இலங்;கையிலும், அனைத்துலகிலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் இயக்குனர் கோபி இரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து கலாநிதி சுதாகரன் நடராஜா தலைமையில் நடைபெற்ற காலை அமர்வில், வீரகேசரி வார இதழின் தலைமை ஆசிரியர் வீ.தேவராஜா தமிழரின் தேசியப் பிரச்சினையும், ஊடக சவாலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இவரையடுத்து சிங்கள ஊடகவியலாளர் றோஹித்த பாசன அபேயவர்த்தன மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத நிலையில், ஸ்கைப் வாயிலாக தமிழ் மக்களும், தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களும் எதிர்நோக்கிய பிரச்சனைகள், தமிழ் மக்கள் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கி உரையாற்றி இருந்தார். அத்துடன், தமிழ் ஊடகங்கள் போரில் நடந்ததை மட்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன் நின்றுவிடாது, போரின் சாட்சியங்களை வெளிக்கொண்டு வருவதிலும் பாடுபட வேண்டும் எனக் கூறினார்.

ரைம்ஸ் ஒஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையின் தலைமைச் செய்தி ஆசிரியர்களில் ஒருவரான அமிரித்லால் உரையாற்றும்போது, இந்திய ஊடகங்கள் எவ்வாறு ஈழத்தமிழ் மக்களின் இனப் பிரச்சினையைப் பார்க்கின்றன எனவும், தமிழ் மக்களின் பிரச்சியை தமிழ் மக்களின் பிரச்சினையாகப் பார்க்கப்படாது, விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது எனவும், தமிழ் மக்களின் புனர்வாழ்வு பற்றிப் பேசுபவர்கள் மனித உரிமை விடயங்கள் பற்றிப் பேசாது மௌனித்து இருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் போருக்குப் பின்னரான ஊடக சுதந்திரம் பற்றி உரையாற்றிய பிரான்சை தலைமையகமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் பிரித்தானியக் கிளையின் இயக்குனர் ஹெதர் பிளேக், தொடரும் ஊடகத் தடை பற்றி விளக்கிய அதேவேளை, அது தொடரபில், ஏழு முக்கிய விடயங்களை தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

காலை அமர்வில் இறுதியாக உரையாற்றிய பி.பி.சி தமிழோசையில் முன்னர் பணியாற்றிய ஊடகவியலாளர் ரமேஸ் கோபாலகிருஸ்ணன், ஈழப்போராட்ட அமைப்புக்கள் இந்தியாவில் இயங்கியபோது, அதன் தலைவர்களைச் சந்தித்தது முதல் தற்பொழுது வரையுள்ள நிலமைகளை விளக்கியதுடன், தமிழர்களுக்கு தற்பொழுது உலகின் எந்த நாடும் நண்பனாக இல்லை எனவும், நாடுகளின் அரசுகள் மத்தியில் நட்பை ஏற்படுத்த தமிழ் மக்கள் பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புலம்பெயர் தமிழ் அமைப்புகள், அரசியலுக்கு அப்பால், இந்திய குடிசார் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கேள்வி பதிலுடன் காலை அமர்வு நிறைவு பெற்றது.

சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் துணைத் தலைவர் தினேஸ் குமார் தலைமையில் நடைபெற்ற மாலை அமர்வின் ஆரம்பத்தில் இந்த அமைப்பின் இணைச் செயலாளர் யோகரட்ணம், மற்றும் செயலாளர் குகன் தம்பிப்பிள்ளை ஆகியோரின் ஒன்றியம் பற்றிய அறிவிப்பு மற்றும் உரைகளைத் தொடர்ந்து நோர்வே உத்ரொப் பல்கலாசார சஞ்சிகையின் ஆசிரியர் மயூரன் விவேகானந்தன் உரையாற்றினார்.

இதனையடுத்து, கனடா வின்சர் பல்கலைக்கழகத்தின் கலாநிதி சேரன் சனநாயகம், தொழில்நுட்பம், மாற்றுவழி ஊடகம் பற்றியும், தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை தகவல் தொழில்நுட்பம் தொடர்பாகவும், தமிழ்நாடு குங்குமம் இதழின் ஆசியர் பீடத்தைச் சேர்ந்த தோமஸ் அருள்எழிலன் தமிழர் இனப்பிரச்சினையும், ஊடக நிலை என்ற தலைப்பிலும், வேல்ஸ் ஸ்வான்சீ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சேந்தன் செல்வராஜா புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் பலம் பற்றியும் உரையாற்றினர்.
அருள் எழிலன் தமதுரையில், தமது அரசியல் உரிமைப் போராட்ட விடயத்தில், ஈழத்தமிழர்கள் தாங்களே முடிவுகளை எடுக்கவேண்டும், இந்தியாவையோ வெறெந்த சக்திகளை தமக்காக முடிவெடுக்க அனுமதிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தினார்.

இதனையடுத்து சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் நன்றியுரை வழங்கியதுடன், மீண்டும் கேள்வி, பதில்களுடன் இந்த ஆண்டிற்கான மாநாடு நிறைவு பெற்றது.

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தில் 50இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அங்கத்துவர்களாக இருப்பதுடன், இதேபோன்ற மாநாடுகள் யேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum