ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையை இழக்கிறதா மனித இனம்..?

Go down

கருணையை இழக்கிறதா மனித இனம்..? Empty கருணையை இழக்கிறதா மனித இனம்..?

Post by Guest Sat Oct 23, 2010 7:04 pm

சென்னை போன்ற பெருநகரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதரணம்தான் என்ற போதும் என் மனத்தினை உறுத்திய நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நிகழ்வு - 1 : இது சமீபத்தில் நடந்த நிகழ்வு. நான் அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் செல்லுவதுதான் வழக்கம். 2 தினங்களுக்கு முன்னரும் அப்படித்தான் பேருந்தில் ஏறினேன். கூட்டம் மிகுதியால் பயணசீட்டு எடுப்பதற்கு 5 ரூபாய் பணத்தை பெண்மணி ஒருவரிடம் கொடுத்து அனுப்பினேன் (கூட்ட நெரிசலில் பேருந்து பயணத்தில் சிலர் உதவி மனப்பாண்மையோடு கொடுத்தனுப்பி டிக்கெட் வாங்கிக் கொடுப்பது நல்ல ஒரு விஷயம்) அந்த நேரத்தில் நிறைய நபர்கள் கொடுத்தும் வாங்கியும் கொண்டிருந்தனர். எனது சீட்டு தவறுதலாக என்னை கடந்து முன்னாடி நின்றவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். வாங்கியவர்களில் ஒருவர் காசு கொடுக்காமலே சீட்டை பெற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கு சீட்டு வரவில்லை.

நான் அந்த பெண்மணியிடம் கேட்க, அவர் இன்னொருவரிடம் கேட்க, அவர் கொடுத்த காசுக்கெல்லாம் சீட்டு வந்துவிட்டதாக சொன்னார். அவரும், நானும் "முன்னாடி கொடுத்தவர்களிடம் சீட்டை சரிபாருங்கள் அதிகமாக இருந்தால் கொடுங்கள்." என்று நின்ற நபர்களிடம் வேண்டினோம். முன்னாடி நின்ற யாரும் திரும்பிக் கூட பார்க்க மனமில்லாதவர்களாய் நின்று கொண்டிருந்ததை கவனிக்கையில் வேதனையாக இருந்தது. அதிலும் அங்கே இருந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

எனது வேதனைக்கான காரணம்... 5 ரூபாய் அல்ல‌; ஆனால், அதற்கே நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாய் இருக்கிறதே...? அவர்கள்தான் வைத்திருப்பார்கள் என்று குற்றம்சாற்ற விரும்பவில்லை. குறைந்த பட்சம் தங்களது சீட்டினை சரிபார்த்திருக்கலாம் அல்லது வேறு யாரவது வைத்திருக்கிறீர்களா என அருகில் உள்ளவர்களிடம் கேட்டிருக்கலாம். ஒரு சிறு தவறு நடந்திருக்கிறது. இதனைக் கேட்ககூட மனமில்லாதவர்கள் போல இருப்பவர்களை கண்டுதான் மனம் புழுங்குகிறது.

என்னிடம் சீட்டு வாங்க காசு வாங்கிய பெண்மணி என்னிடம் மன்னிப்புக் கோரினார். அவர் மீது எந்த தப்பும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. எத்தனையோ பேர் இந்தப் பிரச்னைகளுக்காவோ என்னவோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் காசு
கொடுத்து அனுப்பும் போது முகத்தை திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாதவர்கள் போல் இருப்பார்கள். இப்பொழுது பிரச்னை என்னவென்றால், உதவி செய்யும் அவரைப் போன்ற நல்லவர்கள் நமக்கேன் வம்பென்று ஒதுங்கிக் கொள்ளதானே தோன்றும்.
நான் அவரை சமாதானப்படுத்தி இன்னொரு சீட்டு வாங்கிக் கொண்டேன். இதே போல் இன்னொரு நிகழ்வை அவர் பார்க்க நேர்ந்தால், சந்திக்க நேர்ந்தால் அங்கே சிறிய உதவி என்றாலும், அந்தப் பெண்ணின் கருணை மனப்பாண்மையை மனித இனம் இழந்துவிடும்தானே..?

நிகழ்வு - 2 : நான் அலுவலகம் முடிந்து சென்று கொண்டிருந்த சமயம் ஓர் இளைஞர் என் அருகே வந்தார். "அண்ணா ஒரு பதினாறு ரூபாய் கொடுங்கள். நான் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தேன். என்னை ஆய்வாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் வைத்துவிட்டார்கள். அதோடு இருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டார்கள். நான் ஊருக்கு போக பணம் இல்லை," என்றார்.

எனக்கு அந்த நேரத்தில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. அதோடு கையில் பிரபல அரசு கல்லூரிக்கான அடையாள அட்டையும் வைத்திருந்தார்.

"சரி என்னிடம் இப்போது சில்லறை இல்லை... மாற்றி தருகிறேன்," என அழைத்துச் சென்றேன். போகும்போதே என் மனம் பல்வேறு கேள்விக்கனைகளை தொடுத்தது. (ஒருவேளை அந்த நேரத்தில் சில்லறை இருந்திருந்தால் எடுத்து கொடுத்திருப்பேன்... பிறகு யோசனை செய்திருப்பேன்)

* இவர் உண்மையிலேயே பிரச்னையில் இருக்கிறாரா?

* ஏமாற்றுப‌வ‌ரா? அப்ப‌டியானால் நாம் ஏமாற‌ போகிறோமா?

இப்ப‌டி ப‌ல‌ கேள்விக‌ள் என் ம‌ன‌தில் எழுந்த‌த‌ற்க்கு ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ள் இருக்கிற‌து.

ச‌மீப‌த்தில் இதே போல் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் ஏமாந்த‌ அனுபவத்தை அறிந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு குடும்ப‌மே இதேபோல் தின‌மும் ஏமாற்றுவ‌தை அந்த‌ வ‌ழியில் நான் க‌ண்டிருக்கிறேன். ஒரு வ‌ய‌து முதிர்ந்த‌வ‌ர், அவ‌ர் ம‌னைவி, ந‌டுத்த‌ர‌ வய‌துள்ள‌ ஒருத்த‌ர், அவ‌ர‌து ம‌னைவி ம‌ற்றும் ஒரு சின்னபெண், அவருக்கு 10ல் இருந்து 14க்குள் வயது இருக்கலாம். அந்த‌ சின்ன‌ப் பெண்ணை சில‌ ச‌ம‌ய‌ம் அந்த‌ வ‌ய‌தான‌வ‌ருட‌னும், சில‌ ச‌ம‌ய‌ம் ந‌டுத்த‌ர‌ வ‌ய‌துடைய‌வ‌ர்க‌ளிட‌மும் பார்க்க‌லாம்.

இவ‌ர்க‌ள‌து வேலையே இர‌வு தொட‌ங்கும் வேளையில் பேருந்து நிலைய‌துக்கு அருகில் நின்றுகொண்டு வ‌ருவோர் போவோரிட‌ம் "நாங்க‌ள் ப‌ண‌த்தை தொலைத்துவிட்டோம் ஊருக்கு போக‌ ப‌ண‌ம் இல்லை உத‌வி செய்யுங்க‌ள்," என‌ கேட்ப‌துதான். ப‌ல‌ர்
க‌ண்டுகொள்வ‌தில்லை. சில‌ர் அவ‌ர்க‌ளிட‌ம் க‌ருணை உள்ள‌த்தோடு ப‌ண‌த்தை கொடுக்கின்ற‌ன‌ர். இவர்கள் இந்த‌ ஏமாற்று வேலையையே தொழிலாக‌ செய்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளை மாத‌த்தில் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று முறையாவ‌து நான் பார்த்திருக்கிறேன். இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்கூட‌ ஒரு பெண் கையில் தேடி எடுத்து 50 ரூபாயை கொடுத்த‌தை நான் காண நேர்ந்த‌து. நான் அந்த‌ பெண்ம‌னியிட‌ம் எடுத்துச் சொல்ல‌வும் முடிய‌வில்லை... அவ‌ரை த‌டுக்க‌வும் முடிய‌வில்லை.

உண்மையிலேயே நான் அந்த‌ பைய‌னுக்கு செய்த‌ சிறிய‌ உத‌வியை நினைத்து ச‌ந்தோஷப‌டுகிறேன். அதே ச‌ம‌ய‌ம் என் ம‌ன‌தில் எழுந்த‌ கேள்விக‌ளுக்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌தென்றும் தெரிய‌வில்லை. 50 ரூபாய் கொடுத்த‌ பெண்ணின் க‌ருணை உள்ள‌ம் இங்கு கேள்விக்குறியாகிப் போனதை நினைத்து வ‌ருந்துகிறேன். ஒருவேளை அவ‌ருக்கு அது ஏமாற்று வேளை என்று தெரிந்தால் உண்மையிலேயே உத‌வி தேவைப்ப‌டும் ஒருவ‌ர் க‌ருணையை இழ‌க்க‌ நேரிட‌த்தானே செய்யும்.

இப்ப‌டி ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை வைத்து கொஞ்ச‌ம் இருக்கும் க‌ருணை குறைய‌த்தானே வாய்ப்பிருக்கிற‌து. ம‌னித‌ இன‌ம் எவ்வ‌ள‌வோ மாற்ற‌ம் நிக‌ழ்ந்தாலும் அன்பு, உத‌வி, ப‌கிர்த‌ல் என‌ சில‌ மாறாத‌ குண‌ங்க‌ளால் தான் நிலைத்திருக்கிற‌து என‌ தோன்றும். அதுவும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ குறைந்தால் அடுத்த‌ த‌லைமுறைக்கு நாம் எத‌னை எடுத்துச் சொல்ல‌ப் போகிறோம்? வெறும் எச்ச‌ரிக்கை உண‌ர்வை மட்டும்தானா?
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum