ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 
ayyasamy ram
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 
mohamed nizamudeen
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 
VENKUSADAS
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 

Top posting users this month
heezulia
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 
ayyasamy ram
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 
mohamed nizamudeen
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 
VENKUSADAS
மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_m10மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனோசக்தி மனித வாழ்வின் சொத்து

2 posters

Go down

மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Empty மனோசக்தி மனித வாழ்வின் சொத்து

Post by சிவா Mon Aug 10, 2009 9:19 pm

வாழ்க்கையில் முழு வெற்றி பெற நமது மனம் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டியது மிக அவசியம். மனிதனிடம் உடல் வலிமை, பணவலிமை, பதவி வலிமை மற்றும் பிற சாதனங்களின் வசதி அனைத்தும் இருக்கலாம். ஆனால் அவனிடம் மனோபலம் இல்லையெனில், வாழ்க்கையில் வெற்றி அடைவது கடினம். ஏனெனில் இவையனைத்தையும் சரியான வழியில் பிரயோகப் படுத்தவும், கட்டுப்படுத்தவும் மனோபலம் மிக அவசியம். பிற அனைத்தும் சேனைகள் போன்றவை. அவைகளுக்கு தளபதி மனமே. மனம் தோற்றுப் போய் விட்டால், ஒரு போதும் அவர் வெற்றி காண்பதரிது. எனவே மனம் பலம் பொருந்தியதாய் இருப்பது மிக அவசியம்.

முழு மனோபலம் இல்லாததால் மனிதர்கள் சிலசமயம் இருதலைக் கொள்ளி எறும்பு போலாகிவிடுகின்றனர். குறிப்பிட்ட ஒரு காரியத்தை நாம் செய்யலாமா? வேண்டாமா? என்கிற நிலை. ஏனெனில் மனோ பலத்தின் குறைவால் அவர் பயப்படுகிறார். இவ்வாறு பயம் என்பது மனோபலத்தின் பரம எதிரியாகும். ஆனால் மனோபலத்தின் குறைவு காரணமாகத்தான் பயமும் ஏற்படுகிறது. இவ்விரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டது. நம்பிக்கை மனதை பலப்படுத்துகிறது. அதன் விளைவாக ஏற்படும் வெற்றியால் இன்னும் பலம் சேருகிறது. அதே சமயத்தில் நம்பிக்கையின்மை மனதை பலவீனப்படுத்துகிறது. எனவே தான் மனிதர்கள் எப்போதுமே யானைக்கு தும்பிக்கைபோல, மனிதனுக்கு நம்பிக்கை அவசியம் என்று கூறுகிறார்கள்.

வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா பலகோடி டாலர்களையும், தன் சேனையின் பெரும் பகுதியையும் ஈடுபடுத்தியது. ஆனால் இறுதியில் அங்கிருந்து, விட்டால் போதும் என்கிற கணக்கில் திரும்ப வேண்டியதாயிற்று. இதற்குக் காரணம் வியட்நாம் படையினரிடமிருந்த மனோபலம் தான். என்ன ஆனாலும் சரி, அமெரிக்கர்களின் காலை இங்கே பதிய விடமாட்டோம் என்கிற மன உறுதிதான். ஆனால் அமெரிக்கப் படையினரோ வகை தெரியாமல் இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே சண்டையோ நீடித்துக் கொண்டிருக்கிறது திரும்பி ஓடவேண்டுமானாலும் எப்படி ஓடுவது என்கிற எண்ணமெல்லாம் எழ மனதால் முதலில் தோல்வியுற்று பிறகு சண்டையிலும் தோல்வியைத் தழுவினர். அவர்களிடம் பணவலிமை, படைவலிமை, தளவாட வலிமை அனைத்தும் இருந்தது. ஆனாலும் அனைத்து விதத்திலும் பலஹீனமான நாட்டினர் போன்று ஓட வேண்டியதாயிற்று.

நான் இந்த காரியத்தை செய்து முடிக்கக் கூடியவன் என்னும் மனத் திட்பம் வேண்டும். அப்போது மனோ பலம் அதிகரிக்கிறது. ஒல்லிக்குச்சி போன்றிருக்கும் மனிதன் கூட பயப்பிணியில்லாது மனவலிமையுடனிருந்தால் பலவானைக் கூட வென்று விட முடியும்.

ஆனால் மனோவலிமை கிளர்ந்தெழுவது எப்படி? என்னும் கேள்வி எழுகிறது. மனோபலம் என்பதை எப்படி நமக்குள் தொய்வு அடையாமல் வைத்திருப்பது? இதற்கு நான் மிக தைரியமாக இருந்தால் பகவான் எனக்கு நிச்சயமாக உதவி புரிவார் என்னும் லட்சியம் சதா நினைவில் நிற்க வேண்டும். எனவே பயப்படத் தேவையில்லை. எங்கு பகவான் இருக்கிறாரோ அங்கு வெற்றி நிச்சயம் உண்டு.

பகவானின் அரவணைப்பில் பாதுகாப்பாக விளங்கும் மனிதர் அவரது ஆசீர் வாதங்களுடன் வளமாக இருப்பார். இவருடைய மனம் இமய மலை போன்று அசையாது, மிக உறுதியுடனிருக்கும். அதற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. எங்கு தீவிர முயற்சியும் தூய்மையும், யோக சக்தியும் அனைத்திற்கும் மேலாக பரமபிதா பரமாத்மா வின் நெருங்கிய அன்பும், உறவும் இருக்கிறதோ அங்கு மனோ பலம் மிக உறுதியாகிவிடுகிறது.

மனோபலம் அதிகரிப்பதற்கும், நிரந்தரமாய் இருப்பதற்கும் ஒரு வழி உண்டு. அதாவது, நாம் நமது காரியங்களில் இறங்கும்போது நான் ஒரு லட்சியத்திற்காக அதாவது சிரேஷ்ட காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதில் மனம் உறுதியுடன் இருக்க வேண்டும். அதே சமயத்தில் நான் சரியான காரியம் செய்கிறோமா, தவறான காரியம் செய்கிறோமா என்று சந்தேகப்படும் போது மனம் பலமிழந்து விடுகிறது. அதனால் அசைந்து கொடுக்கிறது,

சந்தித்தே ஆகவேண்டும் எனவே மனிதன் தனது காரியத்தில்தானே முழுமையாக ஈடுபட்டு ஏதேனும் ஒன்றை சாதித்துக் காட்ட வேண்டும். இதில் நம்பிக்கையுடையோருக்கே வெற்றி கிட்டும். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி அடைந்தவன், வெற்றி வழங்கும் வள்ளலான பகவானின் குழந்தை நான், வெற்றி எனது பாதங்களை முத்தமிடும், இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.... இவ்வாறு சிந்தனை செய்வதால் மனோ பலம் அதிகரித்ககிறது. மனம் ஒருமை நிலையிலும் ஸ்திரமாகவும் இருக்கிறது.

மனதின் ஒருமைநிலைக்கும் மனோ பலம் அவசியமாகிறது. மேலும் ஒருமை நிலையால் மனோபலம் அதிகரிக்கிறது. இவ்விரண்டும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டது. மனதில் பலமில்லை யெனில் அது ஒரே இடத்தில் எப்படி நிலையாகும்? தனது பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது. தடைகளால் மிகவும் தொந்தரவு இருக்கும். அவரது பலஹீனங்கள் பொறாமை, வெறுப்பு, பயம், கவலை போன்ற அநேக ரூபங்களாக உருவெடுக்கும். அதே சமயத்தில் அவரிடம் பலமிருந்தால் இவை அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி கடலின் ஆழத்தில் எறிந்து விடுவார். ஒரே அசைப்பில் இந்த பலஹீனங்களை அதாவது தன் துர்குணங்களை விரட்டி அடித்து விடுவார். கடந்து முடிந்தது போனவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சுகம் துக்கத்தை கர்மத்தின் விளைவாக எண்ணிக் கொண்டு பிறரின் பலஹீனங் களைப் புரிந்து கொண்டு அவர்களின் தொடர் பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வார். இதன் விளைவாக தனது விலைமதிக்க முடியாத நேரத்தை வீணடிக்க மாட்டார். அனைத்து தடைகளையும் கடந்து விட்ட பிறகு கெட்டவைகளிலிருந்து உறவை துண்டித்து விட்ட பிறகு மனம் இவைகளிலிருந்து விடுதலை அடைந்த பிறகு அவர் மனம் ஒருமிக்காமல் எங்கே போகும். நிச்சயமாக தனது நிலைக்கு வந்துவிடும். எனவே மனிதர்கள் இப்போது செய்ய வேண்டியது கைவிலங்குளை உடைத்தெரிய வேண்டும், சங்கிலியை கழற்றி விட வேண்டும். இவ்வுலகின் விகார குப்பையிலிருந்து மனதைத் திருப்பிக் கொண்டால் தான் மனம் அன்பு நிறை இறைவனின் அன்பிலே மூழ்கித் திளைக்க முடியும். அமைதி, ஆனந்தம், சக்தி குணம் போன்றவைகளை அனுபவிக்க முடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனோசக்தி மனித வாழ்வின் சொத்து Empty Re: மனோசக்தி மனித வாழ்வின் சொத்து

Post by Anandh Mon Aug 10, 2009 9:24 pm

நன்றி அன்பு மலர் மகிழ்ச்சி
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum