ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

4 posters

Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by kirikasan Wed Oct 20, 2010 11:36 pm

கத்திய ஓலமும் கதறியகுரலும்
கண்வழிநீர் பெரு ஆறெனவே
முட்டிவழிந்திடச் செத்திடுவோமெனச்
சித்தம் கலங்கிச் சிதறியதும்
கொத்து கொத்தாய் பல குண்டுக ளாயிரம்
கொண்டுவந்தே பகை கொட்டியதும்
பட்டுவெடித்ததும் பாய்ந்துசிதைத்ததும்
பால்குடி பிஞ்சினர் மார்புதனை

வெட்டிக்கிழித்தவர் இரத்தம் அழிந்திடச்
செத்தவும் அதைப் பெத்தவளோ
தொட்டு எடுக்கவும் நேரமின்றித் திசை
விட்டுத் தலை தெறித்தோடியதும்
பட்டதும் ஓடி விழுந்ததும் சிறு
கையொடு கால்கள் இழந்ததுவும்
கொட்டி முழக்கிய போர்ப்பறையும்
சிறு பெண்டிர் கெடுத்தவர் தூக்கினிலே

கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மை சீரழித்து
பெட்டியிலிட்டு சந்தி சிரித்து
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்

எத்தனை கோரம் இட்டபகைவரின்
இழிசெயல் எண்ணித் துடிமனதில்
ரத்தம்கசிந் துயிர் நட்டநடுங்கியே
முற்றிலும்வேதனை பெருகுதடா
சொந்தம் இழந்துசு தந்திரம் விட்டுச்
சுற்றி முள்வேலியைக் கட்டிவைத்து
மந்தை விலங்கு கள்போலொருமானிட
வாழ்வு நமக்கொரு கேடோடா

விரிந்த குழல்முடி குடலெடுத்தேபின்
கோதி முடிப்பேன் என்றலறி
வரிந்தொரு சபதம் இட்டதிரௌ பதிகள்
வாழ்வுமுடிந்து போனாலும்
அருமலர்ப்பாதச் சிலம்பினை உடைத்து
மதுரையைக் கொழுத்திய கண்ணகிபோல்
பெரிதொரு சாபம் இட்டுமே மறமகள்
பிணமென ஆகி புதைந்தாலும்

விட்ட கண்ணீருக்கு விலை கொடுப்பாரெமை
குத்திஅழித்திட்ட கொடியவர்கள்
இட்டவர் சபதமும் சாபங்களும் எழுந்
தெதிரிதலைகொள இடி விழுத்தும்
பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி



Last edited by kirikasan on Thu Oct 21, 2010 5:15 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by veluchamy Wed Oct 20, 2010 11:42 pm

இரத்தம் கொதிக்கிறது


எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by சிவா Wed Oct 20, 2010 11:42 pm

////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! மீண்டும் இதே கோஷத்துடன் நாம் எழுந்தால்தானே இழந்தவைகளை மீட்க முடியும்!


தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by veluchamy Wed Oct 20, 2010 11:50 pm

//அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்


எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by kirikasan Wed Oct 20, 2010 11:56 pm

சிவா wrote:////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

எங்கள் போரட்டத்தை பயங்கரவாதம் என்றது உலக நாடுகள்
ஒன்றுசேர்ந்து அழித்தன. இன்றும் அந்தக் கூற்றை சொல்லிகொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆயுதப்போரட்டம் பயஙகரவாதம். ஜனநாயக வழியில் போராடுங்கள் என்பதே அவர்கள் பேச்சு. அதனால் உருவானதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு.என்று கருதுகிறேன்

போராட்டத்துக்கு முன்நின்றவர்களே இனி ஆயுதம் தூக்கமாட்டோம் என கூறிவிட்டார்கள். நான் கூறக்கூடாது. அது நடந்தால் அப்போது பேசலாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by சிவா Thu Oct 21, 2010 12:04 am

veluchamy wrote://அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்

கருத்துக் களத்தில் கூறப்படும் அனைத்துக் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படும்! இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை!

விவேகாநந்தர் கூறினாரா எனத் தெரியாது, படிக்கவில்லை! ஆனால் மகாத்மாவும் கூறியுள்ளார்கள்!

http://appliedgandhi.blogspot.com/2007/11/do-or-die-speech-on-eve-of-last-fast.html

http://www.allinterview.com/showanswers/22254.html


தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty புன்னகை மறந்த பூக்கள்!

Post by kirikasan Thu Oct 21, 2010 5:16 am

சின்னப் பெண்ணே சித்திர நிலவே
சிரிப்பை மறந்தாயோ
சிந்தும் விழிகள் சொல்வது என்ன?
சோகம் சொல்லாயோ!
கன்ன மிரண்டும் கன்னிச் சிவந்தே
காணுவ தேனம்மா?
கயவர் செய்யும் கொடுமை கண்டு
கண்களின் தீயெரிந்தோ!

எத்தனை கொடுமை ஈழமண் மீது
இளைய மனங்களிலே
குத்திடும் ஈட்டிகள் கூரெழும் வாள்கள்
கீறும் வலி கொடிதே
முத்தம ளித்திடும் அன்னை யழித்து
மூர்க்கர் குதித்ததுவும்
ரத்தமி ழந்தவள் வெற்றுட லாகிய
வேளையும் மறப்பாளோ

கத்தி கிழித்தவர் கதறிய குரலும்
காணும் கிலே சங்களும்
பொத்தென வீழும் குண்டுகளு மதில்
பிய்த்திடும் தேகங்களும்
சித்தம் கலங்கிட திக்கது கெட்டு
சிதறிடும் மாந்தர்களும்
சத்தமெடுதவர் வெட்டிய வெறியும்
கக்கிய நஞ்சுகளும்

எத்தனை கண்டாள் இத்தனை யுமவள்
இதயம் தாங்கிடுமோ
சத்தியம் தோற்றபின் மிச்சமிருப்பது
சித்திரவதை விடுமோ
நித்திரையின்றியே நெஞ்சு துடித்திட
நிர்க்கதியாயிருந்து
எத்தனை இரவுகள் உத்தரித்தாளிந்த
சித்திரப் பொன்விளக்கு

இரத்தமும் கொலையும் இளையவள் நெஞ்சில்
இட்டவலி பெரிது
முத்தமும் அன்பும் முழுவதுமின்றி
முகமலர் வாடிடுது
கத்தியும் கேளாக் கடவுளின் இதயம்
காய்ந்து கடுத்திடுது
சத்திய அன்னையின் சற்று மிரங்காப்
செந்தமிழ்ப் பூக்களது

எண்ணெய் விடுத்துக் கண்ணீர் கொண்டு
ஏற்றிய தீபமது
கண்ணை இழந்தொரு ஓவியன் தீட்டிய
காரிருள் மேகமது
பொன்னை ஒதுக்கிப் புழுதியிற் செய்த
புதுவகை சிற்பமது
என்ன இருந்தும் இறைவனின் நெஞ்சு
இரும்பில் ஆக்கியது

என்று எழுந்துநல் லொளிபரவும் இந்த
இரவும் விடிவதற்கு
சென்றவர் வந்தே சினமெடுத்துப் பகை
வென்று முடிப்பதற்கு
அன்றுவரை நீ அழுதிட வேண்டும்
ஆகும் ஒருகணக்கு
தென்றல் வரும் ஒருசேதி சொல்லும் கதிர்
தீப்பிழம் பெழுவதற்கு!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by Thanjaavooraan Mon Oct 25, 2010 2:18 pm

நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by kirikasan Thu Oct 28, 2010 5:26 am

Thanjaavooraan wrote:நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...

என் கவிதைகளைத் தொடர்ந்து ரசித்து உற்சாகமூட்டிய தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்! இன்னொரு படியில் உயர்ந்திட என் கால்களுக்கு வலுச்சேர்த்தமைக்கு நன்றிகள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Empty Re: தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum