ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_m10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10 
VENKUSADAS
விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_m10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_m10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10 
VENKUSADAS
விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_m10விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்

Go down

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Empty விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்

Post by சிவா Mon Aug 10, 2009 12:55 am

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Viveka10

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்

நீங்கள் தயாரா?

சுவாமி விமூர்தானந்தர்

சுவாமி விவேகானந்தர், ""நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். உலகின் போக்கையே மாற்றிக் காட்டுகிறேன்"" என்றார். எல்லாக் காலங்களிலும் இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது உலகிற்குச் சேவையாற்ற ஏன் சுவாமிஜி இளைஞர்களை அதிகமாக வேண்டினார்?

அவர் விரும்பிய இளைஞர்கள் (அதில் பெண்களும் அடக்கம்) எப்படிப்பட்டவர்கள்? அவர் களின் தகுதிகள் என்ன என்பதைச் சிறிது ஆராய்வோம்.

இளமையைத் துறந்தால் பெருமையா?

இளமையை வேண்டாம் என்றார் ஒருவர் இறையடியார் என்று அவரைப் போற்றுகிறோம். இது காரைக்கால் அம்மையார் சரித்திரம். இளமையை வேண்டி இன்பங்களை அனுபவித்தார் மற்றொருவர் கடைசியில், மன அமைதி பெறுவதற்காகத் தாம் விரும்பிப் பெற்ற இளமையை வேண்டாம் என்றார். இது யயாதியின் கதை.

வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்க்கையே நீர்க்குமிழி என்றால், அதிலுள்ள இளமைக் காலம் எம்மாத்திரம்?

ஆதிசங்கரர், ஆன்மஞானம் அடைய முயலாதவர்களை, அக்ஞானத்தில் உழல்பவர்களைப் "பாலர்களே" என்று விளிக்கிறார்.

"இந்தக் காலத்து இளைஞர்கள் அவ்வளவாகப் பொறுப்புடன் இல்லை" என்று பொதுவாகப் பெரியவர்கள் கூறுவதுண்டு. இதே புகாரை, சாக்ரடீஸே ஒரு முறை கூறினாராம்!

இப்படிப் பலரும் இளைஞர்களையும், இளமைக் காலத்தையும் பெரிதாக மதித்ததாகத் தெரியவில்லை! ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும், அவர்கள் எல்லோரையும் சமமாக பாவித்தாலும் குறிப்பாக, இளைஞர்களின் ஆற்றலில் அதிக நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அது ஏன்?

ஒவ்வொரு கணமும் நூற்றுக்கணக்கான திசுக்கள் நம் உடலில் அழிந்து கொண்டும், புதிதாகப் பிறந்து கொண்டும் இருக்கின்றன. அதன்படி, மனிதன் ஒவ்வொரு கணமும் பிறக்கிறான் இறக்கிறான். மனிதனின் இந்தப் பிறப்பிறப்பின் வேகம் சற்று கூடுதலாக, சீராக இருப்பதைத்தான் இளமைக் காலம் என்கிறோம். இதனைக் "கிளரொளி இளமை" என்று திவ்யப் பிரபந்தம் கூறும்.

அப்படி என்றால், யாரிடம் இளமைத் துள்ளல் உள்ளதோ, அவரே இளைஞர் என்று கூறி விடலாமா? அப்படிக் கூறிவிட முடியாது. ஏனென்றால் துருதுருவென செயல் புரிந்த வயதான "இளைஞர்கள்" இருந்தார்கள் ஏராளமாக- காந்திஜி, வினோபாஜி போன்றோர். இருக்கிறார்கள் தாராளமாக - அன்னா ஹசாரே, சின்னப்பிள்ளை போன்றோர். இருப்பார்கள் நிச்சயமாக!

வாலிபம் வயது அடிப்படையில் இல்லை என்பது இதன் மூலம் முடிவாகிறது அல்லவா?

மனதிற்கு இளமை என்ற நிலை உள்ளதா? உறுதி எடுக்கும் ஒரு கணம் ஏன் எடுத்தோம் என்று தடுமாறும் மறுகணம். இதுதான் மனம். ஆகையால் பிடிப்பும் தளர்வும் இயல்பாக உள்ள மனம் எப்போதும் துடிப்பாக - இளமையாக இருக்க முடியாது.

மனித மனமானது அளவற்ற ஆற்றலுடன், சோர்வின்றிச் செயலாற்ற இயலும். ஆனால், சக்தியின் ஊற்று அதற்கு வேறோர் இடத்திலிருந்து உதிக்கிறது.

உடல் ஒரு சில காலம் வரையில்தான் இளமையாக இருக்கும். மனதால் என்னதான் உற்சாகமாக இருக்க முயன்றாலும், அதுவும் காலப்போக்கில் மங்கத்தான் செய்கிறது. ஊக்கத்தால், மருந்து களால், ஏன் ஆசனங்களால் கூட நீடித்த இளமையைத் தர முடியாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Empty Re: விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்

Post by சிவா Mon Aug 10, 2009 12:56 am

இளமை பற்றிய இரண்டு பிரச்னைகள்

ஒரு மனிதனின் இளமைப் பருவம் என்பது 15 முதல் 30 வயது வரைதான். அந்தக் காலகட்டத்தில் பொதுவாகப் பலரும் பெற்றோரைச் சார்ந்தே இருக்கிறார்கள் அல்லது பொறுப்பு களைச் சுமக்கத் தைரியமின்றியோ, அனுபவமோ, வாய்ப்போ இன்றி இருக்கிறார்கள் அல்லது அப்போதுதான் சம்பாதிக்கத் தொடங்கிச் சொந்தக் காலில் ஓரளவிற்கு நிற்கிறார்கள்.

பெரும்பாலான பக்தர்கள், ஆன்மிகத்தில் விருப்பம் கொள்ளும் நல்லவர்கள் பலரும் 30 வயதிற்குப் பிறகே ஆன்மிகத்தின் பக்கம் திரும்புகிறார்கள். அவர்களுக்கு அப்போதுதான் ஆன்மிக வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ம், உண்மையான தேவையு ம் வருகிறது.

இளைஞர்கள் பலரின் நிலைமை இப்படி இருக்கும்போது சுவாமிஜி தமக்கு இளைஞர்கள் வேண்டும் என்கிறாரே, ஏன்?

மற்றுமொரு பிரச்னை. "சுவாமிஜி பணித்தப் பணிகளைச் செய்ய எங்களுக்கு வாய்ப்பில்லையா? அல்லது தகுதி தீர்ந்துவிட்டதா?" என்று நடுத்தர மற்றும் மூத்த வயது அன்பர்களின் நெஞ்சங்களில் ஒரு கேள்வி நிழலாடுகிறது. இதற்குப் பதிலளிக்க,இளமைப் பருவம் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டியு ள்ளது.

வாலிபம் என்பது வயது, ஆரோக்கியம், மன வளர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் என்றால், சில வருடங்களே நிற்கக்கூடிய அந்த வாலிபத்தைக் கொண்டு பெரிதாக என்ன சாதித்து விட முடியும்?

நமது ஆன்மிக நூல்கள் பிரச்னைக்குரிய இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கின்றனவா? ஆம்! "உடல் அழியக் கூடியது மனம் சிதையக் கூடியது அறிவு மங்கிவிடும் வசதி, வாய்ப்பு , ஆரோக்கி யம் எல்லாமே மாயை" என்று மட்டும் அவை சொல்லவில்லை.

தொடர்ச்சியாக ஒன்று செம்மையாகச் செயல்பட, நிலையான ஒன்று அதற்குப் பின்பு லமாக இருக்க வேண்டும். வெள்ளித்திரை இருந்தால்தான் சினிமா. அதே போல் நமது வாழ்வில் தோன்றி மறையு ம் அம்சங்கள் எத்தனை எத்தனையோ! அவற்றிற்கெல்லாம் ஆதாரமாக, நிலையான பரமாத்மா - இறைவன் - வீற்றிருக்கிறார்.

இறைவன் இருப்பதால் இருக்கிறோம்!

சக்தி எங்கிருந்து வருகிறது?

இறைவனது அம்சம் நம்முள் ஆன்மாவாக உள்ளது. ஆன்மாவானது நம் கண்களுக்குப் பு லப்படாதது இருந்தாலும் நம் அகங்காரமும், சுயநலமும் நம்மிடமிருந்து விலகும் போதும், மக்களுக்குச் சேவை செய்து அதை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும்போதும் ஆன்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தான் செய்கிறது.

"நாம் ஆன்ம சொரூபம்" என்பதுதான் நம் உண்மை நிலை என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுவாமி விவேகானந்தர் ஆன்மாவின் ஆற்றலைப் பற்றி முழங்குகிறார்!

""...ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியு ங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்பு ங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்கும் ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையு ம் வரும்."" (கொழும்பு முதல் அல்மோரா வரை. பக்கம் 141)

எல்லா ஆற்றல்களும் இறைவனிடமிருந்தே வருகின்றன. ஆகையால் யஜுர் வேதம் (19-9), "இறைவா, நீ வீரியமாக இருக்கிறாய் எனக்கு வீரியம் வழங்கு. நீ பலமாக இருக்கிறாய் எனக்கு பலம் வழங்கு. நீ கஷ்டத்தைச் சகிக்கிறாய் எனக்குக் கஷ்டத் தைச் சகிக்கும் தன் மையை வழங்கு" என்று பிரார்த்தனை செய்யு ம் பாங்கைக் கற்றுத் தருகிறது.

நம்மிடம் உள்ள எல்லா சக்திகளுக்கும் ஆன்ம சக்திதான் ஆதாரம். ஆன்மா என்பது உடல், மனம் போன்று தோன்றி மறையாதது. அது எப்போதும் இருப்பதால்தான் ஆன்ம பலம் பெற்ற வர்கள் என்றும் இளமைச் சக்தியுடன் இருக்கிறார்கள். பரமான் மாவை "அஜரா" - "முதுமையே இல்லாதது" என்று பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது.

ஆன்ம அனுபூதி பெறுவதற்கோ, இறைவனிடம் பக்தி கொள்வதற்கோ, மன ஒருமை பெறுவதற்கோ, மேற்கொண்ட உயர் லட்சியத்தை அடைவதற்கோ, தடைகளைச் சமாளிப்பதற்கோ, இளமையில்தான் ஒருவருக்கு அதிக வாய்ப்பு கள் உள்ளன.

இளமையில் உடலில் அதிக சக்தி, உள்ளத் தூய்மை, சாதிக்கக்கூடிய துடிப்பு , அறிவில் தெளிவு, சுயநலமின்மை ஆகியவை நன்கு மிளிரும். இந்தப் பண்பு கள் யாவும் ஆன்ம சக்தியைத் தூண்டும் ஆன்ம மலர்ச்சி விரைவில் நிகழும். இதற்காகத்தான் சுவாமிஜி இளைஞர்களை ஊக்குவித்தார்.

எல்லா அம்சங்களிலும் இளமை இருப்பது ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பு ஆகும். இறைவனோடு அவற்றையெல்லாம் ஈடுபடுத்தும்போது இளமைச் சக்தி என்றொரு புதிய சக்தி பிறக்கிறது. என்ற கட்டுரையில் சுவாமி பஜனா னந்தர் விளக்குகிறார்.)

இளமையாக இருப்பது ஒன்று இளமைச் சக்தியுடன் - ஆன்ம சக்தியுடன் இருப்பது முற்றிலும் வேறு. வெறுமனே உயிர் இருப்பதற்கும், உயிரோட்டம் பொங்கிப் பெருகுவ தற்கும் மலையளவு வேறுபாடு உள்ளது.

இறைவனோடு இயைந்து, அவனது இச் சைப்படி வாழ்பவர்கள் என்றும் இளமைச் சக்தியுடன் இருக்கிறார்கள். ஆன்மிக சாதனையின் நோக்கமே சக்தி பெறுவது அல்லவா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Empty Re: விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்

Post by சிவா Mon Aug 10, 2009 12:57 am

ஆன்மிக சாதனைகள் மூலம் சக்தி!

ஆன்மிக சாதனைகள் பல உள்ளன. அவற்றுள் இறைநாம மந்திர ஜபம் முக்கியமானது. ப்ரணவம் எனப்படும் ஓம் இல்லாமல் மந்திரம் இல்லை. அதன் பொருளைப் பாரதியார் விளக்குகிறார்!

ப்ர+நவம் = ப்ரணவம். "ப்ரணவம் எனப் படுவது எப்போதும் கணந்தோறும் புதிய புதிய உயிருடன், என்றும் அழியாத அமிர்த நிலையைப் பெற்றிருப்பது என்பதாகும்." பாரதியார் கூறிய அமிர்த நிலைதான் மாறாத தன்மையு டன் கூடிய இளமைச் சக்தி ஆகும். இதுவே உயிர்ச் சக்தியு ம் ஆகும்.

அன்னை பராசக்தியிடம் இதையே அவர் திரும்பத் திரும்பப் பிரார்த்திக்கிறார்!

"...எம்மைப் புதிய உயிராக்கி..."

"நல்லதோர் வீணை செய்தே... நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்!"

உயிரோடு இருந்தபோதே பாரதியார் ஏன் "நவமென சுடர் தரும் உயிரைக்" கேட்டார்? அவர் உயிரைக் கேட்கும்போது தம்முள்ளும், தமது கருத்துகளிலும் எப்போதும் உயிர்ச் சக்தி இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதனால்தான் அவர் மக்களுக்காக உயிர் கொடுத்து உழைக்க முடிந்தது.

பாரதியின் இந்தப் பிரார்த்தனைக்கு விளக்கம் வேண்டுமென்றால், சுவாமி விவேகானந்தரின் புகழ் பெற்ற கீழ்க்கண்ட பொன்மொழிகளைச் சிந்திக்க வேண்டும்.

""யாருடைய இதயம் ஏழைகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறதோ, அவர்களையே நான் மனிதர்கள் என்பேன் மற்றவர்கள் எல்லாம் வாழ்பவர்கள் என்பதைவிட, இறந்து போனவர்களே.""

குன்றாத இளமை!

குமரக் கடவுள், ஆணவமிக்க சூரனை வதைக்கவே அவதரித்தார். குமரன் என்றால் குன்றாத இளமை உடையவன் என்று பொருள். ஆன்ம சக்தியை நாம் பெறாமல் இருப்பதற்கே காரணம் "நான்", "எனது" என்ற பற்றுக்களே என்று பக்தி இலக்கியங் கள் கூறும். "நான்", "எனது" பந்தங்களை யார் துறக்கிறார்களோ, அவர்கள் குமரனின் அருளைப் பெறுவர்.

பிரார்த்தனை, பூஜை, ஜபம், பாராயணம், தியானம் ஆகியவற்றின் மூலம் நாம் உயிர்ச் சக்தியை உடல், உள்ளம், அறிவு என்று எல்லாவற்றிலும் பெற முடியும். அபிராமி பட்டர் தமது அபிராமியம்மை பதிகத்தில் அபிராமியை வழிபடும் பக்தர்கள், "கலையாத கல்வியும், குறையாத வயதுமோர், கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன் றாத இளமையு ம் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும்...." பெறுவார்கள் என்று கூறுகிறார்.

சிவனைக் "குழகன்" (என்றும் இளமையாய் இருப்பவன்) என்று குறிப்பிடுகிறார் சம்பந்தர். "தம்மையே ஒக்க அருள் செய்பவர்" (திருவாய் மொழி) அல்லவா ஆண்டவர்? வயதான திருநீலகண்டரும், அவரது மனைவியு ம் சிவபெருமானின் தரிசனம் பெற்றதும் "மூப்பு நீங்கி விருப்பு றும் இளமைப் பெற்று..." என்கிறார் சேக்கிழார்.

மக்கள் மதித்துப் போற்றும் சான்றோர்கள், நம்மை நல் வழியில் தூண்டிவிடும் தலை வர்கள் யாவரும் என்றும் இளைஞர்களே! ஆம், நல்லோர் நெஞ்சங்களில் நீங் காது, நினைவுகளில் மூப்படையாமல், ஊக்கச் சக்தியாக இடம் பெற்றுள்ள அவர்கள் என்றும் இளைஞர்கள் அல்லாமல் வேறு யார்?

ஆகவே, என்றுமுள்ள இறைவனிடம் உண்மை பக்தியு டனும் ஆன்ம சக்தியு டனும் எவன் வாழ்கிறானோ, அவன் என்றும் இளமைச் சக்தி பெற்றவன். அவனே இளைஞன். ஆன்ம சக்தி பெறுவதற்கு இள வயது - முதிய வயது, ஆண்-பெண், ஏழை - பணக்காரன், படித்தவன்-பாமரன் என்று எல்லோருக்கும் வாய்ப்பு ம் தகுதியு ம் உள்ளது.

மேற்கூறிய காரணங்களால்தான் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்த ரும் இளைஞர்களைத் தேடிப் பிடித்து அன்பைப் பொழிந்தார்களோ! ஸ்ரீராமகிருஷ்ணர் தூயவர்களுக் காக தேவியிடம் பிரார்த்தித்தார். அவ்வாறே சுவாமிஜியு ம் இளைஞர்களை வேண்டினார்.
இவர்கள் இவ்வாறு விரும்பியது புதிய விஷயமல்ல. ஏனெனில் சநாதன தர்மத்தின் ரிஷிகள் செய்ததைத்தான் இவர்களும் செய்தார்கள். (சநாதன தர்மம் என்றாலே நித்திய நூதனம் அதாவது "என்றும் புதிது" என்று பொருள்.)

பரம்பொருளை உணர்ந்து, ஆனந்தமாய் உள்ள ஒரு ரிஷி, தமது ஆன்மிகப் பேரின்பத்தை நல்ல சீடர்களுடன் பகிர்ந்துகொள்ள இறைவனிடம் பிரார்த்திப்பதைப் பாருங்கள்!

"பரம்பொருளே! எனக்கு எல்லாத் திசை களிலிருந்தும் ஏராளமாக மாணவர்கள் வரட்டும். அவர்கள் பு லனடக்கமும், மனக்கட்டுப் பாடும், நல்லொழுக்கமும் உடையவர்களாகவும் இருக்கட்டும்". (தைத்திரிய உபநிஷதம்- சிக்ஷாவல்லி - 4.23)

மேற்கூறிய சிந்தனைகளிலிருந்து சுவாமிஜி வேண்டிய இளைஞர்கள் எப்படிப்பட்ட வர்கள் என்பதை ஓரளவிற்கு நாம் பு ரிந்து கொள்ளலாம்.
ஆகவே இளைஞர்களே, நீங்கள் உடலால், வயதால் இளைஞரா? - நீங்கள் கால் பங்கு இளைஞர் என்பதாக அறிந்து கொள்ளுங்கள்.

உணர்ச்சியால், ஊக்கத் தால் வாலிபரா?- அது அரைப் பங்கு. அன்பால், உழைப்பால், அறிவுத் தாகத்தால் நீங்கள் துடிப்பானவரா?- முக்கால் பங்கு இளமை உங்களிடம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் மேற்கூறியவை இருந்தால் மட்டும் இளமையாக இருக்கிறீர்கள் என்றும், அந்தக் கால கட்டம்தான் இளமைக் காலம் என்ற முடிவுக்கும் வந்தால், அது ஒரு மேலோட்டமான பு ரிதலாகத் தான் இருக்கும்.
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்களே, உடல், மனம் போன்றவற்றுள் மட்டும் சக்தி பெறுவதற்காக உங்களுள் பலரும் பாடுபடுகிறீர்கள் அது நல்லதுதான்.

ஆனால் சுவாமிஜி நம்மிடம் வேண்டுவது நாம் அனைவரும் ஆன்ம சக்தியைப் பெற வேண்டும் என்பதே ஆகும். அதற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.

அதனால்தான் சுவாமிஜி, "எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடை யு ம்வரை இடைவிடாது செல்லுங்கள்" என்று முழங்கினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் Empty Re: விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்னும் நூறு பெரியார் வேண்டும் நமக்கு
» இன்றைய இளைஞர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பெண்கள்தான் வேண்டும் என்றா சொல்கிறார்கள்????
» நூறு
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum