ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டதைப் பிடிக்கும் வியாதி

Go down

விட்டதைப் பிடிக்கும் வியாதி Empty விட்டதைப் பிடிக்கும் வியாதி

Post by enganeshan Wed Oct 13, 2010 5:08 pm



மகாபாரதத்தில் தர்மபுத்திரனைப் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை. எமதர்மனால் முன்பு நச்சுப்பொய்கையிலும் பின்பு சொர்க்கத்திலும் பரீட்சிக்கப்பட்டு தேர்வு பெற்றவன் அவன். தன் தேகத்துடன் சொர்க்கம் போக முடிந்தவன் அவன் ஒருவனே. அப்படிப்பட்டவன் சூதாட்டத்தில் கலந்து போன போது கடைநிலை மனிதன் கூடச் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்தான். தன் சகோதரர்களையும், மனைவியையும் பணயம் வைத்து ஆடினான். சூதாட்டம் ஆனானப்பட்ட தர்மபுத்திரனையே அப்படிச் செய்ய வைத்தது என்றால் மற்றவர்கள் விஷயத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கேட்க வேண்டுமா?

சூதாட்டத்தில் பங்கேற்கும் பலரும் விட்டதைப் பிடிக்கும் வியாதியால் பீடிக்கப்படுகிறார்கள். அடுத்த முறை வென்று விடுவோம், விட்டதை எல்லாம் பிடித்து விடுவோம் என்று சூதாட்டத்தைத் தொடர்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி விடுகிறார்கள். அது வரை அவர்களை சூதாட்டம் விடுவதில்லை.

தர்மபுத்திரன் விஷயத்திலேயே சூதாட்ட நாள் நடந்த கடைசி நிகழ்ச்சி பல பேர் கவனத்தை எட்டவில்லை. பாஞ்சாலியின் மானத்தைப் பகவான் காப்பாற்றிய பிறகு நரிகள் ஊளையிட, நாலா பக்கங்களில் இருந்தும் கழுதைகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் விகாரமாய் கத்த குலநாசம் வரப் போகிறதென்று பயந்து திருதராஷ்டிரன் தர்மபுத்திரன் இழந்ததை எல்லாம் அவனுக்குத் திருப்பித் தந்தான். பாண்டவர்களை இந்திரப்பிரஸ்தத்திற்குத் திரும்பிப் போகச் சொன்னான். ஆனால் அப்படிக் காப்பாற்றப்பட்டும் கூட தர்மபுத்திரனுக்குப் புத்தி வரவில்லை. சபையோர் தடுத்தும் கூட கேட்காமல் மீண்டும் ஒருமுறை சகுனியுடன் ஆடி 12 வருடம் வனவாசம், ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என்ற நிபந்தனையுடன் ஆடித் தோற்றான். வியாசர் அவன் கடைசியாக ஆடியதை "கலிபுருஷனால் பீடிக்கப்பட்டவனாய் மறுபடி ஆட உட்கார்ந்தான்" என்கிறார். கடைசியில் கூட விட்டதைப் பிடிக்கும் வியாதி அவனையும் விட்டு வைக்கவில்லை.

இன்றைய காலத்தில் சூதாட்டம் பல ரூபங்களில் நடக்கின்றது. கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் ஆசை பலரையும் படாத பாடு படுத்துகிறது. உழைத்து சம்பாதித்து நாலு காசு சேர்க்க ஆகும் கால அளவு வரை பொறுத்திருக்க பலருக்கும் பொறுமை இல்லை. சூதில் இப்படி ஒரு பேராசையுடன் தான் அனைவரும் நுழைகிறார்கள். பின் சூது அவர்களை விடுவதில்லை. கடைசி வரை தன் தூண்டிலைப் போட்டு அது சபலப் படுத்துகிறது. இனியொரு முறை ஆடு, விட்டதைப் பிடித்து விடலாம் என்று ஆசை காட்டுகிறது.

ஒரு நம்பர் லாட்டரி நம் நாட்டில் எத்தனை குடும்பங்களை நிர்க்கதியாக்கியது என்பது நமக்குத் தெரியும். எத்தனையோ தினக்கூலிக்காரர்கள் தினமும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் லாட்டரிக் கடை முன் நிற்பதை சில வருடங்களுக்கு முன் பலரும் பார்த்திருக்கலாம். அன்றைய அனுபவம் அவர்களுக்கு அடுத்த நாளுக்கு உதவியதில்லை. விட்டதைப் பிடிக்கும் வியாதி தினம் தினம் அவர்களை லாட்டரியின் பக்கம் திருப்பியிருக்கிறது.

எனக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் மிக சௌகரியமாக இருந்தார். அவருக்கு ஷேர் பிசினஸில் ஆரம்பத்தில் சிறிது லாபம் வர பின் அவர் தன்னுடைய சேமிப்பு எல்லாவற்றையும் அதில் போட்டார். சமீபத்திய நிலவரத்தில் அவர் எல்லா பணத்தையும் இழக்க நேரிட்டது. பல வெளிநாட்டு வங்கிகளில் க்ரெடிட் கார்டுகள், கடன்கள் எல்லாம் வாங்கி அதையும் ஷேரில் போட்டார். நண்பர்களிடமும் கடன் வாங்கிப் போட்டார். எல்லாம் இழந்து விட்டார். இழந்த அத்தனையையும் திரும்பப் பெறும் நம்பிக்கையில் கடைசியில் அரசாங்க வேலையையும் விட்டு அதில் கிடைத்த பிராவிடண்ட் ·பண்ட் முதலான தொகைகளைப் பெற்று அதையும் ஷேரில் போட்டு அத்தனையும் இழந்து இன்று மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கிறார். விட்டதைப் பிடிக்கும் வியாதி அவரை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டது பாருங்கள்.

அந்த வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் அறிவைப் பயன்படுத்துவதில்லை. அடுத்தவர் அறிவுரையைப் பொருட்படுத்துவதில்லை. அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க அனுமதிப்பதில்லை.

உண்மையான புத்திசாலித்தனம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடாமலேயே இருப்பது தான். அதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் விரைவிலேயே அதிலிருந்து மீள்வது தான். இழந்தவை நமக்குப் படிப்பினைகளாக இருக்கட்டும் என்று உணர்வது தான். அதை விட்டு அதை மீட்க மீதி இருப்பதையும் பணயம் வைக்கத் துணியாமல் இருப்பது தான். அப்படி மீட்டு விடுவேன் என்று பிடிவாதத்துடன் மீண்டும் அதில் புகுவது புதைகுழியில் கால் வைப்பது போல் ஆபத்தானது. எனவே இந்த வியாதிக்கு ஆளாகாமல் இருப்போமாக!.

- என்.கணேசன்
enganeshan
enganeshan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010

http://enganeshan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum