ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க

3 posters

Go down

அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க Empty அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க

Post by சிவா Mon Oct 11, 2010 2:31 pm

உடன்பிறப்பே,

எந்த ஜனநாயகத்திலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அத்தியாவசியத் தேவைகள் என்பதை யாரும் மறுத்துரைத்திட இயலாது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. அப்போதுதான், மக்களாட்சியின் மாண்புகள் மேலும்மேலும் பொலிவு பெறும். நிர்வாகத்தில் அவ்வப்போது ஏற்படும் குறைகளை ஆக்கபூர்வமான முறையில் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுவதும்; வேறு எந்த உள்நோக்கமும் இன்றி இதய சுத்தியோடு சுட்டிக்காட்டப்படும் அந்தக் குறைகளைக் களைந்து, ஆளுங்கட்சி ஆட்சிச்சக்கரத்தைச் செலுத்துவதும்; ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நடைமுறையாகும்.

ஆனால், தமிழக அரசியலில் நாம் காண்பதென்ன? இதுவரை இல்லாத அளவுக்கு சரித்திரம் போற்றும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது கழக அரசு. ஏழை எளியோர், பாட்டாளி மக்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்துத்தரப்பினரின் நலன்களையும் பேணிக்காத்திடும் அரசு கழக அரசு. தமிழக த்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் உணவுப் பாதுகாப்பும், மருத்துவப் பாதுகாப்பும், உறை விடப்பாதுகாப்பும் வழங்கிட வேண்டு மென்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களைத் தீட்டி - அதன் காரணமாக இலட்சோபலட்சம் மக்கள் பலனடைந்து நிறைவும், நிம்மதியும் பெற்று வாழ்ந்து வருகின்றனர். நல்லவர்கள், நடுநிலையாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சிகளைச் சாராத அமைப்பினர், கழக அரசின் திட்டங்களையும், செயல்பாடு களையும் போற்றிப் பாராட்டிவருகின்றனர்.

கழக அரசு நாள்தோறும் பெற்றுவரும் பாராட்டுகளையும், மக்களிடையே பெருகி வரும் பேராதரவினையும் கண்டு பொறுக்காத எதிர்க் கட்சியினர் சிலர்; எங்காவது ஒரு துரும்பு கிடைத்தாலும், அதைத் தூணாக்கிக் காட்டுவதிலும்; சிறு பொறி கிடைத்தாலும், அதனை ஊதிஊதி பெருநெருப்பாக்குவதிலும், தங்களது நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டு வருகிறார்கள்.

இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியையே பார்ப்போமே!

சென்னை, தியாகராய நகரிலிருந்து ஆவடிக்கு 3.10.2010 அன்று இரவு 9 மணிக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறது. அந்தப் பேருந்து பாடி, புதுநகர் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, "ஸ்கார்ப்பியோ" கார் ஒன்று அந்த பஸ்சை முந்திச் செல்ல முயன்றிருக்கிறது. காருக்குள் ஓட்டுநர் உதயகுமார், செந்தில் சுரேஷ், ஸ்டாலின், முருகன் என்போர் இருந்திருக்கின்றனர்.

பேருந்து ஓட்டுநர் காருக்கு வழிவிடவில்லை என்பதால், பேருந்துக்கும், காருக்கும் போட்டி யும், உரசலும் ஏற்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இரு குழுவினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி, கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கைகலப்பில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்தகுமாரவேல், குமார், உமாபதி, தினகரன், பாப்பையா, சுப்பிரமணியம் ஆகியோர் காயம் அடைந்திருக்கின்றனர். காயம் அடைந்த 6 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே தேவை யான சிகிச்சைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக் கின்றனர். ஆனால், சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சார்ந்த சிலர், குமாரவேல், குமார், தினகரன் ஆகிய மூவரையும் அழைத்துச் சென்று சென்னை பொது மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். வேண்டு மென்றே திட்டமிட்டுப் பொய்யுரையாக, "காயம் அடைந்த ஒருவர் இறந்துவிட்டார்" என்ற வதந்தியை அந்தத் தொழிற் சங்கத்தினர் பரப்பியதால், போக்குவரத்துக் கழகப்பணி மனைகளில் பதற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, 4.10.2010 காலையில் அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பணிமனைகளைச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்க மறுத்தனர். பேருந்துகளை எடுத்துச் சென்ற ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வழிமறித்து, பேருந்துகளை சாலைகளிலேயே குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தச் செய்தனர்.

நாள்தோறும் சென்னை மாநகரச் சாலைகளில் 3 ஆயிரத்து 151 பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நேற்று ஆயிரத்து 907 பேருந்துகள் மட்டுமே ஓடின. 713 பேருந்துகள் ஓடவில்லை. அதற்குக் காரணம், சில எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தொழிற் சங்கங்கள்தான். பேருந்துகள் ஓடாமல் இருந்ததால், பொதுமக்கள் எவ்வளவு அவதிக்கு ஆளானார்கள் என்பதை அனைத்துப் பத்திரிகைகளும் விரிவாக வெளியிட்டிருக் கின்றன.

செந்தில் சுரேஷ், ஸ்டாலின், முருகன், உதயகுமார் ஆகிய நான்கு பேர் மீதும் கொலை முயற்சி, பொதுச்சொத்தைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து; அவர் களைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத் தனர்.

இதில் உண்மைநிலை என்ன தெரியுமா? காரில் பயணம் செய்த செந்தில் சுரேஷ் என்பவர் அம்பத்தூர் நகராட்சி, 37வது வட்டம் தி.மு.க. கவுன்சிலர் அன்பு என்பவரின் மகன். கைகலப்பின் காரணமாகக் கலவரத்தில் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட ஓட்டுநர்- நடத்துநர்களில் உமாபதி, பாப்பையா, சுப்பிரமணியம் ஆகியோர் கழகச் சார்பிலான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள். அவர்கள் தி.மு.க.வினர் அல்லது தி.மு.க. ஆதரவாளர் என்பதற்காக; காவல் துறை அவர்களைக் கைது செய்யாமலோ, ரிமாண்டில் வைக்காமலோ, விடுவித்து விடவில்லை - மாறாக; அவர்கள் புழல் சிறையில் அடைக்கப் பட்டுமிருக்கிறார்கள். இத்தனை நடவடிக் கைகளையும் பாரபட்சமில்லாமல் - தயவு தாட்சண்யம் பாராமல்; இந்த அரசின் காவல் துறை எடுத்திருக்கும்போது, பேருந்துகளை இயக்கிடாமல்; தொழிலாளத் தோழர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதால், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய், பொதுமக்கள் எவ்வளவு பெரும் பாதிப்புக்கு ஆளாகிட நேரிட்டது என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்த்திட வேண்டுகிறேன்.

நியாயத்துக்காகப் போராடும் தொழிலாளிக்கு விரோதமாக எந்தவொரு செயலும் நடை பெறுவதை நான் விரும்பாதவன் என்பதை; இன்று நேற்றல்ல; இளமைக் காலம் முதலே நிரூபித்து வருபவன் என்ற முறையில்; யாருடைய கோபதாபமானாலும், அதன் விளைவாக பொது மக்களோ, பொதுச் சொத்துக்களோ தாக்குண்டு - ஏற்படும் இழப்பை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை, காரணமாகக் காட்டி, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் இன்னல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இப்படித்தான், தமிழகத்திலே இருக்கின்ற எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளே இல்லை என்றாலும்கூட, பிரச்சினைகளை உருவாக்கி, தொடர்புடையவர்களைத் திசைதிருப்பியும், உருவாக்குகின்ற பிரச்சினைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அவதியும், இன்னலும் ஏற்படும் என்றாலும், அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை கொள்ளாமல், எந்தப் பிரச்சினையாவது கிடைக்காதா, அதை வைத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முடியாதா என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாகும்.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினர்க்கு ஆக்கபூர்வமான முறையில் பொதுப்பணி ஆற்றிட வேண்டும் என்ற நோக்கத்தைவிட; எதையாவது வைத்து அரசியல் நடத்திட வேண்டும்; தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதாயம் தேடிட வேண்டும்; என்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள் என்ற நிலையைத் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை; இத்தகைய அமைதி குலைக்கும் காரியங் களில் ஈடுபடுவோர் மறந்துவிடக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள,

மு.க.


முரசொலி


அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க Empty Re: அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Oct 11, 2010 2:39 pm

இது வரை உலகம் பல கொடுரமான தலைவர்களை காட்டிவிட்டது (ஹிட்லர்,முசோலினி ,,,,etc) ஆனால் நம்ம மு. க போன்ற தமிழ் மக்களின் பிணம் தின்னும் தலைவர்களுக்கு எப்போது விடிவு கிட்டும் என்று தெரியவில்லை ....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க Empty Re: அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க

Post by அன்பு தளபதி Mon Oct 11, 2010 3:00 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க Empty Re: அமளியும் - வன்முறையும் ஜனநாயகமா? - மு.க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum