ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
ayyasamy ram
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
VENKUSADAS
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 

Top posting users this month
heezulia
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
ayyasamy ram
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 
VENKUSADAS
உலகப் பழமொழிகள் Poll_c10உலகப் பழமொழிகள் Poll_m10உலகப் பழமொழிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பழமொழிகள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

உலகப் பழமொழிகள் Empty உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:15 am

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:15 am

# ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
# அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
# அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
# நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன, நள்ளிரவிலும்கூட.
# உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
# ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான். மற்ற கரங்களால் அணைக்கிறான்.
# செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
# உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
# தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
# கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.
# பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன் தொல்லைகளில் இருக்க வேண்டும், அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க வேண்டும்.
# வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.
# நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப் பெற்றிருக்கிறான்.
# மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்கமாட்டான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:16 am

அயர்லாந்து

* அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
* எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ,அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.
* கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
* தலையைக் காட்டிலும் உன் நாக்கிற்கு விடுமுறை கொடு.
* பெண்கள் இருக்குமிடத்தில் பேச்சு இருக்கும். வாத்துகள் இருக்குமிடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.
* நாளை கிடைக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.
* நமக்குப் பாரமாக இருப்பவர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்குப் பாராமாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
* புலால் இருக்கும்போது பசி இல்லை. பசி வரும்போது புலால் இல்லை.
* பொய்யன் வீடு தீப்பறி எரிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகிவிடும்.
* முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவாளியுடன் கூலி சுமப்பது மேல்.
* ரோஜாவையும் விரும்பு; அதன் முள்ளையும் நேசி.
* மூடின பாலில் ஈ விழாது.
* ‘மக்களாட்சி’ என்பது அரசை ஆள்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து இழுத்துச் செல்லும் வண்டியைப் போன்றது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:16 am

அல்பேனியா

* ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
* ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
* ஒழுக்கத்தைப் பறிகொடுத்துக் கிடைக்கம் இலபத்திற்கு ‘நஷ்டம்’ என்று பெயர்.
* ஒரு கையைத் தட்டினால் ஓசை எழாது.
* ஏகாந்தம் என்பது இறைவனுக்குப் பொருந்தும்.
* கசப்பான சொல் வெறுப்பை வளர்க்கிறது.
* கத்தும் பூனை எலியைப் பிடிக்காது.
* சிறந்த பொருளை சுருக்கமாக மனதில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழயின் தன்மை.
* பழமொழிகளைப்போல் வேறெதுவும் நினைவில் பதிவதும் நீண்ட நாள் தங்குவதும் இல்லை.
* பணத்தை இழந்தால் குறைந்த நஷ்டம். நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
* துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்குக் கற்பித்த பாடத்தை மட்டும் மறந்துவிடாதே!
* நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:16 am

அர்மீனியா

* அச்சத்தைவிட மோசமானதொரு ஆலோசகர் இல்லை.
* எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
* ஏழைகள் இதயத்தால் உபசரிக்கிறார்கள்.
* ஒன்றோடு ஒன்று சண்டைபோடும் நாய்கள் ஓநாய்க்கு எதிராக ஒன்றுபடுகின்றன.
* ஓர் இரகசியத்தை அறிய விரும்புகிறாயா? ஒரு குழந்தை, ஒரு பைத்தியம், ஒரு குடிகாரன், ஒரு மனைவி இவர்களிடம் கேள்.
* எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.
* கள்வனிடத்திலிருந்து ஒருவன் திருடும்போது எல்லாம் வல்ல இறைவனே சிரிக்கிறான்.
* குடுவையிலிருந்து வெளியே வந்ததும் மது மிக உரக்கப் பேசுகிறது.
* சத்தியத்திற்கு மற்றொருபெயர் ‘மனசாட்சி’
* பள்ளிக்கூடத்தில் போய் முட்டுவதால் மட்டும் படிப்பு வருவதில்லை.
* பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.
* தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
* தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.
* நம்பிக்கை உறுதியாக இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை.
* நீ யாரை நேசிக்கிறாய் என்பதை என்னிடம் சொல். நீ யார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.
* நொண்டியைவிடப் பொய்க்காலன் விரைவில் வீழ்வான்.
* நம்பிக்கை செழிப்பைத் தராது. ஆனால், தாங்கி நிற்கும்.
* யூதனைப்போல் கணக்குப் பார். சகோதரனைப்போல் ஏற்றுக்கொள்.
* பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:17 am

அரேபியா

* பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
* தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்போது மன்னிப்பதும் ஆகிய இரு வழிகளில் விவேகம் தோன்றுகிறது.
* பேனாவின் வழுக்கலைவிட காலின் வழுக்கல் குறைந்த அபாயமாகவே இருக்கிறது.
* நரை மயிர் மரணத்தின் கடிதம்.
* நீ சாகும்போது உன் தங்கையின் கண்ணீர் போகப்போக உலர்ந்து போகும். உன்னை இழந்தவளின் கண்ணீர் மற்றொருவனுடைய தோள்களில் ஓய்ந்து போகும். ஆனால் உன்னுடைய தாய் அவள் மரணம் அடைகின்ற நாள்வரை உனக்காகத் துக்கப்படுவாள்.
* மணிமுடி மிக கணமாக இருக்கிறது. ஒரு கிரீடத்தின் கீழே இரவிலே முத்துக்களைவிட அடிக்கடி அதிகமாகக் கண்ணீர் வழிகிறது.
* மற்றவர்கள் அனுபவத்திலிருந்து ற்கின்றனர். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மூன்றாவது வகுப்பினர் அவ்களது சொந்த அனுபவங்களிலிருந்தோ அன்றி பிறர் அனுபவங்களிலிருந்தோ கற்பதில்லை. இவர்கள் மூடர்கள்.
* எவன் அஞ்சுகிறானோ அவன் மட்டுமே உண்மையான வீரன்.
* அதிர்ஷ்டக்காரனை நைல் ந்தயில் தலை கீழாகத் தள்ளினாலும் அவனுடைய வாயில் ஒரு மீனோடு வெளிவருவான்.
* அதிர்ஷ்டசாலியான மனிதனுடைய வழியைப் பின்தொடர்க. நீ அதிர்ஷ்ட சாலி ஆவாய்.
* அழுத்தத்தினாலன்றி எண்ணெய் வெளிவராது.
* ஒரு மூடன் தன்னுடைய வாயில் தன் அறிவைப் பெற்றிருக்கிறான். ஓர் அறிஞன் தன் வாயை அறிவால் நிரப்பி வைத்திருக்கிறான்.
* அறிவைத் தேடும் ஒருவருக்கு தேவதைகள் தங்களுடைய சிறகுகளை வளைத்துக் கொடுக்கின்றன.
* ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
* எனக்குச் செருப்புகள் இல்லை. நான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். பாதங்களே இல்லாத ஒரு மனிதனைச் சந்நிக்கும் வரை.
* உங்கள் கூடாரங்களைத் தனித்தே வைத்திருங்கள். இதயங்களை ஒன்றாக கொண்டு வாருங்கள்.
* அன்போடு அன்பைத் திரும்ப வழங்கு.
* அன்புடைமையைத் தவிர அன்புடைமைக்கு வேறு ஏதாவது கைமாறு உண்டோ?
* இளமையின் நினைவு ஒரு பெருமூச்சு.
* ஒரு பொய் அறிவுள்ளதாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவே ஞானமாக இருக்கிறது.
* பிறப்பு மரணத்தின் தூதுவன்
* ஒன்றும் தெரியாத நிலையில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று புரிந்துகொண்டிருப்பவன் ‘சாதாரணமானவன்’. வழிகாட்டப்பட வேண்டிவன்.
* எல்லாம் தெரிந்த நிலையில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற புரிந்து கொண்டிருப்பவன் ‘புத்திமான்’ பின்பற்றப்பட வேண்டியவன்.
* தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
* போர்வாளே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் திறவுகோள்.
* தகுதிக்கு மீறிச்செலவு செய்கிறவன் தன் உயிரை முடித்துக் கொள்ள கயிறு திரிக்கிறான்.
* அவன் முன்பு பனையாக இருந்தான். ஆனால், இப்போது சம்மட்டியாக இருக்கிறான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:17 am

அமெரிக்கா

* ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
* உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்.
* செயலே புகழ் பேசும்.
* உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
* சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன
* தோல்வி ஏற்படும் நேரத்தில்தான் மாவீர்ர்கள் உருவாகிறார்கள். ஆகவே, தொடர்ச்சியான பல பெரிய தோல்விகளே வெற்றி என்பதாக வர்ணிக்கப்படுகிறது.
* தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது.
* வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான்.
* பல் இல்லாமல் இருந்தால்கூட ஒரு கலைமானால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்.
* ஒரு பொருளின் இன்றியமையாமை அது தேவைப்படும்போது தான் தெரியும்.
* ஒரு மனிதனுக்கு உணவு மற்றவனுக்கு நஞ்சு
* தள்ள முடியவில்லையென்றால் இழு; இழுக்க முடியவில்லை என்றால் வழியைவிட்டுப் போய்விடு.
* ஆபத்து இல்லை; புகழும் இல்லை.
* நம்முடைய அறிவுரையை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் வெறுக்கிறோம். நம்முடைய அறிவுரைப்படி நடக்கிறவரை நாம் வஞ்சிக்கிறோம்.
* அதிர்ஷ்டம் தைரியத்திற்குச் சலுகை புரிகிறது.
* ஒருவரைத் தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமை உள்ளதாகும்.
* ஒரு பறவையும் ஒரு கூண்டையும் நீ விரும்பினால், நீ முதலில் கூண்டை வாங்கு.
* மேதைத் தன்மை ஒரு பரம்பரை உரிமையன்று.
* பொதுவான விதி ஒவ்வொன்றிற்கும் ஒரு விதி வில்கு உண்டு.
* வெறுமையான பை நேராக நிற்க முடியாது.
* ஒரு மனிதனை நீ மன்னிக்கும் ஒவ்வொரு நேரமும் நீ அவனை பலப்படுத்தி உன்னையும் பலப்படுத்திக் கொள்கிறாய்.
* கோயிலுக்கு அருகாமை கடவுளுக்கு வெகுதூரம்.
* இந்த வாழ்வில் நுழைவதற்கு ஒரு வழியைத்தவிர வேறு வழி இல்லை. ஆனால் மரணத்தின் வாயில்கள் எண்ணிலடங்காமல் இருக்கின்றன.
* உண்மை எல்லாச் சமயங்களிலும் பேசப்படுவதற்கல்ல.
* உடலையும் ஆன்மாவையும் ஒன்றாகவே வைத்திரு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:18 am

ஆப்பிரிக்கா

* ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
* அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே!
* ஒரு ஆணியின் மேலேயே உன் துணிகள் எல்லாவற்றையும் தொங்கவிடாதே!
* மனித இனத்தைத் தவிர இயற்கையின் எல்லா இனங்களிலும் பெண் இனத்தைவிட ஆண் இனம் அழகாக இருக்கிறது.
* நம் இதயம்தான் நம்மைச் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அழைத்துச் செல்கிறது.
* அழகான பெண் அழகான தொல்லை.
* ஆற்றின் கீழே இருக்கும் பாறாங்கல்லுக்கு பாதைமேல் இருக்கும் பாறாங்கல்லின் வருத்தம் தெரியாது.
* திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.
* நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.
* மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:18 am

இத்தாலி

* சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
* விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
* மெதுவாக பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான். தூரமாக போகிறான்.
* முள் குத்தும் நெருஞ்சி விரைவில் வளர்ந்துவிடுகிறது.
* புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்படுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
* எடுத்துக்கொள்பவனுக்கு உலகம் சொந்தம்.
* உலகம் எல்லாம் ஒரே தேசம்தான்.
* உலகம் என்பது உயர்ந்த புத்தகம். எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது.
* அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு. சிலருக்கு அது தனது முகத்தைக் காட்டுகிறது.
* வறுமை அழகைச் சிதைக்காது.
* அறிவுடைமை அழிந்து போவதில்லை. அறிவாளிகள் அழிந்து போகின்றனர்.
* மூடன் தன்னுடைய சொந்தச் செலவில் கற்றுக்கொள்கிறான். அறிஞன் மற்றவர்கள் செலவில் கற்கிறான்.
* மெல்லிய ஆடைகளைப் பெட்டிகளில் வைத்திருப்பவர் முரட்டுப் போர்வையை உடுத்துகின்றனர்.
* நூற்றில் ஓர் இளைஞர்தான் சபிக்கப்பட்டவர். இருபதில் ஓர் முதியவர்தான் ஆசீர்வதிக்கப்ட்டவர்.
* உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது .
* வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை. வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.
* சாபங்கள் ஊர்வலங்களைப்போல எங்கே தொடங்கியதே அங்கே முடியும்.
* கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் ஒரு சுவராகிறது கடவுள் கருணை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தை வலையாகிறது.
* குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் த்த்துவத்தின் சாவி.
* சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது.
* ஆன்மா இறைவனுக்குச் சொந்தம். உடம்பு மண்ணுக்குச் சொந்தம். சொத்து யாருக்குச் சொந்தம்?
* ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 5:19 am

இங்கிலாந்து

* அரசனைவிட பெண் அதிகத் தந்திரம் உள்ளவள்.
* இன்று செயல்படுங்கள். இன்று சேமியுங்கள். இன்று நல்லது செய்யுங்கள். நாளை நன்கு ஓய்வு எடுக்கலாம்.
* உலகம் ஒரு காய்ந்த மரம். சாகும் மனிதனே அதில் சாய்ந்து நிற்காதே!
* உடம்பே, நீ தேய்ந்து போ! உள்ளமே, நீ உறுதியாக இரு.
* உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இந்த மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். அந்த மூன்றுமே இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
* உன்னைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரிந்தால் மற்றவர்களைப் புன்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
* ஒரு யானையின் உதையை இன்னொரு யானைதான் தாங்க முடியும்.
* ஒரு பொய் ஈட்டியைவிட அதிகமான துன்பத்தைக் கொடுக்க முடியும்.
* எத்தனையோ, அநீதிகள் பழக்கத்தால் நீதிகளாகத் தோன்றுகின்றன.
* ஓநாய்க்குக் கருணை காட்டுவது ஆட்டுக் குட்டிக்குக் கொடுமை செய்வதாகும்.
* கரி சாம்பலைப் பார்த்து சிரிக்கிறது.
* கஞ்சனுடைய பணப் பெட்டியைத் திறக்கும் சாவி, சாவின் கையில் இருக்கிறது.
* இதயம் ஒரு வெள்ளாடு போன்றது. அனைக் கட்டிப்போட வேண்டும்.
* இதயம் ஒரு சிறு குழந்தை.
* ஏழ்மைப்பார்த்து சிரிப்பவன் அதனைத் தன் பக்கம் இழுக்கிறான்.
* ஓர் அழகான பெண் மகிழ்ச்சியடைந்தால் பணப்பை கண்ணீர் விடும்.
* ஒரு சங்கிலியின் வலிமை அச்சங்கிலியிலுள்ள வலிமை குறைந்த வளையத்தைப் பொறுத்தது. ஒரு குழுவின் வலிமை அதிலுள்ள வலிமையற்றவனைப் பொறுத்திருக்கிறது.
* காதல் நோய்க்கு மருத்தவன் இல்லை.
* நாக்குதான் மனிதனைக் கொல்கிறது. நாக்குதான் மனிதனைக் காப்பாற்றுகிறது.
* திறமையான நீச்சல்காரனைத்தான் ஆறு அடித்துக்கொண்டு செல்கிறது.
* பணக்காரன், குழந்தை வேண்டுமென்று கேட்டால் பணம் வருகிறது. ஏழை பணம் வேண்டும் என்று கேட்டால் குழைந்தைக் கிடைக்கின்றன.
* மனித குலம் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், குழந்தைகள் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.
* பொருள் வாங்குபவனுக்கு ஆயிரம் கண்கள் தேவை விற்பவனுக்கோ ஒரு கண் போதும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum