Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை நிறுத்தம்
Page 1 of 1
சென்னை-அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் வேலை நிறுத்தம்
டிரைவர், கண்டக்டர் மீது திமுக கவுன்சிலரின் மகனும் அவரது அடியாட்களும் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னை மாநகரக் கழக பஸ் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தியாகராய நகரில் இருந்து ஆவடிக்கு நேற்றிரவு மாநகர போக்குவரத்து க் கழகப் பேருந்து (தடம் எண்: 147பி) சென்றது. அம்பத்தூர் எஸ்டேட் ரோட்டில் அந்த பஸ், ஒரு கார் மீது பக்கவாட்டில் உரசுவது போல் சென்றது.
அந்த காரில் அம்பத்தூர் நகராட்சி 38வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புவின் மகன் செந்தில் சுரேஷ், கவுன்சிலரின் தம்பி குட்டி இருவரும் இருந்தனர். டிரைவர் உதயகுமார் என்பவர் காரை ஓட்டினார்.
இதையடுத்து காரில் இருந்தவர்கள் பஸ்சை வழிமறித்து டிரைவருடன் வாக்குவாதம் செய்தனர். டிரைவருக்கு ஆதரவாக கண்டக்டர் சுப்பிரமணி பேசினார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
செந்தில் சுரேஷ் செல்போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தகவல் தரவே, அங்கு வந்த கும்பல் டிரைவர் கண்டக்டரை தாக்கியதுடன் அந்த பஸ்ஸையும், பிற போக்குவரத்துக் கழக பஸ்களையும் அடித்து நொறுக்கியது. இதில் 3 பஸ்கள் சேதமடைந்தன.
டிரைவர், கண்டக்டர்களும் பஸ்களும் திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தகவல் பரவியதும் பஸ்களை நிறுத்தி டிரைவர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருமங்கலம் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் விரைந்து வந்து டிரைவர், கண்டக்டர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்திய ரெளடிக் கும்பலை கைது செய்யாத வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து செந்தில் சுரேஷ், உதயகுமார், குட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கவுன்சிலர் அன்புவையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் டிரைவர், கண்டக்டர்கள் கூறிவிட்டனர்.
விடிய விடிய பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இந் நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு டிரைவரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து இன்று இன்று காலை டிப்போக்களுக்கு வந்த டிரைவர்களும், கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.
வேலை நிறுத்தம் பற்றி தெரியாத சில டிரைவர், கண்டக்டர்கள் தான் வழக்கம் போல் பஸ்களை இயக்கினர். அவர்களையும் மற்ற தொழிலாளர்கள் நடுவழியில் மறித்து பஸ்களை இயக்க விடாமல் தடுத்தனர்.
இதனால் சென்னை நகர் முழுவதும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. உடைக்கப்பட்ட 3 பஸ்களையும் திருமங்கலம் பஸ் டிப்போ முன் பொதுமக்கள் பார்வைக்காக தொழிலாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
பஸ் டெப்போக்களின் கதவுகளை மூடி, யாரும் பஸ்களை இயக்கிவிடாத வகையில் தொழிலாளர்கள் முடக்கி வைத்துள்ளனர்.
இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
இயஙகிய ஒருசில பேருந்துகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் ஆயிரக்கணக்கி்ல் குவிந்திருந்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
ஆட்டோக்களுக்கும் ஷேர் ஆட்டோக்களுக்கும் பெரும் டிமாண்ட் நிலவுகிறது. வழக்கமான ஆட்டோக்கள் கூட ஷேர் ஆட்டோக்களாக மாறி, ஏழு எட்டு பேரை ஏற்றிச் சென்றன.
ஆட்டோ கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஷேர்-ஆட்டோக்களில் ஏராளமான பயணிகள் தொங்கிக் கொண்டு பயணித்தனர்.
என்ஜின் கோளாறு: பறக்கும் ரயில் சேவையும் பாதிப்பு:
இதற்கிடையே இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில் பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே அந்த ரயிலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் ரயில் நடுவழியில் நின்றது. இதையடுத்து கடற்கரை -வேளச்சேரி மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.
ரயில்வே பொறியாளர்கள் விரைந்து என்ஜினில் பழுதை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியாததால் அந்த ரயிலை கடற்கரையில் இருந்து வந்த மற்றொரு ரயில் என்ஜின் இழுத்துச் சென்றது.
அதன் பிறகே கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்
தட்ஸ்தமிழ்
இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தியாகராய நகரில் இருந்து ஆவடிக்கு நேற்றிரவு மாநகர போக்குவரத்து க் கழகப் பேருந்து (தடம் எண்: 147பி) சென்றது. அம்பத்தூர் எஸ்டேட் ரோட்டில் அந்த பஸ், ஒரு கார் மீது பக்கவாட்டில் உரசுவது போல் சென்றது.
அந்த காரில் அம்பத்தூர் நகராட்சி 38வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புவின் மகன் செந்தில் சுரேஷ், கவுன்சிலரின் தம்பி குட்டி இருவரும் இருந்தனர். டிரைவர் உதயகுமார் என்பவர் காரை ஓட்டினார்.
இதையடுத்து காரில் இருந்தவர்கள் பஸ்சை வழிமறித்து டிரைவருடன் வாக்குவாதம் செய்தனர். டிரைவருக்கு ஆதரவாக கண்டக்டர் சுப்பிரமணி பேசினார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
செந்தில் சுரேஷ் செல்போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தகவல் தரவே, அங்கு வந்த கும்பல் டிரைவர் கண்டக்டரை தாக்கியதுடன் அந்த பஸ்ஸையும், பிற போக்குவரத்துக் கழக பஸ்களையும் அடித்து நொறுக்கியது. இதில் 3 பஸ்கள் சேதமடைந்தன.
டிரைவர், கண்டக்டர்களும் பஸ்களும் திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தகவல் பரவியதும் பஸ்களை நிறுத்தி டிரைவர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருமங்கலம் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் விரைந்து வந்து டிரைவர், கண்டக்டர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்திய ரெளடிக் கும்பலை கைது செய்யாத வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து செந்தில் சுரேஷ், உதயகுமார், குட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கவுன்சிலர் அன்புவையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் டிரைவர், கண்டக்டர்கள் கூறிவிட்டனர்.
விடிய விடிய பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இந் நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு டிரைவரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து இன்று இன்று காலை டிப்போக்களுக்கு வந்த டிரைவர்களும், கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.
வேலை நிறுத்தம் பற்றி தெரியாத சில டிரைவர், கண்டக்டர்கள் தான் வழக்கம் போல் பஸ்களை இயக்கினர். அவர்களையும் மற்ற தொழிலாளர்கள் நடுவழியில் மறித்து பஸ்களை இயக்க விடாமல் தடுத்தனர்.
இதனால் சென்னை நகர் முழுவதும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. உடைக்கப்பட்ட 3 பஸ்களையும் திருமங்கலம் பஸ் டிப்போ முன் பொதுமக்கள் பார்வைக்காக தொழிலாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
பஸ் டெப்போக்களின் கதவுகளை மூடி, யாரும் பஸ்களை இயக்கிவிடாத வகையில் தொழிலாளர்கள் முடக்கி வைத்துள்ளனர்.
இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
இயஙகிய ஒருசில பேருந்துகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் ஆயிரக்கணக்கி்ல் குவிந்திருந்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
ஆட்டோக்களுக்கும் ஷேர் ஆட்டோக்களுக்கும் பெரும் டிமாண்ட் நிலவுகிறது. வழக்கமான ஆட்டோக்கள் கூட ஷேர் ஆட்டோக்களாக மாறி, ஏழு எட்டு பேரை ஏற்றிச் சென்றன.
ஆட்டோ கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஷேர்-ஆட்டோக்களில் ஏராளமான பயணிகள் தொங்கிக் கொண்டு பயணித்தனர்.
என்ஜின் கோளாறு: பறக்கும் ரயில் சேவையும் பாதிப்பு:
இதற்கிடையே இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில் பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே அந்த ரயிலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் ரயில் நடுவழியில் நின்றது. இதையடுத்து கடற்கரை -வேளச்சேரி மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.
ரயில்வே பொறியாளர்கள் விரைந்து என்ஜினில் பழுதை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியாததால் அந்த ரயிலை கடற்கரையில் இருந்து வந்த மற்றொரு ரயில் என்ஜின் இழுத்துச் சென்றது.
அதன் பிறகே கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» சென்னை நோக்கியா தொழிற்சாலையில் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
» 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
» ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
» ராஜ்யசபா டிவி நேரடி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்
» நவம்பர் 19-ல் வங்கிகள் வேலை நிறுத்தம்
» 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
» ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
» ராஜ்யசபா டிவி நேரடி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்
» நவம்பர் 19-ல் வங்கிகள் வேலை நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|