Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகை ஈர்க்கும் பத்துமலை தைப்பூசம்!
3 posters
Page 1 of 1
உலகை ஈர்க்கும் பத்துமலை தைப்பூசம்!
![உலகை ஈர்க்கும் பத்துமலை தைப்பூசம்! Batucaves03](https://2img.net/h/freemalaysiatoday.com/tamil/wp-content/uploads/2010/01/batucaves03.jpg)
தமிழர் கொண்டாடும் சமய விழாக்களில் தைப்பூசம் சிறப்பு இடம் பெறுகிறது. ‘தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய்’ என்று திருஞானசம்பந்தர் தைப்பூசத்தைக் குறித்துப் பாடுகிறார்.
மலேசியத் தமிழர் வரலாற்றில் பத்துமலையும் தைப்பூசமும் பிரிக்க முடியாமல் இணைந்துள்ளன. பத்துமலை என்ற பெயர் மலேசியத் தமிழரிடம் மட்டுமே உண்டு. இந்தப் பெயரோடு இணைந்த மற்றொரு பெயர் தம்புசாமிப் பிள்ளை.
கோலாலம்பூர் துன் எச். எஸ்.லீ சாலையில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயிலின் அடித்தளம் இவர் சிந்தனையில் எழுந்தது. 1873இல் கோலாலம்பூர் தொடர்வண்டி நிலையத்தின் அருகில் அத்தாப்புக் குடிசையில் குடி கொண்டிருந்த அம்மாவுக்குத் தம்புசாமிப் பிள்ளை 1885இல் இப்போதுள்ள இடத்தில் சற்றுச் சிறந்த ‘இல்லம்’ அமைத்துக் கொடுத்தார். அப்போதும் மனநிறைவு அடையாதவர் 1887இல் அழகிய கற்கோயில் அமைத்தார். 1968இல் இப்போதிருக்கும் வடிவத்தில் அமைந்த கோயில் 1972இல் ஐந்து நிலைக் கோபுரங்களோடு புதுப்பிக்கப்பட்டது.
தம்புசாமிப் பிள்ளை
தம்புசாமிப் பிள்ள 1850இல் சிங்கப்பூரில் பிறந்து ராபிள்ஸ் கல்லூரியில் ஆங்கிலம் பயின்று ஜேம்ஸ் கத்ரி டேவிட்சன் என்பவருடன் கப்பலில் கிள்ளான் துறைமுகம் வந்து சேர்ந்தார். இந்த ஜேம்ஸ் கத்ரி டேவிட்சன் மலாயாவின் முதல் பிரிட்டீஸ் ரெசிடெண்ட் ஆகப் பின்னர் பொறுப்பேற்றார். தம்புசாமிப் பிள்ளை தொடக்கத்தில் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் அரசுக் கருவூலத்தில் பணியாற்றினார்.
அரசுப் பணியைத் துறந்து விரைவில் ஒரு வணிகராக, ஈயச்சுரங்க அதிபராக, அரசுக் குத்தகையாளராக சமூகப் பொருளாதாரப் படிகளின் உச்சிக்கு விரைந்து சென்றார். இந்தப் பின்னணிதான் கோலாலம்பூரில் கோயில்களும் தமிழ்ப் பள்ளிகளும் எழுப்புவதற்கு இவருக்குத் துணையானது.
இப்போதுள்ள ஜாலான் துன் எச்.எஸ். லீ அப்போது ஜாலான் பண்டார். இங்கு அன்னைக்கு ஆலயம் அமைத்த தம்புசாமிப் பிள்ளை பத்துமலை குகையைக் கண்டு அங்கு முருகனைக் குடி வைக்க முனைந்தார்.
![உலகை ஈர்க்கும் பத்துமலை தைப்பூசம்! Thaippusam2](https://2img.net/h/freemalaysiatoday.com/tamil/wp-content/uploads/2010/01/thaippusam2.jpg)
பத்துமலை முருகன்
ஏறத்தாழ 40 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்துமலைக் குகை சுண்ணாம்புக் கற்களால் ஆனது. அருகில் ஓடும் ஆற்றை மலாய் மொழியில் சுங்கை பத்து (கல் ஆறு) என்று அழைத்தனர். அந்தப் பெயரையே இந்த மலைக்கும் சூட்டினர் தமிழர். இப்படித்தான் இந்தக் குகை பத்துமலை ஆனது.
1892இல் 118 ஆண்டுகளுக்கு முன் தம்புசாமிப் பிள்ளை முருகப்பெருமானை பத்துமலைக் குகையில் குடி வைத்தார். அப்போது முதல் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
அப்போது இப்போது இருப்பதுபோல் 272 படிகள் இல்லை. செடிகளையும் கொடிகளையும் பிடித்துக் கொண்டுதான் மலை ஏற வேண்டும். மழைக்காலத்தில் சேற்றிலும் சகதியிலும் ஏறிப் போய் முருகனை வணங்க வேண்டும். அப்போதைய மலாயாத் தமிழரின் வாழ்க்கைக் கனவு என்பது ஒரு முறையாவது பத்துமலைக்குப் போய் வர வேண்டும் என்பதுதான். வழிபாடு முடித்து வீடு திரும்பும்போது அவல் பொரி, கடலையோடு வெண்கலச் சாமான்களும் வாங்கிக் கொண்டால்தான் பத்துமலை யாத்திரையும் மனமும் நிறைவு அடையும்.
வெள்ளிரதம்
1930இல் 50,000 ரிங்கிட் செலவில் மரத்தால் ஆன வெள்ளிரதம் அமைந்தது. பின்னர் 1983இல் 350 கிலோ வெள்ளியைக் கொண்டு கவசம் இடப்பட்ட வெள்ளிரதம் செய்யப்பட்டது. இது 350,000 ரிங்கிட் செலவில் அமைந்தது.
6837 தமிழ் நாட்டில் திறன் மிக்க தச்சுப் பணியாளரால் செய்யப்பட்ட இந்த ரதம் 12 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுக் கப்பலில் கொண்டு வரப்பட்டது. இங்கு இணைக்கப்பட்டு முருகனுக்கு ஏற்ற முருகோடு முழுமை செய்யப்பட்டது. 6.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ரதத்தில் 240 சிறிய மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. மரத்தால் செய்யப்பட்ட இரண்டு குதிரைகள் தேரை இழுத்துச் செல்வது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பல வண்ண விளக்குகளால் இரவில் மிதக்கும் ஒளிக் குன்றாக இது விளங்குகிறது.
தைப்பூசத்திற்கு இரண்டு நாட்களுக்கு முந்திய நள்ளிரவு 12 மணிக்கு ஜாலான் துன் எச்.எஸ் லீ மகாமாரியம்மன் கோயிலிருந்து முருகன், வள்ளி தெய்வானை உடன் கொண்டு பத்துமலைக்கு எழுந்தருள்வார். இந்த நள்ளிரவு வழிநடைதான் பெரும்பான்மை இளையருக்குத் ‘தைப்பூசம்’ நேர்த்திக்கடனாக 15 கிலோமீட்டர் வழிநடக்கும் உண்மை பக்தரும் பலர்.
ஐம்பது ஆண்டுக்கு முன்பெல்லாம் காவடிகளும் பால் குடங்களும் எளிமையாக இருந்தன. பக்தி காற்று வெளி எங்கும் நிறைந்திருந்தது. இப்போது அலங்காரமாகவும் அதிசயமாகவும் எல்லாமே கண்ணுக்கு விருந்தாகிறதேயன்றி கருத்துக்கு மருத்தாகவில்லை என்று வருந்திச் சொல்கின்றனர் அடியார் பலர்.
மலை அடிவாரத்தில் மூன்று குகைகள் உள்ளன. இவற்றில் இராமன் வரலாற்றைக் கூறும் கலைக்குகை ஒன்று. ஒன்று திருவள்ளுவர் கோட்டமாக திருக்குறள் பாடல்களுக்கு விளக்கம் கூறுகிறது. மற்றொன்று ஓவியக் கூடமாக விளங்குகிறது. அடிவாரத்தில் விநாயகர், சுந்தரேசுவரர், வெங்கடேசுவரர், ஆகியோர்க்குக் கோயில்கள் உள்ளன. இராமாயணக் குகைக்குப் போகும் வழியில் 50 அடி உயரத்தில் இராமபக்தன் அனுமன் காட்சி கொடுக்கிறார். மலைக்குப் போகும் படிமுகத்தில் முருகப்பெருமான் 130 அடி உயரத்தில் பத்துமலைக்கு அப்பாலும் முகம் காட்டி அருள் செய்கிறார்.
இயற்கை போற்றி!
தைப்பூசத்தன்று 10 இலட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கூடுகின்றனர். தைப்பூசம் அல்லாத காலங்களிலும் சுற்றுப்பயணிகள் இயற்கை அழகைப் பருக இங்குக் கூடுகின்றனர். இங்குள்ள குகைகளில் இருள் மூடிய கருங்குகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத ட்ராப்டூர்’ (Liphistius Batuensis) என்னும் அரிய வகை சிலந்திகள் காணப்படுகின்றன. குகைகளின் உட்பகுதிகளில் சூரிய ஒளி படும் பகுதிகளில் அரிய வகை தாவரங்கள் காணப்படுகின்றன. இயற்கைப் போற்றியர் பலர் ஆண்டு முழுவதும் இவற்றைக் காண்பதற்கு வந்து போகின்றனர்.
அருந்தமிழர் தம்புசாமியார் வாழ்க!
ஆறு. நாகப்பன்
ஆறு. நாகப்பன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகை ஈர்க்கும் பத்துமலை தைப்பூசம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்!
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
» தைப்பூசம்
» தைப்பூசம்
» மலேசியா பத்துமலை முருகன் கோயில்
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
» தைப்பூசம்
» தைப்பூசம்
» மலேசியா பத்துமலை முருகன் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|