Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
+3
ரபீக்
கலைவேந்தன்
Aathira
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
கவிப்பேரரசு வைரமுத்து
முதல் முதலாய் அம்மாவுக்காக.....
-----------------------------------------------------
ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!
காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?
பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு
கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்
கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்
தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே
படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?
Last edited by Aathira on Thu Sep 30, 2010 11:46 pm; edited 1 time in total
Re: .கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
பலமுறை பார்த்து கேட்டு ரசித்ததெனினும் இங்கே வழங்கியமைக்கு நன்றி ஆதிரா...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: .கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
இறக்க முடியாத சிலுவைகள்...!
சொன்னவள் நான் தான்... உங்களுக்கும்சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்...
என்று சொன்னவள் நான் தான்...
உங்களை தவிர என் கண்களுக்கு
எதையும்பார்க்கத்தெரியவில்லை...
என்று சொன்னவள் நான் தான்...
உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையில்
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்...
நம் கல்யாணத்தில் கடல் முத்துக்களையும்
வானம் நட்சத்திரங்களையும் அட்சதை போடும்
என்று சொன்னவள் நான் தான்...
நாம் பிரிந்தால் மழை மேல் நோக்கி பெய்யும்
கடல்மேல் ஒட்டகம் போகும் காற்று மரிக்கும்
என்று சொன்னவள் நான் தான்...
இதோ, அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதை சொல்வதும் நான் தான்...
என்னை மன்னித்து விடுங்கள்
என்னை மறந்து விடுங்கள்...
நான் காதல் கொண்டது நிஜம்
கனவு வளர்த்தது நிஜம்
என் இரத்தத்தில் இரண்டு அணுக்கள்
சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை உச்சரிப்பது மட்டுமே நிஜம்...
என்னை மன்னித்து விடுங்கள்
என்னை மறந்து விடுங்கள்...
காதலரை தெரிந்த எனக்கு
காதலை தெரியவில்லை...
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை...
இந்தி்யா காதலின் பூமிதான்
காதலர் பூமி அல்ல...
காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்
கல்யாணத்திற்கு தான் கால்களும் தெரியும்...
எனக்கு சிறகு தந்த காதலா!
என் கால்களின் லாடத்தை யார் அறிவார்...
என் தாயை விட சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் என் தந்தை...
சீதனம் கொணர்ந்த பழைய பாய்போல்
கிழிந்து போன என் தாய்...
தான் பூப்பெய்திய செய்தி
புரியாத என் தங்கை...
கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாட்ராவை
நினைத்து ஏங்கும் என் அண்ணன்...
கருப்பு வெள்ளை தொலைக்கட்சியில்
கலர் கனவு காணும் என் தம்பி...
அத்தனை பேருக்கும் மாதாமாதம்
பிராணவாயு வழங்கும் ஒரேஒரு நான்...
கால்களில் லாடங்களோடு எப்படி
உங்களோடு ஓடி வருவேன்...
என்னை மன்னித்து விடுங்கள்
என்னை மறந்து விடுங்கள்...
ஐரோப்பாவில் கல்யாண
தோல்விகள் அதிகம்...
இந்தியாவில் காதல்
தோல்விகள் அதிகம்...
இந்தியா காதலின் பூமிதான்
காதலர் பூமி அல்ல...
போகிறேன்...
உங்களை மறக்கமுடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்...
என்னை மன்னித்து விடுங்கள்
என்னை மறந்து விடுங்கள்...
கவி பேரரசு வைரமுத்து...
Re: .கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
இறக்கமுடியாத சிலுவைகள்..! பலமுறை கேட்டு ரசித்து கண்ணீர் விட்ட கவிதை...!
அருமை அருமை... தொடருங்கள் ஆதிரா...!
அருமை அருமை... தொடருங்கள் ஆதிரா...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: .கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
அழகான பதிவுக்கு அன்பு நன்றிகள் அக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: .கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
மேற்கண்ட வைரமுத்து கவிதைகள் வலைமனையில் தோழிமார்கதை கவிதை மேல் க்ளிக்கினால் அந்த கவிதை இனிய பாடலாய் ஒலிக்கும் விதம் அருமை ஆதிரா...!
வழங்கியமைக்க்கு மிக்க நன்றி..!
வழங்கியமைக்க்கு மிக்க நன்றி..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: .கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
கலை wrote:மேற்கண்ட வைரமுத்து கவிதைகள் வலைமனையில் தோழிமார்கதை கவிதை மேல் க்ளிக்கினால் அந்த கவிதை இனிய பாடலாய் ஒலிக்கும் விதம் அருமை ஆதிரா...!
வழங்கியமைக்க்கு மிக்க நன்றி..!
எனக்கு இப்படியெல்லாம் செய்யத் தெரியாதே. பின்னாலேயே வந்து கவிதைகளின் வரி வடிவத்தைப் பதிந்தமைக்கும் இனிய பாடலாய ஒலிக்கும் விதம் செய்தமைக்கும் மிக்க நன்றி கலை..
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிப்பேரரசு வைரமுத்துவின் மருத்துவக் கவிதை
» கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’
» கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்
» கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்
» எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா? - கவிப்பேரரசு வைரமுத்துவின் பதில்
» கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’
» கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்
» கவிப்பேரரசு வைரமுத்துவின் தந்தை மரணம்
» எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா? - கவிப்பேரரசு வைரமுத்துவின் பதில்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|