ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ?

4 posters

Go down

 இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ? Empty இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ?

Post by Guest Fri Sep 24, 2010 11:56 pm

 இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ? 11580912

நான்கவனிக்கப்படவில்லை ( கவன ஈர்ப்பு வேலை செய்யவில்லை ) .. என் அதிகாரமும் பிரயோசனப்படவில்லை.. ( ஆளுமை எடுபடவில்லை ) எனும்போது கோபம் அதிகமாகி அடுத்த கட்ட நடவடிக்கையாக பழிவாங்குதல் / அல்லது வஞ்சம் தீர்த்தலில் வந்து நிற்பார்கள்..

அலுவலில் தாம் எதிர்பார்த்த புராஜெக்டில் தாம் இணைத்துக்கொள்ளப்படாவிட்டாலோ , இல்லை எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காவிட்டாலோ இந்த நடவடிக்கை எடுக்க துணிவர். தம் மேல் உள்ள குறை என்ன என ஆராயாமல் , தன் ஈகோ பாதிப்படைந்துவிட்டதாய் எண்ணி பழிவாங்கினால் மட்டுமே பாடம் படிப்பிக்க முடியும் என மிக தவறான எண்ணத்தை ஆயுதமாக்கிக்கொள்வர்.


மாமியார் மருமகள் உறவிலும் எப்போதோ நடந்த பிரச்னையை மனதில் வைத்து மருமகளை தண்டிப்பது.. அதே போல மருமகளும் வயதான மாமியாரை தண்டிப்பது.. தம்பதியினர் இடையே பிரச்னைக்கு முக்கிய காரணமே ஈகோதான்..

ஆனால் தாம்பத்யம் என்ற மிக சிறந்த மருந்தானது இந்த ஈகோவை தவிடுபொடியாக்கிவிடும்..

இல்லற வாழ்வில் இருவர் மனமொத்து காமம் கொள்ளும்போது அங்கு நான் பெரியவன்/ள் நீ சின்னவன்/ள் என்பதற்கே இடமில்லை.. இருவரும் அடுத்தவரை திருப்தி படுத்துவதே முதன்மை என்ற எண்ணம் அங்கு மட்டுமே வருவதால் அங்கே ஈகோவுக்கு இடமேயில்லை..

அதனால்தான் எத்தனை பிரச்னை வந்தாலும் , சில நேரம் சண்டை போடுவதை பார்த்தால் அடுத்த நொடியே பிரிந்தால்தான் உண்டு போல என பார்ப்பவருக்கு தோன்றினாலும், தாம்பத்யமானது எல்லாவற்றையும் பொய்யாக்கிவிடும்..

சண்டைகள் வரலாம்.. அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்தும் கொள்ளலாம்.. ஆனால் ஒருபோதும் தாம்பத்யத்தை தள்ளி போடவோ இடைவெளி விடவோ கூடாது..

ஆனால் இதிலும் இடைவெளி வந்துவிட்டால் இந்த பழிவாங்கும் எண்ணம் அதிகரித்துக்கொண்டே செல்லும்..

ஒரு துணை அமைதியாக ஒதுங்கி சென்றாலும் அடிபட்டவர்/பாதிக்கப்பட்டவர் , அவரை சீண்டிக்கொண்டே இருப்பார்.. பழிவாங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்..

" நீங்க அன்னிக்கு அப்படி செய்தீங்கல்ல.. அதுக்கு பலனா நான் இன்னிக்கு இங்கே இப்படி செய்கிறேன்.."

அவர் மறந்தே போயிருக்ககூடும் என்று என்ன செய்தார் என்று.. ?..

சரி மறந்துடு .. அத விட்டு வெளியே வா னு சொன்னா பிடிவாதமா வர மறுப்பார்கள்.

" உங்க அண்ணன்/அப்பா என்னை அவமதித்தார் ..." னு கணவனும் ,

" உங்க அம்மா என்னை கொடுமை படுத்தினாங்க . அதனால் உங்க ஊர் பக்கமே வர மாட்டேன் னு அமனைவியும் தத்தம் துணையையே பழிவாங்குவர்..

இதில் பாதிக்கப்படுவது தாமும் தம் வாரிசுகளுமே என எண்ணாமல்.. ஒரு நல்ல தம்பதி செய்ய வேண்டியது என்ன?.. நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் குழந்தைகளிடம் அவர்களை பற்றி குற்றம் குறை சொல்லாமல் கொஞ்சம் கவனமா வேணா இருக்க சொல்லிவிட்டு , உரிய மரியாதை கொடுக்க சொல்லி பழக்கணும்..

அக்குழந்தைகள் வித்யாசம் பாராட்டமல் செய்யும் மரியாதையே கூட குடும்பங்கள் மீண்டும் மனஸ்தாபம் இல்லாமல் ஒன்றுபட வழிவகுக்கும். அதே தான் துணைகளும்.

கணவனோடு மனஸ்தாபம் என்றாலும் அமைதியாக இருந்துகொண்டு , அப்பாவை குழந்தைகளிடம் விட்டுகொடுக்காமல் இருக்கவேண்டியது மனைவியின் கடமை.

அப்பா எத்தனை கஷ்டப்பட்டு உழைக்கிறார் என்று சண்டையிருந்தாலும் மிக நேர்மையாக ஒரு மனைவி சொல்வாரென்றால் அவர் வெற்றியை தன் பக்கம் வைத்துள்ளார்.

அதே போல மனைவி மீது சிறு மனவருத்தம் கணவர் பேசாமலேயே, குழந்தைகளிடம் , " இது அம்மாவுக்கு உதவும்னு வாங்கி வந்தேன்.. அல்லது அம்மாவை ஒய்வெடுக்க சொல். நாம் வெளியே உண்ணலாம்.. அல்லது அம்மா பேச்சை கேள் அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்வாங்க " என்பாரானல் அவர் மிக நேர்மையாக பிரச்னையை சமாளிக்க தெரிந்தவர் மட்டுமல்ல முன்னுதாரணமாய் இருப்பார்.

அதைவிடுத்து மனைவியை பழிவாங்க கணவன் அடிப்பதும் , அதை மனதில் வைத்துக்கொண்டு கணவனை பழிவாங்க மனைவி தாம்பத்யத்துக்கு ஒத்துழையாமல் இருப்பதும்....பிரச்னையை அதிகரிக்கும். பிரச்னையை ஆரம்பித்தவர் ஈகோ பாராது இரங்கி வரணும்..

தாமொருவனின்/ளின் ஈகோ முக்கியமா இல்லை மொத்த குடும்ப முன்னேற்றம் முக்கியமா?..

கோபம் எல்லாராலும் பட முடியும் .. எல்லாரிடமும் ஒரு நியாயமும் இருக்கும்...

பிரச்னை எப்படி வருகிறது என்பதை ஆராயாமல் அந்த பிரச்னையை எப்படி தீர்த்தால் என்னென்ன விளைவுகள் /தீர்வு கிடைக்கணும் என்பதை கொஞ்சம் முன்கூட்டியே ஆராய்ந்தால் இந்த பழிவாங்கும் எண்ணம் வரவே வராது..

நேர்மையா கிடைக்கவேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லையா?..உங்க மேலதிகாரிக்கு உங்களை பிடிக்கவில்லையா?.. பொறாமையா.? பொறாமையால் அவதிப்படாதவர் யாருமே இருக்க முடியாது... நாம் பொறாமைப்படும் அளவுக்கு நமக்கு ஆசீர்வாதம் கிடைத்திருக்கே என திருப்திகொண்டு அந்த பதவி உயர்வு ஏன் தனக்கு அளிக்கப்படவில்லை என நேரிலேயே சென்று விளக்கம் கேட்கலாம்..

பதில் எடக்கு மடக்கா இருந்தாலும் " எனக்கு உங்க பதில் திருப்தியில்லை.. மிக வருத்தம் .. இருந்தாலும் என் கடின உழைப்பு தொடரும் " என புன்சிரிப்போடு சொல்லி வர முடிந்தால் அதுதான் மிகப்பெரிய வீரம்..

அதை விடுத்து உன்னை என்ன செய்றேன் பார்.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. ?.. உன்னை எப்படி , எங்கே போட்டுக்கொடுக்கணும் னு எனக்கு தெரியும் என வெறிகொண்டு பழிவாங்க பேசித்திருவது மிக மிக அல்பமான கோழைத்தனம்..

நியாபகமிருக்கட்டும் கெட்டவார்த்தையோ கெட்ட செயலோ செய்வது வீரம் அல்ல.. அதை தாங்கிக்கொண்டும் கண்டுகொள்ளாமல் முன்னேறுவதே வீரம்...

ஆக இத்தகைய வீரம் தம்பதியினருக்கு இருந்தால்தான் குடும்பம் அமைதிபெறும்..

இல்லறத்தில் தோற்றுப்போக தயாராக இருப்பவர்களே அதிக வெற்றி பெருகிறார்கள்..

அவர்களை சுற்றியே குடும்பம் வலம் வரும் சூரியனை சுற்றுவது போல..

அதிக அன்பும் , அறிவும் இருப்பவர்கள் எப்போதும் விட்டுக்கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்...

நீங்கள் எப்படி.?...புன்னகை

படம் : நன்றி கூகுள்.

avatar
Guest
Guest


Back to top Go down

 இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ? Empty Re: இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ?

Post by சபீர் Sat Sep 25, 2010 9:56 am


அதிக அன்பும் , அறிவும் இருப்பவர்கள் எப்போதும் விட்டுக்கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்... சியர்ஸ் ஆமோதித்தல்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ? Empty Re: இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ?

Post by tdrajeswaran Sat Sep 25, 2010 12:13 pm

"இல்லறத்தில் தோற்றுப்போக தயாராக இருப்பவர்களே அதிக வெற்றி பெருகிறார்கள்."

அருமையான கட்டுரை, சிறப்பான வார்த்தைகள்.

நன்றி.
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

 இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ? Empty Re: இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ?

Post by ரபீக் Sat Sep 25, 2010 12:20 pm

அவசியமான தகவலுக்கு நன்றி நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ? Empty Re: இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ?

Post by gunashan Sat Sep 25, 2010 12:24 pm

எல்லோருக்கும் அவசியம் தேவைப்படும் தகவல் கண்ணு..
வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ? Empty Re: இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum