ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு

2 posters

Go down

இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Empty இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு

Post by jeylakesengg Tue Sep 07, 2010 9:42 am


படிக்கும் காலத்திலேயே பிள்ளைகளுக்குப் பணத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கணுமா என்ன? சம்பாதிக்கும் காலத்தில் பணத்தைப் பற்றித் தெரிஞ்சுகிட்டா போதாதா? சின்ன வயதிலேயே எதற்கு கவலைகளை அறிமுகப்படுத்தணும்?... என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். அப்படி எழுந்தால்தான் நாம் நம் பிள்ளைகளை அக்கறையோடு கவனிக்கிறோம் என்று அர்த்தம். இந்தக் குழப்பங்கள் வரவில்லை என்றால் ஒன்று ரொம்பவும் தெளிவானவர்களாக இருக்க வேண்டும், அல்லது பிள்ளைகளை கவனிக்கக்கூட நேரமில்லாத அல்ட்ரா மாடர்ன் ஆசாமிகளாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடக் காலத்தில் நாம் படித்த பாடம் பசுமரத்து ஆணி போல! என்பதுதானே... ஆணி அடித்து வைப்பது போல ’மணி’யைப் பற்றியும் ஆழமாக அடித்து வைக்க வேண்டாமா?
உலகின் முதல் பணக்காரராக இருப்பவர் வாரன் பஃபெட்... அவருடைய வருமானம் முழுக்க பங்குச் சந்தை மூலமாக வந்ததுதான்... பல ஆயிரம் கோடிகளை சொத்தாகக் கொண்ட மனிதர்... அவர் எப்போது தன்னுடைய பங்கு வர்த்தகத்தைத் தொடங்கினார் தெரியுமா... ஆரம்பப் பள்ளிக்கூடக் காலத்தில்!
அவர் வயதை ஒட்டிய பிள்ளைகள் எல்லாம் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருக்க... அந்த பிள்ளைகளுக்கு மத்தியில் கோக் விற்றுப் பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தார் பஃபெட்! இதைச் சொன்னதும், ஏதோ அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது என்று நினைத்துவிடாதீர்கள்... ஓரளவுக்கு வசதியான பங்குத் தரகராகத்தான் இருந்தார் பஃபெட்டின் தந்தை!
பின்னாளில் கோடிகளைக் கொட்டிய அவருடைய அனுபவத்தின் விதையாக இருந்தது அவருடைய இளமைக் காலம்தான்! அதனால்தான் இளமையிலேயே பணத்தை அறிமுகப்படுத்தி வைத்துவிடுவது நல்லது என்று சொல்கிறேன்.
சரி, நம்முடைய விஷயத்துக்கு வந்துவிடலாம்...
இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு பிறந்திருக்கும்... அதிலே சேமிப்பு என்ற புதிய விஷயம் இடம் பிடித்திருக்கும். சேமிப்பு என்பது நல்ல விஷயம்தான்... அதில் முக்கியமான விஷயம்தான் வங்கி சேமிப்பு. ஆனால், வேறு வழியில்லாமல்தான் வங்கிகளே உங்கள் சேமிப்புப் பணத்தை வாங்கிப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கை முடித்துக்கொள்வதாகச் சொன்னால் மலர்ந்து சிரித்துக்கொண்டே கணக்கை முடித்து உங்களை அனுப்பிவிடுவார்கள். உங்கள் கணக்கில், லட்ச ரூபாயே இருந்தால்கூட அந்தப் பணத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இதைப் படித்த உடனே வங்கி சேமிப்பு முறையை நான் குறை சொல்வதாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது... உங்களுடைய சேமிப்புக் கணக்குக்கு அவர்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். உங்கள் பணம் அந்த வங்கியில் இருப்பதால் அதற்கான வட்டியாக ஒரு தொகையையும் வழங்குகிறார்கள். ஆனால், இதனால், அவர்களுக்குத் துளிகூட லாபம் கிடையாது. சேவை நோக்கத்தோடுதான் இதைச் செய்துவருகிறார்கள்.
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... நாம போட்டு வைக்கிற பணத்தை விவசாயிகளுக்கும் தொழில் தொடங்கறவங்களுக்கும் கடனாக் கொடுக்கறாங்க... அதுக்கு அதிக வட்டி வசூலிக்கிறாங்க... அதை வெச்சுத்தானே நமக்கு வட்டி கொடுக்கறாங்க... அப்படி இருக்கும்போது லாபமில்லைனு எப்படிச் சொல்லலாம்...’ என்று உங்களுக்குத் தோன்றும்.
உண்மைதான்... வங்கியின் செயல்பாடே அதுதான்... அவர்கள் கடனாகக் கொடுப்பது மக்கள் சேமிப்பாகப் போட்ட பணத்தைத்தான்... ஆனால், சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதிலும் இப்போது ஏ.டி.எம். வசதி வந்த பிறகு நீங்கள் வங்கி நேரமாக இல்லாத அகால ராத்திரியில்கூட உங்கள் தேவைக்குப் பணம் எடுக்க முடியும்.
அப்படி ஒரு சூழல் இருக்கும்போது உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து வேறொருவருக்குக் கடனாகக் கொடுத்துவிட்டால் என்னாகும்..? நீங்கள் பணம் எடுக்கப் போகும்போது உங்களுக்கு பணம் கிடைக்காது. வங்கியைக் குறை சொல்வீர்கள். அதனால், வங்கியால் நீங்கள் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்தைப் பெரிய அளவில் நீண்ட காலத்துக்கு வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அதனால்தான் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்குக் குறைவான வட்டியே கொடுக்கிறார்கள்.
உங்களுடைய அவசரத் தேவைகளுக்கான தொகையை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொண்டு மீதியைக் குறைந்தபட்சம் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்காவது மாற்றுங்கள்... நீங்கள் போடும் தொகையைப் பொறுத்து 6.5% முதல் 9%வரை வட்டி வழங்குகின்றன வங்கிகள். இதில் எவ்வளவு காலம் பணத்தைப் போட்டு வைப்பீர்கள் என்பதைப் பொறுத்தும் வட்டி மாறும்.
சில வங்கிகள் ஒரு வசதியை வைத்திருக்கின்றன. நீங்கள் சேமிப்புக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் அந்தத் தொகையைத் தானாகவே ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றிவிடுவார்கள். நீங்கள் எப்போது அந்தத் தொகையை எடுக்கிறீர்களோ, அதுவரை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி கொடுப்பார்கள். உங்களைக் கூடியவரையில் பணத்தை எடுக்காமல் வைத்திருக்கும் யுக்திதான் இது. எதுவாக இருந்தாலும் நம் சேமிப்புக்குத்தானே வழி சொல்கிறார்கள்... நல்லதாக இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே!
வங்கியில் இருக்கும் சேமிப்பு வழிகளில் ரெக்கரிங் டெபாசிட் கொஞ்சம் எளிமையான வழி... சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பதைவிட கொஞ்சம் அதிகமாக வட்டி கிடைக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... அதைவிட இன்னொரு லாபம் இதில் இருக்கிறது. அந்த வழியில் பார்த்தால் ரெக்கரிங் டெபாசிட் நல்ல சேமிப்பு வழிதான்...
சிலர் வருடத்துக்கு ஒருமுறை செய்வதற்கான சில விஷயங்கள் வைத்திருப்பார்கள். காருக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது, மெடிக்ளைம் பிரீமியம் செலுத்துவது போன்ற அந்தச் செலவுகள் ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டிய விஷயம்... அதற்கு சில ஆயிரங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் தீபாவளி போனஸ் போன்ற தொகையைத்தான் இதற்குப் பயன்படுத்துவார்கள். அப்போ போனஸுக்குனு பிளான் பண்ணிய விஷயங்களுக்கு எங்கே போவது... கிரெடிட் கார்டைத்தான் தேய்க்கணும்..!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Empty Re: இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு

Post by கார்த்திக் Tue Sep 07, 2010 9:43 am

அதிர்ச்சி அநியாயம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Empty Re: இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு

Post by jeylakesengg Tue Sep 07, 2010 9:49 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் பாடகன்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு Empty Re: இப்போது உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ஒரு தெளிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum