ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

+7
அலட்டல் அம்பலத்தார்
jeylakesengg
ராஜா
சரவணன்
கோவை ராம்
பிளேடு பக்கிரி
ரபீக்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by ரபீக் Mon Aug 23, 2010 11:38 am

ராணுவத்திடம் பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு 'வீரமரணம்' அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன்.

இறுதிப் போரில் புலிகள் தோற்று, தலைவர் பிரபாகரனும் களத்தில் 'இல்லை' என்றான சூழலில், புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் கேபி. ஆனால் அடுத்த சில தினங்களில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். இலங்கை கொண்டு வரப்பட்டு ரகசிய விசாரணை செய்யப்பட்டார். கொஞ்ச காலம் அவரைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.

ஆனால் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, அவரைப் பற்றிய செய்திகளும், அவர் அளிக்கும் பேட்டிகளும் இலங்கை ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இப்போது வடக்கு கிழக்கு புணரமைப்பு அமைப்பின் செயலராக உள்ள கேபி, உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி பெற்று அதனை, வடக்கு கிழக்கு புணரமைப்புக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அவர் மிக நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் இந்த வாரம் வெளியாகியுள்ள பகுதியில், பிரபாகரன் எப்படி 'கொல்லப்பட்டார்' என்று மிக விரிவாக விளக்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளவற்றில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்...

"பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும் காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்பட்டது. அதனை காஸ்ட்ரோ தருவதாகக் கூறினார். ஆனால் கடைசி வரை தரவே இல்லை.

பிரபாகரனைக் காப்பாற்றிய பெயர் எனக்குக் கிடைத்துவிடுமே என்று அவர்களுக்குப் பொறாமை. அதனால்தான் இப்படி ஆனது. இயக்கத்தில் தனிநபர் ஆதிக்கம் மிகுந்ததால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம்.

அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது.

அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன்.

ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.

அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது.

ராணுவத்தின் மிக உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் பிரபாகரனின் இறுதி நேர போரைப் பற்றி மிக பெருமையாகக் கூறினார். அந்த அதிகாரி யார் என்பதை நான் சொல்ல மாட்டேன். கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்தவர்தான்.

நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களும் மிக வீரமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டார்களாம். இதில் இறுதி நேரம் வரை சற்றும் பின்வாங்காமல் பிரபாகரன் சண்டையிட்டே வீர மரணம் அடைந்துள்ளார். இதை ராணுவம் உறுதிப்படுத்தியது.

பிரபாகரனின் குடும்பத்தினர் மொத்தமாக இந்த சண்டையில் இறந்துவிட்டதும் உண்மையே. சாள்ஸ் ஆண்டனி அவர்களைக் காக்க கடைசி வரை முயன்றார்.

பிரபாகரனின் மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் போரில் இறந்தனர். துவாரகாவும் புலிகள் இயக்கத்தில் போராளியாகவே இருந்தார். பிரபாகரன் மனைவி மதிவதனி மே 14ம் தேதியே இறந்துவிட்டார்.

பிரபாகரன் தனது மகனையும் மகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார் என்று சிலர் கூறுவதில் உண்மையில்லை. பிரபாகரன் தனது பிள்ளைகள் வெளிநாடு செல்வதை அனுமதிக்கவில்லை. அவரது குடும்பம் முழுவதும் இயக்கத்தில்தான் இருந்தது.

பிரகபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மீது எனக்கு பாசம் அதிகம். அவனது மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. அவனிடம் அடிக்கடி நான் போனில் பேசியிருக்கிறேன். கடைசி நேரத்தில் கேபி மாமாவுடன் நான் போகப் போகிறேன் என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தானாம். அதை நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது...", என்று அவர் கூறியுள்ளார்.

(பிரபாகரன் மரணம் அறிந்து வைகோ குலுங்கி அழுதார்-கேபி பேட்டியின் தொடர்ச்சி நாளை)

nandri thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:59 am

சோகம் சோகம் நன்றி



'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by கோவை ராம் Mon Aug 23, 2010 2:24 pm

உண்மை எதுன்னு கடைசிவரைக்கும் தெரியாதே?வைகொ அங்கே அழுவதும் தமிழக மக்களை ஏமாற்றுவதும் ஏன்?எல்லாம் அரசியல்?
பிரபாகரன் உயிரொடு இருக்கிறாரா இல்லையா?




ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by சரவணன் Mon Aug 23, 2010 2:32 pm

சோகம் சோகம்
தன் இனத்திற்காக தன்னுடைய குடும்பத்தையே இழந்து போரிட்டு வீர மரணம் அடைந்திரிக்கிறார்.
அவரை பார்த்ததில்லை என்றாலும். அவர் காலத்தில் நானும் வாழ்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

தன்னடைய/தங்கள் குடும்பத்தாரின் சுய நலனுக்காக மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் இம்மாவீரனை சற்றேனும் சிந்தித்தால் போதும், நாடும், நம் இனமும் முன்னேறும்....

வாழ்க வளர்க மாவீரனின் புகழ்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by ராஜா Mon Aug 23, 2010 2:51 pm

சிங்கள அரசின் செய்தி தொடர்பாளர் கே.பி வாழ்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by ரபீக் Mon Aug 23, 2010 2:54 pm

எங்கள் பகுதியில் சிறுவர்கள் வார்த்தைகளை சுருக்கி பேசுவார்கள் ,உதரணத்திற்கு
கேபி -கிறுக்கு பயல்
எல்பி - லூசு பய

இதுல இவரு கேபி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by jeylakesengg Mon Aug 23, 2010 3:17 pm

இப்படியும் சில ஜென்மம் உருக்குள்ள சுத்துதுக .
இது எல்லாம் கழுத புலி .

உண்மை எப்பொழுதும் மறையாது.

இவன எல்லாம்

சுட்டுத்தள்ளூ!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 4:21 pm

rarara wrote:உண்மை எதுன்னு கடைசிவரைக்கும் தெரியாதே?வைகொ அங்கே அழுவதும் தமிழக மக்களை ஏமாற்றுவதும் ஏன்?எல்லாம் அரசியல்?
பிரபாகரன் உயிரொடு இருக்கிறாரா இல்லையா?




ராம்

இதில இதுக்கு ராசா வைகோ ....

கண்ணுக்கு கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு முழுவது வேடிக்கை பார்த்தவர் ஒருத்தர் இருக்கார் ராசா ...பெருமை பொருந்திய செம்மொழி மாநாட்டு தலைவர் ஈழத்தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப் படுபவர் முதல்வர் கருணாநிதி அய்யா தானே ராசா ..நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தான் ராசா ..

உந்த கேடுகெட்ட அரசியல் வாதியளிண்ட கதை நமக்கெதுக்கு ராசா ..
எனக்கு தெரியும் என் தலைவன் இருக்கின்றான் ...

பரமசிவன் கழுத்திலிருந்தால் பாம்மும் கருடனை பாத்து சௌக்கியமா எண்டு சொல்லுமாம் ..

ஹ ஹா ஹா எல்லாமே நாடகம் ஹக்கா அட போங்க ராசாக்கள் ...

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by jeylakesengg Mon Aug 23, 2010 5:26 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
rarara wrote:உண்மை எதுன்னு கடைசிவரைக்கும் தெரியாதே?வைகொ அங்கே அழுவதும் தமிழக மக்களை ஏமாற்றுவதும் ஏன்?எல்லாம் அரசியல்?
பிரபாகரன் உயிரொடு இருக்கிறாரா இல்லையா?




ராம்

இதில இதுக்கு ராசா வைகோ ....

கண்ணுக்கு கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு முழுவது வேடிக்கை பார்த்தவர் ஒருத்தர் இருக்கார் ராசா ...பெருமை பொருந்திய செம்மொழி மாநாட்டு தலைவர் ஈழத்தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப் படுபவர் முதல்வர் கருணாநிதி அய்யா தானே ராசா ..நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தான் ராசா ..

உந்த கேடுகெட்ட அரசியல் வாதியளிண்ட கதை நமக்கெதுக்கு ராசா ..
எனக்கு தெரியும் என் தலைவன் இருக்கின்றான் ...

பரமசிவன் கழுத்திலிருந்தால் பாம்மும் கருடனை பாத்து சௌக்கியமா எண்டு சொல்லுமாம் ..

ஹ ஹா ஹா எல்லாமே நாடகம் ஹக்கா அட போங்க ராசாக்கள் ...


அப்படி சொலுங்க அம்பலத்தாரே
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 5:30 pm

jeylakesengg wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
rarara wrote:உண்மை எதுன்னு கடைசிவரைக்கும் தெரியாதே?வைகொ அங்கே அழுவதும் தமிழக மக்களை ஏமாற்றுவதும் ஏன்?எல்லாம் அரசியல்?
பிரபாகரன் உயிரொடு இருக்கிறாரா இல்லையா?




ராம்

இதில இதுக்கு ராசா வைகோ ....

கண்ணுக்கு கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு முழுவது வேடிக்கை பார்த்தவர் ஒருத்தர் இருக்கார் ராசா ...பெருமை பொருந்திய செம்மொழி மாநாட்டு தலைவர் ஈழத்தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப் படுபவர் முதல்வர் கருணாநிதி அய்யா தானே ராசா ..நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தான் ராசா ..

உந்த கேடுகெட்ட அரசியல் வாதியளிண்ட கதை நமக்கெதுக்கு ராசா ..
எனக்கு தெரியும் என் தலைவன் இருக்கின்றான் ...

பரமசிவன் கழுத்திலிருந்தால் பாம்மும் கருடனை பாத்து சௌக்கியமா எண்டு சொல்லுமாம் ..

ஹ ஹா ஹா எல்லாமே நாடகம் ஹக்கா அட போங்க ராசாக்கள் ...


அப்படி சொலுங்க அம்பலத்தாரே

நன்றி ராசா ..ஒவ்வொரு வீரத் தமிழ் மகன் நெஞ்சங்களில் எல்லாம் எம் தலைவன் irukkinraan ராசா ..kaalam oru naal pathil sollum ராசா ...
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum