ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்

Go down

தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள் Empty தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்

Post by நவீன் Sat Aug 21, 2010 8:24 am

கோவை நகரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையும், மகளும் தீயில்
கருகி பலியானது குறித்து மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புக்கான காரணத்தை தடய
அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கோவை நகரிலுள்ள
ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், திருவள்ளுவர் நகரிலுள்ள வாடகை வீட்டில்
வசித்து வந்தவர் தாமஸ்(49); இரும்புக்கடை ஊழியர். இவரது மனைவி ஜான்சி,
பள்ளி ஆசிரியை. மகள் அல்போன்சா ரோஸ், தனியார் கல்லூரியில்
பி.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று
முன்தினம் இரவு, இவர்கள் மூவரும் தரைத்தளத்தில் உள்ள தங்களது வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் தாமசும், அவரது மனைவியும், பக்கத்து
அறையில் மகள் அல்போன்சா ரோசும் தூங்கினர். கொசுத்தொல்லை அதிகமிருந்ததால்
அல்போன்சா ரோஸ் படுத்திருந்த அறையில், கொசுவை விரட்டுவதற்கான காயில் "ஆன்'
செய்யப்பட்டு அதனுடன் ஆயில் பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள்
அதிகாலை 2 மணியளவில், மகள் அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில் தீ விபத்து
ஏற்பட்டு "பெட்' எரிந்தது. மயக்கமடைந்த நிலையிலிருந்த அல்போன்சா ரோஸ்,
தீயில் கருகினார். எனினும், பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த
பெற்றோருக்கு இது தெரியவில்லை. தரைத்தளத்திலுள்ள இவர்களது வீட்டில்
கிளம்பிய நெருப்பு புகை, மேல் தளத்திலுள்ள வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே
புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி எழுந்து, கீழே ஓடிவந்து கதவை தட்டினர்.
திடுக்கிட்டு எழுந்த தாமஸ், மகளின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை
கண்டு கதவை திறந்துவிட்டார். பக்கத்து வீட்டார், தாமஸ் மற்றும் அவரது
மனைவியை மீட்டு வெளியே இழுத்துச் சென்றனர். அப்போது, அவர்களது பிடியில்
இருந்து நழுவிய தாமஸ், தீ விபத்திலிருந்து மகளை காப்பாற்ற அறைக்குள்
ஓடினார். ஆனால், அடுத்த நிமிடமே திடீரென மயங்கி நெருப்பில் விழுந்து
படுகாயமடைந்தார். மிகமோசமான ஒருவித நச்சு வாசத்துடன் புகை வெளியேறியதால்
பக்கத்து வீட்டாரால், அவரை மீட்க முடியவில்லை. அதன்பின், நீண்ட
முயற்சிக்கு பின் தாமசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
புகைமூட்டம் குறைந்தபின்தான், அல்போன்சா ரோஸ் படுக்கையில் இருந்தவாறே
தீயில் கருகி பலியாகியிருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தந்தை தாமசும்
உயிரிழந்தார். சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற சிங்காநல்லூர்
போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து, தீ
விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து
நடந்ததா? தனி அறையில் தங்கியிருந்த அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலை
செய்து கொண்டதால் விபத்து நேரிட்டதா? என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும்
ஆராய்ந்தனர். அல்போன்சா ரோஸ் தற்கொலை செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக
"கெரசின்' அல்லது வேறு எரிபொருளை பயன்படுத்தியிருக்க வேண்டும்; அதற்கான
பாட்டில் அல்லது பிளாஸ்டிக் கேனின் பாகங்கள் எரிந்த நிலையில் வீட்டறையில்
கிடந்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற தடயங்கள் ஏதும் சம்பவம் நடந்த
அறையில் கிடைக்கவில்லை. மேலும், மின்கசிவு காரணமாக விபத்து
நடந்திருப்பதற்கான அறிகுறியும் இல்லை. அனைத்து இணைப்புகளும் சரியாகவே
இருந்தன. இதனால், என்ன காரணத்தால் தீ விபத்து நேரிட்டது என்பதை கண்டறிய,
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மாநகர
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிரிழப்பு நேரிட்ட வீட்டில் தீவிர
ஆய்வு மேற்கொண்டோம். மின்கசிவு, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து
நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென முதற்கட்ட தடய அறிவியல்
ஆய்வில் தெரியவந்துள்ளது. அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில், கொசுவை
விரட்டுவதற்கான காயிலுடன் கூடிய ஆயில் பாட்டில் உருமாறிய நிலையில்
சிதைந்து கிடந்தது; அதிலிருந்த திரவமும் வெளியேறிருந்தது. தீ விபத்து
நேரிட்டிருந்தாலும், அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலைக்கு
முயன்றிருந்தாலும் உடலில் தீப்பற்றி எரியும் போது நிச்சயம் அலறியபடி
ஓடியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், பக்கத்து அறையில்
தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் பதறி எழுந்திருப்பர்; ஆனால், அவ்வாறு
நிகழவில்லை. உடலில் தீப்பற்றி எரிந்தும் அல்போன்சா ரோசிடம் இருந்து
எவ்விதமான எதிர்விளைவு கூச்சலும் இல்லை. இதனால், வேறு விதமான யூகத்துக்கு
வரமுடிகிறது. அதாவது, கொசுவை விரட்டும் காயிலுக்கான மின் இணைப்பில் கோளாறு
ஏற்பட்டு பாட்டில் உருகி எரிந்திருக்க வேண்டும். அவ்வாறு எரியும்போது
அதிலிருந்த விஷத்தன்மையுடைய திரவத்திலிருந்து நச்சுவாயு பரவி, அவர்
மயக்கமடைந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க
வேண்டும். இதற்கான வாய்ப்புகளையும் மறுத்துவிட முடியாது. காரணம், கொசுவை
விரட்டுவதற்கான ஆயில் பாட்டிலுடன் கூடிய காயில், அல்போன்சா ரோசின்
தலைமாட்டில் தான் வைக்கப்பட்டிருந்தது. அவர் படுத்திருந்த "பெட்'டும்
சற்று உயரமானது. இதனால், படுக்கையில் தீப்பற்றி, மயக்கநிலையில் இருந்தவாறே
அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும், அவரை
காப்பாற்றுவதற்காக அறைக்குள் ஓடிய தாமசும் திடீரென மயங்கி தீயில்
விழுந்திருப்பதால், அந்த அறையில் நச்சுப்புகை பரவி இருந்திருப்பதற்கான
வாய்ப்புகளும் உள்ளன. சம்பவம் குறித்து, தடய அறிவியல் நிபுணர்களின்
உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; யூகம், சந்தேகங்களுக்கு
விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி சாவு
» வலங்கைமான் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
» இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்
» ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
» ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum