ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
heezulia
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
mohamed nizamudeen
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
VENKUSADAS
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
heezulia
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
mohamed nizamudeen
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 
VENKUSADAS
எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_m10எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

4 posters

Go down

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Empty எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

Post by ரபீக் Fri Aug 20, 2010 4:28 pm

அமைச்சர் கள் பன்னீர்செல்வமும், மு.க.அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் இங்கு வந்தவர்கள் திருமண விழாவை விட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி .

முதல்வர் கருணாநிதி இன்று காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலம் வந்தார் முதல்வர் கருணாநிதி. ரயில் நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி சென்ற முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

பின்னர் உத்தமசோழபுரம் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு கவுதமி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடக்கமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், முருகனுக்கு வீரபாகு. எனக்கு வீரபாண்டி ஆறுமுகம் என திமுக தலைவர் சொல்லுவார். கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை போல, எனக்கு வீரபாண்டி என்றும் சொல்லுவார்.

மிசா காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தோம். எனது தாயார் மீது சாரய வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அப்போது கூட எதற்கும் வருத்தப்படவில்லை. தலைவரை பார்க்க முடியவில்லையே என்றுதான் கவலையடைந்தேன்.

பெரியார், அண்ணா வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றி வரும் முதல்வர் எனது இல்ல திருமணத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்கு நன்றி சொல்ல நீ யார்?, நன்றி சொல்லி என்னை பிரிக்கப் பார்க்கிறாயா?. இது எனது இல்ல திருமணம். நானும் இந்த திருமணத்துக்கு சொந்தக்காரன். நன்றி சொல்வது தமிழர்களின் மரபு. அந்த வகையில் வீரபாண்டியார் நன்றி சொல்லியிருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை. இருந்தபோதிலும் இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறேன்.

வரும் வழி முழுவதும் திமுக தோழர்கள் எனது உருவம் பொறித்த பேனர்களை வைத்திருந்தனர். அதில் என் கட்டைவிரல் உயர்த்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. எதிரிகளை வீழ்த்த தம்பிகள் இருக்கிறார்கள். நமக்கு எப்போதும் வெற்றிகளே குவியும்.

அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் திருமண விழாவைவிட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள். வீரபாண்டியாரே ஆவேசமானவர். அவரே இங்கு நாகரீகமாக பேசினார். இதுபோன்ற நல்ல மேடைகளில் கெட்ட பெயர்களை உச்சரிக்க வேண்டாம்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், லட்சியங்களையும் இளைஞர்கள் போற்றி பாதுகாத்து சுயமரியாதை உணர்வுடன் விளங்க வேண்டும். நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம், பட்டுகோட்டை அழகிரி ஆகியோர் வலியுறுத்திய கொள்கைகளை பின்பற்ற வேண்டும். தமிழர்களின் பண்பாடு, வரலாறு, பகுத்தறிவு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

பெரியார், அண்ணா ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை உணர்வை எந்த சூழ்நிலையிலும் திராவிட இயக்கத்தினர் மறந்துவிடக் கூடாது என்றார்.

(சமீபத்தில் மேட்டூரில் குடிநீர் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்துப் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், இந்தத் திட்டம் நிறைவேறும்போது தமிழகத்தின் முதல்வராகத் தலைவர் கருணாநிதி தான் இருப்பார். ஆனால், நான் அப்போது அமைச்சராக இல்லாவிட்டால்கூட நிச்சயமாக திமுகவின் ஒரு தொண்டனாக, சாதாரண ஆறுமுகமாக அந்த விழாவில் கலந்துகொள்வேன் என்று பேசியிருந்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலி்ல் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வசதியாக வீரபாண்டியாரை ஒதுங்குமாறு துணை முதல்வர் ஸ்டாலினும் கட்சித் தலைமையும் சொல்லக் கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமை சொல்லி ஒதுங்குவதைவிட, தானே ஒதுங்கும் முடிவுக்கு வீரபாண்டியார் வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் தான் இன்றைய திருமண விழாவில் நன்றி சொல்லி என்னைப் பிரிக்க வேண்டாம் என்று முதல்வர் கூறியதாகக் கருதப்படுகிறது.)

முன்னதாக இந்தத் திருமண விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசுகையில்,

ஜெயலலிதா எல்லா இடங்களிலும் திமுக தலைவரை தரக்குறைவாக பேசுகிறார். திமுக மைனாரிட்டி அரசு என்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா எப்போது மேஜர் ஆனார். பராசத்தி, தாயே, செல்வி ஜெயலலிதா என அதிமுகவினர் பேனர் வைக்கின்றனர்.

செல்வி ஜெயலலிதா என்றால், கன்னி தாய் என பெயர் வைக்கிறார்களா? ஹார்லிக்ஸ் விவகாரத்தில் என் மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் உள்ளது. ஆதாரம் இல்லாமல் இனி எதையும் பேச வேண்டாம் என்றார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், திமுக தலைவரை தவறாக சித்திரத்து பேசுகிறார் ஜெயலலிதா. திமுக தலைவரை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.

இன்று மாலை சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை , புதிய கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், செவிலியர் கல்லூரி, புதிய பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா, 921 குடியிருப்புகளுக்கு காவிரி தனிக்கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இரவில் சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சேலத்தில் திமுகவினர் பெருமளவில் குவிந்துள்ளனர். சேலம் முழுவதும் திமுக மயமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், கட் அவுட்கள் என அமர்க்களமாக உள்ளது.

இந்த கூட்டத்தை மாநாடு போல நடத்திக் காட்டி முதல்வருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம் என ஏற்கனவே வீரபாண்டியார் கூறியுள்ளார். அதற்கேற்ப ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக உள்ளன.

இக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 11.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்படுகிறார் கருணாநிதி.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Empty Re: எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

Post by megastar Fri Aug 20, 2010 5:16 pm

இதெல்லாம் ஒரு கூத்து, அத அரேங்கேற்றதற்கு திருமண விழா ஒரு மேடை. நாமெல்லாம் பார்வையாளர்கள், கூத்து கட்றவன் இடத்துக்கு ஏற்ப வேஷம் போடுவான்... அதிர்ச்சி


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Empty Re: எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

Post by தமிழ் Fri Aug 20, 2010 5:24 pm

megastar wrote:இதெல்லாம் ஒரு கூத்து, அத அரேங்கேற்றதற்கு திருமண விழா ஒரு மேடை. நாமெல்லாம் பார்வையாளர்கள், கூத்து கட்றவன் இடத்துக்கு ஏற்ப வேஷம் போடுவான்... அதிர்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Empty Re: எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

Post by நவீன் Fri Aug 20, 2010 6:10 pm

megastar wrote:இதெல்லாம் ஒரு கூத்து, அத அரேங்கேற்றதற்கு திருமண விழா ஒரு மேடை. நாமெல்லாம் பார்வையாளர்கள், கூத்து கட்றவன் இடத்துக்கு ஏற்ப வேஷம் போடுவான்... அதிர்ச்சி


எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187 எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி 453187
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி Empty Re: எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum