ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்திய மாணவர்க‌ளை ப‌‌‌ழிவா‌ங்கு‌ம் த‌னியா‌‌ர் ப‌ள்‌ளிக‌ள்

Go down

அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்திய மாணவர்க‌ளை ப‌‌‌ழிவா‌ங்கு‌ம் த‌னியா‌‌ர் ப‌ள்‌ளிக‌ள்  Empty அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்திய மாணவர்க‌ளை ப‌‌‌ழிவா‌ங்கு‌ம் த‌னியா‌‌ர் ப‌ள்‌ளிக‌ள்

Post by நவீன் Thu Aug 19, 2010 6:34 pm

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கப்பட்ட மாணவ-மாணவிகளை வகுப்பில் தனியாக அமர வைத்து பழி வாங்கும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடத் தொடங்கியதால் பெற்றோர்க‌ள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 2009இல் தமிழக அரசு சட்டம் இயற்றியது. கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 2009 டிசம்பர் 7இல் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு 10,934 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11 ஆயிரம், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.9 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.8 ஆயிரம், தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வரை, அந்தந்த பள்ளிகளின் வசதிக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து கடந்த மே 7ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

ஆனால் இந்த கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 6,400 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. ஆனால் நடப்பாண்டுக்கான கட்டண விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்று அண்மையில் அரசு அறிவித்தது. இருப்பினும் அரசு உத்தரவு வருவதற்கு முன்பே ஏராளமான பள்ளிகள் தங்களுக்கு விருப்பமான கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து முடித்துவிட்டன.

சில பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை கட்டி சேருமாறும், மறு உத்தரவு வந்தால் அதற்கேற்ப வசூலித்துக் கொள்வதாகவும் அறிவித்து மாணவர் சேர்க்கையை நடத்தின. முதலாவதாக கட்டண அறிவிப்பு வந்தவுடனேயே தங்கள் பள்ளியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என்று கமிட்டி அறிவித்தது.

ஆனால் இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கோ, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளருக்கோ சரியான வழிகாட்டுதல் கொடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் வசூலிக்கப்படும் கட்டண விவரம் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது. இது குறித்து சில பள்ளிகளில் பெற்றோர்கள் கேட்டதற்கு மேல் முறையீடு செய்திருப்பதால் அந்த முடிவு வந்ததும் கட்டண விவரத்தை ஒட்டுவதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் கட்டண விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அரசு அறிவித்ததால் கட்டண விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டுவதுடன், அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாததால், கல்விக் கட்டண விவகாரத்தில் அரசின் நடவடிக்கை வழக்கம் போல் தொய்வடைந்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1, 2ஆம் வகுப்புகளுக்கு ரூ. 4,500 கல்விக் கட்டணமாக அரசு நிர்ணயித்தது. இதேபோல் 3ஆம் வகுப்புக்கு ரூ.5,000, 6ஆம் வகுப்புக்கு ரூ.6,500, 8ஆம் வகுப்புக்கு ரூ.8,000, 9ஆம் வகுப்புக்கு ரூ.8,500, 11ஆம் வகுப்புக்கு ரூ.10 ஆயிரம் என்று அரசு நிர்ணயித்திருந்தது.

ஆனால் மாணவர் சேர்க்கையின்போது இப்பள்ளியில் வழக்கம் போலவே கட்டணம் வசூலிக்கப்பட்டது. மறு உத்தரவு வந்தவுடன் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் இப்பள்ளியில் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் இந்தக் கட்டணத்தை கட்டியுள்ளனர்.

இதையடுத்து இப்பள்ளி பெற்றோர்கள் சேர்ந்து மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் தொடங்கி, அரசு நிர்ணயித்த கட்டணத்தையே செலுத்துவோம் என்று குரல் கொடுத்தனர். இதனால் சுமார் 500 மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணமே பெறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பல்வேறு வழிகளில் இடையூறு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து இப்பள்ளியின் மாணவர்-பெற்றோர் நலச்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகை‌யி‌ல், இப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 450 மாணவர்களில், அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்திய மாணவ-மாணவிகள் வகுப்பின் கடைசி வரிசை இருக்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 9ஆம் வகுப்புக்கு புதன்கிழமை நடத்தப்பட்ட வகுப்புத் தேர்வில் பங்கேற்க இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே இந்த வகுப்பில் தொடர முடியும் என்றும் இல்லாவிட்டால் தனி வகுப்பறைக்கு மாறுதல் செய்து சரிவர வகுப்புகள் நடத்த மாட்டோம் என்றும் ஆசிரியர்கள் மூலம் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார்.

இதையடுத்து இந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்டோருக்கு இந்த சங்கம் சார்பில் தந்தி அனுப்பப்பட்டுள்ளது.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட
ப‌ள்‌ளி ‌மீது அரசு நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌ட்டா‌‌ல் மேலு‌‌‌ம்
பு‌ற்‌றீச‌ல் போ‌ல் பல ப‌ள்‌ளிக‌ள் வளர‌க் கூடு‌‌ம். எனவே இதனை
முளை‌யிலேயே ‌கி‌ள்‌ளி எ‌றிய வே‌ண்‌டு‌ம் எ‌ன்று க‌ல்‌வியாள‌ர்க‌ள்
தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன்
» தனியார் பள்ளிகளில் அதிகமாக செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்குமா?
» ராஜஸ்தான் அதிர்ச்சி: விலங்கு மருந்தை 400 நோயாளிகளுக்குச் செலுத்திய அரசு மருத்துவமனை
» நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
» அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum