ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

+4
பிளேடு பக்கிரி
kalaimoon70
T.N.Balasubramanian
அப்புகுட்டி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 3:43 am

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Cough_syrup


இருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்

மத்திய கிழக்கு நாடுகளில் மது அருந்துவது பொதுவாகவே விருப்பத்துக்குரிய ஒன்றல்ல. பல நாடுகள் மது பாவனைக்குத் தடை விதித்துள்ளன. அதே சமயம் வேறு சில நாடுகளில் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குடிப் பிரியர்கள் பல வழிகளைக் கையாண்டு தமக்கு வேண்டிய போதையை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் பொருட்டு ஆபத்தான வழிகளையும் இவர்கள் பின்பற்றத் தவறுவதில்லை.

மனம் போதைக்கு அடிமையானதும் அதை எப்படியாவது பெற்றுக்கொள்ள உடலைத் தூண்டும். விளையாட்டாக ஆரம்பிக்கும் குடிப் பழக்கம் அல்லது போதைப் பொருள் பாவனை பின்னர் வழமையாகி வியாதியாகி விடுகிறது. சவூதியில் போதைப் பாவனையாளர்கள் சிக்கினால் கடுந் தண்டனை கிடைக்கும். எனினும் ரிஸ்க் எடுத்துக் கொண்டு குடிக்கிறார்கள் என்றால், மனிதனை இந்தப் பழக்கம் எவ்வளவு தூரம் பாதித்து விடுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு இந்த உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். இது சென்னையில் நடந்தது. நன்கு படித்த விவரம் தெரிந்த ஒருவர் எப்படி இருமல் மருந்து தரும் போதைக்கு அடிமையானார் என்பதை இச் சம்பவம் விவரிக்கிறது. இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அளவாக இருந்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளை அனாவசியமாக சந்திக்க நேராது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு நல்ல உதாரணம். எதையுமே அளவுக்கு மீறிச் செய்யும் போது அது போதையாகி விடுகிறது. அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுதல், புகைத்தல், தூஷண வார்த்தைகளைப் பேசுதல் எல்லாமே ஒரு வகையில் போதைத் தனம் தான்.

மத்திய சென்னையில் பெரிய அளவில் மருந்துக் கடை வியாபாரம் செய்து வருகிறார் செல்வம். வயது 28. திருமணமாகி 2 வருடங்களாகின்றன. குடும்ப வறுமையின் காரணமாக ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு மருந்துக் கடையில் எடுபிடி வேலை செய்யும் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்த செல்வம். கடின உழைப்பாலும், பொறுப்புணர்ச்சியாலும் படிப்படியாக முன்னேறி தனியே கடை வைக்கிற அளவுக்கு மேலே வந்தவர். ராத்திரி, பகலாக உழைத்து இரண்டே வருடங்களில் பத்து கம்ப்யூட்டர்கள், நான்கு ஃபார்மசிஸ்ட், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் என பெரிய அளவில் தொழிலை விரிவுபடுத்தி, கார், சொந்த வீடு என அபார வளர்ச்சி கண்டவர்.

இரண்டு வருடங்களுக்கு முன் இருமலுக்காக தானாகவே பிரபல மருந்தை வாங்கி இரண்டு வேளை, ஒரு மூடியளவுக்கு 3 நாட்கள் எடுத்ததில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது. மீண்டும் இருமல் வர தானாகவே மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என மருத்துவர் சொல்லியும் அவர் கொடுத்த மருந்தில் இருமல் சரியாகவில்லை என மீண்டும் அதே மருந்தைக் குடித்திருக்கிறார். அது ஒரு மாதிரியாக தூக்கமும் இல்லாத, மயக்கமும் இல்லாத மந்த நிலையைக் கொடுக்கவே இருமல் இல்லாத நேரங்களிலும்கூடக் குடிக்க ஆரம்பித்தார்.

வேலையில், குடும்பத்தில் சின்ன டென்ஷன் எனும் போதும் அந்த மருந்தைக் குடித்தால் டென்ஷனிலிருந்து விடுபட்ட மாதிரி உணர்ந்தார். ஒரு கட்டத்தில் சும்மாவே கால் போத்தல் அரை போத்தலாகி என ஒரே மடக்கில் குடிக்கப் பழகினார். ஒரு வருட முடிவில் ஒரு நாளைக்கு பத்து போத்தல்களானது.

ஞாபக மறதி, எரிச்சல், எதிலும் கவனமில்மை, உடம்பு வலி, உடல் அசதி என கொஞ்சம், கொஞ்சமாக உடம்பைப் பலவீனப்படுத்த, கடையில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்த்தார். வீட்டுக்குப் போனாலும் கேட்பார்களே என காரை எடுத்துக்கொண்டு, தனியே ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடங்களில் போய் அந்த இருமல் மருந்தைக் குடித்துவிட்டு, காரிலேயே படுத்திருப்பார். இப்படியே மாதங்கள் ஓடின.

இருமல் மருந்தின் விளைவுதான் எல்லாம் என்பது அவருக்கே தெரிந்தது. எவ்வளவோ முயற்சி செய்து அதிக பட்சம் 3 நாட்களுக்கு நிறுத்தினால், உடல், மனதில் ஏற்படும் உபாதைகள் தாங்க முடியாமல் மீண்டும் ஆரம்பித்து விடுவார். இந்நிலையில் அரைகுறை ஆசாமி ஒருவரின் அறிவுரையின் பேரில் வலி நிவாரணி ஊசி போட்டுக் கொண்டால், இதிலிருந்து வெளியே வந்துவிடலாம் என அதற்கும் பழகினார்.

எந்த வாடையும் வராது என்பதாலும், பொறுப்பானவர் என்பதாலும் குடும்பதாருக்கு ஒன்றரை வருடங்களுக்கு செல்வத்தின் மேல் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

வேலையாட்கள் பணத்தை சுருட்ட ஆரம்பித்து, சப்ளையர்களுக்கு சரியாக பணம் கொடுக்காமல் பல லட்சங்கள் நஷ்டமாகி, கார் ஆர்.சி. புத்தகம், வீட்டுப் பத்திரம் என வைத்துக் கடன் வாங்கியும் திணறியபோதுதான், வீட்டுக்கு விஷயம் தெரிந்தது.

செல்வம் எடுத்துக் கொண்ட இருமல் மருந்து, வலி நிவாரணிக்கான ஊசி இரண்டுமே நார்காட்டிக்ஸ் எனப்படும் மருந்து வகையைச் சேர்ந்தவை. ஹெராயின் எனப்படும் பிரவுன் சுகர் போன்ற போதை மருந்து வகையறாக்கள்தான் போதை மருந்துகள் என அழைக்கப்படும். இவை மருந்தாக, கொஞ்சமாக இருமல் மருந்து மற்றும் வலி நிவாரணிகளில் சேர்க்கப்படும். அளவுக்கு மீறும் போது அமிர்தமே நஞ்சாகி எமனாகிறது. அப்படித்தான் ஆனது செல்வத்துக்கு.

இந்த வகையான போதை அடிமைத்தனம், சாராயம், கஞ்சா வகையறாக்களைவிட மிக ஆபத்தானது. கடுமையான பின் விளைவுகளை உண்டாக்கக் கூடியது.

விஷயம் இறுதியில் வீட்டாருக்குத் தெரிய வரவே அவர்கள் அவரை மனோ வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரது நிலைமையை நன்கு பரிசோதனை செய்த மருத்துவர் போதை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்தார்.

தான் மூன்று மாதங்கள் வெளியே இல்லாவிட்டால், இந்த பூமியே சுற்றாது என்கிற அளவுக்கு விவாதம் செய்த செல்வம், ஒரு வழியாக ஒரு வாரத்துக்கு ஒப்புக் கொண்டார். ஒரு வார முடிவில் சில மருந்துகள் போய் மூளையில் வேலை செய்ய மீண்டும் 3 மாதங்களுக்கு உள் நோயாளி சிகிச்சையின் முக்கியத்துவம் உணர்ந்து அங்கே இருக்க சம்மதித்தார்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும், இருப்பதை எல்லாம் விற்றுக் கடனை அடைத்துவிட்டு, மீண்டும் சின்ன அளவில் மருந்துக் கடை ஆரம்பித்திருக்கிறார். மாதம் ஒரு முறை மனைவியுடன் உளவள சிகிச்சைக்காகச் செல்கிறார். இன்னும் இரண்டு வருடங்களில் விட்டதைப் பிடித்துப் பல மடங்கு உயரப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.




 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by T.N.Balasubramanian Tue Aug 17, 2010 6:06 am

முற்றிலும் உண்மை. இருமல் நிவாரண சிரப்புகளில், ஒரு வித மயக்க மருந்து (ஒவ்வாமை நீக்கி) சேர்க்கப் பட்டுள்ளது.
இந்த மருந்தை சாப்பிட்டு விட்டு வண்டி ஓட்டக் கூடாது என எச்சரிக்கையும் சில சிரப்புகளில் எழுதி இருப்பார்கள். எனக்கு தெரிந்த ஒருவர், மதுவிலக்கு அமலில் இருந்தபோது, இந்த ######## சிரப்பை பாட்டில் பாட்டில் ஆக குடித்து ஒரு மயக்க நிலை அடைவார். பின்னாளில்,துன்பமடைந்து, மரணம் அடைந்தார். சோகம் சோகம் அனாவசியமாக உபயோகம் படுத்தவேண்டாம்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by kalaimoon70 Tue Aug 17, 2010 6:10 am

நன்றி தோழரே ......


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by பிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 12:41 pm

நன்றி நன்றி நன்றி



 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by ரபீக் Sat Aug 21, 2010 12:44 pm

பதிவுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 5:49 pm

T.N.Balasubramanian wrote:முற்றிலும் உண்மை. இருமல் நிவாரண சிரப்புகளில், ஒரு வித மயக்க மருந்து (ஒவ்வாமை நீக்கி) சேர்க்கப் பட்டுள்ளது.
இந்த மருந்தை சாப்பிட்டு விட்டு வண்டி ஓட்டக் கூடாது என எச்சரிக்கையும் சில சிரப்புகளில் எழுதி இருப்பார்கள். எனக்கு தெரிந்த ஒருவர், மதுவிலக்கு அமலில் இருந்தபோது, இந்த ######## சிரப்பை பாட்டில் பாட்டில் ஆக குடித்து ஒரு மயக்க நிலை அடைவார். பின்னாளில்,துன்பமடைந்து, மரணம் அடைந்தார். சோகம் சோகம் அனாவசியமாக உபயோகம் படுத்தவேண்டாம்.

ரமணீயன்.
அன்பு மலர் அன்பு மலர்


 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 5:49 pm

kalaimoon70 wrote:நன்றி தோழரே ......
நன்றி நன்றி


 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 5:50 pm

பிளேடு பக்கிரி wrote: நன்றி நன்றி நன்றி
முத்தம் முத்தம்


 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 5:50 pm

ரபீக் wrote:பதிவுக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி


 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by மீனா Wed Aug 25, 2010 5:55 pm

நன்றி நன்றி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

 இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் Empty Re: இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum