Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
5 posters
Page 1 of 1
எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
எந்திரன் - இசை விமர்சனம்
- நரேன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் இதோ தயாராகிக்கொண்டிருக்கிறது! கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்பார்க்கபபடும் ஐஸ்-ரஜினி ஜோடியும் இதோ வந்தாகிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில், இன்னும் ஒரு முறையாக "இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்" என்ற முத்திரையோடு வரப்போகிறான் எந்திரன். இப்படத்திற்கென்று ஒரு சிறு வரலாறு இருக்கிறது. ஷங்கர் "இந்தியன்" இயக்கிய சமயத்தில், கமலும் ஷங்கரும் "மீண்டும் இணைவோம்" என்று முடிவு செய்தபோது வந்த கதைதான் எந்திரனின் கதை. அப்பொழுது படத்திற்கு வைத்திருந்த பெயர் வேறு - ரோபோ! எழுத்தாளர் சுஜாதா கூட ஒரு பேட்டியில், "இந்த படத்தை கரெக்ட்டா எடுத்தா, ஸ்பீல்பர்க்கோட "ஏ.ஐ" படத்தை விட நல்லா வரும்" என்று சொல்லியிருந்தார்! அடேங்கப்பா!
அதன் பிறகு, கமலும் ஷங்கரும் அவரவர் பாதைகளில் சென்றுவிட, ரோபோவைத் தூக் கி பரண் மேல் வைத்துவிட்டார்கள். விக்ரமுடன் ஷங்கர் இணைந்தபொழுது, ரோபோவிற்குத்தான் "அந்நியன்" எனும் பெயரை வைத்துவிட்டார்கள் என்று கோடம்பாக்கம் நினைத்தது. ஆனால், அந்நியனுக்கும் சைன்ஸ்-பிஃக்ஷனுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. ஓரிரு வருடங்களில் ரோபோ வேலையில் மும்முரமாக இறங்கினார் ஷங்கர். ‘படத்தை ஹிந்தியில் எடுக்கப்போகிறார்கள், ஷாருக்கான் நடிக்கப்போகிறார்’ என்று கூட செய்திகள் வந்தன. கடைசியில் ஒரு வழியாக சிவாஜியின் வெற்றிக்குப் பிறகு, நம் சூப்பர்ஸ்டாரிடமே வந்து சேர்ந்தார் ஷங்கர்!
"ரோபோ" என்று ஆங்கிலத்தில் பெயரிட முடியாதே - நம் அரசாங்கம் வரியைத் தீட்டிவிடுமே! அதனால், ஒரு நல்ல தமிழ் ப்பெயரைத்தேட ஆரம்பித்தார்கள். ஷங்கரின் செண்டிமெண்டுக்கு இணங்க, ஐந்து எழுத்துக்கள் தேவை, "ன்" என்ற எழுத்தில் முடிந்தால் அமோகம் - இப்படி வந்ததுதான் எந்திரன்! இதற்கிடையில் எழுத்தாளர் சுஜாதாவைப் பிரிய நேர்ந்ததால், ஷங்கர் தன் முதல் படத்தில் பணிபுரிந்த பாலகுமாரனையும் எந்திரன் குழுவில் சேர்த்துக்கொண்டார்.
படம் கிட்டத்தட்ட ரெடியாம் - செப்டம்பரில் வெளிவர வாய்ப்பிருக்கிறதாம். அப்படி இப்படி என்று தள்ளிப்போட்டால் கூட, இந்த வருடத்திற்குள், அல்லது பொங்கலுக்காவது எந்திரனை திரையரங்குகளில் காணலாம்! படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. இசை யார் என்று கேட்கின்றீர்களா! வேறு யார்?இசைப்புயல் ரஹ்மான்தான். மலேஷியாவில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் பாடல்களை வெளியிட்டார்கள். கேட்போமா!
புதிய மனிதா
இது ஒரு சைன்ஸ்-பிஃக்ஷன் திரைப்படம் என்று முத்திரை குத்துவது போல, அக்மார்க் டெக்னோவில் முதல் பாடல்! யாரது கதீஜா ரஹ்மான்! இசைப்புயலின் மூத்த பெண் - சினிமாவில் பாடும் முதல் அனுபவம்! அதுவும் ரஜினிகாந்தின் படத்திற்கு! என்ன ஒரு வாய்ப்பு! ஒரு சில வரிகளே பாடியிருந்தாலும், அம்சமாக பாடியிருக்கின்றார். ரஹ்மானின் குரலும் ஆங்காங்கே கேட்கிறது! பாட்டுஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை நிமிடங்கள் கழித்துதான் கேட்கிறது எஸ்.ப.பாலசுப்ரமணியத்தின் குரல். எந்திரனை வரவேற்பது போல் அமைந்திருக்கின்றன வைரமுத்துவின் வரிகள். சக்கை போடு போடுகிறார் எஸ்.பி.பி - எத்தனை மாற்றங்கள் குரலில்! ஆங்காங்கே பேசுவது போல மெட்டு அமைந்திருந்தாலும், பாடலுக்கு எஸ்.பி.பி. தரும் உயிர் இருக்கிறதே! அப்பப்பா! தாளம் போட வைக்கும் பீட்ஸையும், கொஞ்சம் கார்ட்ஸையும் கொண்டே மொத்த பாட்டையும் முடித்துவிட்டார் ரஹ்மான்.
காதல் அணுக்கள்
மென்மையான கிடார் ரிங்குடன் துவங்கும் மென்மையான காதல் பாடல் - விஜய பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷலின் குரல்கள். சைன்ஸ்-பிஃஷன் படம் என்றால், காதல் பாடலில் கூட அறிவியல் பேச வேண்டுமா? ந்யூடன், எலெக்ட்ரான் என்று என்னெல்லாமோ சொல்கின்றன வைரமுத்துவின் வரிகள். இசையின் ஆதிக்கம் இல்லாமல், கிடார், கார்ட்ஸ், லேஸான பீட்ஸ் என்று அழகிய மெலடியைத் தந்திருக்கிறார் ரஹ்மான். ரஜினி-ஐஸ்வர்யா டூயட்டைக் காணத்துடிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆசையைத் தீர்க்கப்போகும் பாடல் இதோ!
இரும்பிலே ஒரு இருதயம்
என்ன பாடுகின்றார்கள் என்று புரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்! கார்க்கியும் "காஷ் ண் க்ருஸி"யும் எழுதியிருக்கும் வரிகள்! ஒரு நிமிடத்திற்குப் பிறகு_ ரஹ்மான் பாட ஆரம்பிக்கும் பொழுதுதான் காதில் புரியும்படி விழுகின்றன. ரோபோ ஒன்று காதல் பாடல் பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க முடிகின்றதா? இந்தப் பாடலைக் கேளுங்கள் - புரியும்!
சிட்டி
படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வசீகரன் என்று பட்சி செய்தி சொல்லியது. அவர் ஒரு ரோபோ செய்கிறாராம் - அதன் பெயர் சிட்டியாம்! அந்த ரோபோ டான்ஸ் ஆடுவதற்கேற்றாற் போல இந்தப் பாடலில் . மீண்டும் டெக்னோவை அள்ளித் தந்திருக்கின்றார் ரஹ்மான். ஆங்காங்கே சில வரிகள்!மற்றபடி வெறும் இசை மட்டும்தான்! பிரவீன் மணி பாடல் எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து ப்ரதீப் விஜய்யும், யோகியும் பாடியிருக்கின்றார்கள். நடுவே மேற்கத்திய ஹார்மனி இசையும், ஏன் சொல்கட்டு ஸ்வரங்களும் கூட கேட்கின்றன.
அரிமா அரிமா
அரிமா என்றால் சிங்கம்தானே? ரஜினிகாந்திற்கு ஏற்ற பாடல் - பாடலின் இசையே ஒரு பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திவிட்டது. ட்ரம்பெட் போன்ற ஏதோ ஒரு கருவியில் அற்புதமான தொடக்கம்! அதன் பின்னர், ஹரிஹரன் "அரிமா அரிமா, நானோ ஆயிரம் அரிமா" என்று ஆரம்பிக்கின்றார். சாதனா சர்கமும் இணைந்து பாடுகின்றார். ஆங்காங்கே விஜய பிரகாஷும், நரேஷ் ஐயரும்கூட பாடுகின்றார்கள். ஷங்கரைப் பற்றி நன்கு தெரிந்ததால், இப்பாடலை எப்படி திரையில் காட்டப்போகிறார் எனும் ஆவல் இப்பொழுதே வந்துவிட்டது. வைரமுத்துவின் வரிகள் வேறு சக்கை போடு போடுகின்றன! "இவன் பேர் சொன்னது, பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்! இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதும் நிலவும் நிலவும் தலை முட்டும்" - ஆகா ஆகா ஆகா!!
கிளிமஞ்சரொ
இப்பாடலைத்தான் பெரு நாட்டில் அமைந்திருக்கும் மாச்சு பிச்சுவில் (இது ஒரு உலக அதிசயமாக்கும்) எடுத்தார்களாக்கும்? அங்கு எடுத்தால், பாடல் ஏன் ஆதிவாசிகள் பாடும் பாடலைப் போல் அமைய வேண்டும்? "அழகான ராட்சசியே" பாடலில் வந்தது போல இதிலும் வித்தியாசமான ஆடைகளைக் காட்டப் போகிறாரா ஷங்கர்? சரி சரி, கேள்விகள் போதும். பா.விஜய்யின் வரிகளில் இன்னுமொரு டூயட் இது. ஜாவேத் அலியும் சின்மயியும் அம்சமாக பாடியிருக்கின்றார்கள். குரலில் செய்யும் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சபாஷ் போட்டுவிடலாம். ரொம்ப சுலபமான மெட்டைத் தந்துவிட்டு அதையும் நம்மை ரசிக்க வைக்கிறார் ரஹ்மான்!
பூம் பூம் ரோபோ டா
கார்க்கியின் வரிகளில் யோகி, கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோஹன், தன்வி ஷா எல்லோரும் இணைந்து இப்பாடலைப் பாடுகிறார்கள். தீம் பாடல் போல. ஐஸாக் அஸிமோவ், ஐஸாக் நியூடன் என்று கவி பாடுகிறார்கள். அஸிமோவ் சைன்ஸ்-பிஃக்ஷனில் கலக்கியவர்! நியூடனோ எல்லோருக்கும் தெரிந்த அறிவியல் மேதை. ரசிக்ககூடிய பாடல். ஆங்காங்கு நடுவே மெட்டின் ‘மூடை’ மாற்றி அழகாய்த் தன் திறமையைக் காட்டியிருக்கிறார் ரஹ்மான்.
ரஜினிகாந்தின் படத்தில் வரும் பாடல்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்!! ஷங்கர் வேறு, ரஹ்மான் வேறு! படத்தை எப்பொழுது திரையரங்கில் காணப்போகிறோம் என்ற ஆவலைத் தூண்டுகின்றன இப்பாடல்கள். ஒரு அக்மார்க் ஆக்ஷன் - மசாலா திரைப்படத்தைக் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.
- நரேன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் இதோ தயாராகிக்கொண்டிருக்கிறது! கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்பார்க்கபபடும் ஐஸ்-ரஜினி ஜோடியும் இதோ வந்தாகிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில், இன்னும் ஒரு முறையாக "இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்" என்ற முத்திரையோடு வரப்போகிறான் எந்திரன். இப்படத்திற்கென்று ஒரு சிறு வரலாறு இருக்கிறது. ஷங்கர் "இந்தியன்" இயக்கிய சமயத்தில், கமலும் ஷங்கரும் "மீண்டும் இணைவோம்" என்று முடிவு செய்தபோது வந்த கதைதான் எந்திரனின் கதை. அப்பொழுது படத்திற்கு வைத்திருந்த பெயர் வேறு - ரோபோ! எழுத்தாளர் சுஜாதா கூட ஒரு பேட்டியில், "இந்த படத்தை கரெக்ட்டா எடுத்தா, ஸ்பீல்பர்க்கோட "ஏ.ஐ" படத்தை விட நல்லா வரும்" என்று சொல்லியிருந்தார்! அடேங்கப்பா!
அதன் பிறகு, கமலும் ஷங்கரும் அவரவர் பாதைகளில் சென்றுவிட, ரோபோவைத் தூக் கி பரண் மேல் வைத்துவிட்டார்கள். விக்ரமுடன் ஷங்கர் இணைந்தபொழுது, ரோபோவிற்குத்தான் "அந்நியன்" எனும் பெயரை வைத்துவிட்டார்கள் என்று கோடம்பாக்கம் நினைத்தது. ஆனால், அந்நியனுக்கும் சைன்ஸ்-பிஃக்ஷனுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. ஓரிரு வருடங்களில் ரோபோ வேலையில் மும்முரமாக இறங்கினார் ஷங்கர். ‘படத்தை ஹிந்தியில் எடுக்கப்போகிறார்கள், ஷாருக்கான் நடிக்கப்போகிறார்’ என்று கூட செய்திகள் வந்தன. கடைசியில் ஒரு வழியாக சிவாஜியின் வெற்றிக்குப் பிறகு, நம் சூப்பர்ஸ்டாரிடமே வந்து சேர்ந்தார் ஷங்கர்!
"ரோபோ" என்று ஆங்கிலத்தில் பெயரிட முடியாதே - நம் அரசாங்கம் வரியைத் தீட்டிவிடுமே! அதனால், ஒரு நல்ல தமிழ் ப்பெயரைத்தேட ஆரம்பித்தார்கள். ஷங்கரின் செண்டிமெண்டுக்கு இணங்க, ஐந்து எழுத்துக்கள் தேவை, "ன்" என்ற எழுத்தில் முடிந்தால் அமோகம் - இப்படி வந்ததுதான் எந்திரன்! இதற்கிடையில் எழுத்தாளர் சுஜாதாவைப் பிரிய நேர்ந்ததால், ஷங்கர் தன் முதல் படத்தில் பணிபுரிந்த பாலகுமாரனையும் எந்திரன் குழுவில் சேர்த்துக்கொண்டார்.
படம் கிட்டத்தட்ட ரெடியாம் - செப்டம்பரில் வெளிவர வாய்ப்பிருக்கிறதாம். அப்படி இப்படி என்று தள்ளிப்போட்டால் கூட, இந்த வருடத்திற்குள், அல்லது பொங்கலுக்காவது எந்திரனை திரையரங்குகளில் காணலாம்! படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. இசை யார் என்று கேட்கின்றீர்களா! வேறு யார்?இசைப்புயல் ரஹ்மான்தான். மலேஷியாவில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் பாடல்களை வெளியிட்டார்கள். கேட்போமா!
புதிய மனிதா
இது ஒரு சைன்ஸ்-பிஃக்ஷன் திரைப்படம் என்று முத்திரை குத்துவது போல, அக்மார்க் டெக்னோவில் முதல் பாடல்! யாரது கதீஜா ரஹ்மான்! இசைப்புயலின் மூத்த பெண் - சினிமாவில் பாடும் முதல் அனுபவம்! அதுவும் ரஜினிகாந்தின் படத்திற்கு! என்ன ஒரு வாய்ப்பு! ஒரு சில வரிகளே பாடியிருந்தாலும், அம்சமாக பாடியிருக்கின்றார். ரஹ்மானின் குரலும் ஆங்காங்கே கேட்கிறது! பாட்டுஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை நிமிடங்கள் கழித்துதான் கேட்கிறது எஸ்.ப.பாலசுப்ரமணியத்தின் குரல். எந்திரனை வரவேற்பது போல் அமைந்திருக்கின்றன வைரமுத்துவின் வரிகள். சக்கை போடு போடுகிறார் எஸ்.பி.பி - எத்தனை மாற்றங்கள் குரலில்! ஆங்காங்கே பேசுவது போல மெட்டு அமைந்திருந்தாலும், பாடலுக்கு எஸ்.பி.பி. தரும் உயிர் இருக்கிறதே! அப்பப்பா! தாளம் போட வைக்கும் பீட்ஸையும், கொஞ்சம் கார்ட்ஸையும் கொண்டே மொத்த பாட்டையும் முடித்துவிட்டார் ரஹ்மான்.
காதல் அணுக்கள்
மென்மையான கிடார் ரிங்குடன் துவங்கும் மென்மையான காதல் பாடல் - விஜய பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷலின் குரல்கள். சைன்ஸ்-பிஃஷன் படம் என்றால், காதல் பாடலில் கூட அறிவியல் பேச வேண்டுமா? ந்யூடன், எலெக்ட்ரான் என்று என்னெல்லாமோ சொல்கின்றன வைரமுத்துவின் வரிகள். இசையின் ஆதிக்கம் இல்லாமல், கிடார், கார்ட்ஸ், லேஸான பீட்ஸ் என்று அழகிய மெலடியைத் தந்திருக்கிறார் ரஹ்மான். ரஜினி-ஐஸ்வர்யா டூயட்டைக் காணத்துடிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆசையைத் தீர்க்கப்போகும் பாடல் இதோ!
இரும்பிலே ஒரு இருதயம்
என்ன பாடுகின்றார்கள் என்று புரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்! கார்க்கியும் "காஷ் ண் க்ருஸி"யும் எழுதியிருக்கும் வரிகள்! ஒரு நிமிடத்திற்குப் பிறகு_ ரஹ்மான் பாட ஆரம்பிக்கும் பொழுதுதான் காதில் புரியும்படி விழுகின்றன. ரோபோ ஒன்று காதல் பாடல் பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க முடிகின்றதா? இந்தப் பாடலைக் கேளுங்கள் - புரியும்!
சிட்டி
படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வசீகரன் என்று பட்சி செய்தி சொல்லியது. அவர் ஒரு ரோபோ செய்கிறாராம் - அதன் பெயர் சிட்டியாம்! அந்த ரோபோ டான்ஸ் ஆடுவதற்கேற்றாற் போல இந்தப் பாடலில் . மீண்டும் டெக்னோவை அள்ளித் தந்திருக்கின்றார் ரஹ்மான். ஆங்காங்கே சில வரிகள்!மற்றபடி வெறும் இசை மட்டும்தான்! பிரவீன் மணி பாடல் எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து ப்ரதீப் விஜய்யும், யோகியும் பாடியிருக்கின்றார்கள். நடுவே மேற்கத்திய ஹார்மனி இசையும், ஏன் சொல்கட்டு ஸ்வரங்களும் கூட கேட்கின்றன.
அரிமா அரிமா
அரிமா என்றால் சிங்கம்தானே? ரஜினிகாந்திற்கு ஏற்ற பாடல் - பாடலின் இசையே ஒரு பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திவிட்டது. ட்ரம்பெட் போன்ற ஏதோ ஒரு கருவியில் அற்புதமான தொடக்கம்! அதன் பின்னர், ஹரிஹரன் "அரிமா அரிமா, நானோ ஆயிரம் அரிமா" என்று ஆரம்பிக்கின்றார். சாதனா சர்கமும் இணைந்து பாடுகின்றார். ஆங்காங்கே விஜய பிரகாஷும், நரேஷ் ஐயரும்கூட பாடுகின்றார்கள். ஷங்கரைப் பற்றி நன்கு தெரிந்ததால், இப்பாடலை எப்படி திரையில் காட்டப்போகிறார் எனும் ஆவல் இப்பொழுதே வந்துவிட்டது. வைரமுத்துவின் வரிகள் வேறு சக்கை போடு போடுகின்றன! "இவன் பேர் சொன்னது, பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்! இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதும் நிலவும் நிலவும் தலை முட்டும்" - ஆகா ஆகா ஆகா!!
கிளிமஞ்சரொ
இப்பாடலைத்தான் பெரு நாட்டில் அமைந்திருக்கும் மாச்சு பிச்சுவில் (இது ஒரு உலக அதிசயமாக்கும்) எடுத்தார்களாக்கும்? அங்கு எடுத்தால், பாடல் ஏன் ஆதிவாசிகள் பாடும் பாடலைப் போல் அமைய வேண்டும்? "அழகான ராட்சசியே" பாடலில் வந்தது போல இதிலும் வித்தியாசமான ஆடைகளைக் காட்டப் போகிறாரா ஷங்கர்? சரி சரி, கேள்விகள் போதும். பா.விஜய்யின் வரிகளில் இன்னுமொரு டூயட் இது. ஜாவேத் அலியும் சின்மயியும் அம்சமாக பாடியிருக்கின்றார்கள். குரலில் செய்யும் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சபாஷ் போட்டுவிடலாம். ரொம்ப சுலபமான மெட்டைத் தந்துவிட்டு அதையும் நம்மை ரசிக்க வைக்கிறார் ரஹ்மான்!
பூம் பூம் ரோபோ டா
கார்க்கியின் வரிகளில் யோகி, கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோஹன், தன்வி ஷா எல்லோரும் இணைந்து இப்பாடலைப் பாடுகிறார்கள். தீம் பாடல் போல. ஐஸாக் அஸிமோவ், ஐஸாக் நியூடன் என்று கவி பாடுகிறார்கள். அஸிமோவ் சைன்ஸ்-பிஃக்ஷனில் கலக்கியவர்! நியூடனோ எல்லோருக்கும் தெரிந்த அறிவியல் மேதை. ரசிக்ககூடிய பாடல். ஆங்காங்கு நடுவே மெட்டின் ‘மூடை’ மாற்றி அழகாய்த் தன் திறமையைக் காட்டியிருக்கிறார் ரஹ்மான்.
ரஜினிகாந்தின் படத்தில் வரும் பாடல்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்!! ஷங்கர் வேறு, ரஹ்மான் வேறு! படத்தை எப்பொழுது திரையரங்கில் காணப்போகிறோம் என்ற ஆவலைத் தூண்டுகின்றன இப்பாடல்கள். ஒரு அக்மார்க் ஆக்ஷன் - மசாலா திரைப்படத்தைக் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அருமை தான் என்றாலும்.
????
Last edited by tthendral on Wed Nov 24, 2010 1:16 pm; edited 1 time in total (Reason for editing : ..)
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
tthendral wrote:நன்றாக கவனித்தீர்களா..
புதிய மனிதா-வைத்தவிர பிற பாடல்கள் எல்லாமே எங்கேயோ கேட்டது போலவே தோன்றுகிறது. அதாவது ரி-மிக்ஸ் என்கிறார்களே! அது போலத்தான்.
திடீரென ஒரு பாடலின் இடையில் இளையராஜாவின் 'திருவாசக' வாசனை வீசுகின்றது. பிறகு மற்றொன்றில் ரகுமானே இசையமைத்த சமீபத்திய பாடலின் முதல் ஆலாபனை கேட்கிறது. இன்னொன்றில் பிரபலமான பாப் பாடகியின் ஆல்பம் ஒன்றின் அதிரடி ஒலிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை எந்திரன் படப்பாடல்கள் ஒரு கிச்சடியே தவிர ரகுமானின் ஒரிஜினல் நிச்சயமாய் மிஸ்ஸிங்.
ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
தென்றல் இன்று புயலானதோ.....அமைதி அமைதி.......நாங்கள் எந்திரன் பாடல்களை இன்னும் கேட்கவில்லை.. நீங்கள் எல்லாப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள் போலிருக்கிறது.....அயா ஒன்று..எ,ஆர்,ரகுமானும் இளையராஜாவின் இசைக்குழுவில் இருந்தவர்தான். ஆகவெ தலைவரின் வாசம் சீஷ்யன் மீது வீசுவது சகஜமே.... இவ்வுலகில் அனைத்தும் ஒன்றொடொன்று ஒட்டிப் பினைந்தவை என்பது உண்மை......ஆகவே அவருடைய இசையில் இவரிருப்பதும்,,...இவருடைய இசையில் அவரிருப்பதும் இயற்கையே.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?
எப்பிடி இருக்கு
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
எப்பிடி இருக்கு
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?
எப்பிடி இருக்கு
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?
எப்பிடி இருக்கு
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா.....
சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே ....
செங்கை ஆழியன்- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010
Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
சிட்னி சின்னப்பு wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?
எப்பிடி இருக்கு
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா.....
சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே ....
நல்லா போட்டீங்கையா..சிட்னி..........அந்த பெரிசு லவுசுக்காக ரொம்ப பேஜாரு பண்றாரு கண்டிடிலெ....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
gunashan wrote:சிட்னி சின்னப்பு wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?
எப்பிடி இருக்கு
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா.....
சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே ....
நல்லா போட்டீங்கையா..சிட்னி..........அந்த பெரிசு லவுசுக்காக ரொம்ப பேஜாரு பண்றாரு கண்டிடிலெ....
என்ன ராசா நீன்கூட அந்த பஞ்சு மிட்டாய் தலையனுக்கு சப்போர்ட் பண்ணுறாய் ...அம்பதிலும் ஆசை வரும் கண்டியலே
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்
அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:சிட்னி சின்னப்பு wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?
எப்பிடி இருக்கு
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா.....
சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே ....
நல்லா போட்டீங்கையா..சிட்னி..........அந்த பெரிசு லவுசுக்காக ரொம்ப பேஜாரு பண்றாரு கண்டிடிலெ....
என்ன ராசா நீன்கூட அந்த பஞ்சு மிட்டாய் தலையனுக்கு சப்போர்ட் பண்ணுறாய் ...அம்பதிலும் ஆசை வரும் கண்டியலே
யோவ் பெரிசு...அவரு எவ்வளவு அழகா..இருக்காரு....அவர போயி பஞ்சு மிட்டாய் தலைய்ன்னு சொல்றீங்க.......ஒங்க வாயில இரும்ப காய்ச்சி ஊத்த.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Similar topics
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» எந்திரன் விமர்சனம்
» எந்திரன் திரைப்பட இசை விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்…
» எந்திரன் உண்மையான விமர்சனம்
» எந்திரன் விமர்சனம்
» எந்திரன் திரைப்பட இசை விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்…
» எந்திரன் உண்மையான விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|