Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
நீலக்கடலில் கப்பலோட்டக் கற்றுத் தர வேண்டிய ஒரு கல்லூரி, நீலப்படங்களின் நிலையமாக இருக்கிறது. ஒருவகையில் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை அது.
வெளியே பளீர் வெளேர். ஆனால் அதன் உட்பக்கங்களில் அட்டைக் கரி அழுக்கு. அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை, பணியாற்றும் பெண் ஊழியர்களை பாலியல் லீலைகளுக்கு ஆளாக்குவது மட்டுமின்றி அதை ரகசியமாகப் படமெடுத்து வெளியில்
உலவவிடும் விசித்திரமும் நடக்கிறது. அப்படிச் செய்யும் போர்னோகிராபி வில்லன் யாரோ?''
- இப்படியொரு புகாரை நம் செல்போன் வழியே சிதறவிட்டு நம்மை அதிர்ச்சியின் அதலபாதாளத்திற்குத் தள்ளினார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம்குமார். அவர் கைவிரலை நீட்டியது திருவள்ளூர், பனப்பாக்கத்தில் உள்ள கப்பல் மாலுமிகளுக்கான படிப்புகளை நடத்தும் சாம்ஸ் பொறியியல் கல்லூரியை நோக்கி. கார்த்திகேயன் என்பவரை சேர்மனாகக் கொண்டு செயல்படும் சதர்ன் குரூப் ஆஃப் கம்பெனீஸின் பதினொரு நிறுவனங்களில் ஒன்றான சாம்ஸ் பொறியியல் கல்லூரி மீதா இப்படியொரு குற்றச்சாட்டு என்று ஒரு நிமிடம் குழம்பிப் போனோம்.
ராம்குமார் தொடர்ந்து பேசத் தொடங்கினார். "சார்! நான் சாம்ஸ் பொறியியல் கல்லூரியில் பல ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக வேலை பார்த்திருக்கிறேன். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் கல்லூரி அது. அவ்வப்போது கல்லூரி தொடர்பாக வரும் புகார்களை சட்ட நியாயங்களுக்கு உட்பட்டு சரி செய்து தந்திருக்கிறேன். பல நேரங்களில் கல்லூரியை விட்டு மாணவிகள் ஓடிப் போவார்கள். சிலர் காணாமல் போவார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், கல்லூரி மாணவர் விடுதியில் ரஞ்சித் என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாகக் கூறி கல்லூரி இயக்குனர் ஷ்யாம் சுந்தர், என்னைத் தொடர்பு கொண்டார்.
அந்த மாணவரை அண்ணாநகர் சுந்தரம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மூன்று நாளில் அவர் இறந்துவிட்டார். கப்பலுக்குப் பயன்படுத்தப்படும் நேவல் கயிறால் மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அது தொடர்பாக பெரியபாளையம் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆரும் பதிவானது. `ஏதோ செல்போன் பிரச்னைக்காக தற்கொலை' என்று கூறி ரஞ்சித்தின் பெற்றோருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து கல்லூரி நிர்வாகம் இந்தப் பிரச்னையை அமுக்கி விட்டது. ஆனால், அதன்பிறகு என்னிடம் பேசிய மாணவர்கள் சிலர், `கல்லூரி நிர்வாகி ஒருவர் ரஞ்சித்தின் அறைக்குப் போய் அவனிடம் தவறாக நடக்கப் போய்த்தான் இறந்தான்' என்றனர்.
- இப்படியொரு புகாரை நம் செல்போன் வழியே சிதறவிட்டு நம்மை அதிர்ச்சியின் அதலபாதாளத்திற்குத் தள்ளினார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம்குமார். அவர் கைவிரலை நீட்டியது திருவள்ளூர், பனப்பாக்கத்தில் உள்ள கப்பல் மாலுமிகளுக்கான படிப்புகளை நடத்தும் சாம்ஸ் பொறியியல் கல்லூரியை நோக்கி. கார்த்திகேயன் என்பவரை சேர்மனாகக் கொண்டு செயல்படும் சதர்ன் குரூப் ஆஃப் கம்பெனீஸின் பதினொரு நிறுவனங்களில் ஒன்றான சாம்ஸ் பொறியியல் கல்லூரி மீதா இப்படியொரு குற்றச்சாட்டு என்று ஒரு நிமிடம் குழம்பிப் போனோம்.
![கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் Pg1a](https://2img.net/h/www.kumudam.com/magazine/Reporter/2009-07-26/imagefolder/pg1a.jpg)
அந்த மாணவரை அண்ணாநகர் சுந்தரம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மூன்று நாளில் அவர் இறந்துவிட்டார். கப்பலுக்குப் பயன்படுத்தப்படும் நேவல் கயிறால் மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அது தொடர்பாக பெரியபாளையம் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆரும் பதிவானது. `ஏதோ செல்போன் பிரச்னைக்காக தற்கொலை' என்று கூறி ரஞ்சித்தின் பெற்றோருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து கல்லூரி நிர்வாகம் இந்தப் பிரச்னையை அமுக்கி விட்டது. ஆனால், அதன்பிறகு என்னிடம் பேசிய மாணவர்கள் சிலர், `கல்லூரி நிர்வாகி ஒருவர் ரஞ்சித்தின் அறைக்குப் போய் அவனிடம் தவறாக நடக்கப் போய்த்தான் இறந்தான்' என்றனர்.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
சாம்ஸ் கல்லூரியில் மரைன் படிக்கும் மாணவர்கள் கடந்த ஆண்டு, மும்பையில்
உள்ள கப்பல்துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகத்திற்கு (டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங்) ஒரு புகார் அனுப்பினர். அதில், `சாம்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வக வசதியின்மை, மோசமான உள்கட்டமைப்பு, சீரழிந்த விடுதி வசதி, அடிக்கடி ஏற்படும் மலேரியா நோய், கல்லூரி நிர்வாகத்தின் தொந்தரவு' பற்றியெல்லாம் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, சென்னை கப்பல் வர்த்தகத்துறை துணை இயக்குனர் ஜெனரல் சுந்தரம், மும்பை கப்பல் துறை உயரதிகாரி ரஞ்சித் நாராயணன் ஆகியோர் சாம்ஸ் கல்லூரிக்கே வந்து விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இந்த விசாரணைக்கு முன்பாக கல்லூரி இயக்குனர் ஷ்யாம் சுந்தர் ஒவ்வொரு மாணவராக அழைத்து `நீ என்ன புகார் சொன்னாலும் எனக்குத் தகவல் தெரிந்துவிடும்' என மிரட்டல் தொனியில் பேசியது ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகளில் ஷ்யாமின் முகம் தெளிவாகத் தெரிகிறது. பிறகு, கப்பல் துறை அதிகாரிகள் மாணவர்களிடம் நடத்தும் விசாரணையும் மிக ரகசியமாக வீடியோ படமெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நான் கப்பல்துறை அலுவலகத்திற்கு அந்தக் காட்சிகளை அனுப்பி வைக்க, அது தொடர்பாகவும் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சாம்ஸ் கல்லூரியின் பெண் ஊழியர் ஒருவர் அண்மையில் என்னைச் சந்தித்து, இயக்குனர் ஷ்யாம் சுந்தரின் லேப்டாப்பில் `மைசெல்ஃப்' என்ற ஒரு ஃபோல்டரில் இருந்ததாகக் கூறி சில வீடியோ காட்சிகளை பென் டிரைவில் என்னிடம் தந்தார். `இதில் சாம்ஸ் கல்லூரி பெண் ஊழியர்கள் சிலர், ஒரு நபரோடு செக்ஸ் உறவு கொள்ளும் காட்சிகள் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. அதைவிடக் கேவலம் கல்லூரி மாணவிகளின் கழிப்பறைக்குள்ளும் கேமராவைப் பொருத்தி `அசிங்க' காட்சிகளைப் படம் எடுத்திருக்கிறார்கள். எனக்கு இது மிகவும் வேதனையாக இருக்கிறது' என்றார். அந்தக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன்'' என்றவர், அந்தக் காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.
"முதல் வீடியோவில், ஏரோநாடிக்கல் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் உடைகளைக் களைந்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். எதிரில் இருக்கும் அடையாளம் தெரியாத ஆண் உருவம் அந்தப் பெண்ணிடம் சில்மிஷங்களில் ஈடுபடுகிறது. அந்த மாணவி 2007-ம் ஆண்டு ஒரு நள்ளிரவில் விடுதியைவிட்டு ஓடிப் போனவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இன்றுவரை அந்தப் பெண் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இரண்டாவது காட்சியில் கல்லூரி ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த, திருமணம் ஆகாத ஓர் இளம்பெண்ணை ஒருநபர் சாம்ஸ் கல்லூரி அறை ஒன்றுக்கு அழைத்து வந்து உறவில் ஈடுபடுகிறார்.
மூன்றாவது வீடியோ காட்சி, அதிர்ச்சியின் உச்சம். கப்பல்துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்த சாம்ஸ் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வந்த அதிகாரிகளில் ஒருவரான `பங்கஜ'மான இளம் அதிகாரிக்கு, அன்றிரவு `மங்களகரமான' பெயர் கொண்ட பெண் சேவை செய்கிறார். அந்தப் பெண்ணும், அதிகாரியும் செய்யும் லீலைகள் சுமார் பதினைந்து நிமிட வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது.
![கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் Pg1b](https://2img.net/h/www.kumudam.com/magazine/Reporter/2009-07-26/imagefolder/pg1b.jpg)
இந்த விசாரணைக்கு முன்பாக கல்லூரி இயக்குனர் ஷ்யாம் சுந்தர் ஒவ்வொரு மாணவராக அழைத்து `நீ என்ன புகார் சொன்னாலும் எனக்குத் தகவல் தெரிந்துவிடும்' என மிரட்டல் தொனியில் பேசியது ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகளில் ஷ்யாமின் முகம் தெளிவாகத் தெரிகிறது. பிறகு, கப்பல் துறை அதிகாரிகள் மாணவர்களிடம் நடத்தும் விசாரணையும் மிக ரகசியமாக வீடியோ படமெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நான் கப்பல்துறை அலுவலகத்திற்கு அந்தக் காட்சிகளை அனுப்பி வைக்க, அது தொடர்பாகவும் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சாம்ஸ் கல்லூரியின் பெண் ஊழியர் ஒருவர் அண்மையில் என்னைச் சந்தித்து, இயக்குனர் ஷ்யாம் சுந்தரின் லேப்டாப்பில் `மைசெல்ஃப்' என்ற ஒரு ஃபோல்டரில் இருந்ததாகக் கூறி சில வீடியோ காட்சிகளை பென் டிரைவில் என்னிடம் தந்தார். `இதில் சாம்ஸ் கல்லூரி பெண் ஊழியர்கள் சிலர், ஒரு நபரோடு செக்ஸ் உறவு கொள்ளும் காட்சிகள் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. அதைவிடக் கேவலம் கல்லூரி மாணவிகளின் கழிப்பறைக்குள்ளும் கேமராவைப் பொருத்தி `அசிங்க' காட்சிகளைப் படம் எடுத்திருக்கிறார்கள். எனக்கு இது மிகவும் வேதனையாக இருக்கிறது' என்றார். அந்தக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன்'' என்றவர், அந்தக் காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.
"முதல் வீடியோவில், ஏரோநாடிக்கல் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் உடைகளைக் களைந்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். எதிரில் இருக்கும் அடையாளம் தெரியாத ஆண் உருவம் அந்தப் பெண்ணிடம் சில்மிஷங்களில் ஈடுபடுகிறது. அந்த மாணவி 2007-ம் ஆண்டு ஒரு நள்ளிரவில் விடுதியைவிட்டு ஓடிப் போனவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இன்றுவரை அந்தப் பெண் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இரண்டாவது காட்சியில் கல்லூரி ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த, திருமணம் ஆகாத ஓர் இளம்பெண்ணை ஒருநபர் சாம்ஸ் கல்லூரி அறை ஒன்றுக்கு அழைத்து வந்து உறவில் ஈடுபடுகிறார்.
மூன்றாவது வீடியோ காட்சி, அதிர்ச்சியின் உச்சம். கப்பல்துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்த சாம்ஸ் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வந்த அதிகாரிகளில் ஒருவரான `பங்கஜ'மான இளம் அதிகாரிக்கு, அன்றிரவு `மங்களகரமான' பெயர் கொண்ட பெண் சேவை செய்கிறார். அந்தப் பெண்ணும், அதிகாரியும் செய்யும் லீலைகள் சுமார் பதினைந்து நிமிட வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
நான்காவதாக, போடிநாயக்கனூரில் உள்ள சாம்ஸ் நர்ஸிங் கல்லூரியின் பெண் கண்காணிப்பாளர் ஒருவரோடு, ஆண் ஒருவர் நடத்தும் அந்தரங்க லீலைகள் மூன்று நிமிட வீடியோ காட்சிகளாக விரிகிறது. அந்தப் பெண் நிர்வாகத்தின் தொல்லை காரணமாக வேலையை விட்டுப் போய்விட்டதாகச் சொல்கின்றனர். ஐந்தாவது வீடியோவில், சாம்ஸ் பொறியியல் கல்லூரியில் அப்போது பெண்கள் கழிப்பறையில் கட்டட வேலைகள் நடந்ததால் ஆண்களின் கழிப்பறையைப் பயன்படுத்துமாறு மாணவிகளுக்கு நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த நாட்களில் கழிப்பறையின் உள்ளே ரகசிய கேமரா பொருத்தி மாணவிகளைப் படமெடுத்த காட்சிகளும் உள்ளன. இந்தக் கழிப்பறை சாம்ஸ் கல்லூரியின் கழிப்பறைதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அடுத்ததாக, வடஇந்திய மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி எடுத்த காட்சிகள், போடிநாயக்கனூர் நர்ஸிங் மாணவி ஒருவர், மயிலை சதர்ன் அலுவலகத்தில் வேலை பார்த்த மூன்றெழுத்து இளம்பெண் ஒருவர் என அடுத்தடுத்து வீடியோக்கள் நீள்கின்றன. அந்த வீடியோக்களில் இடம்பெற்ற பெரும்பாலான பெண்களை அலுவலக நிமித்த
மாகச் செல்லும்போது பலமுறை நான் பார்த்திருக்கிறேன். இதில், சில வீடியோக்கள் இண்டெர்நெட்டிலும், பர்மா பஜாரிலும் உலா வருவதுதான் கொடுமை. இதை உலவவிட்ட போர்னோகிராபி வில்லன் யார்? என்பதுதான் கேள்வி.
சாம்ஸ் கல்லூரியின் மாணவர் சேர்க்கை செயல் அலுவலராக இருந்த சித்தார்த் என்பவர் வேலையை விட்டு நின்றுவிட்டார். `இவர் ஒரு லட்ச ரூபாய் திருடிவிட்டார்' என ஷ்யாம்சுந்தர் திருவள்ளூர் குற்றப்பிரிவில் பல மாதங்கள் கழித்துப் புகார் கொடுத்தார். சித்தார்த்திடம் விசாரித்த டி.எஸ்.பி. பிரபாகரன், `உங்களிடம் `ஏதோ' ஒன்று இருப்பதாக ஷ்யாம் சொல்கிறார். அதைக் கொடுத்துவிட்டு சமரசமாகி விடுங்கள்' என்றிருக்கிறார். அதாவது, வீடியோ ஆவணங்கள் சித்தார்த்திடம் இருப்பதாக நினைத்து பயந்து போய்த்தான் ஷ்யாம் புகார் கொடுத்திருக்கிறார். இப்போது வரை சித்தார்த்துக்கு கொலைமிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த வீடியோக்களைத் தவிர்த்து, எங்களிடம் இன்னமும் முப்பதுக்கும் மேற்பட்ட ரகசிய வீடியோ காட்சிகள் இருக்கின்றன. இந்தக் காட்சிகளில் கல்வித்துறையின் மதிப்புமிக்க ஆட்களின் மறுபக்கமும் அடங்கும். இதுதொடர்பாக, உரிய விசாரணை நடக்கும்போது அனைத்துக் காட்சிகளையும் சமர்ப்பிப்போம். சாம்ஸ் கல்லூரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் கல்வித் துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், சி.பி.ஐ. விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் தயாராகி வருகிறோம்'' என்றார் வழக்கறிஞர் ராம்குமார்.
சாம்ஸ் கல்லூரி மீதான அதிர்ச்சிப் புகார்களுக்கு விளக்கம் கேட்டு மயிலாப்பூரில் உள்ள அதன் அலுவலகத்திற்குச் சென்றோம். முதலில் நம்மிடம் பேசிய கல்லூரி துணைத்தலைவர் ஜெயராமன், "வக்கீல் ராம்குமார் எங்களைப் பற்றி அவதூறாக எல்லா இடத்திலும் பேசி வருகிறார். ரஞ்சித் என்ற மாணவர் இறந்து போனதற்கு நாங்கள் காரணம் இல்லை. இறந்த மாணவன் கட்டிய பணம் தேவையில்லை என்பதால்தான் திருப்பிக் கொடுத்தோம்'' என்றார். அடுத்து பேசிய கல்லூரி இயக்குனர் ஷ்யாம் சுந்தர், "என் அலுவலகத்தில் வேலை பார்த்த சித்தார்த் என்பவர்தான் அதிகாரிகளின் விசாரணையை ரகசிய வீடியோ காட்சிகளாக எடுத்திருப்பார் என்று சந்தேகிக்கிறோம். அவர் ஒரு லட்ச ரூபாய் திருடிவிட்டார் என்று போலீஸிலும் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.
அவரது லேப்-டாப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களைப் பற்றிக் கேட்டதுமே, ஒருமாதிரியான ஷ்யாம் சுந்தர், "நாங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கத்தான் கல்லூரி நடத்துகிறோம். இப்படியொரு காரியத்தை ஒருபோதும் செய்யமாட்டோம். நீங்கள் சொல்லும் பெண் ஊழியர்களும், மாணவிகளும் எங்கள் கல்லூரியில் இருந்தவர்கள்தான். போடியில் உள்ள நர்ஸிங் கல்லூரிப் பெண் யார் என்று தெரியவில்லை. கப்பல்துறை அதிகாரியோடு இருப்பதாக நீங்கள் சொல்லும் பெண்ணும் எங்களிடம் வேலை பார்த்தவர்தான். ஆனால், நீங்கள் சொல்லும் பெயரில் அதிகாரி இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் யார் படத்தை, யார் வேண்டுமானாலும் கிராஃபிக்ஸ் செய்யலாமே. அதைப்போல்தான் இந்த வீடியோக்களும்! உண்மை ஒருநாள் வெளியில் வரும்'' என்றார் அதிர்ச்சியோடு.
உண்மையை வெளியில் கொண்டு வரவேண்டிய கடமை சைபர் க்ரைம் போலீஸாருக்கு உள்ளது. அரசு என்ன செய்யப் போகிறதோ?
அடுத்ததாக, வடஇந்திய மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி எடுத்த காட்சிகள், போடிநாயக்கனூர் நர்ஸிங் மாணவி ஒருவர், மயிலை சதர்ன் அலுவலகத்தில் வேலை பார்த்த மூன்றெழுத்து இளம்பெண் ஒருவர் என அடுத்தடுத்து வீடியோக்கள் நீள்கின்றன. அந்த வீடியோக்களில் இடம்பெற்ற பெரும்பாலான பெண்களை அலுவலக நிமித்த
![கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள் Pg1e](https://2img.net/h/www.kumudam.com/magazine/Reporter/2009-07-26/imagefolder/pg1e.jpg)
சாம்ஸ் கல்லூரியின் மாணவர் சேர்க்கை செயல் அலுவலராக இருந்த சித்தார்த் என்பவர் வேலையை விட்டு நின்றுவிட்டார். `இவர் ஒரு லட்ச ரூபாய் திருடிவிட்டார்' என ஷ்யாம்சுந்தர் திருவள்ளூர் குற்றப்பிரிவில் பல மாதங்கள் கழித்துப் புகார் கொடுத்தார். சித்தார்த்திடம் விசாரித்த டி.எஸ்.பி. பிரபாகரன், `உங்களிடம் `ஏதோ' ஒன்று இருப்பதாக ஷ்யாம் சொல்கிறார். அதைக் கொடுத்துவிட்டு சமரசமாகி விடுங்கள்' என்றிருக்கிறார். அதாவது, வீடியோ ஆவணங்கள் சித்தார்த்திடம் இருப்பதாக நினைத்து பயந்து போய்த்தான் ஷ்யாம் புகார் கொடுத்திருக்கிறார். இப்போது வரை சித்தார்த்துக்கு கொலைமிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த வீடியோக்களைத் தவிர்த்து, எங்களிடம் இன்னமும் முப்பதுக்கும் மேற்பட்ட ரகசிய வீடியோ காட்சிகள் இருக்கின்றன. இந்தக் காட்சிகளில் கல்வித்துறையின் மதிப்புமிக்க ஆட்களின் மறுபக்கமும் அடங்கும். இதுதொடர்பாக, உரிய விசாரணை நடக்கும்போது அனைத்துக் காட்சிகளையும் சமர்ப்பிப்போம். சாம்ஸ் கல்லூரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் கல்வித் துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், சி.பி.ஐ. விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் தயாராகி வருகிறோம்'' என்றார் வழக்கறிஞர் ராம்குமார்.
சாம்ஸ் கல்லூரி மீதான அதிர்ச்சிப் புகார்களுக்கு விளக்கம் கேட்டு மயிலாப்பூரில் உள்ள அதன் அலுவலகத்திற்குச் சென்றோம். முதலில் நம்மிடம் பேசிய கல்லூரி துணைத்தலைவர் ஜெயராமன், "வக்கீல் ராம்குமார் எங்களைப் பற்றி அவதூறாக எல்லா இடத்திலும் பேசி வருகிறார். ரஞ்சித் என்ற மாணவர் இறந்து போனதற்கு நாங்கள் காரணம் இல்லை. இறந்த மாணவன் கட்டிய பணம் தேவையில்லை என்பதால்தான் திருப்பிக் கொடுத்தோம்'' என்றார். அடுத்து பேசிய கல்லூரி இயக்குனர் ஷ்யாம் சுந்தர், "என் அலுவலகத்தில் வேலை பார்த்த சித்தார்த் என்பவர்தான் அதிகாரிகளின் விசாரணையை ரகசிய வீடியோ காட்சிகளாக எடுத்திருப்பார் என்று சந்தேகிக்கிறோம். அவர் ஒரு லட்ச ரூபாய் திருடிவிட்டார் என்று போலீஸிலும் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.
அவரது லேப்-டாப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களைப் பற்றிக் கேட்டதுமே, ஒருமாதிரியான ஷ்யாம் சுந்தர், "நாங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கத்தான் கல்லூரி நடத்துகிறோம். இப்படியொரு காரியத்தை ஒருபோதும் செய்யமாட்டோம். நீங்கள் சொல்லும் பெண் ஊழியர்களும், மாணவிகளும் எங்கள் கல்லூரியில் இருந்தவர்கள்தான். போடியில் உள்ள நர்ஸிங் கல்லூரிப் பெண் யார் என்று தெரியவில்லை. கப்பல்துறை அதிகாரியோடு இருப்பதாக நீங்கள் சொல்லும் பெண்ணும் எங்களிடம் வேலை பார்த்தவர்தான். ஆனால், நீங்கள் சொல்லும் பெயரில் அதிகாரி இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் யார் படத்தை, யார் வேண்டுமானாலும் கிராஃபிக்ஸ் செய்யலாமே. அதைப்போல்தான் இந்த வீடியோக்களும்! உண்மை ஒருநாள் வெளியில் வரும்'' என்றார் அதிர்ச்சியோடு.
உண்மையை வெளியில் கொண்டு வரவேண்டிய கடமை சைபர் க்ரைம் போலீஸாருக்கு உள்ளது. அரசு என்ன செய்யப் போகிறதோ?
`எங்களை அசிங்கப்படுத்தும் செயல்!'
-குமுறும் கப்பல்துறை அதிகாரிகள்
கப்பல்துறை தலைமை அதிகாரிகளை ரகசிய வீடியோ எடுத்த காட்சிகள் பற்றி வழக்கறிஞர் ராம்குமார் அனுப்பிய புகார் பற்றி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நாகராஜனை நியமித்திருக்கிறது கப்பல்துறை. இவர் கடந்த 13-ம் தேதி, இரண்டு மணி நேரம் ராம்குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். "இது மிகவும் சீரியஸான விஜயம். இந்த அளவுக்குக் கேவலமான ஒரு கல்லூரியை நாங்கள் பார்த்ததில்லை. எங்களையே ஒரு தனியார் கல்லூரி ரகசிய வீடியோ எடுத்தது அசிங்கப்படுத்தும் செயல். இதைப் பற்றி டி.ஜி.எஸ்.ஸுக்கு (கப்பல்துறை இயக்குனர் ஜெனரலுக்கு) அறிக்கை கொடுப்பேன். அந்தக் கல்லூரியின் கப்பல் சார்ந்த படிப்புகளுக்குத் தடை விதிக்கவும் பரிந்துரை செய்கிறேன்'' என அவர் உறுதியளித்தாராம்.
-குமுறும் கப்பல்துறை அதிகாரிகள்
கப்பல்துறை தலைமை அதிகாரிகளை ரகசிய வீடியோ எடுத்த காட்சிகள் பற்றி வழக்கறிஞர் ராம்குமார் அனுப்பிய புகார் பற்றி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நாகராஜனை நியமித்திருக்கிறது கப்பல்துறை. இவர் கடந்த 13-ம் தேதி, இரண்டு மணி நேரம் ராம்குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். "இது மிகவும் சீரியஸான விஜயம். இந்த அளவுக்குக் கேவலமான ஒரு கல்லூரியை நாங்கள் பார்த்ததில்லை. எங்களையே ஒரு தனியார் கல்லூரி ரகசிய வீடியோ எடுத்தது அசிங்கப்படுத்தும் செயல். இதைப் பற்றி டி.ஜி.எஸ்.ஸுக்கு (கப்பல்துறை இயக்குனர் ஜெனரலுக்கு) அறிக்கை கொடுப்பேன். அந்தக் கல்லூரியின் கப்பல் சார்ந்த படிப்புகளுக்குத் தடை விதிக்கவும் பரிந்துரை செய்கிறேன்'' என அவர் உறுதியளித்தாராம்.
- வி. ஆனந்த்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
இவ்வளவு விரிவாக எழுதியுள்ளீர்கள், அந்த வீடியோக் காட்சிகள் சிலவற்றை இணைத்தால்தான் என்ன?
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
சிவா wrote:இவ்வளவு விரிவாக எழுதியுள்ளீர்கள், அந்த வீடியோக் காட்சிகள் சிலவற்றை இணைத்தால்தான் என்ன?
இது எல்லாம் தப்பு தப்பு கிடைத்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அண்ணா..
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
கொஞ்ச நாட்களாக ஆளையே காணோமே தம்பி! காதலியுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டீரோ!
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
இல்லை அண்ணா 2 நாட்களாக சரியான காய்சல் அதுதான் எழுந்திருக்க முடியவில்லை.. தற்போது நலம். காதலியுடன் ஊர் சுற்றக் கிடைத்தால் இப்படியா அண்ணா இருப்போம்... நான் நல்ல பையன் அண்ணா
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
ஆஹா! காய்ச்சலா! தற்பொழுது சரியாகிவிட்டதா செரீன். விரைவில் ஈகரையில் பிரார்த்தனை பகுதி ஆரம்பிக்க வேண்டும். பலரின் வேண்டுதல் நோயின் வேகத்தைக் குறைக்கும்.
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
மருந்து சாப்பிட்டிங்களே இப்போ சரியாதானே இருக்கு...? ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கப்பல் கல்லூரியில் எடுக்கப்பட்ட கசமுசா படங்கள்
இங்கு Denku Fever மிகவும் வேகமாக பரவுகிறது. இதனால் பாதிக்கபட்டு இறந்தவர்களின் doctor, nurse களும் அடங்குகிறார்கள்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாய்லாந்தில் எடுக்கப்பட்ட படங்கள்
» கச்சிதமாக எடுக்கப்பட்ட படங்கள்
» அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா என்கிறார் ராமதாஸ்
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள்
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» கச்சிதமாக எடுக்கப்பட்ட படங்கள்
» அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா என்கிறார் ராமதாஸ்
» சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள்
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|