Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்
4 posters
Page 1 of 1
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்
அண்ணாமலை சுகுமாரன்
இளம் வயதிலிருந்தே ஆதிச்சநல்லூர் என்ற பெயர்அதனுள் ஏதோ ஒரு மர்ம முடிச்சு அதில் இருப்பது போல் போல் என்னுள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவது வழக்கம் .
எகிப்தில் கண்டுபிடிக்கப் பட்ட சரித்திர ஆதாரங்களுக்கு ஈடாக தமிழத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கப் பட்ட ஆராய்சிகள் மற்றும் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள் என்ன காரணத்தினாலேயோ சரிவர மேலும் தொடராத்தின் காரணம் என்னுள் ஒரு தாக்கத்தை எப்போதும் ஏற்ப்படித்தி வந்தவை தான் .
மேலும் அங்கு கண்டு எடுக்கப் பட்டது 114 ஏக்கர் பரப்புள்ள உலகின் மிகப் பெரிய மயானம் ,மயானம் இத்தனை பெரிதாக இருப்பின் அதை உபயோகப் படுத்திய தாம்பிரபரணி நதியை சார்ந்த நாகரீகம் எத்துணை பெரிதாக இருந்திருக்கும் .எத்தனை பெரிய மக்கள் தொகை
இருந்திருப்பின் இவ்வளவு பெரிய மயானம் தேவைப் பட்டிருக்கும் என நினைத்து வியந்து போவேன் .
114 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் அடுக்கடுக்காக முன்று அடுக்காக ஈமத்தாழிகள் மூன்று தளங்களாக அமைந்திருப்பதைப் பார்க்கும் போது., தொடர்ச்சியாக எத்தனை நீண்ட மக்கள் வாழ்க்கை தடையின்றி நடை பெற்றிருக்கும் என எண்ணி வியந்ததுண்டு . .
ஆற்றங்கரை நாகரீகங்களில் சிந்து வெளி நாகரீகத்திற்கு காலத்தால் முந்தியதாக விளங்குவது ஆதிச்சநல்லூர் என்னும் பொருணை நாகரீகம் .
ஆதிச்சநல்லூரின் தொன் மையை நமக்குச் சுட்டிக்காட்டியவர் டாக்டர் கால்டுவெல் அவர்கள். திருநெல்வேலியி லிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் உள்ளது. இது ஓர் இடுகாடு - இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப் பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்த வர்களை வைத்துப் புதைத் துள்ளனர். . இவ் வாறு புதைக்கப்பட்ட பானை களை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக் கான தாழிகள் வரிசை வரிசை யாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய இடுகாடாகும்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்பொருள்களை டாக்டர் ஜாகர் ஜெர்மன் நாட்டுக்குக் கொண்டு சென்றார். பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல் லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்சநல் லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப் போய்விட் டார். இவ்வாறு ஆதிச்ச நல் லூரில் கிடைத்த மிகத் தொன்மை வாய்ந்த பொருள் கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதை பொருள் சின்னங்கள் கிடைத் தால் ஆதிச்சநல்லூரின் தொன் மையான வரலாறு நமக்குத் தெரியவரும்.
1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.
ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர் போன்ற ஊர்களில் இரும்பு உருக்கி எடுக்கும் தொழில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளால் தெளிவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, செம்பு தங்கம் போன்றவையும் சிறிய அளவில் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரியின் பழம் பெயரான குருகூர் என்பது கூட உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம்.
அங்கு மீண்டும் தம் ஆய்வுப் பணிகளைத்
தொடங்கினார் முனைவர் சத்தியமூர்த்தி அவர்கள் . அதன் அடிப்படையில் பல ஆய்வு முடிவுகளைக் கண்டு பிடித்தார். தாம் கண்டுணர்ந்தவற்றை அறிவியல் ஆய்வு முறைகளுக்கு உட்படுத்திய பிறகே வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வு, தமிழர் நாகரிக வரலாறு இன்னும் ஆயிரம் ஆண்டு பின்னோக்கிப் போகிறது .
இத்தகைய பெருமை மிக்க தொல்லியல் திருத்தலமான ஆதிச்சநல்லூர் பற்றிய
விழிப்புணர்வு இன்னும் ஏனோ நமது பல்கலை கழகங்களுக்கும் அரசுக்கும் வரவில்லை .ஆதிச்சநல்லூர் மட்டும் மிக தீவிரமாக மீளாய்வு செய்யப்படுமானால் சிந்து நதி நாகரீகம் பற்றிய விடுபடாத புதிர்களும்
சிந்து மக்களுக்கும் ,குமரி கடலுக்கு அருகே இருக்கும் இந்த தமிழர் நாகரீகத்திற்கும் இருக்கும் தொடர்பு வெளிப்படும் .
நமது தொன்மை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆதாரப்பூர்வமாக பின்னோக்கிப் போகும் .
a
அண்ணாமலை சுகுமாரன்
இளம் வயதிலிருந்தே ஆதிச்சநல்லூர் என்ற பெயர்அதனுள் ஏதோ ஒரு மர்ம முடிச்சு அதில் இருப்பது போல் போல் என்னுள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவது வழக்கம் .
எகிப்தில் கண்டுபிடிக்கப் பட்ட சரித்திர ஆதாரங்களுக்கு ஈடாக தமிழத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கப் பட்ட ஆராய்சிகள் மற்றும் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள் என்ன காரணத்தினாலேயோ சரிவர மேலும் தொடராத்தின் காரணம் என்னுள் ஒரு தாக்கத்தை எப்போதும் ஏற்ப்படித்தி வந்தவை தான் .
மேலும் அங்கு கண்டு எடுக்கப் பட்டது 114 ஏக்கர் பரப்புள்ள உலகின் மிகப் பெரிய மயானம் ,மயானம் இத்தனை பெரிதாக இருப்பின் அதை உபயோகப் படுத்திய தாம்பிரபரணி நதியை சார்ந்த நாகரீகம் எத்துணை பெரிதாக இருந்திருக்கும் .எத்தனை பெரிய மக்கள் தொகை
இருந்திருப்பின் இவ்வளவு பெரிய மயானம் தேவைப் பட்டிருக்கும் என நினைத்து வியந்து போவேன் .
114 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் அடுக்கடுக்காக முன்று அடுக்காக ஈமத்தாழிகள் மூன்று தளங்களாக அமைந்திருப்பதைப் பார்க்கும் போது., தொடர்ச்சியாக எத்தனை நீண்ட மக்கள் வாழ்க்கை தடையின்றி நடை பெற்றிருக்கும் என எண்ணி வியந்ததுண்டு . .
ஆற்றங்கரை நாகரீகங்களில் சிந்து வெளி நாகரீகத்திற்கு காலத்தால் முந்தியதாக விளங்குவது ஆதிச்சநல்லூர் என்னும் பொருணை நாகரீகம் .
ஆதிச்சநல்லூரின் தொன் மையை நமக்குச் சுட்டிக்காட்டியவர் டாக்டர் கால்டுவெல் அவர்கள். திருநெல்வேலியி லிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் உள்ளது. இது ஓர் இடுகாடு - இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப் பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்த வர்களை வைத்துப் புதைத் துள்ளனர். . இவ் வாறு புதைக்கப்பட்ட பானை களை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக் கான தாழிகள் வரிசை வரிசை யாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய இடுகாடாகும்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்பொருள்களை டாக்டர் ஜாகர் ஜெர்மன் நாட்டுக்குக் கொண்டு சென்றார். பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல் லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்சநல் லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப் போய்விட் டார். இவ்வாறு ஆதிச்ச நல் லூரில் கிடைத்த மிகத் தொன்மை வாய்ந்த பொருள் கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதை பொருள் சின்னங்கள் கிடைத் தால் ஆதிச்சநல்லூரின் தொன் மையான வரலாறு நமக்குத் தெரியவரும்.
1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.
ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர் போன்ற ஊர்களில் இரும்பு உருக்கி எடுக்கும் தொழில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளால் தெளிவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, செம்பு தங்கம் போன்றவையும் சிறிய அளவில் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரியின் பழம் பெயரான குருகூர் என்பது கூட உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம்.
அங்கு மீண்டும் தம் ஆய்வுப் பணிகளைத்
தொடங்கினார் முனைவர் சத்தியமூர்த்தி அவர்கள் . அதன் அடிப்படையில் பல ஆய்வு முடிவுகளைக் கண்டு பிடித்தார். தாம் கண்டுணர்ந்தவற்றை அறிவியல் ஆய்வு முறைகளுக்கு உட்படுத்திய பிறகே வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வு, தமிழர் நாகரிக வரலாறு இன்னும் ஆயிரம் ஆண்டு பின்னோக்கிப் போகிறது .
இத்தகைய பெருமை மிக்க தொல்லியல் திருத்தலமான ஆதிச்சநல்லூர் பற்றிய
விழிப்புணர்வு இன்னும் ஏனோ நமது பல்கலை கழகங்களுக்கும் அரசுக்கும் வரவில்லை .ஆதிச்சநல்லூர் மட்டும் மிக தீவிரமாக மீளாய்வு செய்யப்படுமானால் சிந்து நதி நாகரீகம் பற்றிய விடுபடாத புதிர்களும்
சிந்து மக்களுக்கும் ,குமரி கடலுக்கு அருகே இருக்கும் இந்த தமிழர் நாகரீகத்திற்கும் இருக்கும் தொடர்பு வெளிப்படும் .
நமது தொன்மை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆதாரப்பூர்வமாக பின்னோக்கிப் போகும் .
a
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்
பகிர்வுக்கு நன்றி!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்
வணக்கம் தோழர்,
முதலில் எனது நன்றிகளை ஏற்கவும்.
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிச்ச நல்லூர் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்த இடம்.
நாகைக்கும் பூம்புகாருக்கும் இடையே ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி நடந்தது . அது தமிழ் நாகரீகம் ஏறத்தாழ 11000 ஆண்டுகள் தொன்மம் கொண்டது என நிறுவ முயல்கிறது. சேர்த்து எழுத நிணைத்தேன். முடியவில்லை.நீங்கள் தந்த உற்சாகத்தில் எழுதிவிடுவேன்.
அருமையான பதிவிற்கு நன்றி
முதலில் எனது நன்றிகளை ஏற்கவும்.
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிச்ச நல்லூர் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்த இடம்.
நாகைக்கும் பூம்புகாருக்கும் இடையே ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி நடந்தது . அது தமிழ் நாகரீகம் ஏறத்தாழ 11000 ஆண்டுகள் தொன்மம் கொண்டது என நிறுவ முயல்கிறது. சேர்த்து எழுத நிணைத்தேன். முடியவில்லை.நீங்கள் தந்த உற்சாகத்தில் எழுதிவிடுவேன்.
அருமையான பதிவிற்கு நன்றி
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Similar topics
» தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்
» கொங்கு ஆதிச்சநல்லூர்
» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
» ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் - எஸ் இராமசந்திரன்
» தமிழ்வரலாற்றுப் பதிவுகள் தொல்லியல் வலைப்பூ
» கொங்கு ஆதிச்சநல்லூர்
» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
» ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் - எஸ் இராமசந்திரன்
» தமிழ்வரலாற்றுப் பதிவுகள் தொல்லியல் வலைப்பூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|