ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

+4
ரூபன்
நிலாசகி
Srisiva
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by சிவா Fri Jul 24, 2009 2:07 pm

சென்னை: இந்தியாவிலேயே பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர் நானாகத்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழ அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 1 கோடி பேருக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நேற்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் நடந்தது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசும்போது தனது கோபாலபுரம் வீட்டை தனது மற்றும் தனது மனைவி காலத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தார்.

கருணாநிதி தொடர்ந்து பேசுகையில்,

இந்த விழாவில் உங்களில் ஒருவன் என்ற முறையில் என் சார்பாக ஓர் அறிவிப்பினை செய்திட விரும்புகிறேன்.

பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பும்; பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் -

கோபாலபுரத்தில் தற்போது நான் வசிக்கும் ஒரு வீடும் (தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி) - திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் பதினான்கு ஏக்கர் நிலமும் தான் உள்ளது.

இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல்-அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நேரத்தில் எல்லாம், இப்போது கோபாலபுரத்தில் இந்த வீட்டிற்கு பதிலாக அரசு பங்களா ஒன்றில் நான் வசிக்க வீடு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

வருகின்ற பார்வையாளர்களையும், வெளிநாட்டுக்காரர்களையும் என் இல்லத்தில் வரவேற்றுப் பேசுவதற்குக் கூட போதுமான அளவிற்கு இடம் கிடையாது. புகைப்படக்காரர்கள் நின்று படம் எடுக்கக் கூட வசதி இல்லாத நிலை என்பதை தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.

கோபாலபுரத்தில் நான் வசிக்கும் இந்த இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 1968-ல் என் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளேன். தற்போது அந்த இல்லத்தினை என்னுடைய காலத்திற்கு பிறகும், என் மனைவி காலத்திற்குப் பிறகும், தமிழக அரசுக்கோ அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடமையாக்குவதென்றும், அந்த இல்லத்தில் ஒரு இலவச மருத்துவ மனையினை என் தாய் தந்தையர்களான அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் நடத்துவதென்றும் அதற்கு என் மனைவி, மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளேன் என்பதையும் நான் அரசின் மருத்துவத் துறை சம்மந்தப்பட்ட இந்த விழாவில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அண்ணா வழங்கிய நல்லுரை. அதை பின்பற்றி ஏழைகளுக்கு உதவிட, அவர்கள் முகத்தில் சிரிப்பைக் கண்டிட, உழைத்து வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதன் ஆட்சியில் கடந்த காலத்தில் நிறைவேற்றிய திட்டங்களோடு மேலும் ஒரு புதிய திட்டத்தை இணைக்கின்ற இந்த விழாவுக்கு வந்துள்ள மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்.

இந்த திட்டத்தில் காப்பீட்டுத்தொகை முழுவதையும் அரசே கட்டுவதால் ஆண்டுக்கு 517 கோடி ரூபாய் செலவாகிறது. அதற்கு சேவை வரி 48 கோடி ரூபாய். சேவை வரி 48 கோடியை தள்ளுபடி செய்துவிடுங்கள் என்று அவரை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மேடையிலே கூடச் சொல்லத் தேவையில்லை. கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்குத் தருகிற பதிலில் உங்கள் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று ஒரு வரி எழுதினால் போதும். மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

எனது பள்ளிப் பருவத்தின்போது, எங்கள் திருவாரூர் கோயில் சுவர்களில் நடமாடும் கோவில் திருப்பணி என்று எழுதப் பட்டிருக்கும். நடமாடும் கோவில் திருப்பணி என்றால், நடமாடுகின்ற கோயில் கட்டப் போகிறார்கள் என்று பொருள் அல்ல.

மனிதனின் உடலே நடமாடும் கோயில்தான். அதிலே ஏற்படுகின்ற பழுதுகளைப் பார்ப்பதற்கு திருப்பணி என்று சொல்கிறோம். நடமாடும் கோயில் திருப்பணி என்றால் மருத்துவம்தான் என்று எனது ஆசிரியர் சொன்னார்.

அந்த நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் திமுக அரசு ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது.

மு.க. ஸ்டாலின் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல ஏழை எளியோருக்கு, கை கொடுப்பது, அவர்களை வாழ
வைப்பது ஆகிய பணியை திமுக அரசு தொடர்ந்து ஆற்றி வருகின்றது. அதிலே ஒன்றாகத்தான் இன்று இந்தப் பெரும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு கோடி மக்கள், உயிர் காக்கும் உயர் சிகிச்சை பெறுவதற்கு இந்தத் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

உயிர் காக்கும் வரம் யார் தருவார்கள் என்று ஏங்கி இருப்போருக்கெல்லாம் இந்தத் திட்டம் நிச்சயமாக அபயக் கரம் நீட்டும் என்ற உறுதியை இந்த நேரத்திலே எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பள்ளிச் சிறார்களுக்கு இருதயப் பாதுகாப்புத் திட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 13 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 653 இளம் சிறார்க்கும், 1663 பள்ளி மாணவர்களுக்கும் இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளன.

இதன் அடுத்த பணியாகத்தான் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். ஆண்டுக்கு 517 கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்துக்கு, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உதவிடுவார் என்ற நம்பிக்கையோடு, மத்திய நிதி அமைச்சருக்கு பரிந்துரை செய்வார் என்கின்ற உணர்வோடு இந்த விழாவிலே வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.

தமிழகத்திலே இன்றைக்கு வேர் விட்டிருக்கின்ற இந்தத் திட்டத்தை இந்தியா முழுமையும் ஏற்றுக் கொள்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஆசாத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by Srisiva Fri Jul 24, 2009 2:15 pm

முதல்வரின் கணக்கு சரி.
அவரது வாரிசுகளின் கணக்குகளை பார்க்க வேண்டுமே? கூடாது
Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by நிலாசகி Fri Jul 24, 2009 3:59 pm

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அண்ணா வழங்கிய நல்லுரை. அதை
பின்பற்றி ஏழைகளுக்கு உதவிட, அவர்கள் முகத்தில் சிரிப்பைக் கண்டிட,
உழைத்து வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

புன்னகை புன்னகை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by ரூபன் Fri Jul 24, 2009 4:02 pm

நிலாசகி wrote:ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அண்ணா வழங்கிய நல்லுரை. அதை
பின்பற்றி ஏழைகளுக்கு உதவிட, அவர்கள் முகத்தில் சிரிப்பைக் கண்டிட,
உழைத்து வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

புன்னகை புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by kirupairajah Fri Jul 24, 2009 4:27 pm

இதுவும் இவரின்ட பெருமைகளில் ஒன்றுதான்

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Ch791116323
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by ரூபன் Fri Jul 24, 2009 4:28 pm

மகிழ்ச்சி சியர்ஸ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by nandhtiha Fri Jul 24, 2009 4:58 pm

பேரன்பு மிக்க்கிர்
வணக்கம்
நெட்டில் சுட்டது
கேள்வி_ முதல்வர் எப்பொழுதுமே புன்னகையுடன் POSE தருகிறாரே அது ஏன்?
பதில்: ஒருவர் நம்மைப்பார்த்து புன்னகை செய்தால் பதிலுக்கு நாமும் புன்னகை செய்ய வேண்டும்.உலகமே ஒருவரைப் பார்த்துச் சிரித்தால் புன்னகை கூடவா செய்யக் கூடாது
சுட்டு இங்கே இட்டவர்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by நிலாசகி Fri Jul 24, 2009 5:02 pm

ஒருவர் நம்மைப்பார்த்து புன்னகை செய்தால் பதிலுக்கு நாமும் புன்னகை செய்ய
வேண்டும்.உலகமே ஒருவரைப் பார்த்துச் சிரித்தால் புன்னகை கூடவா செய்யக்
கூடாது!!!!!

உண்மை உண்மை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by ரூபன் Fri Jul 24, 2009 5:08 pm

சுட்டு இங்கே இட்டவர்
நந்திதா
மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by ஈழமகன் Fri Jul 24, 2009 5:52 pm

கருனாநிதியின் அறிக்கைகளைப்பார்க்க பிரமிப்பாக இருக்கிறது சாகப் போகும் வயதிலும் சளைக்காமல் யோசித்து யோசித்து நம்மை எல்லாம் ஏமற்றுகிறாரே என்று. தன்னைத்தானே புகழ்வதில் அவரைவிட்டால் உலகில் வேற யாரும் இல்லை,
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி Empty Re: பங்களாவில் வசிக்காமல் தெரு வீட்டில் வசிக்கும் ஒரே முதல்வர் நான்தான் - கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum