ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Go down

ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Empty ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Post by நவீன் Sat Aug 07, 2010 4:04 pm

ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் 16583944



சென்னை,


முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எதிர்க்கட்சித்
தலைவர் ஜெயலலிதாவிற்கு அறிக்கை விடுவதற்கோ- ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ வேறு
எந்தக்காரணமும் கிடைக்கவில்லையென்றால் உடனே பத்து நாட்களுக்கு முன்பு அவரே
வெளியிட்ட ஒரு அறிக்கையைத் தேடிப்பிடித்து, தேதியை மாற்றி மீண்டும் அதையே
ஒரு புது அறிக்கை போல விடுவார் போலும்! தான் விடுகின்ற அறிக்கைகளுக்கு
அரசு தரப்பிலிருந்து என்ன பதில் சொல்கிறார்கள் என் பதை அவர் படிப்பதும்
இல்லை.

தான் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதையே அவர் வாடிக்கையாகக்
கொண்டுள்ளார் என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் ஆசிரியர்கள் தேர்வு குறித்து
அவர் விடுத்துள்ள அறிக்கை.

கல்வித்
துறையில் புரட்சி புரிந்து தமிழ்நாட்டு மக்களி டையே கல்வி கற்பதில்
பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய விழிப்புணர்வைத் தொடர்ந்து தமிழகத்தில்
தற்போது கடந்த ஐந்து நிதி நிலை அறிக்கைகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு
வரலாறு காணாத அளவில் அதிகமான நிதி ஒதுக்கீட்டினை அளித்து, பல்வேறு
சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்
முறையாக இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கெனப்
பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.

ஏழை
எளியமாணவர் களைக்கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி
வகுப் பறையில் இந்திய அளவில் மற்ற மாநிலங்களை விட கற்றல் கற்பித்தலில்
புதிய மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும்
பாராட்டுகள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்
தேர்வில் ஊழல் மலிந்து விட்டது என்று ஜெயா அலறித்துடித்திருக்கிறார்.
அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், கடந்த மார்ச்மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப்பட்டியலில்
இடம் பெற்றுள்ள பலர், ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆசிரியர்
தேர்வுப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர் என்பது தான். ஜெயாவுக்கு விஷயம்
தெரியாவிட்டால் யாராவது தெரிந்தவர்களிடம் விவரம் கேட்டுத்தெரிந்து
கொள்ளலாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க முடியாது. தான் மெத்தப்
பெரிய மேதாவி, தனக்குத்தெரியாததே எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டால்
இது போன்ற தவறான விஷயங்களை எழுதிவிட்டு, பிறகு வாங்கிக்கட்டிக்
கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தனது பெயரை வேலை வாய்ப்பகத்தில் பட்டதாரி
ஆசிரியர் பணிக்கும் பதிவு செய்து வைத்திருப்பார்; முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர் பணிக்கும் பதிவு செய்திருப்பார். ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுநிலைப்பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியரைத் தேர்வு செய்யும்போது வேலை
வாய்ப்பு அலுவலகத்தால் அனுப்பப்படும் இரண்டு பட்டியல் களிலும் அவர் பெயர்
இடம் பெற்று, அவர் இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்படுவது இயல் புதான். அவர்
எந்தப் பணி தனக்கு உகந்தது என்று தீர்மானித்துக் கொண்டு, தான் விரும்பும்
பணியிலே சேரலாம்.
அரசால்
வழங்கப்பட்ட ஆணைகள் மற்றும் நடை முறை விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துத்
தேர்வுப்பணிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற் கொள்ளப்பட்டு
வருகின்றன. 2009-2010ம் ஆண்டிற்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரி பார்ப்பின்
போது விண்ணப் பதாரர்களுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் சுய
விவரப்படிவங்களில் தாங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே தேர்வு
செய்யப்பட்டு பணி யில் உள்ளாரா?Ó என்ற வினாவிற்கு- அப்படித்தேர்வு
செய்யப்பட்ட விவரம் விண்ணப்பதாரர்களால் தெரிவிக்கப்படாததால் 25 பெயர்கள்
2009-2010ம் ஆண்டிற்கான தேர்வுப் பட்டியலில் மீண்டும் இடம் பெறும்
சூழ்நிலை ஏற்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட 25 பேர்கள்; 2009- 2010ஆம்
ஆண்டு வெளியிடப்பட்ட இணையதள தேர்வுப்பட்டியலிலும் இடம் பெற்றது பின்னர்
தெரிய வந்ததையடுத்து அவர்களது தேர்வு முறைப்படி இரத்து செய் யப்பட்டது.
இரண்டாவ தாக தேர்வு பெற்றமைக்கு அவர்களுக்கு எந்தவிதமான ஆணைகளும்
இவ்வாரியத்தின் மூலம் அனுப்பப்படவில்லை. இந்த விஷயம் புரியாமல் ஜெயா
அறிக்கை விடுத்திருக்கிறார்.
283
தமிழாசிரியர் பணி யிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்
பட்ட பட்டியல் அடிப்படையில் 256 பேர் இவ்வாரியத்தால் தேர்வு
செய்யப்பட்டனர். குறிப்பிட்ட இனச்சுழற்சியில் தகுதியுடையோர் கிடைக்கப்
பெறாததால் 8 பணியிடங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட
19 பணியிடங்களையும் சேர்த்து 27 பணியிடங்கள் நீங்கலாக 256 பணியிடங்களுக்கு
தேர்வு முடிவுகள் இந்த வாரியத்தின் இணையதளத்தில் முறைப்படி
வெளியிடப்பட்டது.

2009-2010
ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால்
பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின்படி தகுதியுடைய 196 பேர் தேர்வு
செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 பணி யிடங்களுக்கு
தகுதியுடையோர் கிடைக்கப்பெறாததாலும், ஒரு பணியிடம் நீதிமன்ற ஆணையின்படி
நிறுத்தி வைக்கப்பட்டதாலும் 10 பணியிடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. இது
தொடர்பாக ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் 29-6-2010 அன்றும் மீண்டும்
22-7-2010 அன்றும் விரிவான செய்திக் குறிப்பினை வெளியிட்டு, அவை
ஏடுகளிலும் வெளி வந்துள்ளன.

தேர்வு
செய்யப்பட்டவர்களின் விவரங்கள், இந்த வாரிய இணையதளத்தில் அனைவரும் அறியும்
வண்ணம் வெளிப்படையான முறையில் வெளியிடப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்
தேர்வுகளில் எந்தவிதமான குளறு படியோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Empty Re: ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Post by நவீன் Sat Aug 07, 2010 4:04 pm

ஜெயாவுக்கு
எந்த அறிக்கையானாலும், என்னுடைய பெயரையோ, என்னுடைய குடும்பத்தினரின்
பெயர்களையோ சேர்க்காமல் விடுவதற்கு மனம் வராதென நினைக்கிறேன். இந்த
அறிக்கையிலும் ஏதோ ஆசிரியர் பணியிடங்கள் என்னுடைய குடும்ப
உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகப் புலம்பியிருக்கிறார்.
அவருக்கு இதுகுறித்து ஆதாரங்கள் இருக்குமே யானால் என் குடும்பத்தைச்
சேர்ந்த இன்னாருக்கு இந்தப் பணியிடம் தரப்பட்டுள்ளது என்று
குறிப்பிட்டுச்சொல் வாரேயானால், அவரை ஒரு பொறுப்புள்ள எதிர்க்
கட்சித்தலைவர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வாய்புளித்ததோ, மாங்காய்
புளித்ததோ என்ற அளவிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பொத்தாம்பொதுவில்
புழுதி வாரித் தூற்றுவது தெருவில் திரியும் ஏனோதானாக்களின் வேலையாகவே இருக்க முடியும்!

போலி
மதிப்பெண் சான்றி தழ் கொடுத்தவர்கள் மீது இந்த அரசு முறையாக நடவடிக்கை
எடுத்து, தவறு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு
தொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றியும் ஜெயலலிதா தனது அறிக்கையில் ஏதேதோ
மர்மம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். தொழிற்படிப்புக்கு விண்ணப்பிப்ப
வர்களின் சான்றிதழ் பற்றிய உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள ஏதுவாக
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி சேர்க்கைக் குழுவிற்கு மார்ச் 2010-ல்
நடத்தப்பட்ட மேல் நிலை தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய
குறுந்தட்டு தேர்வுத்துறையால் அளிக்கப்பட்டது.

தொழிற்படிப்பில்
சேர்க்கை பெறுபவர்கள் போலி மதிப்பெண் சான்றி தழ் அளித்து சேர்க்கை பெறு
வதைத்தடுக்கும் நோக்கத்துடன் இந்த நட வடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு மதிப்பெண் விவரங்களை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்ததில்
மருத்துவ கல்வி சேர்க்கைக்கு 10 விண்ணப்ப தாரர்களும் பொறியியல்
சேர்க்கைக்கு 13 விண்ணப்பதா ரர்களும் போலிச் சான்றி தழ் பெற்றிருப்பது
கண்டு பிடிக்கப்பட்டது. இதுபற்றி 12.7.2010 மற்றும் 17.7.2010 ஆகிய
தேதிகளில் மாநகர காவல் ஆணையரிடம் அரசு தேர்வுகள் துறையால் புகார்
அளிக்கப்பட்டு காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறையிலே
இருந்த வர்களை பார்வையாளர் என்ற போர்வையில் யாரோ சந்தித்ததாக ஜெயலலிதா
பத்திரிக்கையிலே வந்த செய்தியை நம்பிக் கொண்டு தனது அறிக்கையிலே அதை
யெல்லாம் எழுதியிருக்கிறார். பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியைப் போல
சிறையிலே இருந்தவர்களை காவல் துறையைச் சேர்ந்த யாரும் சந்திக்கவில்லை
என்பது தான் உண்மை. இந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்ததும், சிறையிலே இருந்த
குற்றவாளியை நேரிலே கண்டு, காவல்துறையைச் சேர்ந்த யாராவது தங்களைச்
சந்தித்தது உண்டா என்று சிறைத்துறை உயர் அதிகாரியே ஜெயா குறிப்பிட்ட
அந்தக் கைதியிடம் கேட்டு, அவ்வாறு எந்தக்காவல் துறை அலுவலரும் தன்னைச்
சந்திக்கவில்லை என்று அவர் கூறியதோடு அதற்கான வாக்குமூலமும்
கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், எதையெடுத்தாலும் சந்தேகம், மர்மம் என்று தனது நிழலைக்
கண்டே அஞ்சுகின்ற நிலை ஜெயாவுக்கு ஏற்பட்டுள்ளது. யாரோ சொன்னார்கள்,
தகவல்கள் தெரிவிக்கின்றன, பத்திரிகையிலே வந்துள்ளது என்றெல்லாம்
எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஜெயா அறிக்கை விடுவது என்பது இது தான் முதல்
தடவையல்ல. தேவையில்லாமல்; பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மத்திய அமைச்சர்
மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அத னால் மதிப்பெண்
சான்றி தழ், ஆசிரியர் பணிமாற் றம், நியமனம் போன்றவற் றில் அவரது தலையீடு
இருக்கு மென்றும் ஜெயலலிதா இட்டுக் கட்டி குற்றஞ்சாட்டியிருப்பது அவரது
அரசியல் அசூயைத் தனத்தையும், என் குடும் பத்தினரின் மீதுள்ள காழ்ப்
புணர்வையும் காட்டுவதாகத்தான் உள்ளது.

கழக
அரசின் பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில்
நடந்த பொது மாறுதல்கள் யாவும் அனைத்து தரப்பு ஆசிரியர்களும் பயனடையும்
வகையில் நேர்மையான முறையில் வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டு, மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை தொடக்கக்
கல்வித் துறையில் கலந்தாய்வின் மூலமாக மட்டும் பயன் பெற்றவர்கள் 46,962
பேராகும். பள்ளிக் கல்வித்துறையிலே பயன் பெற்றவர்கள் 30,051 பேராகும்.
இரண்டிலும் சேர்ந்து 77 ஆயிரத்து 13 ஆசிரியர்கள் பயன் பெற்றுள்ளார்கள்
என்ற ஒரு புள்ளி விவரமே இந்தத்துறை எந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு
வருகிறது என்பதை உலகத்திற்கு வெளிப்படுத்தும்.

இதனை
அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களும் வரவேற்று தமிழக அரசைப் பாராட்டியுள்ளன
என்பதை ஜெயாவின் கவனத்திற்கு மட்டுமல்லாமல்; ஜெயாவை மீண்டும்
சிம்மாசனத்தில் அமர்த்திட வரிந்து கட்டிக் கொண்டு கட்டுப்பாடாக இந்த அரசு
பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு மகிழும் ஏடுகளின்
கவனத்திற்குக் கொண்டு வருவதும் எச்சரிக்கையுடன் கூடிய எனது கடமையாகும்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
» ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum