ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குள்ள நரியும் சின்ன முயலும்!- ரஷ்ய நாடோடிக் கதை

Go down

 குள்ள நரியும் சின்ன முயலும்!- ரஷ்ய நாடோடிக் கதை Empty குள்ள நரியும் சின்ன முயலும்!- ரஷ்ய நாடோடிக் கதை

Post by சிவா Sat Aug 07, 2010 9:22 am

முன்னொரு காலத்தில் சாம்பல் நிற முயலும்,​​ தந்திரமான குள்ள நரியும் இருந்தன.

பருவநிலை மாறியது.​ விரைவிலேயே வந்துவிட்டது குளிர் காலம்.​ பனிப்புயல் வீசியது.​ வானத்திலிருந்து சிறுசிறு பனித்துகள்கள் மழைபோல் கொட்டத்தொடங்கின.​ குளிரின் கடுமையால் முயலின் சாம்பல் நிறம் முற்றிலும் வெளுத்து,​​ பனி வெண்மையானது.

'இந்தக் குளிரைத் தாங்க முடியவில்லை.​ நான் அவசியம் ஒரு குடிசை கட்டிக்கொள்ளத்தான் வேண்டும்'' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது முயல்.

அது கொஞ்சம் மரப்பட்டைகளைச் சேகரித்து வந்து வேலையைத் தொடங்கியது.​ வீடு கட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முயலைப் பார்த்து குள்ளநரி கேட்டது:' அடேய், முயல் பயலே,​​ நீ என்னதான் செய்துகொண்டிருக்கிறாய்?''

'நீ பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய் குள்ளநரி அக்கா?​ நான் கதகதப்பாக வசிக்க ஒரு குடிசை கட்டிக்கொண்டிருக்கிறேன்.''

'ஆமாம், ​​ ஆமாம்.​ ரொம்ப நல்ல யோசனைதான்'' என்ற குள்ளநரி,​​ பிறகு தனக்குள் ரகசியமாகச் சொல்லிக்கொண்டது:​ "நாமும் ஏன் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடாது?​ ஆனால் நான் கட்டப்போகும் வீடு ஒரு பளிங்கு மாளிகையாக இருக்கும்.​ ஆமாம்,​​ நான் ஒரு அற்புதமான பளிங்கு அரண்மனைபோன்று என் வீட்டைக் கட்டுவேன்.​ முட்டாள்கள்தான் மரப்பட்டைகளால் வீட்டைக் கட்டுவார்கள்.​ ஹா...ஹா...ஹா...'

பிறகு அந்தக் குள்ள நரி,​​ பெரிய பெரிய பனிக்கட்டிகளைத் தூக்கிவரத் தொடங்கியது.​ ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் பனிக்கட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது.

இரண்டு வீடுகளும் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன.​ முயலும்,​​ நரியும் அதனதன் வீட்டிற்குள் குடிபுகுந்தன.​ குள்ளநரி தன் பனிக்கட்டி வீட்டின் சன்னலில் அமர்ந்தபடி முயலை உற்றுப் பார்த்து,​​ "இந்த முயல் பயலைப்போல ஒரு மட சாம்பிராணி எங்காவது இருப்பானா!' என்று நினைத்து கேலிச் சிரிப்புச் சிரித்தது.​ "இவன் நாகரிகம் தெரியாத நாட்டுப்புறத்தான்!​ போயும் போயும் அந்த மரப் பட்டைகளை வைத்து வீடு கட்டியிருக்கிறானே,​​ என்ன ஒரு கோமாளித்தனம்!​ என்னுடைய வீடு தூய்மையாகவும்,​​ பளபளப்பாகவும் இருக்கிறது.​ இது உண்மையிலேயே ஒரு பளிங்கு அரண்மனைதான்.​ ராஜாக்களிடம்தான் இதுபோன்ற வீடு இருக்கும்.'

குளிர்காலம் இருக்கும்வரை நரிக்கு ஏதும் சிக்கலில்லை.​ இளவேனிற்காலம் வந்ததும்தான் தொடங்கியது பிரச்னை.​ அப்போது கதிரவன் வெப்பமாகப் பிரகாசிக்கத் தொடங்கினான்.​ குள்ளநரியின் அரண்மனை உருகித் தண்ணீராக ஓடியது.​ வீடு இல்லாமல் இனிமேல் என்ன செய்யும் அந்த நரி?​ ஒருநாள் முயல் புல் மேய்வதற்காக வெளியே சென்றது.​ அந்த நேரம் பார்த்து நரி,​​ முயலின் வீட்டிற்குள் நுழைந்தது.​ ​ ​

முயல் அங்கங்கே புல் மேய்ந்துகொண்டே மெதுவாக வீட்டிற்குத் திரும்பியது.​ அது தன் வீட்டுக் கதவைத் தள்ளியது.​ ஆனால் திறக்க முடியவில்லை.​ ​ அது மறுபடியும் கதவைத் தட்டத் தொடங்கியது.​ ​

' யார் அது?'' குள்ளநரி கோபத்துடன் மிரட்டியது.

'நரியக்கா,​​ நான்தான் சாம்பல் நிற முயல் வந்திருக்கிறேன்.​ கதவைத் திறங்கள்.''

'சாம்பல் முயலாவது,​​ சோம்பல் முயலாவது...​ யாராக இருந்தாலும் வெளியிலேயே கிட!​ '' குள்ள நரி சிடுசிடுப்புடன் சொன்னது.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முயல் மறுபடியும் சொன்னது:​ 'நரியக்கா,​​ உங்கள் கிண்டல் பேச்சைக் கொஞ்சம் நிறுத்துங்கள்.​ என்னை உள்ளே விடுங்கள்.​ நான் தூங்கவேண்டும்.''

ஆனால் தந்திரமான குள்ள நரி உறுமியது.​ 'நான் உன்னை உதைத்து நொறுக்குவேன்,​​ அடித்து விளாசுவேன்.​ முயலே,​​ அதன் பிறகு உன்னைப் பழந்துணிபோல் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!''

முயல் அழுதுகொண்டே துயரத்துடன் அலைந்து திரிந்தது.​ வழியில் அது ஒரு ஓநாயைப் பார்த்தது.​ 'முயலே, எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டது ஓநாய்.​ ​

முயல் அழுதுகொண்டே சொன்னது:​ 'என் நிலை உனக்கு வந்தால் நீயும்கூட இப்படித்தான் அழுவாய்.​ எனக்கு மரப்பட்டைகளால் ஆன ஒரு வீடு இருந்தது.​ குள்ள நரிக்கு பனிக்கட்டியால் ஆன வீடு இருந்தது.​ அந்த நரியின் வீடு சூரிய வெப்பத்தால் உருகிக் கரைந்து காணாமல்போய்விட்டது.​ உடனே,​​ நரி திருட்டுத்தனமாக என் வீட்டிற்குள் நுழைந்துகொண்டது.​ அது இப்போது என் சொந்த வீட்டிற்குள்ளேயே என்னை உள்ளே விடமாட்டேன் என்று மிரட்டுகிறது.''

'நீ கொஞ்சம் பொறுமையாக இரு.'' ஓநாய் சொன்னது.​ 'நாம் இருவருமாகச் சேர்ந்து அதை வெளியே துரத்திவிடுவோம்.'' ​

' அய்யோ உன்னால் முடியாது ஓநாய் அண்ணா,​​ முடியவே முடியாது.​ அந்த நரி உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுள்ளது.''

'அட! ​ நான் என்ன செய்கிறேன் என்று நீ பார்க்கத்தானே போகிறாய்.​ அதை நான் துரத்தியடிக்காவிட்டால் என் பெயர் ஓநாய் அல்ல!​ என் பெயரை சுண்டெலி என்று மாற்றி வைத்துக்கொள்கிறேன்.''

முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.​ நரியை விரட்டியடிப்பதற்காக அவை இரண்டும் புறப்பட்டன.​ சற்று நேரத்தில் வீட்டையடைந்தன.​ ​

'ஏய்... ​ திமிர்பிடித்த நரியே,​​ மரியாதையாக வெளியே வந்துவிடு!'' ஓநாய் சத்தமாகச் சொன்னது.​ ​ஆனால் தந்திரமான நரி பதிலுக்கு மிரட்டியது:​ 'ஓநாயே,​​ நான் வெளியே வந்தேனென்றால் உன்னை அடித்துத் துவைத்துவிடுவேன்,​​ பின்னியெடுத்துவிடுவேன்,​​ அப்புறம் உன்னைக் கந்தல் கந்தலாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!'' ​

'அய்யய்யோ!​ நரி மிகவும் கோபமாக இருக்கிறது போலிருக்கிறது'' என்று மெதுவாகச் சொன்ன ஓநாய்,​​ வாலைப் பின்னங்கால்களுக்குள் ஒடுக்கிக்கொண்டது.​ பிறகு பயத்தில் அலறியபடியே ஒரே பாய்ச்சலாக ஓடிச் சென்றது.​ ​

பிறகு எருது ஒன்று முயலைப் பார்த்தபோது கேட்டது:​ 'நீ ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் சின்ன முயலே?''

முயல், ​​ எருதிடம் எல்லா விவரத்தையும் சொன்னது.​ முயலின் கதையைக் கேட்ட பிறகு சொன்னது எருது:​ 'கவலைப்படாதே முயலே.​ நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை அங்கிருந்து விரட்டியடித்துவிடுவோம்.'' முயல், 'உன்னால் முடியாது'' என்று தடுத்தும் கேளாமல் எருது நரி இருக்கும் வீட்டிற்கு வந்தது.

'ஏய்... ​ நரியே, வெளியே வா!'' எருது அதிகாரமாக அழைத்தது.​ ஆனால் நரியின் மிரட்டலில் அதுவும் பயந்து ஓடி ஒளிந்தது.​ பிறகு, முயலுக்கு உதவுவதாகச் சொன்ன கரடியும், நரியின் வசவைக் கேட்டு பாய்ந்தோடிச் சென்றது.​ என்ன செய்வதென்று தெரியாமல் முயல் ஒரு மண்மேட்டின் மீது அமர்ந்து அழத் தொடங்கியது.​ அப்போது, வாள் ஏந்தியபடி வந்தது ஒரு சிவப்புக் கொண்டைச் சேவல்.​ ​ அது முயலிடம் கேட்டது:

'முயலே!​ நீ எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?''

தன் கதையை மறுபடியும் சொல்லி அழுதது முயல்.

சேவல் சொன்னது:​ 'கொஞ்சம் பொறு.​ நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை உன் வீட்டிலிருந்து விரட்டியடித்துவிடுவோம்.''

'ஓ... ​ சிவப்புக் கொண்டைச் சேவலே,​​ உன்னால் அது முடியாது.​ முதலில் ஓநாய் வந்தது.​ நரிக்குப் பயந்து​ அது ஓடிவிட்டது.​ பிறகு எருது வந்தது.​ அதுவும் அஞ்சி நடுங்கி பாய்ந்தோடிவிட்டது.​ கரடியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.​ இப்போது நீ எனக்கு உதவுகிறேன் என்கிறாய்.​ நீயும் தோற்றுத்தான் போவாய்.''

'சந்தேகப்படாதே முயலே.​ நாம் முயற்சி செய்து பார்க்கலாம்'' என்றது சேவல்.​ அவை இரண்டும் நரியை விரட்டியடிக்கப் புறப்பட்டன.​ முயலின் வீட்டை அடைந்ததும் சேவல் எழுச்சியான குரலில் பாடலொன்றைப் பாடியது:

'செந்நிறக் கொண்டையன் தலையுயர்த்தி வருகிறான்!

பந்தாடப்போகிறான் பண்பற்ற நரியையே!வீட்டைத் திறந்து முயலையும் குடியேற்றப் போகிறான்!

நரித் தோலை உரித்து தோரணமும் கட்டுவான்!''

குள்ள நரி பயந்து நடுங்கியது.​ அது கெஞ்சும் குரலில் சொன்னது:​ 'திரு செந்நிறக் கொண்டையன் அவர்களே,​​ ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள்.​ ஒரே ஒரு நிமிடம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் அய்யா!​ நான் என் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறேன்...''

ஆனால் சேவல் தொடர்ந்து வீரத்துடன் பாடியது:

'சேவல் வருகிறான் வாள்கொண்டு!​ ​

இரு துண்டாய் ஆகுமே உன் தலையும்!''

குள்ள நரி நைசாக கதவைத் திறந்தது.​ பிறகு விருட்டென்று தாவி ஓட்டம் ஓட்டமாக ஓடிப்போனது.​ அதன் பிறகு சேவலும் முயலும்,​​ அந்த வீட்டில் என்றும் இணைபிரியாத நண்பர்களாக வசித்தன.


தமிழில் கூத்தலிங்கம்


 குள்ள நரியும் சின்ன முயலும்!- ரஷ்ய நாடோடிக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum